Contact us at: sooddram@gmail.com

 

நிலநடுக்கம்

இயற்கையின் அர்த்தமற்ற இயக்கங்களில் ஒன்று

அழிவு என்பது அடிப் படை யில் மனிதன் சம் பந்தப்பட்ட விஷயம். நில நடுக்கங்களின் மூலம் நகரங்களை அழிப்பவன் மனிதன் தான். இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருப்பார்களேயானால், நிலநடுக்கம் பெளதிக இயற்கையின் அர்த்தமற்ற இயக்கங்களில் ஒன்றாகவே இருக்கும். ஆனால் நகரங்களைக் கட்டும் மனிதனின் திட்டத்துக்கு அவை ஊறு விளைவிக்கும்போது தான் அவை பேரிடராகின்றன என்றார் பிரெஞ் சிந்தனையாளரும் சமூகப் போராளியுமான ழான்-பால் சார்த்தர். இங்கு ‘மனிதன் என்று அவர் குறிப் பிடுவது முதலாளியம், அதன் இலாப வேட்டை, அதன் சுரண்டல், இவற்றுக்குத் தேவைப்படும் இனவாதம் ஆகியவற் றைத் தான். இதோடு நாம் மதவாதத் தையும் சாதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தென்னாசிய, தென்கிழக்காசிய பகுதி களைச் சூறையாடிய 2004 சுனா மியின் போது எத்தனையோ சடலங்களிலிருந்து தங்க நகைகளுக்காகக் காதுகளையும் கைகளையும் அறுத்தும் வெட்டியும் கொண்டுசென்றவர்களும் இருக்கத்தான் செய்தனர். வண்டி வண்டியாக அள்ளப்ப ட்ட பிணங்கள் குப்பைகளைக் கொட்டு வது போலத்தான் மொத்தமாகக் குழி களில் கொட்டப்பட்டுப் புதைக்கப்பட்டன. இதற்கு மாறாக, இந்தோனேஷியா வில் சுனாமிக்குப் பலியானவர்களின் உடல்கள் ஒவ்வொன்றும் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே புதைக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைத்தன என்றாலும் ஒப்பந்தக்காரர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஆதாயமடைந்த குற்றச்சாட்டுகளும் உள்ளன.

2013ல் உத்தராகண்டில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு நுண்மையான மலைப் பகுதிகளில் மின் உற்பத்திக்காக அணைகள் கட்டப்பட்டு, அவற்றின் பொருட்டுப் பெரும் வீதிகள் அமைக்கப்பட்டதும், பணத்தாசை பிடித்த வணிகர்களும் ஒப்பந்ததாரர்களும் விதிமுறைகளை மீறிக் கட்டிடங்கள் கட்டியதும் முக்கிய காரணங்கள் என்று உறுதியானது. சூழலியலாளர்களும் அறிவியலாளர்களும் இதைச் சுட்டிக்காட்டியபோது நடந்தது என்ன? அவர்களை அலட்சியம் செய்து முழுப் பழியையும் இயற்கையின் மீதே சுமத்தினார் அந்த மாநிலத்தின் முதல்வர்.

நிலநடுக்கத்தால் பேரழிவுகளைச் சந்திக்கும் உலக நாடுகளின் பட்டியலில நேபாளம் 11வது இடத்தில் இருக்கிறது. உலகில் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள் உள்ள 21 நகரங்களில் கத்மண்டுவும் ஒன்று. வேதனை என்னவென்றால், ஏப்ரல் 25ல் நிகழ்ந்த நில நடுக்கத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் உலகெங்கிலும் இருந்து வந்திருந்த நிலநடுக்கவியல் விஞ்ஞானிகளின் மாநாடும் காத்மண்டில் நடந்திருக்கிறது. அவர்கள் முன்கூட்டியே எதிர்பார்த்த அதே இடத்தில் அதே அளவில் நிலநடுக்கம் மையம் கொண் டிருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல்கள் துறையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜாக்ஸன், நிலநடுக்கம் இயற்கையால் ஏற்படுத்தப்படும் பேரிடர் என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை என்றார்.

உலகிலுள்ள மிக வறிய நாடுகளில் ஒன்று நேபாளம். ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமின்றி, பிற நாடுகளாலும் நீண்ட காலமாகச் சுரண்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு வரும் நாடு அ தனுடைய பொருளாதாரம் இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது. இயற்கை எரிவாயுவும் டீசலும் கூட இங்கிருந்துதான் செல்ல வேண்டும். அந்த நாட்டு மக்களின் மிகப் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் உள்ள மிக வறிய, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள மக்கள் ஊழல் மிக்க அரசாங்க அதிகாரிகள், நிலப்பிரபுக்கள், லேவாதேவிக்காரர்கள் ஆகியோரால் சுரண்டப்படுபவர்கள் போதாக்குறைக்கு இந்தியாவைப் போலவே அங்கும் இறுக்கமான சாதி அமைப்பு இருக்கிறது.
(தினகரன்)
இப்படிப்பட்ட அமைப்பின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களும் இனத்துவச் சிறுபான்மையினரும் கொடூரமான புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். கிராமப்புற மக்களில் மிகப் பெரும் பாலோருக்குக் கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதார வசதிகள் ஏதும் இல்லை.

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றுக்கு மிக மலிவான உழைப்பை ஏற்றுமதி செய்வது தான் உலக முதலாளிய அமைப்பில் நேபாளம் வகிக்கும் பாத்திரம். நேபாள ஆண்கள் கட்டார், துபாய் போன்ற பாரசீக வளை குடா நாடுகளில் கட்டுமான வேலைக்குச் செல்கின்றனர். இந்தியாவில் பெருந் தோட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நேபாளத் தொழிலாளர்களை அண் மைக்காலமாக, தமிழகத்தின் சிறு நகரங்களிலும் கூடக் காண முடிகிறது. இந்தியாவில் பாலியல் தொழிலில் பெருமளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர் நேபாளப் பெண்கள்.

வேலைவாய்ப்புகளுக்காக கத்மண்டு போன்ற நகரங்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மக்கள் இடம்பெயர்கின்றனர். இந்த நகரங்களிலும் கூடப் போதுமான அகக்கட்டுமான வசதிகளோ, குடிநீர், சுகாதாச் சேவைகளோ இல்லை. பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும் 40 லட்சம் பேர் மழைக்கும் வெயிலுக்கும் தாக்குப் பிடிக்காத குடிசைகளில் வாழ்கின்றனர். அந்த நாட்டில் இயல்பு வாழ்க்கை உள்ள நாட்களிலும் கூட பல மணி நேர மின்தடை, அனைத்து விதிமுறைகளையும் மீறி ஒவ்வோர் ஆண்டும் கத்மண்டில் மட்டும் மிக மோசமான முறையில் 6,000 கட்டிடங்கள் கட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இத்தகைய நாட்டினால் நில நடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? ஏப்ரல் 25 அன்று நேபாளததில் ஏற்பட்ட அதே அளவிலான நில நடுக்கம், ஒவ்வொரு நாட்டிலும் உள் கட்டிடங்களின் அமைப்பு, மக்கள் தொகை, அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று நில நடுக்கவியல் வல்லுனர் டேவிட் வால்ட் கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் இதேபோன்ற நில நடுக்கத்துக்குப் பலியாகிறவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கு 10 முதல் 30 பேராக இருக்கும் என்றும், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் சில இடங்களிலோ 10 லட்சத்துக்கு 1,000 பேர் முதல் 10, 000 பேர் வரை பலியாவார்கள் என்றும் கூறுகிறார். இயற்கையின் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்வதும் சமாளிப்பதும் சம்பந்தப்பட்ட நாட்டிலுள்ள சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களைச் சார்ந்துள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com