Contact us at: sooddram@gmail.com

 

சுக்குநூறாகிய மஹிந்தவின் கனவு

கடந்த வாரம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறியதால் தமிழர்களின் கையோங்கும் என மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் சில அமைப்பினர் கூறி வருகின்றனர். நாட்டுப் பிரிவினைக்கு இது காரணமாகும் எனவும் அக்குழுவைச் சேர்ந்த சில பௌத்த பிக்குகள் அத் திருத்தம் நிறைவேறிய உடன் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திக் கூறினர். சிங்களவர்களின் நலனுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துப் பட அவர்கள் அங்கு உரையாற்றினர். இது தாம் விரும்பாத சகலவற்றையும் தமிழர்களுக்கும், புலிகளுக்கும் சாதகமானதாக எடுத்துக் காட்டி, சிங்கள மக்களை பயமுறுத்தி அவர்களது ஆதரவை திரட்டும் முயற்சியே தவிர வேறொன்றும் அல்ல.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு தமிழ் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் ஆதரவு வழங்கியமை உண்மை தான். ஆனால், அத் திருத்தத்துக்கும் இனப் பிரச்சினைக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை. உண்மை என்னவென்றால் நிறைவேற்று ஜனாதிபதிகள் இனவாதிகளாக இல்லாவிட்டால் இந்த ஜனாதிபதி முறையே சிறுபான்மை மக்களுக்கு சாதகமானதாக இருக்கும். ஏனெனில் முழு நாட்டிலும் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் ஜனாதிபதி, சிறுபான்மை மக்களின் ஆதரவையும் மனதில் வைத்தே செயற்பட வேண்டும்.

ஆனால், ஒருவகையில் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறிப்பாகவே சிறுபான்மை மக்களுக்கு சாதகமானது தான். ஏனெனில் அத் திருத்தம் நிறைவேறியதை அடுத்து இனி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதியாக வர முடியாது. ஒருவர் இரண்டு முறை தான் ஜனாதிபதியாகலாம் என்ற நிலை அத் திருத்தத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டமையே அதற்குக் காரணமாகும்.

மஹிந்த மட்டுமல்ல, இரட்டை குடியுரிமையுள்ள பசில் ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கும் இனி இந் நாட்டில் தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது. ஏனெனில் இலங்கை உட்பட இரண்டு நாடுகளில் குடியுரிமையுள்ளவர்களுக்கு இலங்கையில் தேர்தல்களில் போட்டியிட முடியாது என 19ஆவது திருத்தம் தடை விதிக்கிறது. பசில் மற்றும் கோட்டாபய ஆகிய இருவருக்கும் அமெரிக்க பிரஜா உரிமை இருக்கிறது. சட்டம் சரியோ பிழையே இதற்கும் சிறுபான்மையினர் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.

பொதுவாக பார்ப்பதாயின் 19ஆவது திருத்தம் நிறைவேறியமை பெரும் வெற்றியாகும் என ஒருவர் வாதிடும் அதேவேளை அலட்டிக் கொள்ளும் அளவுக்கு அதில் ஒன்றும் இல்லை என்றும் மற்றொருவர் வாதிடலாம். உண்மையில் சதாகாலம் தாம் பதவியில் இருக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறு முன் இருந்த நிலைமைக்கே நாடு இப்போது வந்துள்ளது. 18ஆவது திருத்தம் நிறைவேறு முன்னரும் நாட்டில் சர்வாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையே இருந்தது. அக் காலத்திலும் பலர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அக் காலத்தில் தான் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்து பதவிக்கு வந்தனர். அக் காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதிகள் செய்த அத்தனையையும் இன்றும் ஜனாதிபதிகளால் செய்ய முடியும்.

ஜே.ஆர். ஜயவர்தன 1978ஆம் ஆண்டு சர்வாதிகார ஜனாதிபதி முறையொன்றை அறிமுகப்படுத்தினார். 2001ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியானது சந்திரிகாவின் அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வரச் செய்தது. அதன் மூலம் ஜயவர்தன அறிமுகப்படுத்திய நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய சுதந்திர ஆணைக்குழுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ 18ஆவது திருத்தத்தின் மூலம் அந்த கட்டுப்பாடுகளையும் சுதந்திர ஆணைக்குழுக்களையும் ரத்துச் செய்தார். 19ஆவது திருத்தமானது 18ஆவது திருத்தத்தை ரத்துச் செய்து மீண்டும் மேற்படி கட்டுப்பாடுகளையும் ஆணைக்குழுக்களையும் கொண்டு வந்துள்ளது.

19ஆவது திருத்தத்தின் பின்னர் நிலைமை உலக அரசியலில் பழைய சம்பவமொன்றை நினைவூட்டுகிறது. 1987ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரொனல்ட் ரேகனும் சோவியத் ஒன்றியத்தின் ஜனாதிபதி மிகாயில் கொர்பசேவும் தத்தமது நாடுகளில் உள்ள அணு ஆயுதங்களில் அரைவாசியை அழிக்க ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டனர்.

அப்போது அதைப் பற்றி கருத்துத் தெரிவித்த அப்போதைய சீன ஜனாதிபதி டெங் ஷியாஓபிங், அவ் வொப்பந்தத்தை வரவேற்பதாகவும் ஆனால், அவ்விரண்டு நாடுகள் தமது அணு ஆயுதங்களை அரைவாசியாக குறைத்துக் கொண்டாலும் அந் நாடுகளில் எஞ்சியுள்ள அணு ஆயுதங்களால் உலகை ஐந்து முறை அழிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அதேபோல் 19ஆவது திருத்தம் நல்லதாக இருந்த போதிலும் அது நிறைவேற்றப்பட்ட பின்னரும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின் படி நாட்டில் இன்னமும் சர்வாதிகாரமே நிலைத்திருக்கிறது. இன்னொரு வகையில் 'பிச்சை வேண்டாம், நாயைப் பிடித்தால் போதும்' என்று தான் இப்போது நாடு நடந்து கொண்டுள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுமாறு பிச்சை கேட்ட இந்நாட்டு மக்கள் மீது 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் 18ஆவது திருத்தம் என்ற கொடிய நாய் பாய்ந்தது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்யுமாறு கோரியோர் 19ஆவது திருத்தத்தின் மூலம் மஹிந்தவின் நாயை மட்டும் கட்டிப் போட்டுவிட்டு திருப்தியடைந்துள்ளார்கள். இன்னமும் பிச்சை போடப்படவில்லை.

எவ்வாறாயினும் 19 ஆவது திருத்தத்தின் மூலம் மக்கள் அடைந்த நன்மைகளை எவராலும் மறுக்க முடியாது. அரசியலமைப்புச் சபை மற்றும் சுதந்திர ஆணைக்குழுக்கள் மூலம் ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் இப்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி நினைத்தவாறு அரச சேவையிலும் நீதித்துறையிலும் உயர் பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதன் மூலம் அத்துறைகள் அவரது அடியாட்களால் நிரம்பிவிடுகின்றன. அதன் பின்னர் அவர் நினைத்தது தான் சட்டம் என்ற நிலை உருவாகிறது. அவரும் அவரது கையாட்களும் நாட்டை சுரண்டி வாழ்வார்கள். எதிர்த்து பேச எவரும் இருக்க மாட்டார்கள். மஹிந்தவின் ஆட்சி காலத்தில் அது தான் நடந்தது.

இப்போது ஜனாதிபதியால் அவ்வாறு செய்ய முடியாது. ஜனாதிபதியின் அங்கிகாரத்தைப் பெற்று அரசியலமைப்புச் சபை சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்கும். மறுபுறத்தில் அரசியலமைப்புச் சபையின் அங்கிகாரத்தோடு ஜனாதிபதி, உயர் நீதி மன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்றவர்களை நியமிப்பார். ஏனைய முக்கிய பதவிகளுக்கு அந்தந்த துறையை சார்ந்த சுதந்திர ஆணைக்குழுக்கள் ஆட்களை நியமிக்கும். எனவே, ஜனாதிபதியின் கையாட்கள் முக்கிய பதவிகளுக்கோ நீதியரசர்களாகவோ நியமிக்கப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது.

கடந்த வாரம் வரை நாட்டின் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகவோ தனிப்பட்ட முறையிலோ எதை செய்தாலும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது இருந்தது. 19ஆவது திருத்தம் அந்த நிலையை மாற்றியிருக்கிறது. இப்போது ஜனாதிபதியின் செயற்பாடுகள் தொடர்பாக சட்ட மா அதிபருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யலாம். இது மக்கள் பெற்ற மாபெரும் வெற்றியாகும்.

ஒருவர் இருமுறை தான் ஜனாதிபதியாகலாம் என்று இப்போது அரசியலமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஒரு கொடுங்கோலன் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளிலாவது நாடு அந்த ஜனாதிபதியிடம் இருந்து விடுதலை பெறும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அமைச்சர்களின் எண்ணிக்கையும் 19ஆவது திருத்தத்தின் மூலம் 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆகும். இதுவும் அதிகம் தான். ஆனால், இப்போது அதற்கு ஒரு எல்லை இருக்கிறது.

ஆனால், இரு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைத்தால் இந்த எல்லை இல்லாமல் போகிறது. அது நாகரிகமற்றதாகவே தெரிகிறது. இரு கட்சிகள் ஒன்று சேரும் அளவுக்கு நாட்டில் நெருக்கடி நிலை இருந்தால் கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை லஞ்சமாக கொடுத்து, அவற்றை ஒன்று சேர்க்கத் தேவையில்லை.

அதேவேளை அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் நாட்டில் அமைச்சுக்களுக்கான துறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில்லை. எனவே, அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையில்லை.

19ஆவது திருத்தத்தின் மூலம் இந்த அளவுக்காவது ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்திக் கொண்டதன் பெருமையின் பெரும் பகுதி கோட்டே நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித்த தேரருக்கே வழங்கப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் வேறு பிரச்சினைகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கும் போது, தனி நபராக நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக போர்க் கொடி தூக்கியவர் அவரே. பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் அவரது போராட்டத்தில் இணைந்து கொண்டன.

அடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பெருமை வழங்கப்பட வேண்டும். தமது சொந்தப் பிரச்சினைகளின் காரணமாக இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது அதிகாரங்களை குறைக்கும் விடயத்தில் காட்டிய அர்ப்பணிப்பு தனிச் சிறப்பானது. இந்த விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் மஹிந்த ராஜபக்ஷவின் கையாட்களும் செய்த இடையூறுகளை காட்டி வேண்டுமென்றால் அவர் தமது அதிகாரங்களை இந்தளவாவது குறைக்காமல் இருந்திருக்கலாம்.

19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள மிகக் கூடுதலான வாக்குகளை வழங்கிய ஸ்ரீலசுக இந்த விடயத்தில் மிகக் குறைந்த பெருமைக்குரியதாகிவிட்டது. ஏனெனில் விமல் வீரவன்சவின் உவமையொன்றை பாவித்துக் கூறுவதாயின் நாயை குளிப்பாட்ட இழுத்துச் செல்வதைப் போல் ஜனாதிபதியானவர் ஸ்ரீலசுகவை இழுத்துச் சென்றே வாக்களிக்க வைத்தார்.

சந்திரிகா குமாரதுங்கவினதும் மஹிந்த ராஜபக்ஷவினதும் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் மைத்திரிபாலவின் தியாகம் மிகப் பாரதூரமானது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்த பதவிக்கு வந்தும் அதற்காக ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்வந்த நிலையிலும் சந்திரிகா தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வோடு தான் அதனை செய்வேன் என அவர் அந்த சந்தர்ப்பத்தை கைவிட்டார். அவ்வாறே வாக்குறுதியளித்து பதவிக்குவந்த மஹிந்த, மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தை திரட்டிக் கொண்டு அதன் மூலம் தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டு தாம் சதாகாலம் பதவியில் இருக்கும் வகையிலும் சட்டத்தை மாற்றிக் கொண்டார். அவர்களோடு ஒப்பிடும் போது மைத்திரிபாலவை பரராட்டாமல் இருக்க முடியாது.

19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையினால் தேற்கடிக்கப்பட்டவர் மஹிந்த ராஜபக்ஷவே. மீண்டும் ஜனாதிபதியாகும் அவரது கனவு இனி நனவாகப் போவதில்லை. அவர் இனி அரசியலுக்கு வருவதாக இருந்தால் பெறக்கூடிய மிக உயர்ந்த பதவி பிரதமர் பதவியே. அப்போதும் மற்றொரு ஜனாதிபதியின் கீழ் தான் அவர் செயற்பட வேண்டும். அரச தலைவராக இருந்த ஒருவர் அவ்வாறு செயற்படுவது எவ்வளவு உகந்தது என்பது கேள்விக்குறியே. நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ரத்துச் செய்யப்பட்டால் மீண்டும் பிரதமராக அரச தலைவராகும் வாய்ப்பு மஹிந்தவுக்கு கிடைக்கும். அதற்கு தடையாக இருந்தவர்கள் அவரை ஆதரிப்பவர்களே.
(எம்.எஸ்.எம். ஐயூப்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com