Contact us at: sooddram@gmail.com

 

அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிறந்த வழிமுறை பாராளுமன்றத் தெரிவுக் குழுவே

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இருப்பதாக சரத் பொன்சேகா கூறுவது அப்பட்டமான பொய்யாகும்

சுமார் 30 வருட கால அழிவிலிருந்து மீண்டெழுந்துள்ள தமிழினம் மீண்டும் தலைநிமிர்ந்து வாழும் வகையில் அவர்களின் பல்வேறு அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவுற்ற நிலையில் தமிழ்ச் சமூகம் நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்கியுள்ள போதும் அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பல்வேறு உரிமைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டியுள்ளதாக ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்குகிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு முறையான அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழு மிகச் சிறந்த வழிமுறையாகுமெனவும் இந்தக் குழுவில் ஈ. பி. டி. பி.யும் பங்கேற்று தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த உதவுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வி : மே தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஈ. பி. டி. பி. தனியாக மே தினக்கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான நோக்கம் என்ன? யாழ்ப்பாணத்தில் எதிரணியின் பொது மே தினத்துக்கெதிராகவே இது ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில : யாழ்ப்பாணத்தில் நாம் மே தினத்தை மறைவான நிகழ்ச்சி நிரல் எதற்காகவும் கொண்டாடவில்லை. மே தினத்தினூடாக கட்சி ஆதரவாளர்களுக்கு நாம் எமது நோக்கங்களையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தினோம். அதில் நாம் வெற்றி கண்டோம்.

கேள்வி : யாழ்ப்பாணத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நீங்கள் சந்தித்துப் பேசினீர்கள். இந்தச் சந்திப்பில் எந்த விடயங்கள் பற்றிப் பேசப்பட்டன?

பதில : இது உண்மையில் ஒரு நட்பு ரீதியான சந்திப்பே. அங்கே விசேடமாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை. யாழ்ப்பாணத்தின் உண்மையான நிலையையும் அங்குள்ள தமிழ்ச் சமூகத்தின் நிலையையும் தெளிவுபடுத்தினேன்.

கேள்வி : பொது எதிரணிகளின் யாழ். மேதினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்றது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசியல் தலைவர் என்ற வகையில் இந்த விடயத்தை என்ன கண்ணோட்டத்தில் நோக்குகின்aர்கள்?

பதில : தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவிதமான கொள்கையும் கிடையாது என்பதே உண்மை. அவர்களின் மே தினப் பங்கேற்பு இதனை தெளிவாக பிரதிபலிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்த விடயம் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டன. கூட்டமைப்பு எம்.பி தேசியக் கொடி ஏந்தியமை சரியானதென ஒரு சாராரும் தேசியக் கொடி ஏந்தியமை கட்சியின் கொள்கைக்கு மாற்றமானதென இன்னொரு சாராரும் கூறுகின்றனர். தேசியக் கொடி ஏந்தியமை சரியானதெனக் கூறப்படுவதில் எந்தவிதமான வாதப் பிரதிவாதங்களும் இல்லை. பிழையானதெனக் கூறுபவர்கள் ஒன்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் எம்.பிக்களாகச் சத்தியப் பிரமாணம் செய்யும் விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கேள்வி : வடக்கு - கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் தெரிவுக் குழுவை அமைத்துள்ளது. எனினும் எதிர்க் கட்சிகள் இதற்கு அங்கத்தவர்களை நியமிக்காதபடியால் இதனை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதாவது முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா?

பதில : எனது கருத்துப்படி தமிழ் மக்களுக்கு இரு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று பயங்கரவாதப் பிரச்சினை. அது ஒழிக்கப்பட்டு விட்டது.

அடுத்தது அரசியல் ரீதியான பிரச்சினை. பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வமான தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கிறது. தெரிவுக் குழு மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நம்பலாம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரிவரத் தீர்க்கும் தகைமை பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இருக்கின்றது என்றே நான் திடமாக நம்புகின்றேன். துரதிஷ்டவசமாக எதிர்க் கட்சிகள் இன்னும் தெரிவுக் குழுவில் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாண மே தினத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் உள்ளடக்கப்பட வேண்டுமெனக் கூறியிருந்தார். நாங்கள் அந்தக் கூற்றை ஏற்றுக் கொள்கின்றோம். நாம் எல்லோரும் இணைந்து பொருத்தமான தீர்வொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கேள்வி : தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்கச் செய்ய தமிழ்க் கட்சியொன்றின் தலைவரென்ற வகையில் ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளும் திட்டமுண்டா?

பதில : தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் ஒருமித்த குரலில் இயங்கச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். இறுதிக் கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தச் செயன்முறையில் இணைந்து ஆனால் எதிர்பாராத விதமாக வடக்கில் தேர்தல் வந்ததால் அந்தச் செயன்முறை தூரப்போய்விட்டது. மீண்டும் அதனைச் செயற்படுத்த முயற்சிக்கின்றோம்.அத்துடன் தெரிவுக்குழுவில் அனைத்துப் பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்யும் கலந்துரையாடலுக்கு நாம் ஆயத்தமாகி வருகின்றோம். அதன் மூலம் தெரிவுக் குழுவில் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த விழைகின்றோம். அத்துடன் தமிழ்க் கட்சிகளின் முன்னணி ஒன்றை உருவாக்க அந்தக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு ஆயத்தமாகி வருகின்றோம்.

கேள்வி : இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சியொன்றின் தலைவரென்ற வகையில் இது தொடர்பில் உங்கள் கருத்தென்ன?

பதில : நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளில் எமது கட்சி தெரிவித்த பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆணைக் குழுவின் பரிந்துரைகள் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட ஈ. பி. டி. பி. தொடர்பான குற்றச்சாட்டுகளை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

கேள்வி : உங்கள் கட்சியின் விதப்புரைகளுக்கும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கும் இடையில் எத்தகைய பொதுத் தன்மையை நீங்கள் காணுகின்aர்கள்?

பதில : 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இந்த ஆணைக் குழுவின் பரிந்துரைகள் நிரற்படுத்தப்பட்டன.

பல தசாப்த காலமாக பிரச்சினைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளாக சமர்ப்பித்துள்ளது. ஈ. பி. டி. பி. எத்தகைய கருத்துக்களை சமர்ப்பித்ததோ அவைகள் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாங்கள் முன்னர் வலியுறுத்தியது போல ஆணைக்குழுவின் அறிக்கையில் தமிழ் மக்களுக்கான உச்ச பட்ச அதிகாரப் பரவலாக்கல் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் முன்னர் சுட்டிக்காடியது போல மாகாண சபை முறையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தித்து முறையான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் ஏற்கனவே தெரிவித்த யோசனைகளைப் போன்று மாகாணத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இரண்டாவது சபையொன்று அமைக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. எமது ஆலோசனைகளின் ஒரு பகுதியான மொழிக்கொள்கை மற்றும் காணிக் கொள்கை தொடர்பான விடயங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் பிரதி பலிக்கின்றது.

மொத்தத்தில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைப்பதில் நாம் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கேள்வி : இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள நீங்கள் திட்டமிட்டிருந்தீர்களே? அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டீர்களா?

பதில : வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றத் தூதுக் குழுவிடம் மனுவொன்றைக் கையளித்தோம். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு கடற்பரப்பில் கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன. உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன. இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளோம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளோம். இந்திய அரசிடமிருந்து பொருத்தமான பதிலை எதிர்பார்த்துள்ளோம். இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் இந்திய அரசுக்கு மீண்டும் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளோம். அதற்கும் உரிய பதில் கிடைக்காவிடின் 5000 மீனவர்களை எடுத்துக் கொண்டு இந்திய எல்லைக்குச் சென்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தி அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவோம்.

கேள்வி : இந்திய பாராளுமன்றக் குழு இலங்கை வந்திருந்த போது அவர்களுடன் நீங்கள் கலந்துரையாடினீர்கள், இலங்கையைப் பற்றி அவர்களின் அபிப்பிராயம் எவ்வாறு இருந்தது?

பதில : இங்குள்ள உண்மையான சூழ்நிலை பற்றி எமக்கு தெளிவுபடுத்த முடிந்தது. அரசாங்கத்தின் அரசியல் தீர்வு முயற்சி தொடர்பிலான நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

கேள்வி : தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிbழம் அமைக்கப்பட வேண்டும் என அண்மையில் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக நீங்கள் கூறுவதென்ன?

பதில்: இது ஓர் அரசியல் சித்து விளையாட்டு. காலத்துக்கு காலம் இவர்கள் இவ்வாறான அறிக்கை விடுவது சகஜமே.

கேள்வி : வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக?

பதில : இந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புண்டு.

கேள்வி : ஏற்கனவே சர்வகட்சி மாநாடென்றும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவென்றும் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிக்கப்பட்டது. முன்னைய நடவடிக்கைகளுக்கும் தற்போது பேசப்பட்டு வரும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குமிடையே என்ன வேறுபாடுகள் உள்ளனவென்று கூறுவீர்களா?

பதில : முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமான ஒரு குறிக்கோள் இல்லை. காலவரையறையும் இல்லை. ஆனால் ஜனாதிபதி அமைத்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஒரு காலவரையறையுண்டு. குறிப்பிட்ட காலத்துள் பிரச்சினைகளை பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது.

எல். ரி. ரி. ஈ. தற்போது இல்லாத சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் புலிகளின் நெருக்குதல் இன்றி சுயமாகவும் சுயாதீனமாகவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.

அரசுக்கு மூன்றிலிரண்டு பலமும் பாராளுமன்றத்தில் இருக்கின்றது. எனவே எடுக்கப்படும் தீர்மானங்களை பாராளுமன்றம் இலகுவாக அரசியல் சட்டமாக நடைமுறைப்படுத்தவும் வசதிகள் உள்ளன?

கேள்வி : வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதாக சரத் பொன்சேகா கூறியுள்ளாரே?

தமிழ் மக்கள் இந்நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகள் எனக் கூறிய சரத் பொன்சேகா இன்று தமிழ் மக்களின் நல்வாழ்வில் தான் அக்கறை கொண்டவராகவும் அவர்களுக்காக பரிந்து பேசுபவராகவும் தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கின்றார்.

யுத்தம் முடிந்து இரத்தம் காய்வதற்கிடையில் ஏ-9 பாதை திறக்கக்கூடாது எனக் கூறியவரும் இந்த சரத் பொன்சேகாவே.

இறுதி வெற்றிக்கு தான் தான் பொறுப்பு எனக் கொட்டமடித்த இந்த சரத் பொன்சேகா, இன்று யாழ். சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதாகக் கூறுகின்றார்.

இவ்வாறான கருத்துக்களை நான் முற்றாக மறுக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

(சுஐப் எம்.காசிம்.)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com