Contact us at: sooddram@gmail.com

 

கூட்மைப்பின் உள் முரண்பாடும் வடமாகாண சபை தேர்தலும்

வடமாகாண சபை தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்தமாதம் 20ஆம் திகதி வெலிஓயாவில் வைத்து கூறியபோதிலும் உண்மையிலேயே அரசாங்கம் அந்த அறிவித்தலுக்கு இணங்க அந்த தேர்தலை நடத்துமா என்பதைப் பற்றி பல்வேறு துறைகளில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அந்த சந்தேகத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை சட்டத்தின் கீழ் நிர்வாக ரீதியில் கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டு இருந்த வட மாகாணம், உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பொன்றை அடுத்து 2006ஆம் ஆண்டு மீண்டும் கிழக்கு மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டு முறை நடைபெற்ற போதிலும் வடமாகாண சபைக்கு இதுவரை தேர்தல் நடைபெறவில்லை. ஆளும் கட்சி தோல்வியடையும் என்ற பயமே அதற்குக் காரணமாகும்.

நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளில் வடமாகாணம் தவிர்ந்த ஏனைய 8 மாகாணசபைகளும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. எனவே வடமாகாண சபை மட்டும் தமது கட்டுப்பாட்டில் இல்லாமல் போவது ஆளும் கட்சிக்கு பெரும் பிரச்சினையல்ல. ஆனால் அந்தத் தோல்வி 1993ஆம் ஆண்டு தென் மாகாணசபைத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டியதைப்போல் வடமாகாணசபைத் தேர்தல் தமது ஆட்சிக்கு ஆப்பு வைக்குமோ என்று அரசாங்கம் அச்சப்படுகிறது.

1993ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சகல தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைதாங்கும் கூட்டணிகளே வெற்றிபெற்று வருவதைப்போல் 1977ஆம் ஆண்டுமுதல் 1993ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசிய கட்சியே தேசிய மற்றும் பிராந்திய சகல தேர்தல்களிலும் வெற்றிபெற்று வந்தது. நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையின் காரணமாகவும் விகிதாசார தேர்தல் முறையின் காரணமாகவும் ஒரு கட்சி நாட்டில் பதவிக்கு வந்தால் வந்ததுதான். மற்றொரு கட்சி பதவிக்கு வருவது மிகவும் கடினமானதாகும். அதுதான் இப்போதும் நடைபெற்றுவருகிறது.

ஐ.தே.க.வின் உள் முரண்பாடுகள் காரணமாக 1993ஆம் ஆண்டு அக்கட்சி பலவீனமாக இருந்த நிலையில் வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாண சபைகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களின் போது 6 மாகாணசபைகளில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. எனினும் தென் மாகாணசபை தேர்தலில் குழப்பம் ஏற்பட்டு இரண்டாவது முறையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி முதலான கூட்டணியொன்று வெற்றிபெற்றது.

17 ஆண்டுகளாக தொடர் தோல்விகளின் காரணமாக விரக்தியடைந்து இருந்த எதிர்க் கட்சிகள் பிரதான எதிர்க் கட்சியின் இந்த வெற்றியோடு உட்சாகம் பெற்று எழுச்சி பெற்றது. இந்த எழுச்சி வேறுபல காரணிகளின் உதவியோடு அதே ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களினூடாக ஐ.தே.க.வை ஆட்சி பீடத்திலிருந்தே தூக்கியெறியக்கூடிய அளவிற்கு trend setter ஆக அமைந்துவிட்டது.

இதுதான் இப்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திக்கும் இருக்கும் பயம். அன்று தென் மாகாண சபை, ஐ.தே.க.வின் ஆட்சியின் முடிவின் ஆரம்பமாக அமைந்ததைப்போல் வடமாகண சபைத் தேர்தல் தமது ஆட்சியின் முடிவின் ஆரம்பமாக அமையுமோ என்பதுதான் அரசாங்கத்தின் பயமாக இருக்கிறது போலும்.

இதனால் தான் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகளாகியும் அரசாங்கம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்த தயங்கி வருகிறது. தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு கண்ணிவெடிகள் போன்ற காரணங்களை முன்வைத்தாலும் இதே அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேரதல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் போன்றவற்றை வடக்கில் நடத்தியமை உலகறிந்த விடயம்.

வடக்கில் கடந்தகாலங்களில் நடைபெற்ற அந்த அத்தனை தேர்தல்களிலும் ஆளும் கட்சியைவிட தமிழ் தேசிய கூட்டமைப்பையே தமிழ் மக்கள் ஆதரித்தனர். எவ்வளவுதான் அபிவிருத்தியைப் பற்றிப் பேசினாலும் அந்த நிலைமை மாறியிருக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு இல்லை.

எனவே அரசாங்கம் செப்டெம்பர் மாதம் வடமாகாண சபைத் தேர்தலை நடத்துமா என்று பலர் நியாயமான சந்தேகத்தை கொண்டிருந்த போதிலும் அதனை நடத்தி வெற்றி பெற அரசாங்கம் சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.

வடமாகாண சபை வெற்றியானது அரசாங்கத்திற்கு தமது ஆட்சியை தொடர்வதற்கு மட்டும் தான் உதவப் போகிறது என்றில்லை. வடமாகாண சபையில் தம்மை ஆதரிக்கும் ஒரு தமிழர் முதலமைச்சராக 'தெரிவாகினால்' தமிழர்களும் தம்மோடு இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அந்த முதலமைச்சர் அரசாங்கத்திற்கு உலக அரங்கில் நல்லதோர் காட்சிப் பொருளாகவும் மாறிவிடுவார் என்பது நிச்சயம். வடபகுதியில் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் உலக அரங்கில் எழுப்பப்பட்டுவரும் நிலையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு தமிழரே வட மாகாணத்தை நிர்வகிக்கிறார் என்ற நிலை வருமாயின் அது அரசாங்கத்திற்கு உலக அரங்கில் பெரும் வெற்றியாக அமையும்.

எனவேதான் அரசாங்கம் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரை தேர்தலில் நிறுத்தப் போகிறது போலும். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்த விடயத்தைப் பற்றி தயா மாஸ்டருடன் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது. அன்று புலிகளுக்காக பேசியவர் இன்று அரசாங்கத்தின் சார்பில் சர்வதேச ஊடகங்களுக்கு பேசும் நிலை உருவாகினால் அது உலக அரங்கில் அரசாங்கத்திற்கு எந்தளவு பெரும் வெற்றியாக அமையும் என்பதை எவரும் ஊகித்துக் கொள்ள முடியும்.

வட மாகாணசபைத் தேர்தல் வந்தால் அரசாங்கத்திற்காக மேடைகளில் பேச முன் வருவது புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் மட்டுமல்ல. புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் மட்டுமன்றி பிரபாகரனுக்குப் பின்னர் புலிகளின் தலைவரான கே.பீயும் அப்போது அரசாங்கத்திற்காக மேடையேறலாம்.

இந்தநிலையில் தாமும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக நாட்டில் ஏனைய கட்சிகளும் கூறிவருகின்ற போதிலும் அவை போதியளவு பலத்தோடு இருப்தாக தெரியவில்லை. பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வோ அல்லது நாட்டில் மூன்றாவது அரசியல் சக்தியாகக் கருதப்படும் மக்கள் விடுதலை முன்னணியோ வடக்கில் அடித்தளம் இல்லாத கட்சிகள் என்றே கூற வேண்டும்.

அரசாங்கத்திற்கு சவாலாகக் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் பதிவு சம்பந்தமாக எழுந்துள்ள உட்கட்சி சர்ச்சையின் காரணமாக பிளவுபடும் நிலையில் இருப்பதாக அண்மையில் சில செய்திகள் கூறின. அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிப் பிரச்சினை காரணமாக வடக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வடமாகாண சபைத் தேர்தல் வருமாயின் இவை அரசாங்கத்திற்கு சாதகமான நிலைமைகளாகும்.

தற்போது நாட்டில் மாகாணசபைகள் இருந்த போதிலும் அரசாங்கம் தொடர்ந்து அவற்றின் அதிகாரங்களை பறித்துவருகிறது. எப்போதும் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியே மாகாணசபைகளிலும் அதிகாரத்தில் உள்ளதால் இந்த அதிகார பறிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு வருவதில்லை. அந்த அர்த்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற அதிகார பரவலாக்கலை பூரணமாக ஆதரிக்கும் கட்சியொன்று வடக்கில் பதவிக்கு வருவது அதிகார பரவலாக்கல் கொள்கைக்கு சாதகமான நிலைமையாகும். ஏனைய எதிர்க்கட்சிகள் பதவிக்கு வருவதைப் பற்றி நினைத்தும் பார்க்கமுடியாது.

அதேவேளை நாட்டில் எதிர்க்கட்சியொன்று இல்லாததைப் போன்ற நிலைமை உருவாகியிருக்கிறது. எனவே அரசாங்கம் நினைத்ததையெல்லாம் செய்கிறது. நடைமுறையில் எதை செய்தாலும் ஜனாதிபதியும் நாட்டில் பலமான எதிர்க்கட்சியொன்று இருக்கவேண்டும் என்று பலமுறை கூறியிருக்கிறார். எனவே அந்த அர்த்தத்திலும் குறைந்தபட்சம் மாகாண சபையொன்றிலாவது எதிர்ப்புக் குரல் எழுப்பக்கூடிய கட்சியொன்று அதிகாரத்தில் இருப்பது நாட்டின் ஜனநாகத்திற்கு உதவியாகவே அமையும். அதைத் தவிர தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபையில் பதவிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக வேறு நன்மை ஏதும் ஏற்படும் என்பதற்கில்லை.

ஆனால் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிவினைவாத சக்தியொன்றாகவே தென் பகுதி மக்களுக்கு காட்டி வருகிறார்கள். போர் நடைபெற்று வந்த காலத்தில் கூட்டமைப்பு புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியென்று கூறிவந்ததையே அவர்கள் அதற்காக எடுத்துக் காட்டுகிறார்கள். இது தொடர்பாக கூட்டமைப்பின் நிலைப்பாடும் தெளிவில்லை. விந்தை என்னவென்றால் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக களத்தில் போரிட்ட முன்னாள் புலித் தலைவர்களையே தம்மோடு வைத்திருக்கும் அரசாங்கம், புலிகளின் முன்னாள் ஆதரவாளர்களை காட்டி தென்பகுதி மக்களை பயமுறுத்துவதே.

மறுபுறத்தில் கூட்டமைப்பும் சிலசமயங்களில் தென் பகுதி மக்களை குழப்புகிறது. கூட்டமைப்பு தனிநாட்டை இன்னமும் ஏற்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்பதைப் பற்றி தென் பகுதி மக்களிடையே தெளிவு இருப்பதாக தெரியவில்லை.

அது அவ்வாறிருக்க, குறைந்தபட்சம் மாகாண சபையொன்றிலாவது எதிர்ப்புக் குரல் எழுப்பக்கூடிய கட்சியொன்று அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள பதிவுப் பிரச்சினை பெரும் இடையூறாக அமையும் என்பது தெளிவான விடயமாகும். பிளவுபடும் அளவிற்கு இந்தப் பிரச்சினை விவகாரமாகி விடுவதாயின் ஏன் அதைப் பெரிதாக்க வேண்டும்? கடந்த காலங்களில் போல் தத்தமது கட்சிகளின் தனித்துவத்தை பாதுகாத்துக் கொண்டு கூட்டாக தேர்தல்களில் போட்டியிட வேண்டியதுதானே?

தேர்தல் நடைபெறும் என்று நிச்சயித்து கூற முடியாதுதான். நடந்தால் இந்த குழப்பம் அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும். எனவே
சிலவேளை அரசாங்கமே முன் வந்து கூட்டமைப்புக்குள் இருக்கும் இந்த குழப்பத்தை வளர்த்துவிடக் கூடும்.

(எம்.எஸ்.எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com