Contact us at: sooddram@gmail.com

 

கறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது

அமெரிக்காவில் டெக்ஸஸ் சிறைச்சாலையில் சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டு அங்குள்ள சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவதுடன் சித்திரவதைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் 2007ம் ஆண்டில் மாத்திரம் இந்த டெக்ஸஸ் சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிர்துறந்தனர். மனித உரிமைகள் குறித்து உலகத்துக்கு உபதேசம் செய்யும் நல்லாசானைப் போல் வேஷமணிந்து இலங்கை போன்ற சிறிய நாடுகளை துன்புறுத்தும் அமெரிக்க ஆட்சியாளர்கள் இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகின்றன, யுத்தக் குற்றங்கள் இடம்பெறுகின்றன என்ற ஆதாரமற்ற குற்றங்களை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை நிறை வேற்றுவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் இவ்விதம் மனித உரிமைகள் பேணப்ப டுகின்றனவா என்பதை முதலில் திரும்பிப் பார்த்துச் செயற்படுவது நல்லது.

அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல் சாசனம் சாதாரண கைதிகள் கொடிய முறையிலும் அசாதாரண முறையிலும் தண்டிக்கப்படுவதை தடை செய்கின்றது.

டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தின் சட்டபீடம் மனித உரிமைகள் மீறல் பற்றி நடத்திய ஆய்வையடுத்து வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டெக்ஸஸ் பிரதேசம் அமெரிக்காவிலேயே அதிக உஷ்ண நிலையை கொண்டுள்ள பகுதியாகும். இந்த சிறைச்சாலையில் குளிரூட்டும் சாதனங்களோ, மின் விசிறிகளோ பொருத் தப்படாத காரணத்தினால் இங்குள்ள 15 ஆயிரம் கைதிகள் இரவும் பகலும் உஷ்ண நிலையை தாங்க முடியாது நோய்வாய்ப் பட்டுள்ளார்கள். இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிப்பதற்கும் எவ்வித வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கு எத்தனையோ முறைப்பாடுகள் செய்திருந்தும் கூட, அந்த அரசாங்கம் தங்கள் நாட்டிலுள்ள சிறைக்கைதிகளின் வேதனைகளை பொருட்படுத்தாமல் இருந்து வருவதாக அமெரிக்காவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

இதுபோன்ற நாடுகளில் சிறுபான்மை மக்களை அதுவும் தமிழ் மக்களை அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணையை நிறைவேற்றிய அமெரிக்கா தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மை கறுப்பு இன மக்களை மிக மோசமாக இனவாதத்தின் அடிப்படையில் துன்புறுத்தி வருவதுடன் அந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகளை கூட பெற்றுக் கொடுக்க மறுக்கின்றது.

கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அந்த மனிதர் கூட அங்கு அரசியல் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்திருக்கும் அமெரிக்க காங்கி ரஸ¤க்கும் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபைக்கும் அடி பணிந்து அவர்களின் அங்கீகாரமின்றி எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத அதிகாரமற்றவராகவே இருக்கிறார். இவ்விரு சபைகளிலும் பெரும்பான்மை அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் அமெரிக்காவின் வெள்ளை இன மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் கறுப்பு இன மக்களுக்கு அரசியல் அதிகாரம் மற்றும் செல்வாக்குமிக்க பதவிகள் கிடைப்பது அந்நாட்டில் அரிதாகவே இருக்கிறது. பராக் ஒபாமா போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய சிறு எண்ணிக்கையிலான அமெரிக்காவின் கறுப்பு இன மக்களுக்கே அந்நாட்டில் உயர் பதவிகளும் செல்வாக்கும் இருந்து வருகின்றது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மை கறுப்பு இன மக்கள் அந்நாட்டில் ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வசதிகளற்ற சிறிய வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால் கறுப்பு இன இளைஞர்கள் அங்கு வருமானமற்ற காரணத்தினால் திருட வேண்டிய அவலநிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

வெளியுலகத்துக்கு தங்களை ஒரு ஜனநாயக நாடு என்று வேஷம் போடும் அமெரிக்க ஆட்சியாளர்கள் உண்மையிலேயே அமெரிக்காவிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளை கொடுக்காமல் அவர்களை அடிமைகள் போல் நடத்திவருவதை இன்று உலகம் அறியாது இருக்கிறது.

அமெரிக்காவின் ஊடகங்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் பொது ஸ்தாபனங்கள் அனைத்துமே அந்நாட்டின் வெள்ளை இன மக்களின் கஷ்டங்களை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்ட விரும்பாமல் கறுப்பு இன மக்களின் பிடியில் இருந்து வருவதனால் அவை கறுப்பு இன மக்களின் கஷ்டங்களை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்ட விரும்பாமல் கறுப்பு இன மக்களின் கஷ்டங்கள் பற்றி வெளிவரும் செய்திகளை தணிக்கை செய்து விடுகிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் தங்கள் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தங்களின் இது போன்ற சமூக விரோத செயல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஈராக்கை சிறப்பான முறையில் பல்லாண்டு காலம் ஆட்சி செய்து வந்த ஜனாதிபதி சதாம் ஹுசைன் என்றாவது ஒருநாள் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அஞ்சிய அமெரிக்க அந்நாட்டில் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்று போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதனை தங்களின் கைப்பிள்ளைகளாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிறைவேற்றியது.

ஐக்கிய நாடுகள் சபையின் இரசாயன ஆயுதங்கள் பற்றிய நிபுணர்களை ஈராக்கிற்கு அனுப்பி சோதனையிடுவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிக்கு சதாம் ஹுசைன் முழுமையாக தனது ஒத்துழைப்பை வழங்கினார். அங்கு சென்ற ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு ஈராக்கில் தாங்கள் சென்ற இடங்களில் இரசாயன ஆயுதங்களை காணவில்லை என்று கையை விரித்து விட்டார்கள் என்றாலும் அமெரிக்கா சலிக்காமல் ஈராக்கிற்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் நடத்தியது.

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இன்று பிரச்சினையில்லாமல் இயங்குவதற்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கு நிதி வழங்க முடியாது என்று நிதியுதவியை நிறுத்தி விட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்கு கூட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் இயங்க முடியாத ஸ்தம்பித நிலையை அடைந்துவிடும்.

இதனால் அமெரிக்கா உலகில் தனிக்காட்டு ராஜாவைப் போன்று தான் விரும்பியபடி மற்ற நாடுகளை துன்புறுத்தி தனது செல்வாக்கையும் அதிகாரத்தையும் உலகில் பெருக்கிக் கொள்ளும் சதி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

இவ்விதம் அமெரிக்கா ஈராக்கில் தலையிட்டு இறுதியில் அந்நாட்டின் அரசாங்கத்திற்கு எதிரானவர்களுக்கு ஆயுதங்களை கொடுத்து ஈராக்கில் ஒரு பயங்கரமான உள்நாட்டு யுத்தத்தை தன்னுடைய நலனை பேணுவதற்காக ஆரம்பித்தது. இறுதியில் சதாம் ஹ¥சைனை கைது செய்து போலியான நீதி விசாரணையின் மூலம் அந்த நல்ல மனிதனை தூக்கிலிட்டு கொலை செய்தது.

இதே அடிப்படையிலேயே லிபியாவின் தலைவர் கடாபியையும், பதவியிறக்க வேண்டும் என்ற தன்னுடைய சதி திட்டத்தை நிறைவேற்றி அந்நாட்டையும் இன்று உள்நாட்டு யுத்தத்தின் மூலம் சின்னாப்பின்னப்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் கூலிப் படையினர் இறுதியில் கடாபியையும் சுட்டுக் கொன்றனர்.

ஈராக் மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு யுத்தத்தின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா இப்போது தனது கவனத்தை இன்னுமொரு பலம் வாய்ந்த அரபு நாடான எகிப்தின் மீதும் செலுத்தி இருக்கிறது. எகிப்தின் பலம் வாய்ந்த தலைவராக இருந்தவர்களை அங்குள்ள தங்கள் ஒற்றர் படையின் மூலம் மக்களை தூண்டிவிட்டு அந்த நாட்டையும் இன்று சீர்குலைத்து வருகிறது.

அமெரிக்கா இவ்விதம் உலகில் அமை தியாக இருந்துவரும் நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்சினைகளை உருவாக்கும் தனது சதி திட்டத்தை நிறைவேற்றுவதற்கு சில நாடுகளுக்கு நிதியுதவி செய்து அவற்றை தனது கையாட்களாக பயன்படுத்தி வருகின்றது. அந்த பணியை பிரிட்டிஷ் அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத்திற்கு சிறப்பாக செய்து கொண்டு வருகின்றது.

அமெரிக்காவின் தூண்டுதல் காரண மாகவே பிரிட்டிஷ் அரசாங்க தலைவர்கள் இன்று இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களை ஆதரிப்பது போன்று பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கை விடயத்தில் நடந்து கொண்டாலும் அந்த அரசாங்கம் அமெரிக்காவின் உத்தரவையே இவ்விதம் நிறைவேற்றி எங்கள் நாட்டிற்கு தீங்கை ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இவ்விதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூலம் எங்கள் நாட்டை துன்புறுத்துவதற்கு சதி திட்டங்களை தொடர்ந்தும் மேற்கொண்டாலும் எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எந்தவொரு சவால்களையும் எதிர்நோக்கி வெற்றி காணும் தலைவர்கள் என்ற முறையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தை நிறைபெறச் செய்வதுடன் இந்நாட்டு மக்களிடையே நல்லிணக் கப்பாட்டை வலுப்படுத்தி தொடர்ந்தும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு இலங்கையை அடுத்த சில வருடங்களுக்கு தேனும் பாலும் ஊற்றெடுக்கும் ஒரு சொர்க்க பூமியாக மாற்றிவிடுவார் என்று நாம் நம்பிக்கை வைக்க முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com