Contact us at: sooddram@gmail.com

 

அந்தோ தமிழ்நாடே!

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 5)

பேரறிவாளன் பற்றி முரண்பட்ட அறிக்கை

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். இத் தொடரின் பாகம் 3 இன் கடைசி பந்தி

யாழ்ப்பாணத்தில் முருகன் தான் களத்தில் குதிப்பதற்குண்டான ஆயத்தங்களைச் செய்து வரலானார். சிவராசனோடு அடிக்கடி தொடர்புகொண்டு, நிலவரங்களை அறிந்து வந்த முருகன், இப்போது ஜயகுமாரன், ரொபர்ட் பயாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்.

இருவருமே சிவராசனின் உடுப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெப்ரவரி துவக்கத்தில் சென்னை வந்து, போரூரில் உள்ள மைத்துனர் அறிவு என்ற பேரறிவாளனுடன் தங்கினார்கள். கம்ப்யு+ட்டர் சயின்ஸ் டிப்ளோமா பட்டதாரியான அறிவு, 1990 முதல் சென்னையில் வசித்து வந்தார்." என்று முடிந்திருந்தது.

ஆனால் இந்த அறிவு என்ற பேரறிவாளன் இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர் என்பது உறுதியாகி இருக்கிறது. சென்னை பெரி யார் திடல், விடுதலை அலுவலகம் கணனிப் பிரிவில் பணியாற்றியதாகவும் அங்கேயே தங்கியதாகவும் கூறுகிறார்.

விடுதலைப் புலிகளோடு உறவு இருந்ததை அவர் ஒப்புக்கொண்டாலும் வெடி குண்டு ஆடையைத் தான் கணனியில் வடிவமைக்க வில்லை என்று கூறுகிறார். அவரது வாக்குமூலப்படி 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தந்ததையும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் உள்நோக்கம் அறியேன் என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் விசாரணையின் போது" எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ரா{ கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன்."

"அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன்."

இங்கு நாம் பின்பற்றும் உளவுத் துறை அறிக்கையில் பேரறிவாளன் பற்றி தந்துள்ள சில விபரங்கள் தவறானவை என்று எனக்குப் புரிந்தாலும் வேறு சிலவற்றின் உண்மைத் தன்மையை உறுதி படுத்த முடியாத நிலையிலும், அறிக்கையின் படியே நான் செல்கிறேன்.

முருகன் சென்னை வந்தார்

1991 பெப்ரவரி மத்தியில் முருகன் சென்னைக்கு வந்தார். அறிவோடு தொடர்புகொண்டு, அதிக விபரங்கள் கூறாது, தான் ஒருவிசே' பணிக்காக வந்துள்ள தாகவும், அவரது உதவி தேவையென்றும் கூறி, அவரைத் தன்னோடு இணைத்துக் கொண்டார். இருவரும் சேர்ந்து, உடனடியாக ஜயகுமாரன், பயாஸ் ஆகியோரின் ஜகையை வேறிடத்திற்கு மாற்றினர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு போலி லைசென்ஸ் ஒன்றையும் அவர்கள் எடுத்தனர். பெப்ரவரி இறுதியில் முத்து ராஜ, முருகனுக்கு நளினியின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். இப்போது நளினி பெரிய அளவில் ராஜவ் வெறுப்பாளராக உருவாகி இருந்தார்.

வெடிகுண்டு பொருத்த ஆடை வடிவமைக்கும் பொறுப்பு அறிவுக்கு ஒப்படைக்கப்பட்டது. உள்ளுர் ஆதரவாளர்களாக நளினியின் குடும்பமும், சுபா சுந்தரமும் உருவாக்கப்பட்டு விட்டனர். மணப்பெண்மற்றும் உறவினர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களும் ஆயத்தம் செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, முருகன் யாழ்ப்பாணத்தோடு தொடர்புகொண்டு, சிவராசனுக்கு பச்சைக்கொடி காட்டினார்.

சிவராசன் சென்னை வந்தார்

மார்ச் மாதம் முதல் வாரம் சிவராசன் சென்னை வந்தார். போரூரில் உள்ள பயாஸ் வீட்டில் தங்கினார். சென்னையில்கல்யாணத்திற்குண்டான ஏற்பாடுகள் அனைத்தையும் விபரமாக விளக்கினர் முத்து ராஜhவும், பேபி சுப்பிரமணியமும். இப்போது முழுப் பொறுப்பும் சிவராசனுக்கு வந்துவிட்டது. திட்டமிட்டபடியே அனைத்தும் செல்கின்றன. அறிவு என்ற பேரறிவாளன் வரைந்த மனித வெடிகுண்டுக்கான ஆடை வடிவமைப்பைப் பார்த்த சிவராசன் அதனை ஏற்றுக்கொண்டார்.

மார்ச் இறுதியில் சுப்பிரமணியத்தையும், முத்து ராஜவையும் அவர்கள் - இதற்கு மேல் சென்னையில் இருப்பது பாதுகாப் பில்லை என்று கூறி, யாழ்ப்பாணத்திற்கு திருப்பியனுப்பிவிட்டனர். சிவராசன், நளினி பாக்கியநாதன் குடும்பத்தாரோடு தங்கள் இலக்கு யார் என்ற விபரம் கூறாமல், தனது விசே' பணியைப் பற்றி விவாதித்தார். இதற்காக ஒரு பெண் மனித வெடிகுண்டைத் தயார் செய்து உள்ளதாகவும் கூறினார். பாக்கியநாதனிடம் நம்பிக்கைக்குரிய ஒரு புகைப்படக் கலைஞரைத் தெரிவுசெய்யும்படி கேட்டார்.

புகைப்படக் கலைஞர்களான ரவி சங்கரனும், ஹரிபாபுவும் அழைத்து வரப்பட்டனர். விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களான அவர்கள், தாங்கள் ஏதோ ஒரு பயங்கரமான காரியத்திற்கு பயன்படுத்தப்படுகின்றனர் என்று தயங்கினாலும், ஒதுங்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டனர்.

மணப்பெண்கள்'' வருகை

சிவராசன், “மணப்பெண்ணை அழைத்து வர யாழ்ப்பாணம் சென்று, பிரபாகரனைச் சந்தித்து, சென்னை ஏற்பாடுகளை விளக்கினார். பிரபாகரன் ஒத்திகை பார்த்துதான் காரியம் செய்ய வேண்டும் என்றும் முழுகல்யாணத்தையும் வீடியோ படமாக எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஒரே வாரத்தில் சிவராசன் இரண்டு பெண் புலிகளோடு சென்னை திரும்பினார். அடுத்து பெற வேண்டியது பத்மநாபாவைக் கொன்ற அதே வெடிபொருட்கள். அது அவர்களுக்கு கொஞ்சமும் சிரமமாக இருக்கவில்லை. அவர்களது தொடர்பு தமிழகத்தில் பரந்து விரிந்திருந்தது.

வந்துள்ள இரண்டு பெண்களையும் முருகன் நளினியின் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அறிவு, பயாஸ், nஜயகுமாரன் அவர்களுக்கு - திட்டமிடல் தகவல்கள் தெரியாதவாறு சிவராசன் அவர்களை சற்று தள்ளி வைத்துக்கொண்டார்.

அறிவைத் தனியாக சந்தித்து, வெடிகுண்டு பொருத்தப்பட வேண்டிய ஆடை எப்படி இருக்க வேண்டும் என விளக்கினார். அறிவு என்ற பேரறிவாளன் பெயருக்கேற்றவாறு அழகான ஆடையை வடிவமைப்பு செய்தார். 9 மில்லிமீட்டர் பேட்டரியின் துணையுடன் இயங்குமளவு பயங்கர ஊ4 சுனுஓ வெடிபொருட்கள் கொண்டதாக அது இருந்தது.

கனத்த டெனிம் ஜPன்ஸ் துணியில், உள்ளூர் தையல்காரர் ஒருவரால் அந்த ஆடை செய்யப்பட்டுவிட்டது. கவனமாக அதன் பைகளில் அறிவு வெடிபொருட்களைப் பொருத்தினார். இப்போது, ‘நான் ரெடி, நீங்க ரெடியாஎன்ற ரீதியில் எல்லா ஏற்பாடுகளுமே கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டுவிட்டன. பிரபாகரன் கூறியபடி, ஒத்திகை பார்க்க வேண்டும்.

ஒத்திகை

ஏப்ரல் 21ஆம் திகதி முதல் ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற காங்கிரஸ் அ.தி.மு.க கூட்டத்தில் நடந்தது. இதில், ராஜPவ் காந்தியும், nஜயலலிதாவும் கலந்துகொண்டனர். ரவிசங்கரன் புகைப்படங்கள் எடுக்க, சுபா சுந்தரத்தின் ஆட்கள் வீடியோ படம் பிடித்தனர். ஆனால், “மணப்பெண்தலைவர்கள் அருகில் செல்ல அதிகமாக முடியவில்லை. ஹரிபாபு இப்போது தங்களுடைய இலக்கு ஓர் அரசியல் தலைவர் என்று புரிந்துகொண்டார்.

டெல்லியில் ஒரு ஏற்பாடு

சென்னையில் நிலைமை இப்படி இருக்க, டெல்லியிலும் ஒரு மாற்று ஏற்பாடு உருவாகியிருந்தது. ஏப்ரல் 28ஆம் திகதி அதிரை என்ற இயக்கப் பெயர் கொண்ட சோனியா சென்னைக்கு வந்தாள். சிவராசன் அவளை அழைத்துக்கொண்டு டெல்லிக்குச் சென்றார். இலங்கை அரசில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற 70 வயது கனகசபாபதி அங்கு ஏற்கனவே இருந்தார். போராளியான அவரது மகன் ஒருவர் முன்பு போரில் இறந்துவிட்டார்.

டெல்லியில் இவர்கள் சந்தித்தது பிரபல தமிழக அரசியலாளர் திரு வைகோ என்ற வை.கோபால்சாமியின் முக்கிய உதவியாளரை. ஒரு வீட்டுத் தரகர் மூலம் தங்களுக்குப் பாதுகாப்பான புலி பதுங்குமிடத்தை, சாந்தினிகேத்தனுக்கு அருகில் தெரிவு செய்தனர்.

அது யு233 வடக்கு மேடிபாக் என்ற அரசு ஊழியர்களுக்கான வசிப்பிடம். சட்ட விரோதமாக வேற்று மனிதர்களான இவர்களுக்கு அது வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அது ராஜPவ் காந்தி வசித்த இலக்கம் 10 ஜன்பத் இல்லத்திலி ருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கனகசபாபதி தனது பேத்தி கணணி மற்றும் ஹிந்தி மொழி படிப்பதற்காக டெல்லி வரவுள்ளதாகக் கூறி, தரகருக்கு ரூபாய் 5,000 முன்பணமாகக் கொடுத்தார்.

இரண்டாம் ஒத்திகை

இரண்டாம் ஒத்திகை மே மாதம் 12ஆம் திகதி அரக்கோணத்தில் உள்ள திருவள்ளூரில் நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அப்போதைய பிரதமர் வி.பி.சிங் அவர்களும், திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களும். இங்கு தானு வி.பி.சிங்கின் கால்களைத் தொட்டு வணங்கினாள். அனைத்தையும் சுபா சுந்தரத்தின் ஆட்கள் வீடியோவாக்கினர். இந்த வீடியோ இப்போது காவல்துறையிடம் உள்ளது.

மே 20ஆம் திகதி அவசரமாகக் காலைப் பத்திரிகையோடு நளினி வீடு சென்ற சிவராசன், அடுத்த நாள் ஸ்ரீபெரும்புதூரில் நடக்கும் கூட்டத்தில் ராஜPவ் காந்தி கலந்துகொள்வதைக் காட்டினார். விரைந்து

அவர்கள் செயல்படத் துவங்கினர். ரவிசங்கரன், ஹரிபாபுவோடு தொடர்புகொண்டு சந்தன மாலை ஒன்று வாங்கி, அடுத்த நாள் பகல் சிவராசனை நளினியின் வீட்டில் சந்திக்கும்படி கேட்டார்.

ஹரிபாபு, ரவிசங்கரனிடம் தனக்கு ஒரு கெமரா தரும்படி கேட்க, ரவிசங்கரன் தனது கெமராக்களுள் ஒன்றைக் கொடுக்காது, நண்பர் ஒருவனிடம் இரவல் வாங்கி, அதில் ஒரு கொனிக்கா கலர் பிலிம்மையும் போட்டுக் கொடுத்தான்.

மே 20ஆம் திகதி இரவு அமைதியாகவே கழிந்தது. வீடியோவில் ஒரு படம் பார்த்தனர். சுபா வெடிகுண்டு ஆடையை மீண்டும் தானுவிற்கு அணிவித்து, எப்படி பொருந்துகிறது என்று பார்த்தாள். மணப்பெண்தானுவின் முகத்தில் எந்த வாட்டமோ - மாற்றமோ இல்லை. சாதாரணமாகவே - சாந்தமாகவே இருந்தாள்.

எம்.எஸ்.'ஜஹான்... -

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com