Contact us at: sooddram@gmail.com

 

தமிழக அரசியலும், மதிமுகவும்!

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, மதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, அது 21 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழர் பிரச்னைகளை கையிலெடுத்து போராடுவது, தமிழர் நலனுக்கு எதிரானவற்றை எதிர்த்து குரல் கொடுப்பது, மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்துவது என மதிமுகவும், அக்கட்சி தலைவர் வைகோவும் தமிழக அரசியல் களத்தில் இயங்கினாலும், கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உறுப்பினர்களை அனுப்ப இயலாமல் தடுமாறிக்கொண்டுதான் உள்ளது மதிமுக என்றும், அதே சமயம் வைகோவுக்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து தேமுதிகவை ஆரம்பித்த விஜயகாந்த் கூட எதிர்க்கட்சி தலைவர் ஆகும் அளவுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அவருடன் கூட்டணி அமைக்க விரும்பி வரும் அளவுக்கும் வளர்ந்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ம.தி.மு.க.வின் 21 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மதுரை கே.புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, தமிழகத்தின் அதிகாரத்தை 2016ல் கைப்பற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது சாத்தியம்தானா?

சிறந்த மேடை பேச்சாளர், நாடாளுமன்றவாதி, கல்வியாளர், வழக்கறிஞர், ஆடம்பரமற்ற நாகரீக அரசியல்வாதி என வைகோவுக்கு  பல்வேறு சிறப்பு பண்புகள் இருந்தபோதிலும், மதிமுக தமிழக அரசியலில் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் ஜொலிக்க முடியாமல்தான் உள்ளது.

இதற்கு யார் அல்லது எது காரணம்...? வைகோவின் அரசியல் அணுகுமுறையா அல்லது மக்களா அல்லது காலங்காலமாக பழகிப்போன அரசியலமைப்பு முறையா?

இதுகுறித்து
நீங்கள் கருதுவது என்ன?

அன்றும் இன்றும் என்றும் புலிகளை ஆதரிப்போம் - வைகோ

அன்றும் இன்றும் என்றும் வைகோவை ஆதரிக்க மாட்டோம் - தமிழக மக்கள்

வைகோவின் மீது தீவிரவாத ஆதரவாளர் என்ற முத்திரை மிக வலுவாக இருக்கிறது அது தான் அவர் கட்சி வளராமல் இருக்க மிக முக்கிய காரணம். தமிழக மக்கள் வன்முறையை என்றுமே ஏற்க போவதில்லை.

இதுவரையில் வைகோவிற்கு தெலுங்கு மக்களின் வாக்குகள் தான் பெரும்பாலும் கிடைத்தது அது விஜயகாந்த் வந்த பிறகு அவர் பின் சென்று விட்டது, அதனால் தான் சென்ற பஞ்சாயத்து தேர்தலில் 1.7 சதவித வாக்குகள் மட்டுமே வாங்க முடிந்ததன் பின்னணி.

எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களின் ஓட்டு மதிமுகவிற்கு இல்லை என்ற நிலை தான் இன்றும் இருக்கிறது, இதற்க்கு மதிமுகவின் தவறான அரசியலும் ஒரு காரணம்.

வைகோ தனது தெலுங்கு பின்னணியை மறைக்க இன வெறி அரசியலை செய்கிறார் இந்த மாதிரியான அரசியலை முன்பு கருணாநிதி செய்தார் (காரணம் அவரும் தெலுங்கர் தான்)... இன்றைய காலகட்டத்தில் இந்த மாதிரியான அரசியல் மக்களிடம் எடுபடாது இதை வைகோ புரிந்துகொள்ள வேண்டும்.

வைகோ தம்மை இலங்கை அரசியல்வாதியாக அடையாளபடுத்தி கொள்ளாமல் இந்திய அரசியல்வாதியாக, இந்திய மக்களுக்கு நல்லது செய்பவராக அடையாளபடுத்தி கொள்ள வேண்டும். அப்போது
தான் மக்கள் மத்தியில் குறைந்தபட்ச செல்வாக்கு பெற முடியும், இல்லை என்றால் மதிமுக என்று ஒரு அரசியல் கட்சி இருந்தது என்ற நிலை தான் வரும்.

(R.Subramanian)

தி.மு.க வில் இருந்து வெளியேறி அதிமுகவுன் கூட்டனி, = திமுக வை விமர்சனம் . பொடாவில் உள்ளே இருந்த போது இரண்டாம் கட்ட தலைவர்களின் செயல் படாதண்மை, தி,மு,கவின் உதவியோடு வெளியே வந்து , ஜெ.வை விமர்சனம், உடனே அதிமுகவுன் கூட்டனி,திமுக வை விமர்சனம்,ஜெ. கூட்டனியில் இருந்து வெளியேற்றும் வரை அதிமுக தலைமை கலக பேச்சாளராக இருந்தது ,வெளியேற்றியதும் இலை கருகட்டும் , சூரியன் உதிக்கட்டும் என்றது, பிஜபி கூட்டனியில் பந்திக்கு முந்தி சென்று, அமர்ந்தது இப்படி மாறி மாறிமாறிமாறிமாறிமாறிமாறிமாறிமாறிமாறி , கட்சியின் உட்கடடமைப்பினை பலவீனமாக்கி கொன்டது தான் மிட்சம் .

(Balan)

(Anantha Vikatan)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com