Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதியில் பணிபுரிந்த டாக்டர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம்

தமிழர் யுத்தத்தின் பின்னர் கெளரவமாக நாட்டில் எந்தப் பகுதியிலும் வாழ்கிறார்கள். தமிழர்கள் இராணுவத்தினரைப் பாராட்டுகிறார்கள். வடமாகாணத்தில் பெருமதிப்புக்குரிய வைத்திய நிபுணராக இருக்கும் டாக்டர் பி.சிவபாலன் இந்திய பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்த கடிதம் ஒன்றில் 2009 ம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர்கள் நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் அச்சமின்றி நிம்மதியாக வாழ்வதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், இலங்கை அரசியல் சாசனத்தில் தமிழர்கள் இப்போது சம உரிமைகளை அனுபவிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். நான் ஒரு தமிழன் என்ற முறையில் தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக அனுபவித்த வேதனைகளை நேரில் பார்த்து இருக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தமிழர்களாகிய எங்களுக்கு கெளரவமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழியமைக்கப்பட்டிருக்கிறது என்று நான் உறுதிபட கூற விரும்புகிறோன்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் துன்பங்களை அனுபவித்த தமிழர்கள் அதற்கு இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தவில்லை. எல்.ரி.ரி.ஈ யின் பிடியில் இருந்து தங்களை இராணுவம் காப்பாற்றி விடுவித்தமைக்காக தமிழ் மக்கள் இராணுவத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கும் டாக்டர் சிவபாலனின் கடிதத்தில் முக்கிய அம்சங்கள் வருமாறு. மதிப்பிற்குரிய இந்தியாவின் பிரதம மந்திரி அவர்களே, நான் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அச்சுறுத்தல்களுக்கு நீங்கள் அடிபணியாத காரணத்தினால் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இலங்கையில் நிலவி வரும் சமாதான சூழ்நிலையை தெரியாதவர்கள் போல் பாசாங்கு செய்கின்றனர். இலங்கையில் மனித படுகொலை நடக்கவில்லை, 2009 மே மாதத்தில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டதை அடுத்து தமிழர்கள் எவ்வித பயமும் இன்றி நாட்டின் எந்த பகுதியிலும் அச்சம் இன்றி வாழக்கூடியதாக இருக்கின்றது.

தமிழர்களாகிய எங்களுக்கு எமது நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைய சரி சமமான உரிமை இருக்கிறது. ஆயினும் சில நிர்வாகக் குறைபாடுகள் இருக்கின்றன. அதில் ஒன்று சில பொறுப்பற்ற அரசாங்க உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் அரசாங்க காரியாலயங்களில் சிங்கள கடிதங்கள் தமிழர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்துவருவதாக அத்துடன் பெரும்பாலானோர் பொலிஸ் நிலையங்களில் தமிழர்கள் செய்யும் முறைப்பாடுகளை சிங்களத்தில் பதிவு செய்வதும் தமிழர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.

தற்போதைய நல்ல அரசாங்கம் இந்தப் பிரச்சினையை விரைவில் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக தமிழன் ஆகிய நான் தமிழ் மக்கள் படும் வேதனைகளைப் பார்த்திருக்கிறேன். தற்போதைய அரசாங்கத்தினால் எங்களுக்கு மிகவும் கெளரவமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.

துரதிர்ஷ்டவசமாக தமிழர்கள் அரசியல்வாதிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டார்கள். அதனால் அவர்கள் வாக்களிப்பதில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 11 சதவீதமானவையே கிடைத்தன.

இந்த தமிழ் பிரதிநிதிகளே சர்வதேசத்திற்கு தவறான தகவல்களை வழங்குவதுடன் தங்கள் சமூகத்தையே ஏமாற்றுகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டிற்கு துரோகம் இழைக்கிறார்கள். பயங்கரவாதத்தினால் துன்பம் அனுபவித்த மக்கள் அதற்கு இராணுவத்தின் மீது குறை கூறுவதில்லை. ஆயினும் தமிழர்கள் எல்.ரி.ரி.ஈ யின் பிடியில் இருந்து தங்களை காப்பாற்றி பல விதத்திலும் உதவி செய்த இராணுவத்தினரை பாராட்டுகிறார்கள். ஆயினும் எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் இலங்கையில் உள்ள சிலரும் மற்றும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களும் இதன் மூலம் சிறந்த வாழ்க்கையை அனுபவித்து வருபவர்களே இராணுவத்தின் மீதும் இலங்கை அரசாங்கத்தின் மீதும் குறை கூறுகிறார்கள்.

வன்னியில் நடைபெற்ற யுத்தத்தின் போது எதிரணியினரை எதிர்த்து போராடியதை தொலைக்காட்சி மூலம் பார்க்கக் கிடைத்தது. இத்தகைய பாராதூரமான ஆபத்து நிறைந்த சூழ்நிலையிலும் இராணுவம் தீய செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. இராணுவத்தினர் வயோதிபர்களையும், காயமடைந்தவர்களையும் தூக்கிச் சென்றதை நாம் பார்த்தோம். சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட பார்க்க சகித்துக் கொள்ள முடியாத தொலைக்காட்சிப் படங்கள் இலங்கைக்கு எதிரானவர்களினால் தயாரிக்கப்பட்டவையாகும். மேற்குலகில் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகவோ தமிழ் குற்றவாளிகளாகவோ இருக்கலாம். இவர்கள் யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றாச்சாட்டுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை விடுக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர்கள் ஏன் தமிழர்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டார்கள் என்பதையும் நாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். சரத் பொன்சேகா: இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு என்றும் தமிழ் சிறுபான்மையோர் இலங்கையில் தங்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் எதையும் கேட்கமுடியாது என்றும் அறிவித்திருந்தார்.

சரத் பொன்சேகா இராணுவத்திற்கு சேர்க்கப்படும் ஒரு இலட்சம் பேரை வடக்கிலும், கிழக்கிலும் குடியேற்றி எதிர்காலத்தில் பிரபாகரன் போன்றவர்கள் உருவாகுவதை தடுக்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

இதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்ஈழ இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் புலம் பெயர்ந்தவர்களின் தில்லுமுல்லுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. நாம் நீதிக்காக நிமிர்ந்து நிற்க வேண்டும்.

முன்னாள் இந்தியப் பிரதம மந்திரி தமது உயிரைத் தியாகம் செய்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மிலேச்சத்தனமாக குற்றம் புரிந்தவர்களை ஆதரிப்பவர்கள் குறித்து நாம் அவதானமாக இருக்க வேண்டும். கடவுளின் நாமத்தில் இந்த கோரிக்கையை உங்களுக்கு விடுக்கிறேன்.

- டாக்டர் பி.சிவபாலன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com