Contact us at: sooddram@gmail.com

 

கோதரப் படுகொலையே தமிழர் உரிமைப் போராட்ட தோல்வியின் முதல் படி ரெலோ லண்டன்.

புலிகளின் சகோதரப்படு கொலைகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலி !

ரெலோ ஈபிஆர்எல்எப் மீதான புலிகளின் படுகொலைகளே புலிகளின் ஈழப்போராட்டத்தின் தோல்வியாகும் தமிழர்களின் ஜக்கியத்தை குலைத்து மக்களை கொலை செய்து அடிபணியவைத்து அந்த மக்களின் போராட்த்திற்க்கு தலைமை கொடுத்ததே புலிகளின் வெற்று இராணுவ போராட்டமாகும் இது புலிகள் அழிந்த பின்னரும் தமிழர் உரிமைப் போராட்டத்தில் பாதிப்புக்களை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தமிழீழ போராட்ட வரலாற்றில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலையை மட்டும் காரணமாக எடுத்துக் காட்டி எமது தமிழர் உரிமைப்போராட்ட தோல்வியினை எழுதிவிட முடியாது. எமது போராட்ட வராலாற்றில் தனிமனிதர்களின் சாகசங்களும் கொலை வெறிகளும் தன்னை மட்டும் முன்நிறுத்தி அல்லது தான் சார்ந்த இயக்கத்தை மட்டும் முன்னனிறுத்தி போராட்டத்தை தனது தலைமையில் மட்டும் செய்துவிடலாம் என்ற பிரபாகரனின் அரசியல் வறுமையுமே போராட்ட தோல்விக்கான முதல் காரணங்களாகும்.

போராட்டத்தை இராணுவ வெற்றியாக மட்டும் முன்னிறுத்திய புலிகளின் தனிமனித ஆயுத வெறியே இன்றய தமிழர்களின் போராட்ட தோல்விக்கான அடிப்படைக் காரணங்களாகும்.

ஜக்கியத்தை கட்டியெழுப்பி சகபோராளி இயக்கங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு கொண்ட போராளிகளை கொன்று குவித்தே புலிகள் போராட்டத்தை தோல்வியில் முடித்துள்ளனர்.

அரசியல் போராட்ட தெளிவற்ற அமைப்பினாலும் ஆயுதங்களை மட்டும் கொண்ட போராட்டத்தை வென்றிடலாம் என்ற உலக போராட்ட வரலாற்று தெளிவற்ற தனிமனித குறும் புத்தியின் விளைவே புலிகளின் போராட்ட தோல்விக்கான காரணங்களாகியிருக்கின்றது.

இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவித்த இனப்படுகொலைகள் இனவாத அரசியல் போன்று உலகில் பல நாடுகளிலும் நடைபெற்ற அனுபவத்தினை முதல் பாடமாக கொண்ட அவைபற்றி கருத்து தெரிவித்த பலரை புலிகளே கொன்று குவித்தனர் மக்களின் சமூகத்தின் கருத்து என்ன? மக்களின் பிரதிபலிப்பு என்ன என்பதைப்பற்றி அக்கறையற்ற போராட்டமாக அதிலும் தனிமனிதனையே நம்பிய போராட்டத்தின் தோல்விகளே புலிகளின் ஈழப்போர் முடிவாகும் அதுமட்டுமல்ல இன்னும் சிலர் அதையே போராட்ட வடிவம் என்றும் சுத்த இராணுவ நடவடிக்கைகளே போராட்டம் என்ற எண்ணத்துடன் இன்றும் வாழ்கிறார்கள் அதையே மீண்டும் போராட்டம் என்று எண்ணி மீண்டும் அப்படியான ஒரு பயங்கரவாதத்தை ஆரம்பிக்கலாம் என்ற கனவுடன் இருக்கிறார்கள்.

போராடும் சமூகத்தில் போராடும் நாட்டில் போராடும் அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளின் ஒன்றிணைந்த இயக்கமே போராட்டம் என்பதை புலிகள் குறிப்பாக பிரபாகரன் புரிந்து கொள்ள தவறுகிறார் என்பதை 1980 களிலிருந்து கூறிக்கொண்டிருக்கும் பல ரெலோ ஈபிஆர்எல்எப் போராளிகள் பலர் இன்றும் வாழ்கிறார்கள் ஆனால் எல்லாமே தலைக்கு மேல் போய்விட்டது இனி என்ன என்ற விரக்தியில் வாழும் இவர்களில் பலர் வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர தயங்குகிறார்கள் போராடும் சமூகத்தில் போராடும் நாட்டில் போராடும் அரசுக்கு எதிரான அத்தனை சக்திகளின் ஒன்றிணைந்த இயக்கமே போராட்டம் என்ற யதாரத்தத்தை உடைப்பதே புலிகளின் பிரபாகரனின் அரசியலாக இருந்திருக்கின்றது.

இலங்கை அரச இராணுவத்துடன் மோதுகைகள் ஜக்கியமாக மக்களின் உரிமைப்போரை வென்று கொள்ளுதல் இலங்கையின் இதர சிங்கள் மொழி பேசும் மக்களுடன் இணைவு போன்ற விடயங்களில் புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ் மக்கள் பொறுப்பு நிற்க்க வேண்டியிருக்கின்றது.

யாழ் சுதுமலையில் 1985களின் முற்பகுதியில் புலிகளின் அச்சுவேலி பதுங்கு தளம் கிட்டுவின் முகாம் இலங்கை இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டதும் புலிகளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவானது இந்த நேரத்தில் சென்னையிலிருந்து பிரபாகரனின் வேண்டுகோளுக்கு இணங்க தலைவர் சிறீ சபாரத்தினம் ரெலோ போராளிகளை உடனடியாக கிட்டுவை பாதுகாக்கும் பணியில் இறங்கு மாறு பணித்திருந்தார் அதற்கு அமைவாக இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பை உடைத்து புலிகள் தப்பியோட ரெலோ போராளிகளே வழிசமைத்தனர் இந்த சம்பவத்தில் முன்னின்று இராணுவ நடவடிக்கைகளை நடாத்திய ரெலோ போராளிகள் இன்றும் ஜரோப்பாவில் வாழ்கிறார்கள்


புலிகளை ரெலோ சுதுமலையில் மட்டுமல்ல அச்சு வேலியில் அச்சுவேலி தோப்பு என்னும் இடத்தில் பண்டிதரின் முகாம் இலங்கை புலனாய்வுத்துறையின் இன்றய முக்கிய பதவி வகிக்கும் கபில கெந்த விதாரணவின் தலைமையின் கீழ் தாக்கப்பட்டு அழிக்கப்பட்ட போதிலும் ரெலேவினரே புலிகளுக்கு தப்பி ஓடி பாதை போட்டுக் கொடுத்தனர் என்பதும் வரலாறு புலிகளை ரெலோவும் சிறிசபாரத்தினமும் இன்னோரன்ன பல இடங்களில் பாதுகாத்தும் பிரபாகரனுக்கு அடைக்கலமும் கொடுத்து பாதுகாத்துள்ள வரலாறு இனன்னமும் தமிழ் மக்களில் பலருக்கு தெரியாதவிடயங்களே காரணம் புலிகளின் காலங்களில் இப்படியாக உண்மை வரலாறுகளை பலர் சுதந்திரமாக எழுத முடியாது இருந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட கபில கெந்த விதாரணவின் தலைமையிலேயே ரெலோவின் அராலி தெற்க்கு முகாம் ஒன்றும் தாக்கப்பட்டு ரெலோவின் போராளிகள் கொல்லப்பட்டனர் (அன்று கப்படன்)

1980களில் ரெலோவினால் மேற்கொள்ப்பட்ட நீர்வேலி வங்கி கொள்ளை சம்பவ காலத்திற்க்கு முன்பாக உமா மகேஸ்வரனுடன் ஏற்ப்பட்ட பிணக்கு காரணமாக உமாகேஸ்வரன் பிரிவினரால் தனக்கு ஆபத்து ஏற்ப்படலாம் என்றுஅன்றய காலத்தில் பிரபாகரன் ரெலோவின் உறுப்பினராக மீள ரெலோவில் இணைந்திருந்தார் அன்று பிரபாகரனை இயக்கத்தில் இணைப்பதில்லை என்று ரெலோ முடிவு எடுத்திருந்த போதிலும் தங்கத்துரையும் சிறீசபாரத்தினமுமே பிரபாகரனும் போராளி எமக்கு அதில் முரண்பட எதுவுமில்லை என்று பிரபாகரனை மீண்டும் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என முன்மொழிவு செய்திருந்தனர்.

நீர்வேலி வங்கி கொள்ளையின் போது திட்டமிடப்பட்டபடி  பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அலுவல் எந்தவொரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எம்தோழ்ரகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய எத்தனித்தால் அவரை உடனடியாக சுட்டு கொல்லுவது என்பதே ஆனால் பிரபாகரனின் துப்பாக்கி இயங்காது போனதும் இதனால் மீள துப்பாக்கியை இயக்க வேண்டிய நிலை உருவாகி தாமதாகியதால் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரபாகரனை குறிவைத்ததாகவும் அதே வேளை இந்த சம்பவத்தை பிரபாகரன் அறிந்திருக்கவில்லை என்றும் இதை உடனே அவதானித்த சிறீசபாரத்தினம் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தி பிரபாகரனை பாதுகாத்தார் என்பது சிறீசபாரத்தினத்தின் வாயால் அறிந்திருந்தோம். அன்றய காலங்களில் துப்பாக்கி பாவிப்பதில் எல்லா ரெலோ உறுப்பினர்களும் மிகவும் தேர்ந்தவர்களும் அல்ல !!

இந்த சம்பவத்தை மறந்த கிட்டு சிறீசபாரத்தினத்தை கொலை செய்த முறை மனித குலத்திற்கே வெட்கக்கேடானதாகும். சிறீசபாரத்தினத்தை கொலை செய்ய பிரபாகரனே ஆணை வழங்கியதாக பின்னர் கிட்டு ஜரோப்பாவில் அது தனது தலைவரின் கட்டளை என்று லண்டனில் கோல்போனில் தமிழர் தகவல் நடுவம் நடாத்திய புலிகளுடன் சந்திப்பு கூட்டத்தில் கிட்டு கூறினார் இது தான் புலிகளின் வரலாறு உதவி செய்தவைனையே கொல்வதும் தனது சகோதரர்களையே பழிவாங்குவதுமாகும்.

இந்த காலத்தில் இந்த சம்பவத்தின் பின்னர் யாழ் ஈழநாடு பத்திரிகையில் நான் உயிருடன் இருக்கும் வரையில் ரெலோ செய்த நன்றிக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருநதார். இந்த இராணுவ நடவடிக்கையில் பாக்கிஸ்தானில் விசேட பயிற்ச்சி பெற்ற கொமாண்டோக்கள் கெலிக்கெப்டர்கள் மூலம் கிட்டுவின் பதுங்கு முகாம்களை தாக்கியிருந்ததும் இந்த மாதிரியான தாக்குதல் முதல்முறையாக பரீட்சிக்கபபட்டதும் பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

அன்ற ரெலோவின் ஆதரவு இன்றி புலிகள் தப்பியிருந்திருக்க முடியாததை புலிகள் பிற்காலத்தில் அது போன்ற இதர தமிழ் போராட்ட அமைப்புக்களின் ஜக்கிய உணர்வை தவறாகவே புலிகள் புரிந்து கொண்டிருந்தனர் என்பது புலிகள் ரெலோ ஈபிஆர்எல்எப் போன்ற அமைப்புகள் மீறு செய்த படுகொலைகள் சான்றாகின்றது.

இப்படியான புலி அமைப்பு தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் போன்றதொரு முடிவிலேயே இட்டுச்செல்வாரகள் என்பதை அன்றிலிருந்தே பல முன்னாள் போராளிகள் கருத்து கொண்டிருந்தனர் என்பதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியிருக்கின்றது. இந்த கருத்தை ரெலோவின் தலைவர் தங்கத்துரை மீண்டும் இலங்கை சிறைச்சாலைகளிலிருந்தும் வெளிப்படுத்தியிருந்துள்ளார் என்பதும் இங்கு நினைவுபடுத்துவது நன்று.

அதேபோன்று யாழ் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொலைக்கு காரணமாக இருந்து தாக்குதலை நடாத்த வேண்டாம் என ரெலோவும் சிறைச்சாலைகளிலிருந்து தஙிகத்தரை போன்றோரும் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் வேண்டு கோள்விடுத்திருந்தனர் இப்படியான கண்மூடித்தனமாக இலங்கை இராணுவத்தினரை கொல்வது போராட்டமல்ல இது மேலும் எமது தமிழர் உரிமைப் போராட்டததை தவறாகவே வழிநடாத்தும் என்பதை அன்றய காலங்களில் பல முன்னாள் போராளிகளும் பல தடவைகள் பல இடங்களில் குறிப்பிட்டும் வலியுறுத்தியும் வந்துள்ளனர் அக்காலங்களில் சுத்த இராணுவ அமைப்பாகவே புலிகள் அமைப்பை மற்றய தமிழ் போராட்ட அமைப்புகள் கணித்து வைத்திருந்தனர் என்பதும் இங்கு நினைவு படுத்துவது அவசியம் இந்த கருத்தை முன்வைத்தவர்களில் பல ரெலோ தோழர்கள் பல ஈபிஆர்எல்எப் தோழர்கள் இன்றும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


ரெலோ இயக்க தலைவர்கள் கைது செய்ப்பட காலங்களில் சிறீசபாரத்தினம் ரெலோவின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதும் பிரபாகரன் தான் புலிகள் இயக்கத்தை இயக்கப்போவதாக கூறி இவர்களின் குழுவிலிருந்து வெளியேறி இராணுவ தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தவர் இக்காலங்களில் எமது தலைவர்களை சிறையிலிருந்து வெளியே எடுக்கும் முயற்ச்சிகளில் இருக்கிறோம் என ரெலோவினர் கேட்டதும் பிரபாகரனுக்கு ஆச்சரியமான விடயமாக இருந்தது காரணம் தான் குழுவிலிருந்து வெளியேறியது ஒரு தவறான விடயமாகவே தங்கத்தரை குட்டிமணி போன்றோர் கருதுவார்கள் என்பதேயாகும் குட்டிமணி தங்கத்தரை போன்றோர்கள் வெலிக்கடை சிறையிலிருந்து தப்பி வந்தால் தனது உயிருக்கும் தனது திட்டங்களுக்கும் ஆபத்து வந்துவிடும் என்றே நாட்டை குழப்ப வேண்டும் என்றே திருநெல்வேலியில் இராணுவத்தை தாக்கினார் என்பது இன்றும் பல ரெலோ உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது இப்படி தாக்குதல் செய்ய வேண்டாம் என புலிகளிடம் கேட்ட ரெலோவின் உறுப்பினர் இன்றும் லண்டனில் ரெலோவுடன் இணைந்து இயங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்களை ரெலோவின் முதல் தொகுதி இராணுவப் பயிற்ச்சியாளர்கள் எல்லோரிடமும் இந்த கருத்து இருந்திருக்கின்றது என்பது இன்று அவர்களுடன் பேசும் போது புரிந்து கொள்ளலாம்.

புலிகள் ஒரு சுத்த இராணுவ கண்ணோட்டத்தையே கொண்டிருக்கிறார்கள் இது மக்களின் போராட்டத்திற்க்கு பாதமாகமான விளைவுகளை உருவாக்கி போராட்டத்தை ஆதாழ பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் மக்களை அணிதிரட்டுதல் என்பது வேறு இராணவத்தினரை கொல்லுதலும் இராணுவத்தினரை கொல்லுவதன் மூலம் போராட்டத்தை வெளிப்படுத்ததல் என்பது பயங்கரவாதமே என்ற கருத்தை பலரால் வெளிப்படுத்தப்படடிருந்தது  குறிப்பாக ஈபிஆர்எல்எப் ரெலோ அமைப்புக்களின் மக்கள் சந்திப்பு கூட்டங்களிலும் பல பயிற்ச்சி பாசறைகளிலும் அரசியல்வகுப்புக்களிலும் எடுத்துக் கூறப்பட்டிருந்ததை இங்கு நினைவு படுத்துவது நல்லது.

ரெலோ அமைப்பினுள் ஏற்ப்பட்ட உட்பூசல்களின் போது பிரபாகரன் ரெலோவினுள் இருந்த சில தனது ஆட்களை தெரிவு செய்து துப்பாக்கி வழங்கி சிறீசபாரத்தினத்தை கொலை செய்ய இந்தியாவில் தூண்டியிருந்தார் அத்துடன் சில ரெலோ தோழர்கள் தங்கும் இடங்களுக்கு புலிகளின் உறுப்பினர்கள் போய் சிறீசபாரத்தினம் தவறானவர் எம்மிடம் வந்து சேருங்கள் எனவும் கேட்டனர் இதன் போது ரெலோ உறுப்பினர்கள் புலி உறுப்பினர்களை விறகுகட்டையால் அடித்து விரட்டியிருந்தனர் . இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட புலிகளும் அடித்துவிரட்டிய ரெலோ உறுப்பினர்களும் இன்றும் ஜரோப்பாவில் கனடாவில் வாழ்கின்றார்கள்.

இந்த சம்பவத்தின்போது குட்டிமணிஃதங்கத்துரை போன்றோர்களின் சகோதரிகளைே சிறீசபாரத்தினத்தின்மீதான் இந்த திட்டங்களை வல்வெட்டித்துறை தொடர்புகள் மூலம் அறிந்து சிறீசபாரத்தினத்தை காப்பாற்றினார்கள்.

ரெலோவை அழிக்க புலிகளும் பிரபாகரனும் எவ்வளவு முயற்ச்சித்திருக்கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த சம்பவ காலத்தில் நான் ரெலோவின் இயங்குனராக இந்தியாவில் செயற்ப்பட்டிருந்தேன்.

தமிழர் போராட்ட அமைப்புகளின் ஜக்கியம் இன்றி தமிழ் உரிமைப்போராட்டம் சாதியமற்றது என்ற புரிதலின் அடிப்பபைடயில் ரெலோ ஈபிஆர்எல்எப் ஈரோஸ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஈஎன்எல்எப் என்று கூட்டுமுன்னணியை உருவாக்கியிருந்தனர் இந்த கூட்டு முன்னணியின் அவசியத்தையும் பலத்தையும் புரிந்து கொள்ளாத புலிகள் கூட்டுமுன்னணியை உடைத்தெறியும் நோக்குடனேயே கூட்டுமுன்னணியில் இயங்க முன்வந்திருந்தனர் பின்னர் ஒருவருட காலத்துக்குள் இந்த கூட்டு முன்னணியின் முக்கிய உறுப்பு அமைப்புகளான ரெலோ ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைமையையும் அதன் உறுப்பினர்களையும் கொன்று குவித்தனர் அன்றய காலத்தில் குறிப்பாக பிரபாகரனின் கருத்தில் இயக்கங்களின் தவைர்களை கொன்றால் அந்த அமைப்பு அழிந்துவிடும் அந்த அமைப்பு உறுப்பினர்களை தனது இயக்கத்தில் இணைத்து விடலாம் என்ற பலமான நம்பிக்கையுடன் இருந்தவர் இதற்காக பல உதாரணக் கொலைகளையும் புலிகள் செய்திருந்தனர் அதில் ரெலா மற்றும் ரெலி இயக்ங்களின் மீதான தாக்குதல்களாகும் அந்த அமைப்புக்களின் மீதான தாக்குதல்களுடன் அந்த அமைப்புக்கள் தொடர்ந்து இயங்க முடியாது போயிருந்ததே.

இக்காலங்களில் மக்களின் உரிமைப்போரட்டத்தை அக்கறையுடன் நேசித்த ரெலோ  ஈபிஆர்எல்எப் தலைவர்கள் புலிகளின் பிரபாகரனின் இந்த சதிப்பின்ணியை கவனமெடுத்து பார்க்காமலேயே பிரபாகரனுடன் கூட்டமைப்பில் இணைத்துதிருந்தனர் பின்னர் புலிகள் உள்ளிருந்து கொலை செய்தனர் ரெலோ ஈபிஆர்எல்எப அமைப்பு தலைவர்கள் தோழர்களை கொலை செய்தனர்.

புலிகள் ரெலோ ஈபிஆர்எல் மீதான தாக்குதல்காலங்களில் இலங்கை இராணுவம் புலிகளால் தாக்கப்படும் ரெலோ இயக்கத்தை அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை தம்மிடம் வந்து சரணடையுமாறு கேட்டிருந்தபோதும் தலைவர் சிறீசபாரத்தினம் அன்று இலங்கை அரசிடம் சரணடையவில்லை மாறாக யாழ் கல்வியங்காட்டு பகுதியில் சுற்றிவர நிலக் கண்ணி வெடிகளை போட்டு மக்களுக்கு என்ன நடந்தாலும் சரி என்று தன்னை பாதுகாக்க முன்னவரவில்லை.

(இலங்கை இராணுவம் ரெலோவையும் சிறீசபாவையும் சரணடையுமாறு வேண்டு கோள்விடுத்த பலாலி படைத்தறை தளபதி பின்னர் தனது சுயசரிதை புத்தகத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்)

புலிகளுக்கு எதிராக எந்த ஒரு ரெலோ போராளியோ சிறீசபாரத்தினமே தன்மை பாதுகாக்க இலங்கை அரசிடம் சரணடையவில்லை அன்று ரெலோவின் போராளிகள் இலங்கை அரசிடம் சரணடைவது என்பத தமிழ மக்கள் உரிமைப போராட்டததை காட்டீக்கொடுப்பதாகவே இருக்கும் என்றே சிறீசபாவும் ரெலோ போராளிகளும் கருத்து கொண்டிருந்தனர் அன்று அவர்கள் இலங்கை அரசிடம் சரணடைந்து புலிகளை பழிவாங்குதலே போராட்டம் என்று ஆரம்பித்திருந்தால் புலிகளின் வரலாறு வேறாகியிருந்திருக்கும்.

புலிகள் தமது இறுதிக்காலத்தில் மக்களை கேடயமாக பயன்படுத்தியும் தாம் தப்பிக்க முயற்ச்சித்து தோற்றுப் போனவர்கள் என்பது வரலாறு அதே போன்று உதவி செய்கின்றோம் என்றவர்கள் புலிகளை கைவிட்டதே வரலாறு.

புலிகள் எதை சகோதர இயக்கங்களுக்கு விதைத்தார்களோ அதையே அறுவடை செய்தார்கள்

இன்று புலிகளின் முன்னாள் உள்ள நல்ல உதாரணம் கருணா பிள்ளையான் போன்றோர்கள் இலங்கை அரசிடம் சரணடைந்த பின்பு புலிகளுக்கு நடைபெற்ற பின்னடைவும் அழிவும் புலிகளின் வரலாற்று முடிவும் சான்றாக இருக்கின்றது.

இந்தியாவின் பக்க துணையின்றி தமிழர் உரிமைப்போராட்டத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்நிதிருந்தவர் ரெலோ தலைவர் சிறிசபாரத்தினமாகும் அவர் ஜேர்மனிக்கு வந்திருந்த போது பத்திரிகைக்கு வெளியிட்டிருந்த செய்தி தமிழீழப்போராட்ட வெற்றி என்பத இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப்பிணைந்தது என்பதாகும் அக்கருத்து இன்ற வரையிலும் உண்மையாகவே இருக்கின்றது இந்த சர்வதே அரசியல் பின்னணியை சரியாக புரிந்து கொள்ளாத புலிகள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தியையும் இந்திய தமிழர்களையும் கொலை செய்தது   புலிகள் அழிந்த பின்னும் புலிகளை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது.

ரஜீவ் காந்தியையும் அவருடன் சேர்த்து தமிழ்நாட்டு தமிழர்கள் 13 பேரையும் புலிகள் கொலை செய்திருந்தனர். ரஜுவ் காந்தி புலிகளுக்கு உதவிகள் செய்திருந்த போதிலும் புலிகள் கொல்லுவதற்க்கு தயங்கவில்லை இது கொலைகளால் தீர்வு காணும் முயற்ச்சியே புலிகளின் தோல்விக்கும் காரணமாகியது.

முள்ளிவாக்காலில் தமிழர் போராட்ட முடிவும் புலிகளின் அழிவும் புலிகள் தமக்கு தாமே தேடிக்கொண்ட அரசியல் தெளிவற்ற பயங்கரவாதத்தை மட்டுமே ஆயுதமாக கொண்டதின் வினையே யாகும்.

அதுமட்டுமல்ல தமிழர் போராட்டத்தை இன்றுள்ள பலவீனமான நிலைக்கு தள்ளிவிட்டிருப்பதும் புலிகளின் தவறே அன்றி தமிழ் மக்களின் தவறு அல்ல!!

புலிகளும் புலிகளின் தலைமைகளும் முரண்பாடுகள் வேறுபாடுகள் அரசியல் குரோதங்கள் யாவற்றிக்கும் கொலை செய்வதாலேயே பதில் அளித்துள்ளார்கள் இதற்க்கு பல உதாரணங்கள் உள்ள போதிலும் ஒன்றை இங்கு நினைவு படுத்தலாம்.

யாழ் திருநெல்வேலியில் கிட்டுவுக்கு எதிராக மேற்கொள்ப்பட்ட கிரனைட் தாக்குதலில் கிட்ட கால் இழந்தார் இந்த சம்பவம் நடைபெற்ற உடனேயே புலிகளின் தளபதி அருணா தமது தடுப்பு காவலில் வைத்திருந்தத ஈபிஆர்எல்எப் தோழ்ரகள் 45 பேரையும் கொலை செய்தனர் இக்கொலையின்போது தப்பியோடிய சில் ஈபிஆர்எல்எப் தோழ்ரகளும் லண்டனில் இருக்கிறார்கள் இதற்கிடையில் தமது இயக்கத்திள் இருந்த மாத்தையா பிரிவினரா அல்லது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒத்துழைத்தார்களா? ரெலோவின் ஊறுப்பினர்களா என்றெல்லாம் சந்தேகம் கொண்டு கொலைக்கா தேடி அலைந்தார்கள் பல யாழ் மக்களுக்கு தெரிந்த விடயம் புலிகளிள் அழிவின் பின்னரே இது தீப்பொறியினரே தாக்குதல் செய்தனர் என்பது அம்பலத்துக்கு வந்தது. -இதுவே புலிகளின் போராட்ட கால கையாளுகைகளாகும்.

ரெலோ இயக்கத்தின் தலைவர்களையும் போராளிகளையும் அன்று ஒலிபெருக்கி மூலம் சரணடைய கொரியும்  வீதிகளில் டயர் போட்டும் .விறகு பொட்டும் உயிருடன் எரித்தபல புலி உறுப்பினர்கள் இன்றும் இலங்கையிலும் ஜரோப்பாவிலும் கனடாவிலும் அமைதியாக கனவான்களாக வாழ்கிறார்கள் என்பத ஒவ்வொரு முன்னாள் ரெலோ போராளிகளும் அவர்கள் முகத்தை பாரத்துக்கொண்டே நடக்கிறார்கள்  என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இருக்கிறார்கள்.

இன்னும் எத்தனையோ விடயங்களை தமிழ் மக்கள் அறிய வேண்டிய தேவைகள் இருக்கின்றது இந்த விடயங்களை தொகுத்து பார்க்காமல் புலிகளின் போராட்டம் என்ற ஒற்றை கருத்துக்குள் கடந்த 30 வருட ஆயுதப்போராட்டதை போட்டுவிட முடியாதாகும்.

அன்றய புலிகள் இன்றய புலிகள் புலிக்கொடி புலிச்சின்னம் புலி அமைப்புக்கள் புலிகளின் போராடடம் யாவும் சகோதரப் படுகொலையின் சின்னங்கள் என்பதை பலர் அறியாமலே இன்று அந்தக கொடியினை உயரத்திப்பார்க்கிறார்கள் புலிக்கொடியின் சிகப்பு நிறம் சகோதரப்படுகொலையின் இரத்தமேயாகும்.

ஈழப் போராட்டத்தின் தமிழர் உரிமைப் போராட்டத்தின் வெற்றியானது இந்திய பெருமக்களின் நலனுடன் பின்னிப் பிணைந்ததே என்பதை நாம் நன்கு உணர வேண்டும். – சிறீசபாரத்தினம் (1984)

இன்று ஜரோப்பாவிலும் உலகெங்கும் வாழும் முன்னாள் ரெலோ போராளிகள் சார்பாக துரோகிகள் யார் என்பதை வெளிப்படுத்தவும்இ தலைவர் அமரர் சிறீசபாரத்தினத்தை ஞாபகப்படுத்தும் முகமாகவும் ரெலோ தோழர்கள் படுகொலை செய்ப்பட்ட இந்த வாரத்தில் இதை வெளியிடுவதற்காக எழுதப்பட்டது.

தகவல்களை திரட்டும் போது சபாரட்னத்தின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரை சந்தித்தேன். எனினும் சபாரட்னம் துப்பாக்கி ஏந்திய நிலையில் நான் எப்போதும் பார்த்ததில்லை என அவரது மெய்ப்பாதுகாவலர் சொன்னார். நான் ஆச்சரியமடைந்தேன். - சீ.ஏ. சந்திரபிரேம.

(இக் கருத்துக்களை எல்லா தளங்களிலும் பகிர்ந்து புலிகளால் படுகொலை செய்ப்பட்ட தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ போராளிகளுக்கு அஞ்லி செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.)

புலிகளின் சகோரப்படு கொலைகளால் கொல்ப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலிகள் !!! !! !!

-ரெலோ லண்டன்.

(இந்த வரலாற்று தவறுகளுக்கு மேலாக இலங்கை இனவாத அரசினால் மேற்கொள்ப்பட்ட இனப்படுகொலையானது தமிழ் மக்களை மேலும் சீர்குலைத்துள்ளது)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com