Contact us at: sooddram@gmail.com

 

குடி தண்ணீரும் குடா நாடும்

குடி தண்ணீருக்காக மக்கள் ஒற்றைக் குடத்துடன் இடுப்படைய பல நூறு கிலோ மீற்றர்கள் பயணிக்கின்ற காலத்தில் வீட்டின் எல்லையோரம் வட்டக்கிணறு, துலா உழண்டி என பங்குக் கிணறுகளுடன் பங்குபோட்டு அள்ளிப் பருகிய இனம் எம் இனம். கால ஓட்டத்தில் பங்குக் கிணறுகள் பாழ். கிணறுகள் ஆகிப்போக வீட்டுக்குள் கிணறு ஊற்றெடுக்க ஆரம்பித்தன. சொந்தமண், சொந்த நீர் எம் உயிர், எம் தண்ணீர் என அள்ளிப்பருகி தாகம் தீர்த்துக் கொண்டது முழுக் குடாநாடும். இத்தனைக்கும் பூமி மாதாவைக் குளிர்விக்க ஓடிய நிலத்தடி நீர் ஓடையே எமக்கெல்லாம் வரப் பிரசாதமாகிக் கிடந்தது. ஆனால் குடி தண்ணீரில் கழிவு கலந்ததாகக் கூறி இன்று ஏன் ஊரெங்கும் போர்கொடி, ஊடகமெங்கும் செய்தி. உலகெங்கும் ஆர்ப்பாட்டம். ஏன் இந்த அவலம்?

“தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே” என்றான் ஆதித் தமிழன். ஆனால் இன்றோ பழமொழிகள் பாழ்படும் அளவுக்கு கிணற்றுத் தண்ணீர் கறுப்பாகிப் பாழாகிப் போய்விட்டது.

குடா நாட்டில் குடித்தொகைச் செறிவுக்கு முக்கியமான காரணமாக அமைவது நிலத்தடி நன்னீர் வளமே. அதுவும் இல்லாதுவிடின் எப்போதே குடாநாட்டின் வரலாறு முடிந்திருக்கும்.

நல்ல சுத்தமான குடிதண்ணீர் குடாநாட்டின் நிலத்தின் கீழ் உள்ள பாறையிடுக்குகளில் கிடைத்தமை பெரும் இயற்கைக் கொடையாகும். ஆனால் அதைக் கழிவு எண்ணெய் பாழ்ப்படுத்தியது மனிதர்களின் செயலாகும். நன்னீர் என்பது உவர்த் தன்மையல்லாத தேவையான கனிமங்கள் நிறைந்த மாசுகளற்ற நீராகும்.

நன்னீர் பின்வரும் பயன்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும். மனிதர், விலங்குகளின் குடிதண்ணீர் தேவைகளுக்கு, விவசாய நடவடிக்கைகளுக்கு, அன்றாட செயற்பாடுகளுக்கு மேற்குறிப்பிட்ட முக்கிய செயன்முறைகளுக்கு நன்னீரே அவசியமாகும்.

உவர் நீர், சவர்நீர் என்பன பொருத்தமல்லாத நீர் வகைகளாகும். உவர் நீர் என்பது உப்புச் செறிவு அதிகமாக உள்ள நீராகும். (கடல் நீர்) இது குடிப்பதற்கோ விவசாயத்துக்கோ பொருத்தமில்லாத ஒன்றாகும். சவர் நீர் என்பது உவர்நீரும், நன்னீரும் கலந்து கலவையொன்றாகும்.

இந்த நீரும் அதிகளவு பொருத்தமற்ற நீராகும். நன்னீர் ஆனது ஆறுகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர் என்பனவற்றின் ஊடாக பெறப்படும் உன்னத வளமாகும். இந்த நன்னீரானது மனித செயற்பாடுகள் மூலமாக மாசடைந்து உபயோகத்துக்கு உகந்ததல்லாதாக மாறிவருகிறது. பின்வரும் செயற்பாடுகளினால் நன்னீர் மாசாக்கம் ஏற்படுகின்றது.

வீட்டுக்கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், மலக் கழிவுகள், இரசாயனப் பொருள்கள், எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் என்பன நீருடன் சேருதல். இது போன்ற மனித நடவடிக்கைகள் குடித்தண்ணீரைப் படிப்படியாக மாசடையச் செய்து முழுமையான உபயோகத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாற்றிவிடும். யாழ். குடா மக்களின் கலாசாரத்தின் பிரகாரம் வீட்டுக்கு ஒரு மலசலகூடம் பேணப்படுகிறது.

முன்னர் பொதுக்கிணறுகளே இருந்ததால் மலக்கழிவுகள் நீருடன் கலப்பது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் தற்போது தனிக் கிணறு, தனி மலசல கூடங்கள் இருப்பதனாலும் குடித்தொகை பரம்பல் அதிகரிப்பதனாலும், மலசல கூடத்துக்கும், கிணற்றுக்கும் இருக்கவேண்டிய தூரத்தை கருத்தில் எடுக்காது பலர் மலசல கூடங்களை அமைத்துவருகின்றனர்.

இதனால் மலக்கழிவுகள் நிலத்தினூடாகச் சென்று விரைவாக நிலத்தடி நீருடன் கலக்கின்றன. மலக்கழிவில் பிரதானமாகக் காணப்படும் சி -உலியிஷ் வகை பக்டீரியாக்கள் மலத்தினால் மாசடைந்த நீரில் காணப்படுகின்றன. லீ-விலிழியி பக்டீரியாவினால் மாசடைந்த நீரை மனிதன் பருகவே கூடாது. இதனால் பல மருத்துவப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் குடா நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கிணறுகளில் ரி-ணீoli பக்டீரியா நினைக்க முடியாத அளவு செறிந்துள்ளதை நீரியல் சம்பந்தமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனாலும் குடாநாட்டு மனிதன் மறைமுகமாக மலம் கலந்த நீரையே பருகிக் கொண்டிருக்கிறான் என்பதில் வாசிக்கும் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கிணற்றுக்கும், மலசல கூடத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை சட்டத்தின் பிரகாரம் அமைத்தல் அல்லது மலக்குழி அற்ற மலசல கூடங்களை அமைத்து அந்த மலக் கழிவுகளை குழாய் வழியாகச் சேகரித்து, அகற்றி பொது மலக் குழியொன்றை அமைக்க அரசு திட்டமிடுதல் போன்றவற்றினூடாக கட்டுப்படுத்தலாம்.

மற்றுமொரு நிலத்தடி நீர் மாசாக்கம் விவசாய நிலங்களில் பிரயோகிக்கப்படும் இரசாயன வளமாக்கிகளினால் ஏற்படுத்தப்படுகிறது. விவசாய நிலங்களில் அளவுக்கதிகமான இரசாயன வளமாக்கிகள், பூச்சி பீடை கொல்லிகளை பிரயோகிப்பதனால் வயல் நிலங்களில் தேங்கியுள்ள இரசாயனங்கள் புவியீர்ப்பு நீர் வழியே அசைந்து நிலத்தடி நீருடன் கலப்புறும். இதனால் நிலத்தடி நீர்மாசாக்க மடைந்து நஞ்சேற்றமடையும்.

நிலத்தடி நன்னீரில் இரசாயன வளமாக்கிகளிலுள்ள நைத்திரேற்று அயன் பொசுபேற்று அயன் செறிவு அதிகரிப்பதால் நன்னீர் மாசடைகின்றது. இந்த இரசாயன மாசாக்கமடைந்த நீரைப் பருகினால் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த மாசாக்கத்தை நீக்குவதற்கு பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ளலாம். இரசாயன வளமாக்கிய பாவனையை இயன்றளவு குறைத்தல், சேதன பயிர்ச் செய்கையை லிrganiணீ ஜீarசீing மேற்கொள்ளல், பரிந்துரையைக்கப்பட்ட அளவுகளில் இரசாயன வளமாக்கிகளை பயன்படுத்தல், சிறந்த அணைக்கட்டுகள், கிணற்றுக்கட்டுகளை ஏற்படுத்தல், மூன்றாவது முக்கிய பிரச்சினை குடாநாட்டு நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலக்கப்பட்மை.

சுன்னாகம் அனல் மின் நிலையத்தினால் நிலத்துக்குள் தகுந்த சுத்தரிகரிப்பு இன்றி கொட்டப்பட்ட கழிவு எண்ணெய் வருடக் கணக்கில் கசிந்து நிலத்தடி நீருடன் கலந்தமையினால் ஓர் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த நிலைமை சுன்னாகம் பகுதியிலிருந்து அதை அண்டிய பகுதிக் கிணறுகளிலும் வேகமாகப் பரவி வருகின்றது.

புத்திசாதூரியமற்ற தொலைநோக்கற்ற, சூழலியம் பற்றி நோக்காத நிறுவனம் ஒன்றினால் இந்த அவலம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிதண்ணீரை வாங்குவதற்கு வசதியில்லாதவர்கள், நல்ல கிணற்றை நோக்கி நாள்தோறும் அலைந்து திரிகிறார்கள். இது ஒரு பரிதாபமான நிலைதான். இதனைத் தடுக்க அரசே முன்வரவேண்டும். விரைவாக இந்த நீரை முழுமையான செம்மையான ஆராய்ச்சிக்குட்படுத்தி அதில் ஐதரோ காபன்களின் அளவு கனிமங்களின் அளவு, பார உலோகங்களின் அளவு என அனைத்தையும் கண்டு கொண்டு மனிதப் பேரவலத்துக்கு விரைவாக தீர்வெடுக்க விரைய வேண்டும்.

எனவே குடாநாட்டு நன்னீரிலுள்ள இந்த மூன்று பிரச்சினைகளும் தீர்ந்தால்தான் எம் தாயும் நாமும் பரம்பரையாக இங்கே வாழலாம். இல்லாது போனால் குடாநாடு விடுபட்டுபோன நாடாக மாறும் காலம் கண்ணெதிரே வந்து விடும். காலம் வெகுதொலைவில் இல்லை.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com