Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யதார்த்தமான அணுகுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்ப ந்தன் கடந்த சிலவாரங்களாக பொதுக் கூட்டங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அரசியல் எதிர்காலத்துக்கான பாரிய நம்பிக் கையை ஏற்படுத்தியிருக்கிறது.

நல்லாட்சி அரசு உருவானதன் பின்பு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு மாற்றமாகவே இதனை நாம் பார்க்க முடிகிறது.

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் நடந்த மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்ட இரா. சம்பந்தன், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதும் தமிழ்க் கூட்டமைப்புக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறதென வெளிப்படையாகக் கூறினார். “அரசியல் தீர்வுக்கான காலம் கனிந்துவிட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது திடமான நம்பிக்கை வைத்து செயற்படுகிறோம்” என அவர் கூறியிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பந்தன் ஐயா, அரசியலில் பழுத்த அனுபவம் கொண்டவர். தனது வாழ்வையே தமிழ் மக்களின் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர், கொண்ட கொள்கையிலிருந்து சிறிதும் பிசகாமல் நிதான புத்தியுடன் செயல்படும் தலைவர், அதே நேரம் பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போகாத தமிழ் மக்களின் உறுதியான தலைவர். ஏன்? ஈழத்துக் காந்தி தந்தை செல்வா, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன் றோருடன் சிறுபராயத்திலிருந்தே துணிச்சலுடன் அரசியலில் ஈடுபட்டு வரும் சாணக்கியம் மிக்க தலைவர் என்று கூட இவரை சொல்லலாம்.

இப்படிப்பட்ட ஒரு தலைவரின் அறிவிப்பை சாதாரணமாக எடு த்துக் கொள்ள முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரைக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த கால அரசாங்கத்தில் முழுமையான நம்பிக்கை இழந்தே இருந்தது. “மஹிந்த தமிழ்ச் சமூகத்தை ஏமாற்றவே முயன்றார். அவரிடமிருந்து தமிழ்ச் சமூகத்தைப் பாதுகாத்து ள்ளோம்” நம்பிக்கை இழப்புக்கு சம்பந்தன் ஐயா கூறும் காரணம் இதுவாகவே இருக்கிறது.

புதிய அரசாங்கத்தின் மீது தமிழ்க் கூட்டமைப்பு நம்பிக்கை வைத்துச் செயற்படுவது என்பதை காலத்துக்கு ஏற்ற அரசி யல் மாற்றத்தின் வெளிப்பாடாகவே நாம் நோக்க முடிகிறது. தமிழர்களின் அரசியல் போராட்டம் தொடங்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. எதிர்ப்பு அரசியல் நடத்துவதே, சளைக்காத இந்தப் போராட்டத்தின் சாதனை என்றாகிவிட்டது.

இந்த 60 ஆண்டுகளில் உலகில் எத்தனை மாற்றங்கள். உலகம் விரல் நுனிகளுக்குள் சுருங்கிவிட்டது. தகவல் தொழில் நுட்ப மாற்றம் உலகை ஒரு கிராமமாக்கி இருக்கிறது. என்றாலும், அரசியல் போராட்ட அணுகு முறைகளில் மாற்றங்களோ, நவீனத்துவங்களோ ஏற்பட வில்லை. இதனால்தான் ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்தோம். இப்போதாவது எதிர்ப்பு அரசியலுக்கு அரை மாத்திரை வைத்துவிட்டு ஆட்சி அதிகாரத்திலிருப்பவர் களோடு சார்பு அரசியலை முன்னெடுப்பது உண்மை யிலேயே வரவேற்கக் கூடிய விடயம்.

தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் பாரிய சக்தியாக இருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த நிலைப் பாடு, அதேநேரம் தொடர்ச்சியான எதிர்ப்பு அரசியல் ஆகி யன இந்த நாட்டு சிங்கள மக்கள் மத்தியில் பாரிய கசப்பு ணர்வையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்கினால் போதுமென கூட்டமைப்பு அறிவித்தாலும் அதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலைதான் இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு முன்னைய ஆட்சியாளர்களும் காரணமாக இருந்திருக் கிறார்கள்.

ஒரு விடயத்தை நாம் இங்கு தெளிவாகக் கூற வேண்டும். சிங்கள மக்களின் மனங்களை வெல்லாமல் எந்த வொரு அரசியல் தீர்வும் சாத்தியமாகாது. ஆகவே அவர் களின் மனங்களை வெல்லும் வேலைத்திட்டங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.

ஆனாலும், புதிய அரசாங்கத்தோடு கூட்டமைப்புக்கு ஏற்பட்டி ருக்கும் மனமாற்றமும் இணக்க அரசியல் முன்னெடுப்பும் அரசியல் தீர்வை எட்டுவதற்கான நல்லதொரு முயற்சியாகும்.

சிங்கள மக்களின் மனங்களை வெல்வதிலும் சம்பந்தன் ஐயா உறுதியாகவே இருக்கிறார் போல்தான் தெரிகிறது. மட்டக்களப்பில் பேசிய அவர் “சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்லக்கூடிய ஒரேதலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனக் கூறியிருக்கிறார்.

ஆகவே இந்த நம்பிக்கை அறிவிப்பு மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்களால் நோகடிக்கப்பட்டு நொந்து போய் இருக்கின்ற தமிழ் மக்கள் மத்தியிலும் எதிர்கால நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்க அரசியலால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இரண்டு முக்கிய சர்ச்சைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சம்பூர் மீள்குடியேற்றம், யாழ். குடாநாட்டில் வலிகாம் வடக்கில் படையினர் வசமிருந்த காணிகளை மீட்டெடுத்தமை... கூட்டமைப்பின் இணக்க அரசியலும் நல்லாட்சி அரசும் எதிர்கால சுபிட்சத்துக்கு கால்கோளாக அமையட்டும்.

(Thinakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com