Contact us at: sooddram@gmail.com

 

வியர்வைக் கடைகள்!

(பாரதி தம்பி)

ம்மா, அப்பா... என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் உங்களுக்கு மருந்து வாங்கித் தர முடியாது. தம்பி... அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக்கொள்வாயா?''- தன் மீது இடிந்து விழுந்துகிடக்கும் எட்டு மாடிக் கட்டடக் குவியல்களுக்கு இடையில் சிக்கி, உயிர் பிரியும் தருணத்தில் 15 வயதுச் சிறுமி, துண்டுச் சீட்டில் எழுதிவைத்த குறிப்பு இது. அதை எழுதும்போது அவள் மனம் என்னவெல்லாம் நினைத்திருக்கும்? வலியால், வேதனையால் எப்படித் துடித்திருப்பாள்? மரணம் தொட்டுவிட்டது என்று தெரிந்ததும் இறுக்கி அணைத்தபடி உயிர்விட்ட அந்தத் தம்பதியின் மன நிலையை நம்மால் உணர முடியுமா?

அந்தச் சிறுமி மட்டும் அல்ல... அந்தத் தம்பதி மட்டும் அல்ல... உழைப்பதற்கு உடம்பைத் தவிர, எதுவும் அற்ற ஆயிரக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களைத் துள்ளத் துடிக்கக் கொலை செய்திருக்கிறது பங்களாதேஷ் ஆடை நிறுவன 'விபத்து’! ஏப்ரல் 24-ம் தேதி நொறுங்கி விழுந்த கட்டடத்தில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட உடல்கள் ஆயிரத்துக்கும் மேல். இன்னமும் வந்துகொண்டே இருக்கின்றன. தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியான சாவர், மாபெரும் மனித சுடுகாடாகக் காட்சியளிக்கிறது.

இடிந்து விழுந்த ராணா பிளாசா மொத்தம் எட்டு மாடிகளைக்கொண்டது. இதில் ஐந்து ஆயத்த ஆடை நிறுவனங்கள் இயங்கிவந்தன. அனைத்திலும் சேர்த்து 3,500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்துவந்தனர். அவர்களில் சரிபாதிப் பேர் இன்று உயிருடன் இல்லை. பங்களாதேஷ§க்கு இத்தகைய விபத்துகள் புதியன அல்ல. ஆனால், எதற்கும் பங்களாதேஷ் அரசு கவலைப்படவில்லை. ''இது விபத்து. உலகில் எங்கு, எப்படி விபத்து நடக்கும் என்பதை யாரும் யூகிக்க முடியாது. தொழிலாளர்கள் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இருக்கும் வேலையும் பறிபோகும்'' என்று பச்சையாக மிரட்டுகிறார் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா.

ஒரு நாட்டின் பிரதமரே ஏன் இப்படிப் பேச வேண்டும்? ஏனெனில், ஆடை ஏற்றுமதி மூலம் பங்களாதேஷ§க்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை ஒப்பிடும்போது செத்துவிழும் ஏழைத் தொழிலாளர்களின் உயிர் அவருக்குப் புறக்கணிக்கத்தக்கதாகத் தோன்றலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்களுக்கான ஆடைகள், பங்களாதேஷில் இருந்துதான் தயாராகின்றன. ஜவுளி ஏற்றுமதியில் உலக அளவில் சீனா, இத்தாலிக்குப் பிறகு மூன்றாம் இடத்தில் இருந்த பங்களாதேஷ் இப்போது இரண்டாம் இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. டாக்காவைச் சுற்றிலும் சுமார் 4,500 ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்கு கின்றன. எங்கு திரும்பினாலும் கார்மென்ட் தொழிற்சாலைதான்.

இவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 லட்சத்துக்கும் மேல். இவற்றில் 90 சதவிகிதம் பேர் பெண்கள். 12 மணி நேரத் துக்கும் அதிகமான வேலை, இருட்டு அறையில் நாள் முழுக்கத் தையல் இயந்திரங்களின் சத்தம், இடைவிடாத உழைப்பு... இதற்கான ஊதியம் எவ்வளவு தெரியுமா? நம்புங்கள், மாதத்துக்கு வெறும் 2,000 ரூபாய். அதுவும் நான்கு ஆண்டு காலத் தொழிலாளர் போராட்டத்துக்குப் பிறகு 2010-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகைதான் இது. சீனா, கம்போடியா, இந்தியாவைவிட மிகக் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைப்ப தால், உலகின் முன்னணி 'பிராண்டட்ஆடை நிறுவனங்கள் பங்களாதேஷை நோக்கிப் படை யெடுக்கின்றன. இந்த ஏழைத் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சித் தயாரிக்கப்பட்ட ஆடைகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் ஷோகேஸ்களில் வைத்து டாலர்களில் விற்கப்படுகின்றன. ராக்கெட் முதல் அணு குண்டு வரை எல்லாவற்றையும் தன் நாட்டிலேயே தயாரித்துக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள், இதற்கு மட்டும் ஏழை நாடுகளுக்கு வருவது ஏன்? ஏனெனில், இங்குதான் தொழிலாளர் களின் உழைப்பை மிகக் குறைந்த கூலிக்குச் சுரண்ட முடியும். இதற்கு உள்ளூர் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் 'கங்காணி’களாகச் செயல்படுகிறார்கள். பங்களாதேஷின் 10 சதவிகித ஆடை நிறுவனங்கள் நேரடியாக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை. 50 சதவிகித நிறுவனங்கள் ஏதோ ஒரு விதத்தில் அரசியல்வாதிகளுடன் தொடர்புகொண்டிருக்கின்றன. தற்போது இடிந்துவிழுந்த ராணா பிளாசாவின் முதலாளி முகமது சகேல் ராணா, ஆளும் கட்சியான அவாமி லீக்கின் இளைஞர் அணித் தலைவர்.

இது பங்களாதேஷின் நிலைமை மட்டுமல்ல... உலகம் முழுவதும் இத்தகைய கொடூர உழைப்புச் சுரண்டல் நீடிக்கிறது. வளர்ந்த அமெரிக்க, ஐரோப் பிய நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும், குறைந்த கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைக்கும் நாடுகளை நோக்கித் தங்கள் தொழிற்சாலைகளை மாற்றுகின்றன. 'அந்நியச் செலாவணி, வேலைவாய்ப்புஎன பில்டப் கொடுத்து இதை வரவேற்கும் அந்தந்த நாட்டு அரசுகள், ஏராளமான வரிச் சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. சொந்த நாட்டு மக்கள் மின் சாரம் இல்லாமல் வாடி வதங்கினாலும் இத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடை இல்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதும் திறக்கப்பட்டுள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் இத்தகையவைதான். ஸ்ரீபெரும்புதூர் சாலையில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும், பங்களாதேஷ் ஆயத்த ஆடை நிறுவனத் தொழிலாளர்களுக்கும் பெரிய வித்தியாசங் கள் இல்லை. இங்கும் 12 மணி நேர வேலையும், 7 ஆயிரம் 8 ஆயிரம் சம்பளமும் தான் தொழிலாளர்களுக்கு மிச்சம்.

ஆங்கிலத்தில் sweat shop என்பார்கள். 'வியர்வைக் கடைகள்என அழைக்கப்படும் இவை உலகம் முழுக்கத் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. பத்துக்குப் பத்து அறையில் நெருக்கமாக அமர்ந்து நாள் முழுக்க ஒரே விதமான வேலையைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். அருகிலேயே அதேபோன்ற ஒரு பத்துக்குப் பத்து அறையில் நெருக்கியடித்துத் தங்கிக்கொள்ள வேண்டும். காலை 5 மணிக்குக் குளித்துச் சாப்பிட்டுவிட்டு இயந்திரத்தில் அமர்ந்தால், நாள் முழுக்க உழைப்பு... உழைப்பு... உழைப்புதான். ரெடிமேட் ஆடைகள், ஷூ, பொம்மைகள், ஹேண்ட்பேக், சாக்லேட்கள் என இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவை. நம் திருப்பூரும் இந்தப் பட்டியலில்தான் வரும்.

ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளின் தாதுவளம், காடுவளம், நீர்வளம் ஆகியவற்றைச் சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள், உழைப்பு வளத்தை 'வியர்வைக் கடைகள்மூலம் சுரண்டுகின்றன.

நாம் அணிந்திருக்கும் பிராண்டட் ஆடைகளில் உலகத் தொழிலாளர்களின் உதிரம் படிந்திருக்கிறது!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com