Contact us at: sooddram@gmail.com

 

பிரபாகரனில் தொங்கிக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன்?

விக்னேஸ்வரனை ஜனாதிபதியாக்க ஆசைப்படுவோர் முதலில் நல்ல முதலமைச்சராக நிரூபித்துக்காட்ட அவருக்கு வழிவிட வேண்டும்

லமான சச்சரவுகளுக்கு பின்னர் தான் ஓய்வுபெற்ற நீதிபதி விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனையும் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனையும் விட்டால், கூட்டமைப்பில அங்கத்துவம் வகித்துவரும் ஐந்து கட்சிகளுமே ஆரம்பத்தில் விக்னேஸ்வரனை கண்டுகொள்ளவில்லை. அனைவருமே விக்னேஸ்வரனை எதிர்த்தனர். தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைகள் அனைத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பின. அவர்கள் அனைவரும் தமிழரசு கட்சியின் செயலாளர் நாயகம் அரசியலில் சம்பந்தனைவிடவும் அனுபவசாலியான மாவை சேனாதிராஜாவின் பெயரைத்தான் பிரேரித்திருந்தனர். ஆனாலும் இறுதியில் சம்பந்தன் தான் நினைந்தவாறு விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக ஆக்கினார்.

முதலமைச்சர் வேட்பாளர் குத்துவெட்டின் போது ஒரு சந்தர்ப்பத்தில் சுமத்திரன் ஓர் எச்சரிக்கையையும் கொடுத்திருந்தார். விக்னேஸ்வரனை நீர் எதிர்ப்பதன் மூலம் ஒரு வரலாற்று தவறை செய்யப் போகிaர். இதனால் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்த மாவை சேனாதிராஜா, இறுதியில் தான் பெருந்தன்மையாக விட்டுக் கொடுப்பதாக ஊடகங்களுக்கு சப்பைக்கட்டு அறிக்கை ஒன்றை கொடுத்துவிட்டு ஆட்டத்திலிருந்து விலகிக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் எந்தவொரு தொடர்பையும் பேணாமல் சைவ சமய சொற்பொழிவுகள் செய்து கொண்டிருந்த விக்னேஸ்வரன் தமிழ் ஊடகங்களின் பெருமெடுப்பிலான பிரசாரங்களால் அதிக விருப்பு வாக்குகளை பெற்று ஒருவாறு முதல்வர் கதிரையில் அமர்ந்தார். ஆரம்பத்தில் விக்னேஸ்வரன் போன்ற ஒருவர் தமிழரின் அரசியலுக்குள் வந்ததை தென் இலங்கையில் உள்ள அறிவாளிகள் பலரும் வரவேற்றதையும் அவதானிக்க முடிந்தது. அரசாங்கமும் விக்கி போன்ற ஒருவர் அரசியலுக்குள் வருவதை வரவேற்றிருந்தது. விக்கி சிங்களத் தலைவர்களுடன் நட்புக் கொண்டவர் என்பதையும் தாண்டி அவர் அவர்களின் சம்பந்தியாகவும் இருப்பவர். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக விக்னேஸ்வரனின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது. விக்னேஸ்வரனின் முதலாவது சறுக்கல் வல்வெட்டித்துறையில் தொடங்கியது. மற்றவர்களைப் போன்று விக்னேஸ்வரனும் விருப்பு வாக்குகளை பெறுவதற்காக புலிகளின் தலைவர் பிரபாரனின் புகழ் பாடினார்.

பிரபாகரனை ஒரு மாவீரன், விடுதலை வீரன் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். இதன் மூலம் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போடுவது போன்று விக்கி தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டார். பிறகுதான் ஏன் அவ்வாறு தெரிவித்தேன் என்பதற்கு ஒரு விளக்கத்தையும் சொன்னார்.

விக்னேஸ்வரன் இவ்வாறு கூறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் இலங்கைக்கான ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு விட்டு ஜெனீவா திரும்பும் வழியில் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், புலிகள் அமைப்பை ஒரு கொலைகார அமைப்பு என்று தெரிவித்திருந்தார். அம்மையாரின் இந்த கருத்தை மறுதலிக்கும் நோக்கில்தான் விக்னேஸ்வரன் வல்வெட்டித்துறையில் அவ்வாறு தெரிவித்தாகவும் ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அப்படியாயின் விக்னேஸ்வரன் என்ன புலி ஆதரவாளரா என்று நீங்கள் யோசிக்கலாம்.

விக்னேஸ்வரன் முப்பது வருடங்களாக இலங்கையின் நீதித் துறையில் பணியாற்றிய ஒருவர். இந்தக் காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விக்கி புலிகளின் அனுதாபியாகவோ அல்லது வேறு எந்தவொரு ஆயுத அமைப்புக்களின் ஆதரவாளராகவோ இருந்தவரல்லர். ஆனால், நீதிபதி விக்னேஸ்வரன், இந்தக் காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் புலி உறுப்பினர்களுக்கு எதிராக பல தீர்ப்புக்களை வழங்கியிருக்கின்றார். இன்று மனித உரிமைகள் பற்றியெல்லாம் சொற்பொழிவுகள் வழங்கிவரும் விக்கி தனது சேவைக் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கும் அவசரகால சட்டத்திற்கும் ஆதரவாகவே செயற்பட்டிருந்தார். அன்றைய சூழலில் அது அவசியமென்னும் கருத்தையே கொண்டிருந்தார்.

உண்மையில் அவர் இவ்வாறான சட்டங்களை எதிர்த்திருந்தால் தனது பதவியிலிருந்து நேர்மையாக விலகிச் சென்றிருப்பார். ஆனால், விக்கி அவ்வாறு செயய்யவில்லை. இன்று கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்குள் வந்ததும் தடாலடியாக திடீர் புலி அபிமானியாக மாறி விட்டார். விக்னேஸ்வரன் கம்பன் கழகத்திலிருந்து திடீரென்று அரசியலுக்குள் வந்ததன் பின்னர் ஓர் இரண்டுக்கெட்டான் நிலையிலேயே தடுமாறித் திரிகின்றார். முன்னைய புலி வெறுப்பை முழுவதுமாக அவரால் விடவும் முடியவில்லை. அதேவேளை பகிரங்கமாக தன்னை ஒரு புலி எதிர்ப்பாளராகவும் காட்டிக் கொள்ளவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக அலைகின்றார்.

ஆனால் இந்த இரண்டும் கெட்டான் நிலையை அவர் அவ்வப்போது வழங்கி வரும் சொற்பொழிவுகள் வாயிலாக நாம் காணக் கூடியதாக இருக்கிறது. வல்வெட்டித்துறையில் வைத்து பிரபாகரனை மாவீரன் என்று புகழ்ந்து தள்ளிய விக்னேஸ்வரன் திடீரென்று ஒரு குத்துக் கரணம் அடித்தார். ஏற்கனவே விருப்பு வாக்குகளை பெறும் நோக்கில் பிரபாகரனை மாவீரன் என்று அவர் சொல்லியிருந்தாலும் அவர் மனச்சாட்சி உறுத்தியிருக்க வேண்டும். வடக்கு மாகாண சபைக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் பதவியேற்பு வைபவத்தின் போது பிறிதொரு தடாலடி கருத்தை தூக்கிப் போட்டார். பிரபாகரனிடம் அதிகாரம் இருந்த கடந்த முப்பது வருடங்களில் தமிழ் மக்கள் பொம்மைகளாக பயன்படுத்தப்பட்டனர். இவ்வாறு விக்னேஸ்வரன் கூறும் போது ஆயிரக்கணக்கான மக்களும் கூட்டமைப்பின் தலைவர்களும் இருந்தனர். இதனை பார்வையாளர்கள் வரிசையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஒரு வயதானவர் முணுமுணுத்துக் கொண்டார். பிரபாகரன் மக்களை பொம்மைகளாக பயன்படுத்திய காலத்தில் முழுக் கூட்டமைப்புக்காரர்களும் அங்கதானே கிடந்தவையள். அப்படியெண்டால் இவங்களும்தானே பொம்மைகளாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பிறகு இவங்கள் எப்படி இண்டைக்கு மக்களை வழிநடத்த ஏலும்.

ஆனால், விக்கி வல்வெட்டித் துறையில் வைத்து பிரபாகரனை மாவீரன் என்று புகழந்ததை தலைப்புச் செய்திகளில் பிரசுரித்த ஊடகங்கள் எவையும், பிரபாகரன் மக்களை பொம்மைகளாக பயன்படுத்தினார் என்று விக்கி சொன்னதை பெரிதுபடுத்தாமல் அடக்கி வாசித்தன. இன்று மீண்டும் பிரபாரன் தொடர்பாக பிறிதொரு சர்ச்சையில் விக்கி அகப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியை விமர்சிப்பதற்காக பிரபாகரனை கையிலெடுத்து மீண்டும் பிறிதொரு சர்ச்சைக்குள் அகப்பட்டிருக்கின்றார். திரும்பவும் அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். இத்தோடு பிரபாகரன் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மூன்றாவது முறையாக விளக்கம் சொல்லியிருக்கின்றார். விக்கிக்கு ஏன் இந்த வேலை? விக்கிக்குள் இருக்கும் இரண்டும் கெட்டான் நிலைதான் இத்தனைக்கும் காரணம் ஆகும். விக்கியால் பிரபாகரனை ஏற்றுக் கொள்ளவும் முடிவில்லை. விக்னேஸ்வரன் அரசியலுக்குள் இறங்குவதற்கான முடிவெடுத்த போது, ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் எண்ணத்தில்தான் இருந்தார். இதனால்தான் தனது முதல்வர் பதவிப் பிரமாணம் மேலும் அமைச்சுப் பொறுப்புகளுக்கான பதவிப் பிரமாணம் ஆகியவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் மேற்கொண்டார். அந்தப் பதவிப் பிரமாண நிகழ்விற்கு விக்கி தனது இரு மகன்கள் மருமகள்களுடன் சென்றிருந்தார். இதன் மூலம் தனக்கும் சிங்கள மக்களுக்கும் உள்ள நெருக்கத்தை எல்லோருக்கும் எடுத்துக் காட்டினார். மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு மாகாண சபையை நிர்வகிக்கும் எண்ணத்தையே வெளிப்படுத்தினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போன்று வடக்கின் அரசியலை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விக்கி மட்டுமல்ல எவர் கூட்டமைப்பின் அரசியலுக்குள் சென்றாலும் அவர்களால் தாங்கள் எண்ணுவது போன்றெல்லாம் நடந்துவிட முடிவதில்லை. இதுதான் தற்போது விக்னேஸ்வரனுக்கும் நடந்திருக்கிறது. இப்போது விக்னேஸ்வரன் என்னும் புதிய அரசியல்வாதி ஒருபுறம் வடக்கில் சீவிக்கும் பிரபாகரன் விசுவாசிகளுக்கும், புலம்பெயர்ந்த நாடுகளில் வளமுடன் வாழும் பிரபாகரன் விசுவாசிகளுக்கும் இடையில் சிக்குப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கின்றார். இதனால்தான் அவ்வப்போது பிரபாகரனில் தொங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் விக்கிக்கு ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட விக்னேஸ்வரனைத்தான் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஜனாதிபதியாக்க வேண்டும் என்று மனோ கணேசன் சொல்கிறார். மனோ கணேசன் தடாலடியான கருத்துக்களால தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்ள முற்படும் ஓர் அரசியல்வாதி. ஒரு மாகாண சபையையே நிர்வகிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரனை ஜனாதிபதியாக்கி ஒட்டுமொத்த நாட்டையும் அதலபாதாளத்திற்கு அனுப்பும் யோசனையை மனோ கணேசன் முன்வைத்திருக்கின்றார். ஆரம்பத்தில் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு வழங்கிய பலரும் இப்போது முணுமுணுத்துக் கொண்டு திரிகின்றனர். எந்தச் சாயமும் இல்லாதவர், இவர் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார் என எண்ணினோம். அவரோ இன்று வீண் பேச்சுக்களில் அல்லவா காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு தலைவன் என்பவன் சுயமாக முடிவெடுத்து செயலாற்றக் கூடியவனாக இருக்க வேண்டும். அவர் என்ன நினைப்பார் இவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் அஞ்சி நடுங்குபவர்களால் ஒரு போதுமே மக்களை வழிநடத்த முடியாது. வடக்கு மாகாண சபையை பொறுப்பெடுத்த பின்னர் விக்னேஸ்வரன் குறித்த மாயை அனைத்தும் இல்லாமல் போய் விட்டது. உண்மையில் மனோ கணேசனுக்கு ஒரு தமிழரைத்தான் ஜனாதிபதிக்கான பொதுவேட்பாளராக்க வேண்டும் என்று ஆசையிருந்தால், தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனது பெயரை அறிவிக்கலாமே! ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு போதுமே மனோ கணேசனின் இப்படியான பிதட்டல்களை கண்டு கொள்ளப் போவதில்லை. ஏனெனில் இது சிறுபிள்ளைகள் மணல் வீடு கட்ட ஆசைப்படும் விளையாட்டு இல்லை. இது அரசியல், விக்னேஸ்வரன் ஜனாதிபதியாக ஆசைப்படுவதற்கு முன்னர் முதலில் ஒரு மக்களுக்கான நல்ல முதலமைச்சராக தன்னை நிரூபித்துக் காட்டட்டுமே.

(கே. வாசுதேவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com