Contact us at: sooddram@gmail.com

 

மூன்றாவது புலம்பெயர் அமைப்பினரது பின்துணையுடன் தேவிகன் - அப்பன் - கோபி ஆகிய மூவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டம் முயற்சி எப்படி ஸ்ரீலங்காவினால் முறியடிக்கப்பட்டது. -- (1)

 (டி.பி.எஸ்.ஜெயராஜ்)

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த முயற்சி பாதுகாப்பு கருவிகளினால் முறியடிக்கப்பட்டது, ஆனால் அதை துடைத்தழிக்கும் பணி நாட்டில் தொடர்கிறது. வடபகுதிக் காடுகளில் இடம்பெற்ற தேவிகன்;, அப்பன், கோபி ஆகியோரது மரணங்கள்.ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் ஊட்டும் திட்டத்தை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்துள்ளது, ஆனால் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் இந்த முழு நடவடிக்கையில் ஓரளவு தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ள தளர்வான பகுதிகளை இறுக்கி முடிவதற்கான நடவடிக்கைக்கு வேண்டிய புலனாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவினர் அடங்கிய ஸ்ரீலங்கா இராணுவம் என்பனவற்றின் கூட்டு முயற்சியின் விளைவினால், எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு திட்டம் அதன் ஆரம்பக் கட்டத்திலேயே நசுக்கப்பட்டு விட்டது. புலிகளின் புத்துயிர்ப்பு விடயம் சம்பந்தமாக மார்ச் 6 முதல் ஏப்ரல் 11 வரையான காலப்பகுதியில் 65 பேர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐவர், புலிகளின் உயர்மட்ட மூவர் குழாம், வெடிவைத்தகல்லு - போகஸ்வௌ காட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னரே பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இந்த மூவரின் மரணத்தின் பின் எஞ்சியுள்ள 60 பேரில் மேலும் 19 பேர்கள் கட்;டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த சில நாட்களில் புதிதாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதினால், எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர் முயற்சி சம்பந்தமாக தற்சமயம் காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கை 41 இலிருந்து 45 ஆக உயர்ந்துள்ளது.

காவலில் உள்ள இந்த 45 பேரில் 7 பேர் பெண்கள், அவர்கள் அனைவரும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க (ஐசிஆர்சி) பிரதிநிதிகள் இந்த பெண்களை சந்திப்பதற்கான வழிகள் வழங்கப்பட்டு சந்தேக நபாகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலமைகளை பார்வையிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களில் கோபியின் மனைவி ஷர்மிளாவும் உள்ளார். 2014 ஜனவரி 30ல் திருகோணமலையில் வைத்து இந்தப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது, அங்கு ஏழு மாதங்களே ஆன முதிர்வடையாத அவரது குழந்தை குறைப்பிரசவமாக பிறந்து இறந்தது. இந்த கருச்சிதைவு ஷர்மிளா மார்ச்சில் கைதாவதற்கு பல வாரங்களுக்கு முன்பு நடந்தது,தடுப்புக் காவலில் உள்ளபோது அல்ல, என்று சில அரசுசார நிறுவனங்கள் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களில் கிளிநொச்சி மாவட்டம்,பூனகரி, செட்டியார்குறிச்சி என்ற இடத்தை சேர்ந்த 64 வயது விதவை ஒருவரும் உள்ளார். பத்மாவதி மகாலிங்கம் என்கிற இந்தப் பெண் தேவிகன்;,அப்பன்,கோபி என்கிற புலிகள் மூவரணி கொல்லப்பட்டதின் பின்பு கைது செய்யப்பட்டவராவார். அதிகாரமுள்ள பாதுகாப்பு தரப்பினரின் தகவலின்படி  தற்போதைய புலிகள் புத்துயிர்ப்பின் சூத்திரதாரியான தேவிகனுக்கு ஒரு தாயாக நடித்து அவருக்கு ஒரு மறைப்பை வழங்கி தந்திரமாக ஏமாற்றியுள்ளார் என்பதாகும்.

கூமன்குளம்

வெளிப்படையாக  வவுனியா கூமன்குளத்தில் ஒரு பாதுகாப்பான மறைவிடமாக பயன் படுத்துவதற்காக தேவிகனால் கடந்த வருடம் ஒரு வீடு விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அந்த வீடு பன்னிரண்டரை லட்சம் ரூபாவிற்கு பத்மாவதி மகாலிங்கத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. 34 வயதான  சுந்தரலிங்கம் கஜதீபன் என்கிற உண்மைப் பெயரைக்கொண்ட தேவிகன், மற்றும் 25 வயதுடைய மற்றொரு இளம்பெண்  ஆகிய இருவரும் பத்மாவதியின்  பிள்ளைகளாகக்; நடித்தார்கள்;. இந்த மூவரும் ஒரு குடும்பம் போல நடித்து இந்த வீட்டில் வசித்து வந்தார்கள். சசிகலா என்கிற புனைபெயரை பயன்படுத்திய அந்த இளம்பெண் நவம்பர் 2013ல் இந்தியாவுக்குச் சென்றுவிட்டாள். கட்டுநாயக்காவிலிருந்து சென்னைக்கு அவள் விமானம் மூலமாகச் சென்றுள்ளாள் என்று விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன. சசிகலாவின் உண்மைப் பெயர் வத்சலா சகாதேவன். அவள் மட்டக்களப்பு வந்தாறுமூலையை சேர்ந்தவள் மற்றும் 1988 ஒக்ரோபர் 23ல் பிறந்துள்ளாள். சசிகலா என்கிற வத்சலா ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவராக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

1998ல் தனது கணவனை இழந்த பத்மாவதி மகாலிங்கம், சுவிட்சலாந்தில் வசிக்கும் அவரது மகன்களில் ஒருவரது அழுத்தம் காரணமாகவே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரது மகன்களில் இருவர் எல்.ரீ.ரீ.ஈ யில் அங்கத்தவராக இருந்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது. திலீபன் என்ற பெயருடைய ஒரு மகன் யுத்தச் செயற்பாட்டின்போது காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது மற்றும் அவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஐங்கரன்

எல்.ரீ.ரீ.ஈ யில் இருந்த மற்ற மகன் ஐங்கரன் என்பவராவார். இவர் ஈகதேவன் எனும் இயக்கப் பெயருடன் எல்.ரீ.ரீ.ஈயில் ஒரு கடற்புலியாக பணியாற்றிவந்துள்ளார். நாகர்கோவில் கடலில் நடந்த ஒரு சமரில் அவர் வலது தோளில் காயமடைந்தார். அதன்பின் அவர் சுவிட்சலாந்துக்குச் சென்றுவிட்டார். பத்மாவதியின் மற்றொரு மகனான செல்வராஜா டென்மார்க்கில் வசிக்கிறார். அவருக்கு எல்.ரீ.ரீ.ஈ  உடன் தொடர்புகள் எதுவும் இல்லை.

பத்மாவதி சொல்வதின்படி, அவரது மகன் ஐங்கரன் பிரான்சிலிருந்து தொலைபேசி மூலமாக தன்னுடன் பழகும்போது  தேவியன் எனும் மாற்றுப் பெயரை பயன்படுத்தி வந்த தேவிகனுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டாராம். ஐங்கரன் பிரான்சில் ஒரு தீவிரமான எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர். தனது மகனது வேண்டுகோளை தட்டமுடியாததால் தனது மகனது நண்பருக்கு உதவி செய்வதற்காக தான் அபபடிச் செய்ததாகவும், எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிக்கும் சதி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அந்த வயதான தாய் தெரிவித்தார்.

வவுனியா நகரத்திலிருந்து 15 நிமிட வண்டியோட்ட தூரத்திலுள்ள கூமன்குள வீட்டை தேவிகன் தனது வதிவிடமாகப் பயன்படுத்தி வந்தார். அவர் அடிக்கடி பயணம்  செய்வதால் பல நாட்கள் வீட்டில் இருப்பதில்லை. அவர் கிழக்குக்கு பயணம் செய்யும் போதெல்லாம் மட்டக்களப்பை சேர்ந்த சசிகலா என்கிற வத்சலாவையும் கூட அழைத்துச் செல்வார். தேவிகன் ஒரு ஹை ஏஸ் வானை சொந்தமாக வைத்திருந்தார். தேவிகன் கொல்லப்பட்டதின் பின்னர் இந்த வாகனமும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள ஒரு கராஜில் இருந்து மீட்கப்பட்டது.

டாட்டா ஸ்போட்ஸ் கோணர்

தேவிகன் ஒரு கூமன்குள வதிவிடதாரியாக இருந்தாலும், அந்த வீட்டை அவர் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு செயற்பாட்டுகளுக்கு பயன்படுத்தவில்லை. மாறாக வவுனியா பேரூந்து நிலையத்தில் உள்ள ஒரு வியாபார நிறுவனத்தையே அவர் அத்தகைய செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தினார். அது பிரதானமாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்கள் விற்கும் ஒரு கடை. டாட்டா ஸ்போட்ஸ் கோணர் என்ற பெயருள்ள இந்த நிறுவனத்தில் கணணி மற்றும் போட்டோ பிரதி சேவைகளும் இடம்பெற்று வந்தன. தொலைபேசி அழைப்பு அட்டைகளும் கூட விற்கப்பட்டு வந்தன. தேவன் எனும் பெயரை பயன்படுத்தி வந்த தேவிகன் அடிக்கடி டாட்டா ஸ்போட்ஸ் கோணருக்கு வருகை செய்து அங்குள்ள கணணி மற்றும் தொலைபேசி மூலமாக தொடர்பாடல்கள் நடத்தி வந்தார். மக்களையும் அவர் அங்கு சந்தித்தார்.

டாட்டா ஸ்போட்ஸ் கோணர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் திலீபன் என்கிற ஆசிரியர் ஒருவருக்கு சொந்தமானதாக அவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 2005ல் வவுனியாவுக்கு வந்த அவர் கடந்த பல வருடங்களாக வித்தியாசமான பல பாடசாலைகளிலும் கற்பித்து வருகிறார். இந்த விளையாட்டு உபகரணக் கடையை ஒரு பக்க வருமானமாக தொடங்கிய அவர், ஆசிரியர் என்கிற தனது செல்வாக்கை பயன்படுத்தி பள்ளிப் பிள்ளைகளுக்கு பொருட்களை விற்று வந்தார். தேவிகன் தன்னை ஒரு கவசமாக பயன்படுத்துகிறார் என்பதை திலீபன் வெளிப்படையாகவே மிக நன்றாக அறிந்திருந்தார், அதனால் அவரைக் கைது செய்யப்படுவதற்கு முன்னமே இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் வான் வழியாக ஏப்ரல் 5ம் திகதி என்.0919916 இலக்கமுடைய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஸ்ரீலங்காவிலிருந்து இந்தியாவுக்கு பணயமாகியுள்ளார்.. அந்த வியாபார நிறுவனம் இப்போது மூடி முத்திரையிடப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினை புத்துயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நபர்களை அயராது கண்காணித்து வந்தபடியால்;, இந்த முழு நடவடிக்கையையும் பின்னால் இருந்து இயக்கிய சக்தி வாய்ந்த இயந்திரம் கோபியோ அல்லது அப்பனோ இல்லை ஆனால் தேவிகன்;தான் என்பது தெட்டத் தெளிவாகியது. மிகவும் உந்துதல் உள்ள மனிதனாகிய அவர் அசாதாரண ஆர்வத்துடன் எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் வழங்கும் பணியை முன்னெடுத்திருந்தார் என்பதற்கு மறைக்க முடியாத பல சான்றுகள் உள்ளன. தேவிகனின் சகோதரர் பிரித்தானியாவில் வாழ்கிறார் மற்றும் தேவிகனும் அவரோடு அங்கு தங்கியிருந்திருக்கிறார். வெளிநாட்டில் பாதுகாப்பானதும் மற்றும் சௌகரியமானதுமான ஒரு வாழ்க்கையை முன்னெடுப்பதற்கான ஒரு தெரிவு அவர் முன்பிலிருந்த போதும், தேவிகன் நாட்டிற்கு திரும்பி வந்து எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் கொடுப்பதை தெரிவு செய்துள்ளார்.

தேவிகன்;

தேவிகனின் உண்மைப் பெயர் சுந்தரலிங்கம் கஜதீபன். தேவிகன் 1979 மே 23ல் பிறந்தார். அவர் யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சி பிரிவு, மந்துவில் பகுதியை சேர்ந்தவர். அவர் 1995ல் தானாக முன்வந்து எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்து கொண்டார். அவரது பல இயக்கப் பெயர்கள் மற்றும் புனைபெயர்கள் என்பனவற்றில் சில தேவிகன், தேவன், நவனீதன், வல்லன், என்பனவாகும். அவர் நீண்ட காலமாக எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரது மனைவி மதிவதனி ஆகியோரின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியுள்ளார். அவர் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் ஒன்றைப் பெற்றுள்ளதோடு, எல்.ரீ.ரீ.ஈயின் வான்படைப் பிரிவான வான்புலிகளின் வான் தாக்குதல்களிலும் பங்கெடுத்துள்ளார். யுத்த காலத்தில் கொலன்னாவ - கெரவலப்பிட்டிய மற்றும் அனுராதபுரம் சாலியபுர ஆகிய இடங்களில நடந்த வான் தாக்குதல்களில் தேவிகன் தொடர்புபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தெய்வீகன் கரும்புலி சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட ஒரு தற்கொலையாளியும் ஆவார். அவர் எல்.ரீ.ரீ.ஈ உளவுத்துறை மற்றும் இராணுவ உளவுத்துறை ஆகிய இரண்டிலும் சேவையாற்றி உள்ளதோடு உயர்மட்;ட ராதா படையணியிலும் சேவை புரிந்துள்ளார். புதிய அங்கத்தவர்களுக்கு பயிற்சி வழங்கும் ஒரு பயிற்சியாளாகவும் இருந்துள்ளார்.

2009 பெப்ரவரியில், ராதா படையணித் தலைவர் ரட்னம் மாஸ்டரினால் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் காரைத்துறைப்பற்று கடற்கரைப்பகுதிக்கு செல்லும்படி தெய்வீகன் கேட்டுக்கொள்ளப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் சம்மதத்தோடு மிகவும் உயர்மட்ட இரகசியமான ஒரு வேலைக்காக அவர் நெடுங்கேணி காட்டுக்கு அனுப்பப்பட்டார். அந்த இரகசியமான பணி,எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இரகசியமாக குடியேறுவதற்காக நெடுங்கேணி காடுகளுக்குள் ஒரு ரகசிய தளத்தை அமைப்பதற்கான அடித்தள வேலைகளை ஆரம்பிப்பதாகும்.அந்த திட்டம் என்னவென்றால் தேவை ஏற்பட்டால் புலித் தலைவர் அங்கிருந்து கிழக்காக நகர்ந்து வெளிநாடு செல்வது என்பதுதான். உருவாகியிருக்கும் திட்டங்களில் ஒன்று பிரபாகரனை வான் வழியாக வெளியேற்றுவது என்பதாகும். தேவிகன் ஒரு பயிற்சி பெற்ற விமானியும் மற்றும் நம்பிக்கையான ஒரு லெப்ரினன் ஆகவும் உள்ளதால் இந்தப் பணிக்கான பொறுப்பு அவரிடம் வெளிப்படையாக ஒப்படைக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினரால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வளையத்தை ஊடுருவி அடைபட்டுக் கிடந்த கரையோரத் துண்டினைக் கடந்து வன்னி பின்னிலத்துக்கு செல்வது பிரபாகரனுக்கு சாத்தியமற்றதாக இருந்தது. எல்.ரீ.ரீ.ஈ தலவரும் அவரது மூத்த தளபதிகள் பலரும் கொல்லப்பட்டார்கள் என்பதை கண்கூடாகக்காண நேர்ந்தது. இதற்கிடையில் தேவிகன் நெடுங்கேணி காடுகளில் அவரது தலைவர் வருவதற்காக காத்திருந்தார். இந்தக் கட்டத்தில்தான் தேவிகன் இந்தக் காட்டின் நிலப்பரப்பை பற்றி நன்கு அறிந்தார். அதனால்தான் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் திரும்பிவந்து தனது தோழர்கள் அப்பன் மற்றும் கோபி ஆகியோருடன் தனக்குப் பழக்கமான காட்டில் அடைக்கலம் தேடினார். இறுதியில் தனது முடிவையும் அவர் அங்கே தேடிக்கொண்டார்.

மே 2009ல் போர் முடிவுக்கு வந்ததும.; தேவிகன் மன்னாருக்குச் சென்று இரகசியமாக படகு மூலம் இந்தியாவுக்குச் சென்றார். அவர் நோர்வேயில் உள்ள நெடியவனுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தென்கிழக்கு ஆசியாவுக்குச் சென்றார். அதன்பின் அவர் ஐரோப்பாவுக்குச் சென்று வேறுபட்ட பல நாடுகளுக்கு இடையே சுற்றித் திரிந்தார். அதன்பின் அவர் இந்தியாவுக்குத் திரும்பி நெடியவன் குழுவினரது இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா பற்றிய செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருந்தார். எனினும் தேவிகன் விநாயகம் குழுவினருடனும் ஒரு சுமுகமான உறவைப் பேணினார். தேவிகன் ஒரு போலிக் கடவுச்சிட்டு மூலமாக அல்லது நாட்டுப் படகுகள் மூலம் இரகசியமாக இந்தியாவுக்கும் மற்றும் ஸ்ரீலங்காவுக்கும் இடையே சுற்றி வந்ததாக நம்பப்படுகிறது.

எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்புக்கு திட்டமிடும் ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டவர் தேவிகன்தான் என்று இப்போது நம்பப்படுகிறது. அவர் ஐரோப்பாவிலுள்ள பல எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள், ஆர்வலர்கள், மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரைச் சந்தித்து தனது எல்.ரீ.ரீ.ஈ மறுமலர்ச்சி திட்டத்துக்கான  அவர்களது ஆதரவை உறுதிப்படுத்திக் கொண்டார். தேவிகன்;,தனது திட்டத்துக்கு  பேரின்பநாயகம் சிவபரன் என்கிற நெடியவன் மற்றும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி என்கிற விநாயகம் ஆகிய எல்.ரீ.ரீ.ஈ யின் இரு பிரிவினரதும் ஆதரவை உறுதி செய்துகொண்டார். நெடியவன் மற்றும் விநாயகம் தலைமைகளிலுள்ள இரண்டு எல்.ரீ.ரீ.ஈ பிரிவுகளும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டாலும், தேவிகனுக்கு ஆதரவு வழங்குவதில்  தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

தயாமோகன்

மிகவும் முக்கியமாக ஸ்ரீலங்காவில் தன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய புலிகளின் புத்துயிர்ப்புக்கு வேண்டிய தளபாட உதவிகளுக்கான ஒருங்கிணைப்பு வழங்கவேண்டிய முக்கிய குழுவை ஐரோப்பாவில் அமைப்பதற்கு தேவிகனால் இயலுமானதாக இருந்தது. 15 பேர்களைக் கொண்ட ஒரு தளர்வான குழு இந்த திட்டத்துக்காக அமைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா பாதுகாப்பு வட்டாரங்களுக்கு அதி;ர்ச்சி அளிப்பது என்னவென்றால் இந்த 15 பேர் குழுவுக்கு அச்சாணியாக இருப்பவர் ஜூலை 2009 ல் ஸ்ரீலங்காவைவிட்டு தப்பியோடிய ஒரு மூத்த புலித் தலைவர் என்கிற உண்மைதான்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கிழக்குப் பகுதி அரசியல் பொறுப்பாளராக இருந்த மூத்த புலித் தலைவரான தயாமோகன், மே 2009ல் போர் முடிவடைந்ததும் மலேசியாவுக்கு தப்பிச் சென்றார். முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கிழக்கு கிளர்ச்சிக்கு தயாமோகன் ஆதரவு வழங்கவில்லை, கருணா பிரிவினர் பிரதான பிரிவு எல்.ரீ.ரீ.ஈயினால் அடக்கப்பட்ட பிறகுதான் இவர் கிழக்குப் பகுதி அரசியல் பொறுப்பாளராக மாறினார். ஒரு அரசியல் பிரிவு தலைவராக இருந்தபடியால் அவரது பதவிக் காலத்தில் ஊடகங்களால் இலகுவாக அணுகப்படக்கூடியவராகவும் மற்றும் சாதகமான ஒரு பொதுத் தோற்றத்தையும் கொண்டிருந்தார்.

போர் முடிவடைந்ததும் தயாமோகன் ஜூலை 2009ல் மலேசியாவுக்கு தப்பியோடியதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் டிசம்பர் 2009ல் அவர் சுவிட்சலாந்திற்கு இடம்பெயர்ந்து சுவிஸின் மாகாணம் ஒன்றல் அரசியல் தஞ்சம் கோரியதாகச் சொல்லப்படுகிறது. ஹெல்வெட்டியாவில் தன்னைப்பற்றிய குறைவான சுயவிபரங்களுடன் வாழ்ந்த தயாமோகன் வருடக்கணக்காக அரசியலில் செயற்படாமல் இருந்தார். அந்த உணர்வினால் தயாமோகன், தேவிகனுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்து, ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்புக்கு விரிவான ஆதரவு வழங்கவுள்ள 15 உறுப்பினர் குழுவுக்கு அச்சாணியாக இயங்குகிறார் என்பதை கண்டறிந்ததும் ஸ்ரீலங்கா புலனாய்வாளர்களுக்கு உண்மையல் ஒரு திடுக்கிடும் அதிர்ச்சியாகவே இருந்தது.

மூன்றாவது முயற்சி

இது தொடர்பான மற்றொரு விடயமாக, ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு ஆரம்பமாவதற்கு முன்னர் வேறு சில முயற்சிகளும் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டம். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மே 2009ல்  புலிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின்,எல்.ரீ.ரீ.ஈ புத்துயிhப்பு முயற்சிகளுக்கு தலைமையேற்றவர்களாக கண்டறியப்பட்ட தேவிகன் என்கிற சந்தரலிங்கம் கஜதீபன், அப்பன் என்கிற நவரட்னம் நவநீதன் மற்றும் கோபி என்கிற பொன்னையா செல்வநாயகம் கஜீபன் ஆகியவர்கள் அத்தகைய செயல்களில் ஈடுபட்ட முதல் நபர்கள் அல்ல.

சமீபத்தைய நடவடிக்கை நிச்சயமாக எல்.ரீ.ரீ.ஈ க்கு மறுமலர்ச்சி அளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கடுமையானதும் மற்றும் மிகவும் தீவிரமானதுமாக இருந்தாலும் கூட அது முதல் நடவடிக்கை அல்ல. அது ஒரு மூன்றாவது முயற்சி. முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகமான இரண்டு முயற்சிகள் பற்றி மிகச் சிறியளவு விபரங்களே கிடைத்துள்ளன. அந்த இரண்டு முயற்சிகளும் 2012ல் கண்டுபிடிக்கப்பட்டன.

முதலாவது ஸ்ரீலங்காவின் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றது. 2012 மார்ச் 17ல் திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேசத்தில் உள்ள பெரியகுளம் என்கிற இடத்தில் தொண்டை வெட்டப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த நபர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவரான முத்து என்கிற வேலாயுதன் ரகுநாதன் ஆவார். அவரது உடலருகே “துரோகிகளுக்கு மரணம்” என்று கையால் எழுதப்பட்ட குறிப்பும் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட சிறு கொடியும் காணப்பட்டன.

(தொடரும்)

(நன்றி: தேனி இணையம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com