Contact us at: sooddram@gmail.com

 

வீதி விபத்து மரணங்களை தடுக்க வாகன ஓட்டிகள் தண்டிக்கப்பட வேண்டும்

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் அனேகமாக ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகளின் தாக் குதலினால் குறைந்தபட்சம் ஓரிருவர் அல்லது பெருந் தொகையினர் கொல்லப்பட்ட செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளி லும், வானொலி, தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவருவதுண்டு. இதனால், பொதுமக்கள் அன்றைய காலகட்டத்தில் எந்த இடத்தில் பய ங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறுமோ என்ற சந்தேகத்தில் வெளி ப்பிரயாணங்களை தவிர்த்துக் கொண்டு கூடியவரையில் தங்கள் வீடுக ளிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் பய ங்கரவாதம் இலங்கையில் இருந்து துவம்சம் செய்து மூன்று வருட காலம் முடிவடைந்த பின்னர் நாட்டில் இன்னுமொரு பயங்கரவாதம் தலை தூக்கியிருக்கிறது.

அரசாங்கம் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப் பட்ட இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் எண்ணத்துடன் கட்டமை ப்பு வசதிகளை நாடெங்கிலும் மேற்கொண்டு மேம்பாலங்கள், பாலங் கள், நெடுஞ்சாலைகளை வேகமாக அமைத்துக் கொண்டு அபிவிரு த்தி துறையில் பெரும் சாதனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இந்த புதிய பயங்கரவாதம் நாட்டு மக்களை நடுநடுங் கச் செய்யுமளவிற்கு நாளாந்தம் அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொண்டு வருகின்றது.

டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் மனித உயிர்களை பலிகொண்டால் அதனை சுகாதார அமைச்சும் ஏனைய அமைச்சுகளும் நாடெங்கிலும் உள்ள உள்ளூராட்சி மன்றங்களும் சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து நுளம்பு பரவும் இடங்களை தூய்மைப்படுத்துவதன் மூலம் டெங்கு, மலே ரியா போன்ற நோய்களை பரப்பும் நுளம்பு இனப்பெருக்கத்தை முற் றாக அழித்துவிடவும் முடியும்.

ஆனால், இந்த பயங்கரவாதம் அவ்விதம் இலகுவில் அடக்கிவிடக்கூடிய தல்ல. வீதிகளில் மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டப்படும் வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களுமே இன்று மனித உயிர்களை பலி கொள் ளும் புதிய பயங்கரமாக உருவெடுத்துள்ளது.

இன்று இலங்கையில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் நான்கு பேர் வீதி விபத்துக்களினால் மர ணிக்கிறார்கள். இதனடிப்படையில் வீதி விபத்துக்கள் வருடமொன்று க்கு சராசரியாக 1500 அப்பாவிகளின் உயிரை பலி கொள்கிறது என்றே கூற வேண்டும்.

மதுபோதையில் வாகனங்களை செலுத்துதல், கட்டுப்படுத்த முடியாத அள வில் வாகனங்களை ஓட்டிச் செல்லுதல் மோட்டார் வாகனங்களை செலு த்தும் வாகனங்களிடையே குறிப்பாக பஸ் சாரதிகளிடையே இருந்து வரும் முந்திச் சென்று பயணிகளை ஏற்றவேண்டுமென்ற போட்டித்த ன்மை மற்றும் நித்திரை கலக்கத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்லுதல் போன்றவையே இன்று இலங்கையில் அதிகரித்துவரும் வீதி விபத்துக் களுக்கும் வீதி விபத்து மரணங்களுக்கும் பிரதான காரணமாகும்.

2011ம் ஆண்டில் 40 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெற்றன. இதில் பாத சாரிகள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் மரணித்த வீதி விபத்துக்கள் 2450 ஆகும். இதன் மூலம் கடந்த ஆண்டில் எல்லா மாக 2650 பேர் வீதி விபத்துக்களினால் மரணித்தனர். இவ்வாண்டில் கடைசியாக எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி இதுவரையில் 14 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெற்றன. இவற்றில் 900 பேர் மரணி த்தனர்.

பொலிஸார் தலைநகரமான கொழும்பிலும் நாட்டின் ஏனைய பிரதான நக ரங்களிலும் அதிகாலை 6 மணியிலிருந்து இரவு 8 முதல் 9 மணி வரை யில் வீதிகளிலேயே கடமை புரிந்து வாகனங்களை கண்காணித்து வரு கின்ற போதிலும் வீதி விபத்துக்கள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

வீதி விபத்துக்களில் சம்பந்தப்படும் வாகன ஓட்டிகளின் புள்ளி விபரங்களை எடுத்துப் பார்ப்போமேயானால் 80 சதவீதமான வாகன விபத்துக்களில் சம்பந்தப்பட்ட சாரதிகள் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் உட்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பஸ்களின் சாரதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற சாரதிகளை பொறுத்தமட்டில் செல்வந்த குடும்பங்களில் பிறந்து, பணத்தில் புர ண்டு கொண்டிருக்கும் இளைஞர்களே பெரும்பாலான வாகன விபத் துக்களில் சம்பந்தப்படுகிறார்கள்.

பொறுப்பற்ற தன்மையும் இளமையின் துடிப்பும் அவர்களை பக்கவிளை வுகள் பற்றி சிந்திக்க இடமளிக்காமல் வாகனங்களை வேகமாக ஓட் டிச் செல்வதில் அதுவும் விசேடமாக இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதில் ஆர்வம் காட்ட வைக்கிறது என்று சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இரவு 10 மணிக்கு பிறகு இளைஞர்கள் தங் கள் பெற்றோரின் இலட்சக்கணக்கான பெறுமதி மிக்க வாகனங்களைப் பயன்படுத்தி கார் பந்தயங்களில் கூட ஈடுபடுகிறார்கள் என்றும் இது வும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

வீதி விபத்துக்களில் சம்பந்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வரை பொலிஸார் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் வீதி விபத்து மரணங்களை குறைக்க முடியாது. எனவே, தங்கள் வாகனங்களினால் மற்றவர்களின் உயிரை பலிவாங்கும் வாகன ஓட்டிகளுக்கு கட்டாய சிறைத்தண்டனை வழங்கப்படுவதுடன் அவர்க ளின் வாகனம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் ஆயுள் பூராவும் இரத்து செய்யப்பட வேண்டும்.

இவ்விதம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் எங்கள் நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையையும் அவற்றினால் மரணிப்ப வர்களின் எண்ணிக்கை¨யும் குறைக்க முடியும்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com