Contact us at: sooddram@gmail.com

 

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல்

பகுதி - 2

டி.பி.எஸ் ஜெயராஜ்

புலம்பெயர்ந்தவர்கள்

கணணிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் அதேபோல கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் என்பன புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றிய ஒரு தோராயமான அறிவைப் பெறுவதற்கு உதவின. புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிச் சக்திகள் இந்த நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு தரப்பினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்றால் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் பிளவுபட்ட வௌ;வேறு பிரிவுகளின் ஆதரவு இந்த முயற்சிக்கு கிடைத்திருப்பதுதான். ஒப்பீட்டளவில் பெரிய பிரிவுகளான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான அனைத்துலக செயலகம்,அதேபோல அதற்குச் சமமான பிரிவான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகத்தின்  தலைமையிலான தலைமைச் செயலகம் போன்ற இரு பிரிவுகளுமே இதற்கு உதவியுள்ளன. விநாயகம் பிரிவின் நிதியுதவி பிரதானமாக பிரான்சில் இருந்து கிடைத்த அதேவேளை நெடியவன் பிரிவிலிருந்து பணம் சுவிட்ஸலாந்தில் இருந்து வந்துள்ளது.

ஆரம்பத்தில் பாதுகாப்பு தரப்பினரால், புத்துயிர்ப்பு பெற்ற எல்.ரீ.ரீ.ஈ எவ்வளவு வலுவாக உள்ளது என்பதையோ அல்லது தீவில் புலிகளுக்கு சாத்தியமான பங்களிப்பு எப்படியிருக்கிறது என்பதையோ தெரிந்து கொள்ள முடியவில்லை. கொழும்பிலும் மற்றம் ஏனைய இடங்களிலும் நடைபெறக்கூடிய சாத்தியமான கொலை முயற்சிகள், களவு மற்றும் உலோகப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் கருவியை பயன்படுத்தி நிலத்தின்; கீழ் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களைக் கண்டுபிடித்தல், மற்றும் யுத்;தம் முடிவடைந்த பின்னர் முதல் தடவையாக எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர் ஒருவர் மூலமாக காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதுக்கான காரணங்கள், போன்றவை சம்பந்தமான ஆரம்ப விசாரணைகள், புலிகளின் புத்துயிர்ப்பு பற்றி பாதுகாப்பு வட்டாரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும் கருவியாக அமைந்தன.அதன் விளைவாக அதிகாரிகள்,கோபி மறைந்திருந்த அறைக்குள் ஆயுதம் இன்றி கண்காணிப்பாளர் ரட்னகார சென்றதைப் போன்ற ஒரு செயலை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்துக்கு  இடமளிக்க விரும்பவில்லை. இநத கடின அணுகுமுறை காரணமாக கடுமையான சட்ட நடவடிக்கைகள் பயங்கரவாத சந்தேக சுற்றிவளைப்புகளின்போது பின்பற்றப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டார்கள். இருபாலாரையும் சேர்ந்த பல்;வேறு வயதினரையும் கொண்ட 70க்கும் மேற்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காகக் கைது செய்யப் பட்டார்கள். அநேகமாக அவர்கள் அனைவருமே கொடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படடார்கள். முக்கிய சந்தேக நபர்கள் கொழும்பிலுள்ள ரி.ஐ.டி தலைமையகத்தில் விசாரணைக்காக அடைக்கப்பட்ட அதேவேளை மற்றவர்கள் பூசாவிலுள்ள தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்கள். அநேகமான சந்தாப்பங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்களைச சந்திப்பதற்காவும் மற்றும் அவர்கள் வாழும் நிலமைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்குமான வழிகள்  அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினருக்காகவும் வழங்கப்பட்டன. பல சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகள் நிலுவையிலுள்ளபோது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

அரசாங்கமும் பாதுகாப்பு அதிகாரிகளும் எல்.ரீ.ரீ.ஈ யின் புத்துயிர்ப்பு சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கொண்ட கடினமான நடவடிக்கைகள் விகிதாசாரமற்ற விதத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் உண்மையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அளவுக்குமீறி செயற்பட்டவிதம் ஒரு அப்பட்டமான காட்சியாகத் தோன்றியது. ஒரு சிறிய கொசுவை நசுக்குவதற்கு மிகப் பெரிய சம்மட்டி ஒன்றை பயன்படுத்துவது போல இருந்தது அந்தக் காட்சி அதிகாரிகள் பக்கம் நியாயமாகப் பார்த்தால் அந்த அச்சுறுத்தல் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த அச்சுறுத்தலைப் பற்றிய ஒரு சரியான பிடித்தம் அவர்களிடம் இருக்கவில்லை. மோசமான ஆபத்து எற்படலாமென்கிற அச்சம்  ஏற்பட்டது. பாதுகாப்பு நிறுவனத்தால், நீண்ட காலமாக இல்லாதிருந்த போர் முரட்டுத்தனமாக மீண்டும் எழுவதைக் கண்டு அமைதியாக இருந்தவிட முடியாது. அதிகாரத்தின் தாழ்வாரங்களில் எச்சரிக்கை மணிகள் முழங்கின. அதுதான் பயங்கரவாதத்துக்கு எதிரான ஆரம்ப பதில்.

சந்தேக நபர்கள்

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கும் மற்றும் தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவது ஒரு கடினமான செய்கையாக தோன்றிய போதிலும், அப்பாவிகளுக்கு ஏற்படும் இழப்புகள் அல்லது  ிரமங்கள் என்பனவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும். மக்கள் விரும்பியோ விரும்பாமலோ பகடைக் காய்களாக  பயன்படுத்தப் பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிய,  பணம மாற்றும் முகவர்கள் தொழில் நுட்ப ரீதியாக பொருள் வடிவில் உதவி வழங்கிய குற்றவாளிகள் என விசாரணைகள் மூலம் தெரியவந்தபோதும், அவர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணைகளின் பின் எல்.ரீ.ரீ.ஈ சந்தேக நபர்களின் அநேக குடும்ப அங்கத்தவர்களும் கூடக் கைது செய்யப்படவில்லை. கோபியின் தாய் மற்றும் மனைவி போன்ற முக்கிய சந்தேக நபர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதேபோல தெகிவளை வெதுப்பகத்துடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் ஆரம்பத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப் பட்டார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் பருத்தித்துறையில்  ைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பின்னர் விடுவிக்கப் பட்டார்கள். எதிர்கால எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்புக்கு பயன்படுத்தவென வெளிநாட்டு நிதியின் மூலம் வாங்கப்பட்ட ஒரு ஆழ்கடல் மீன்பிடி இழுவைப் படகு பற்றிய உண்மை விசாரணையாளர்களை எச்சரிக்கை அடைய வைத்தது. அந்த இழுவைப் படகு ஒரு சிங்கள மீன்பிடி முதலாளியிடமிருந்து 2.9 மில்லியன் ரூபாக்களுக்கு வாங்கப்பட்டது. அதைக் கொள்வனவு செய்வதற்கான பணம் பிரான்சில் தற்போது வசிக்கும் வீரமணி என்கிற ரீகனிடமிருந்து அனுப்பப் பட்டுள்ளது. எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனுக்கு வீரமணி ஒரு வாகன ஓட்டுனராக நிண்ட காலம் பணியாற்றியுள்ளார். வீரமணி அந்தப் பணத்தை நீண்ட காலம் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிய தனது மூத்த சகோதரனது வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். அந்த இழுவைப்படகு வீரமணியி;ன இளைய சகோதரரின் பெயரில் வாங்கப் பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி அந்த இழுவைப் படகு எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து ஆயுதங்கள், ஆட்கள் என்பனவற்றை தருவிப்பதற்கும் மற்றும் நீர்கொழும்பு வழியாக இரகசிய செயற்பாடுகளில் ஈடுபடுத்தப் படுவதற்கும் பயன்படுத்தப்பட இருந்ததாம். இழுவை படகின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் உட்பட அதன் ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட கப்பல் குழுவினர் பயங்கரவாத தடைச் சட்டததின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மூத்த சகோதரனும் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் கப்பல் குழுவின் நான்கு பேரும் குற்றமற்வர்கள் எனக் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள். தற்சமயம் வீரமணியின் இரண்டு சகோதரர்களும் காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்கள் மீது உள்ள குற்றம் உறுதியாக நிரூபிக்கப் படுவது கடினமான பணியாக உள்ளபடியால் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அந்தப் படகோ அல்லது அதன் உரிமையாளர்ளோ சட்ட விரோதமான  எந்த செயல்களிலும் ஈடுபடவில்லை, அதைக் கொள்வனவு செய்வதற்கான பணம் முன்னாள் விடுதலைப் புலியாக இருந்த அவர்களது சகோதரர் ஒருவரால் அனுப்பப்பட்டது என்கிற வெறும் ஒரு காரணம் மட்டும் அவர்கள்மீது வழக்குத் தொடர்வதற்கு போதுமானதாக இல்லை.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com