Contact us at: sooddram@gmail.com

 

மறைக்கப்பட்ட உண்மைகள்

ராஜினி திரணகமவின் கொலைக்கு பின்னால்உள்ள புலி மாணவர்கள்

யாழ்பாணத்தில எங்களின் வாழ்விடதுக்கு அண்மையாக ,இருந்த ராஜசிங்கம் மாஸ்டருக்கு ,நான்கு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்,அதில் இருவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அரசியல் ரீதியாக பங்கெடுத்தனர் , தலை மறைவாக வாழ்ந்த அக்கா நிர்மலா நித்தியாந்தன் ஒருவர்,மற்ற சின்னப் பெண், தங்கசி டாக்டர் ராஜனி திரணகம, அரசியல் அராஜகம், மனித உரிமைகள் மீறல் பற்றி ஒரு புத்தகம் எழுதியதுக்காக 35 வயதில் போட்டு தள்ளப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் அம்மா . ராஜசிங்கம் மாஸ்டர் கணக்கு மாஸ்டர், எந்த நேரமும் அவர் கதைக்கும் போது தலையை சொறிந்து சொறிந்து சிரித்துக்கொண்டே கதைப்பார் , அவர்கள் வட்டுக்கோட்டை தென் இந்திய திருசபை சேர்ச்சுக்கு சேர்மதியானா படித்த,பண்பான,சோலி சுரடுக்கே போகாத குடும்பம், எல்லாருக்கும் உதவி செய்யும் ,அமைதியான அவர்கள் வீடில் இருந்து எப்படி இரண்டு பெண்கள் இப்படி அரசியலில் வந்தார்கள் என்பது இண்டு வரை ஒரு குழப்பம் ,இங்க நான் கொஞ்சம் சொல்லப் போவது டாக்டர் ராஜனி பற்றி,

அவர்கள் வீட்டிலேயே ராஜனிதான் குழப்படி,ஆண் பிள்ளைகள் போல வீட்டு ரோட்டு வெளிக் கதவு மூடி இருந்தா மதிலுக்கு மேலால ஏறி உள்ளுகுப்போவா ,ஆனால் அவா கெட்டிகாரி ,கொழும்பு பல்கலைக்கழகம் சென்று மருத்துவ பீடத்தில படித்து, அங்கே களனிப் பல்கலைக்கழகதில் படித்துக்கொண்டிருந்த J V P என்ற மக்கள் விடுதலை முன்னணி இயக்க தலைமறைவு அரசியல் ஆதரவாளரான திரணகம என்ற சிங்களவரைக் கலியாணம் கட்டினா

அவா டாக்டர் ஆகி வெளியேறி மத்திய மலை நாட்டில் ஹப்புத்தளை என்ற சிங்கள இடத்தில டாக்டரா வேலை செய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் தொடங்க அதில படிப்பித்து , பின்னர் உடற்கூற்றியல் என்ற அனடாமி இல் விசேட Phd டாகடர் பட்டம் பெற இங்கிலாந்து போய்,படிச்சு முடிச்சு அங்கேயே வேலை செய்து கொண்டிருத்த போது யாழ்பாணத்தில் டாக்டர்மார் பலரும் வெளிநாடுகளிற்கு உயிர் தப்ப வெளியேறிக் கொண்டிருந்த போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உடற்கூற்றியல் என்ற அனாடமி துறைக்கு பேராசிரியர் தேவை என்பதனால் இங்கிலாந்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்தா ராஜனி.

அவா வந்த நேரம் , அறிவிவு ஜீவிகள் அரசியல் விமர்சனம் பேசிக்கொண்டு இருந்த போது , மோட்டுதனமான எதிரியுடன் அரசியல் பேசி சரிவராது ,அவனுடன் மோட்டுதனமான , அடிக்கு " திருப்பி அடி தான் பதிலடி " என்று நெஞ்சம் முழுவதும் வீரம் நிரம்பிய இளையவர்கள் விடுதலையின் பெயரால் உயிரைக் கொடுத்து விடுதலை போராட்டம் நடந்து கொண்டு இருந்த நேரம், ராஜனி இந்த போராட்டத்தில் மனித உரிமைகள் எப்படி எல்லாப் பக்கமும் இருந்து மீறப்பட்டு இருக்கிறது என்று அவாவின் சக அறிவிவு ஜீவிகள் டாக்டர் சிறீதரன் ,டாக்டர் ராஜன் கூல் சேர்ந்து முறிந்த பனை" என்னும் நூல் ஆங்கிலத்தில் எழுதினா ,அலுப்பு அதில தான் தொடங்கியது .

" முறிந்த பனை " புத்தகம் வஞ்சகம் இல்லாமல் , எண்பத்துமூன்று இனப்படுகொலை , ஜெயவர்த்தனா, சிறில் மத்தியு, காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி, பிரேமதாசா ,சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜ போட்டு தள்ளப்பட்டமை, சுழிபுரத்தில் ஆறு இளைஞர்களை கண்ணைக்கட்டி போட்டு தள்ளப்பட்டமை MP தருமலிங்கம், MP ஆலாலசுந்தரம் போட்டு தள்ளப்பட்டமை, இந்திய ராணுவ அழிவுவேலைகள் ,....... செய்த அட்டூழியங்கள் ,,,,,,,செய்த அட்டூழியங்கள் ........ செய்த அட்டூழியங்கள் என்று ஏறகுறைய எல்லா இயக்கங்களின் மக்கள் விரோத வன்முறைகளையும் விபரமாக " முறிந்த பனை " புத்தகம் ஆவணபடுதியது , இதில யாரை யார் போட்டுத்தள்ளியது என்ற விபரம் அவாவின் உயிருக்கு குறி வைத்தது . அது அவாவுக்கும் தெரியும் .

ராஜினி நண்பர் ஒருவருக்கு "என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது தமிழ் சமுகத்தில் வாழும் ஒரு தமிழ் பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு தமிழ்மகனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்" எண்டு சொல்லி இருக்குறா ,ஆனாலும் டாக்டர் ராஜனி காயம்பட்ட இயக்க உறுப்பினர்களிற்கு சிகிச்சை அளித்த இயக்க ஆதரவாளர் ,ஆதரவற்ற பெண்பிள்ளைகளிற்காக மருதனார்மடத்தில் "பூரணி" என்ற இல்லத்தை நடத்தி வந்தவா ,இந்திய அமைதி காக்கும் படையுடன் சண்டையில் யாழ் பெரியாஸ்பத்திரியில் காயம்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ உதவி செய்ய விடாமல்அமைதி காக்கும் படை தடுக்க , அவாவின் வாயில துவக்கை வைச்ச இந்திய ஜவானை " சுடுறது எண்டால் சுடு " எண்டு அமைதி காக்கும் அவர்களைத் தள்ளிப் போட்டு போய் உதவி செய்து பலரைக் காபாற்றினா ,

எனக்கு தெரிந்து விடுதலை போராட்டம் நடந்து கொண்டு இருந்த நேரம், யாழ்பாணத்தில் படித்த, நாலு விசியம் தெரிந்த அறிவுஜீவிகள் நமக்கு எதுக்கு வம்பு எண்டு எல்லாவிதமான பொது வாழ்விலும் தலையைக் கொடுக்க மாட்டார்கள் ,அல்லது எல்லாத்தையும், முக்கியமா அறிவுஜீவிகள் ஸ்டைலில் விடுதலை போராட்டதை விமர்சிப்பார்கள், சாதாரண அறிவுள்ள மக்கள் ,அவர்களின் பிள்ளைகள் நடைமுறையில் விடுதலையின் பெயரால் உயிரைக் கொடுத்து விடுதலை போராட்டதில ,எல்லைப்புறங்களில் ,காவல் அரண்களில் ,காடுகளில் ,சென்றிப் பொயின்ட்களில் உறங்காமல் ,சாப்பிடாமல் எதிரியின் வேலிகளைப் பிச்சு எறிந்து , கண்ணிவெடியில் கவச வாகனம்களைக்,கவிட்டு ,,போராட்டம் உணர்வோடு நடந்த .................காலகட்டம் ,

இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் ஒருநாள் பின்னேரம் ,அவா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படிப்பித்து முடிய ,சைக்கில் பின் கரியலில் உயிரைக் காப்பாற்றும் வழிமுறை உள்ள புத்தகங்கள் வைத்துக்கொண்டு , அவா யாழ் மருதுவப்பிடம முன்னாள் உள்ள ராச வீதியில் வீட்டை போக வெளிக்கிட ,யாரோ ஒருவர் அவரது பெயர் சொல்லி அழைக்க ,அவா சைக்கிளில் இருந்தபடியே திரும்பி அவர்களைப் பார்க்க .........துப்பாக்கி முழங்கியது . அவா சூடுபட்டு கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த போதும் ,சுட்டவர்கள் கிட்ட வந்து பின்பும் பின்னந்தலையில் மறுபடி இரு முறை துப்பாக்கி முழங்கியது .ராச வீதியில் அந்த இளவரசி இறந்துபோய் கிடக்க அவாவைச் சுற்றி உயிரைக் காப்பாற்றும் வழிமுறை உள்ள புத்தகங்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தது , அந்த இடத்தை இந்திய அமைதிப்படை சுற்றிவளைக்க , டாக்டர் ராஜனி திராணகம தெருவோரதில் அநாதையா கிடந்தா .

ராஜனியின் அடக்க மரண ஊர்வலத்துக்கு நான் போய் இருந்தேன். இந்திய அமைதிப்படை, அவர்களின் உளவாளிகள் அந்த நிகழ்வை கண்காணிக்க ,மருத்துவ பீட மாணவர்கள் தங்களின் ஆசிரியைக்கு இறுதி அஞ்சலி செய்து ,ராஜசிங்கம் மாஸ்டர் வீடில இருந்து மரண ஊர்வலம் நாயன்மார்கட்டு தென் இந்திய திருசபை சேர்ச் வரை சென்ற வழி முழுவதும் மழை அடிச்சு ஊத்தியது , திருசபையைச் சேர்ந்த பெண்கள் வெள்ளைச் சேலை உடுத்தி ,அதால தலையை வர்யின் மேரி போல மூடிக்கொண்டு " நான் ஜெருசலேம் வரை உன்னோடயே வருவேன் ......நான் ஜெருசலேம் வரை உன்னோடயே வருவேன் ,,, " எண்டு பாடிக்கொன்டு வந்து சேர்ச்சுக்குப் பின்னால உள்ள சவக்காலையில் ,அவாவின் கணவர் திரணகம, இரண்டு பெண் பிள்ளைகள் ராஜசிங்கம் மாஸ்டர், மண் அள்ளிப் போட்டு மூடி, அதுக்குமேல மெழுகுதிரிகளை கொழுத்தி வைக்க தொடங்க அடிச்சுப் பெய்த மழை நிண்டது .ராஜனியின் இரண்டு பெண் குழந்தைகளும் தங்கள் அம்மாவை எதுக்கு எல்லாரும் ஒரு மரப் பெட்டியில் வைத்து மூடி ,மண்ணுக்குள் கிடங்கு வெட்டி இறக்கி ,மண் போட்டு மூடுகிறார்கள் என்பது விளங்கும் நிலையில் இல்லாமல் இருந்தார்கள்.

டாக்டர் ராஜனி திராணகம படுகொலையைக் கண்டித்து ,தங்களின் வாய்களை கறுப்பு துணியால கட்டி மருத்துவ பீட மாணவர்கள் ஒரு கண்டன ஊர்வலம் நடத்த போது ,இந்திய அமைதிப்படை, அவர்களின் உளவாளிகள் அந்த நிகழ்வை கண்காணிக்க, அதில தன்னோட பருத்த உடலை தாங்கி ,நடக்க முடியாமல் பொல்லு ஊன்றிக்கொண்டு ,யாழ்பானா கொளுத்தும் வெய்யிலில் தொடக்கம் முதல் இறுதிவரை தெருவெல்லாம் நடந்து தன் எதிர்ப்பைக் காட்டினார் மறைந்த பேராசியர் கார்த்திகேசு சிவத்தம்பி ..

தனிப்பட நான் இபபலாம் நினைப்பது டாக்டர் ராஜனி திராணகம என்ற அன்ப்புக்குரிய ராஜனி கொல்லப்பட்ட விதம் வேதனை ,ஆனாலும் ஜோசித்துப் பார்த்தா வீரம் நிரம்பிய இளையவர்கள் விடுதலையின் பெயரால் உயிரைக் கொடுத்து விடுதலை போராட்டம் நடந்து கொண்டு இருந்த நேரம், ராஜனி அறிவிவு ஜீவிகள் அரசியல் விமர்சனம் பேசிக்கொண்டு இருந்தது மனசாட்சிக்கு குழப்பமா இருக்கு , அன்புக்குரிய ராஜினி அந்த முறிந்த பனைமரம் புத்தகத்தை எழுதாமலே விட்டுருக்கலாம் போலவும் இருக்கு ...................

இன்று , டாக்டர் ராஜனி திராணகம என்ற அன்ப்புக்குரிய ராஜனி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் என்றார்கள் , டாக்டர் ராஜனி திராணகம என்ற அன்ப்புக்குரிய ராஜனி எல்லாரையும்போல ஒரு பெண் ,அம்மா ,சகோதரி ,நண்பி , கொடுமை கண்டு மனிதாபிமானத்தை காப்பற்றப் போராடப் புறப்பட்ட ஒரே காரனத்துக்காக போட்டு தள்ளப்பட்ட அவாவின் நினைவுநாள் அதால இது மட்டும் எழுதினேன், அடிவேண்ட உடம்பில தில் இல்லாததால் அரசியலில் ஆர்வம் இல்லை, உயர் ரத்த அழுத்தம் தாறு மாறா எகிறும் என்பதால் பொலிடிகல் பதிவுகள் எழுதப் பயம், அதால காமடி போஸ்டிங் தான் எப்பவும் எழுதுவேன், இது ஒண்டு மட்டும் இண்டு எழுதினேன், இப்படி ஒரு பெண் வாழ்ந்தா, இப்படி கேவலமான வரலாறு நடந்தது எண்டு சொல்ல,,,அவளவுதான

நாவுக் அரசன்
ஒஸ்லோ நோர்வே

ருபதாம் நூற்றாண்டின் அசலான பெண் சிந்தனையாளர் ராஜினி திராணகமவின் அறுபதாவது பிறந்தநாள் மாதம
(1954-2014)

ராஜனி திராணகம படுகொலை தொடர்பாக வெளிவராத உண்மைகள்!

(இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே)

ஒரு சத்தியப்பதிவு 21 - 09 - 2005

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார். அவரையும் அவரது நேர்மையையும் நேருக்கு நேராக முகம் கொடுக்க முடியாத 'தமிழீழ விடுதலைக் கோழைகள் முதுகுப் புறமாக வந்து அவரைச் சுட்டுக் கொன்றனர். இந்தக்கோழைத்தனமான கொலையைக் கண்டித்து மருத்துவபீட மாணவர்களும் ஏனைய பல மாணவர்களும் எமது கைகளால் சுவரொட்டிகளை எழுதி யாழ்ப்பணம் எங்கும் ஒட்டினோம்.

அப்போது எமது விடுதலைப்போராட்டத்தைப் பற்றி எனக்குள் எழுந்த உணர்வை நான் பின்வருமாறு ஆங்கிலத்தல் எழுதினேன். இதுவும் ஒரு சுவரொட்டியாக அப்போது ஒட்டப்பட்டதுFree Doom& Free Dumpist our Freedom...?

இன்றோடு எங்கள் மெடம் கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஓடிவிட்டன. அவர் கொல்லப்பட்டு 15 வருடங்களின் பின்னராவது அவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் பட்டிருப்பது மிகவும் நன்றிக்குரிய விடயம்தான். ஆனால் இன்னும் அவரைக் கொன்றவர்களைப் பற்றிய பல உண்மைகள் சரியாக வெளிவரவில்லை என்பதுதான் மிகக் கவலையான விடயமாகும். இதற்கு முக்கிய காரணம் எம்மிடமிருந்த தத்தமது உயிர் பற்றிய பயம் பிரதானமானதாகும். அதேவேளை நாம் உண்மைகளைச் சொன்னால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் எமது சமூகம் இருக்கிறதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இன்றல்ல 1989இல் மெடம் கொல்லப்பட்ட போதும்கூட அவரை யார் கொன்றார்கள் என்ற உண்மையை எமது சமூகம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதை நான் கண்டேன்.

அப்போதும்கூட பலருக்கு அந்த உண்மை தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளுவதற்கு துணிச்சல் இருக்கவில்லை. ஆனால் அந்த உண்மையை தமக்குள் மனதளவில் ஏற்றுக் கொண்டவர்களும் பலர் இருந்தார்கள் என்பதும் மறுபக்க உண்மைதான். அவ்வாறு உண்மை தெரிந்து உள்ளுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். அன்று ஏனைய பலரைப் போன்று எனது உயிர், எனது எதிர்காலம் என்று நானும் இந்த உண்மைகளை எனக்குள் போட்டு அமுக்கிக் கொண்டேன். தற்போது நான் என் நாட்டை விட்டு வெளியேறி வெளி நாடொன்றில் ஒரு வைத்தியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் நாட்டில் பல ஒடுக்கு முறைகளுக்கு மத்தியில் வாழும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களோடு ஒப்பிடுகையில் எனது எதிர்காலத்திற்கும் உயிருக்கும் இவ்வெளிநாட்டில் அதிக உத்தரவாதம் இருக்கிறது. அந்த வகையில் மெடத்தின் கொலை தொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை இன்றாவது வெளியிடடுவது எனது கடமை என்று நினைக்கிறேன்.எமது அன்புக்குரிய மெடம் கலாநிதி ராஜினி திரணகம அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது நான் அங்கு மருத்துவபீட மாணவனாக இருந்தேன். அவர் எங்களுக்கு வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் எம்மை மிகத்திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள், நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார். அன்றைய கால கட்டத்தில் யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நடந்தவைகள் இப்போதும் ஓர் திரைப்படத்தைப்போல் என் மனதிற்குள் ஓடுகின்றன.

இந்திய இராணுவத்தினரதும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஏனைய தமிழ் ஆயுத இயக்கங்களினதும் கெடுபிடிகள் மிக அதிகமாக இருந்ததால் விடுதலைப் புலிகள் இயக்கம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தையும் தமது மறைவிடங்களில் ஒன்றாக பாவித்தார்கள். புலிகள் இயக்கத்தின் நபர்கள் மட்டுமன்றி அவர்களின் ஆயுதங்கள் கூட பல்கலைக்கழகத்திற்குள் சில ஊழியர்களினதும் மாணவர்களினதும் உதவியோடு மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உண்மை பல்கலைக்கழகத்தில் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பலருக்கும் தெரிந்திருந்தது. இதற்கு எமது மருத்துவ பீடமும் விதிவிலக்காக இருக்கவில்லை. இதனால் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களிடையேயும் விரிவுரையாளர்களிடையேயும் புலிகளைப்பற்றி பேசுவது மிக மிக அச்சம் நிறைந்ததாக காணப்பட்டது. இந்த அச்சத்தின் காரணமாக அன்று புலிகள் இயக்கம்தான் சில மருத்துவபீட மாணவர்களின் உதவியுடன் மெடம் ராஜினி அவர்களை சுட்டுக் கொன்றது என்ற உண்மையைப்பற்றி எவரும் வெளிப்படையாக பேசத் துணியவில்லை. அதுமட்டுமன்றி அக்கொலையைச் செய்தது இந்திய இராணுவம் அல்லது அவர்களோடு நிற்கும் ஏனைய ஆயுதக் குழுக்களில் ஒன்று என்ற பொய்யான கருத்தையே பலரும் பரப்ப முயற்சித்தனர்.

மெடம் அவர்கள் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் எமது வளாகத்திற்குள் நுழைந்து அவரை வேவு பார்த்தார்கள். மெடத்தோடு நெருங்கிப் பழகிய மாணவர்கள் பலருக்கு இவ்விடயம் தெரிந்திருந்தும் அதை எவ்வாறு வெளியிடுவது என்ற அச்சம் அவர்களிடம் காணப்பட்டது. அதே நேரம் இக்கொலையாளிகளை உள்ளே கூட்டிவந்த சில மாணவர்களும் கூட மெடத்தோடு மிக நெருக்கமாக பழகிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முக்கியமான இருவரை நான் இங்கு பெயர் குறிப்பிட விரும்புகிறேன்.அவர்களில் ஒருவர் வடமராட்சியை சேர்ந்த சூரி எனப்படும் சூரியகுமாரன் மற்றவர் முல்லைத்தீவைச் சேர்ந்த தர்மேந்திரா என்பவர்களாவர். புலிகள் இயக்கத்தின் உளவாளிகளும் கொலைகாரர்களும் சூரியோடும் தர்மேந்திராவோடும் மருத்துவபீட வளாகத்திற்குள் நின்று கதைத்து பேசுவதும் வளாக சிற்றுண்டிச் சாலையில் தேனீர் அருந்துவதும் அப்போது மிக வெளிப்படையான நிகழ்ச்சிகளாக இருந்தன. புலிகளின் சாவகச்சேரி பொறுப்பாளர் கேடில்சின் சகோதரரான காண்டீபன் என்னும் பிரபல கொலையாளியும்கூட தர்மேந்திராவோடு தேனீர் அருந்துவதை நான் பலமுறை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று, 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து மெடம் வெளியே வரும்வரை காத்திருந்த புலிகளின் உளவாளிகளில் ஒருவன் வீதியிலே தயாராக நின்றிருந்த கொலையாளிக்கு இரகசியமாக சிக்னல் கொடுத்தான். அதைச் செய்தவன் வேறு யாருமல்ல. அங்கு பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் செல்வக்குமார் என்பவனே. மெடம் தனது சைக்கிளில் வளாக பிரதான வாசலால் வீதிக்கு இறங்கியதும் அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடைவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான்.

இந்த கொலையாளி யார் என்பதையும் நான் இங்கு சொல்லவேண்டும். புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றியவரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனே அவன். பொஸ்கோவை சாதாரண மக்களில் பலருக்கு தெரியாது. ஆனால் மெடம் கொல்லப்படுவதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே பொஸ்கோவினதும் இன்னும் பல சந்தேகமான நபர்களினதும் நடமாட்டம் மருத்துவ பீடத்திற்குள் அதிகரித்திருந்தது. பொஸ்கோவிற்கு வயது 30 - 35 இடையில் இருக்கும். எப்போதும் மற்றவர்களை சந்தேகத்தோடு குரோதத்தோடும் பார்க்கும் அவனது விறைப்பான முகமே அவனைக் காட்டிக் கொடுத்து விடும். இந்த பொஸ்கோ சூரியோடும், தர்மேந்திராவோடும் அமர்ந்து வளாக சிற்றுண்டி சாலையில் தேனீர் அருந்துவதை நானும் பல மாணவர்களும் கண்டிருந்தோம். முதலில் எனக்கும் இவன் யார் என்று தெரியாது. எம்மோடு படித்த ஒரு மாணவனே எங்களுக்கு பொஸ்கோ யார் என்ற உண்மையைச் சொன்னான்.

மருத்துவ பீடத்திற்குள் இவனின் நடமாட்டம் பல தடவைகள் இருந்ததை நானும் சக மாணவர்களும் கண்டிருந்தோம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கொலை நடக்கும்போது அச்சம்பவத்தை நேரில் பாக்த்த ஓர் மாணவன் இன்னும் உயிருடன் இருக்கிறான். அந்த மாணவனும் நானும் ஒன்றாக திரியும்போதும்கூட பல தடவை பொஸ்கோவை நாம் கண்டிருக்கிறோம். அன்று அந்த மாணவனும் நாங்களும் இணைந்து, 'புலிகள் இயக்கமும், அதன் கொலையாளி பொஸ்கோவும், அவனுக்காக உளவு வேலை செய்த சூரிய குமாரனும் தர்மேந்திராவும்தான் மெடத்தின் கொலைக்கு பொறுப்பு' என்று கூறியிருந்தால் நாங்கள் ஒருவரும் இன்று உயிருடன் இருக்கமாட்டோம். எனவே என் சக மாணவன் கண்ணால் கண்ட அந்தக் கொலையை யாரிடமும் வெளியே சொல்லாதே என எச்சரித்தவர்களில் நானும் ஒருவன். மெடம் கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்டபொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்தவர்கள் யார் என்று நன்றாக தெரியும்.

சூரி, தர்மேந்திரா ஆகிய இருவரோடும் நெருங்கி பழகியவர்களும், புலிகளின் கொலைகார அரசியலுக்கு ஆதரவாக இருந்த பல மருத்துவபீட மாணவர்களுக்கும் இந்த உண்மை நன்கு தெரியும். மெடம் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி மருத்துவ பீடத்திற்குள் பரவியதுமே சூரி, தர்மேந்திரா உட்பட அவர்களின் நண்பர்களின் முகங்களை நான் பார்த்தேன். அவர்களின் முகங்களே உண்மையை தெளிவாக வெளிப்படுத்தின. அவர்களைக் காட்டிக் கொடுத்தன. எனது கண்களைக்கூட அவர்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. தங்களுக்கு கல்வியை போதித்து வழிகாட்டி, எதிர்கால மாணவ சமூகத்திற்கு கலங்கரை விளக்காக நின்ற அந்த ஒப்பற்ற மேதையை சுட்டுக் கொன்றுவிட்டு அவர்கள் இன்று வெளிநாடுகளில் சுகம் அனுபவிக்கிறார்கள். சூரியகுமாரன் இன்று இங்கிலாந்தில் வைத்தியசாலை ஒன்றில் வேலை செய்கிறான். அன்று அந்த தாயின் இரு குழந்தைகளை அநாதையாக்கிய இக்கொலைத்திட்டத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவனாகிய இவன், இன்று தான் உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியனாக வேஷம் போடுகிறான். இவர்கள் நாளைய சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலவ நாம் அனுமதிக்கலாமா? இந்த நாகரீக உலகத்தின் முன்னால் இவர்களை நிறுத்தி அம்பலப்படுத்த வேண்டாமா. நிட்சயம் அதை நாம் செய்ய வேண்டும்.

எனது அன்புக்குரிய சக மாணவர்களே நாம் நீண்டகாலம் மௌனமாக இருந்துவிட்டோம் எமது கண் முன்னால் நடத்தி முடிக்கப்பட்ட இந்த அநியாயத்தை மூடி மறைக்க புலிகளும் அவர்களுக்கு ஒத்து ஊதுபவர்களும் இன்னமும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நடந்த உண்மை வரலாற்றில் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு இதைப் பதிவு செய்கிறேன் இது தொடர்பாக நீங்களும் உங்களின் மனட்சாட்சியின் அடிப்படையில் உண்மையை சமூகத்தின் முன் வைக்க கோரிக்கை விடுக்கிறேன்.

1989ம் ஆண்டில் யாழ். மருத்துவபீட மாணவன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com