Contact us at: sooddram@gmail.com

 

சிறுபான்மையினரை ஓரங்கட்டும் மஹிந்தவின் அரசியல் பாதை

தமிழ்த் தீவிரவாதம் சுமார் கால் நூற்றாண்டு காலமாக இலங் கையின் அரசியலுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில் ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் தத்தமது அரசியலுக்கு வாய்ப்பான கோணத்தில் வடக்கு, கிழக்கு யுத்தத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இலங்கையின் இத்தகைய பலவீனமானதொரு அரசியலை எமது அயலில் உள்ள தமிழ் நாடும் பயன்படுத்திக் கொள்ளத் தவற வில்லை. வடக்கு, கிழக்கு யுத்தத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்ற படி கையாளும் இணக்க அரசியலும், எதிர்ப்பு அரசியலும் நாட்டில் நீண்ட காலமாகத் தொடர்ந்தபடியே வருகின்றன.

அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைப் பொறுத்த வரை மக்கள் உண்மையிலேயே பலிக்கடாக்களாவர். மக்களின் உணர்ச்சிக ளையே அரசியல்வாதிகள் சாதகமாகப் பயன்படுத்தி அரசி யல் பிழைப்பு நடத்துகின்றனர். மக்களின் பலவீனத்திலும் அப்பாவித்தனத்திலும் அரசியல் நடத்துகின்ற போலித்தனம் இன்னும்தான் நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஆறு வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. புலிகள் ஒழிக்கப்படும் வரை தென்னி லங்கையின் பிரதான தேசியக் கட்சிகள் யுத்தத்தை வைத்துக் கொண்டே அரசியல் பிழைப்பு நடத்தியதைப் போன்று, யுத்தத்துக்குப் பின்னரான சுமார் ஐந்தரை ஆண்டுகள் காலப் பகுதியை மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தங்களது அரசி யல் இருப்புக்கு நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

புலிகள் ஒழிக்கப்பட்டதைப் போன்ற தோற்றத்துக்குப் பதிலாக தமிழ் இனத்தை வெற்றி கொண்டதைப் போன்றதொரு தோற் றப்பாட்டை தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதி லேயே அன்றைய மஹிந்த அரசு முனைப்பாக இருந்தது. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் புலிகளுக்கு சார்பான அணியாக பெரும்பான்மை மக்கள் நோக்கும்படியான தந்திர ங்களை அன்றைய அரசு மேற்கொண்டது. புலிகளை மஹிந்த அரசு வெற்றி கொண்டமையானது, எல்லாளனை துட்டகைமுனு வெற்றி கொண்ட செயலென உவமானப்படுத் தப்பட்டது.

பெரும்பான்மை மக்கள் மத்தியில் உணர்வலைகளை ஏற்படுத்து வதன் மூலம் எக்காலப் பகுதியிலும் அவர்களது வாக்குகளை வசீகரித்து வைத்திருக்கலாமென்பதே மஹிந்த தரப்பினரின் ஒரேயொரு நோக்கமாக இருந்தது.

புலிகளை வெற்றி கொண்டதை நினைவு கூர்வதாகக் கூறி மஹிந்த அரசு நடத்திய யுத்த வெற்றி விழாவும் இதேவித நோக்கம் கொண்டதாகும். பெரும் பணத்தை வாரியிறைத்து யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தை அன்றைய அரசு நடத்தியமைக்குக் காரணம் சிங்கள மக்கள் மத்தியில் உணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே ஆகும்.

யுத்தத்தின் போது இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் துயரத்தை நினைவு கூரும் வகையில் அன்றைய கொண்டாட்டம் அமைந்திருக்கவில்லை.

யுத்த காலத்தின் போது பலியாகிப் போன அப்பாவிகளை ஒரு கணமேனும் நினைவு கூருவதற்கும் அன்றைய அரசு முற்படவில்லை. தமிழினத்தைத் தோற்கடித்து விட்டதைப் போன்ற தோற்றப்பாட்டை சிங்கள மக்கள் மீது வலிந்து ஏற்படுத்துவதிலேயே ஐந்தரை வருட காலத்தையும் செலவிட்டது மஹிந்த அரசு.

பெரும்பான்மையின மக்களின் பலவீனத்தை நீண்ட காலத் துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்க முடியாதென்ற யதார்த் தம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நன்றாகவே வெளிப்பட்டு விட்டது. மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் இதுபோன்ற இனவாத அரசியல் காரணமாக சிறுபான்மையின மக்கள் ஒட்டுமொத்தமாகவே மற்றொரு துருவத்துக்கு தள்ளப்பட்டு விட்டனரென்பதையும் தேர்தல் முடிவு உணர்த்தியது.

மஹிந்த தரப்பினரின் அரசியல் தொடர்ந்தும் அதே பாதை யிலேயே பயணிக்கப் போகிறதென்பதையே அவர்களது நேற்றைய யுத்த வெற்றிக்கொண்டாட்டம் புலப்படுத்துகிறது.

தென்னிலங்கை மக்களை விசனப்படுத்தாத விதத்திலும், தமிழ் மக்களை நோகடிக்காத விதத்திலும் இன்றைய அரசாங்கம் யுத்த முடிவு தினத்தை மாத்தறையில் இன்று அனுஷ்டி க்கின்றது. ‘பிரிவினை வாதத்தைத் தோற்கடித்த தினம்’ என இன்றைய வைபவத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கு கிறார்.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் கொழும்பில் நேற்று யுத்த வெற்றி தினம் கொண்டாடினர். மஹிந்த ஆதரவு தரப்பி னரான தாய்நாட்டு அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. ‘யுத்த வெற்றி வீரர்கள்’ என்ற தொனிப்பொருளில் அவர்கள் இக்கொண்டாட்டத்தை நடத்தினர்.

மஹிந்த அணியினர் நடத்திய யுத்த வெற்றிக் கொண் டாட்டத்தின் உள்நோக்கத்தை மிக இலகுவாகவே ஊகிக்க முடியும். படையினரின் தியாகத்தை இன்றைய அரசு மலி னப்படுத்துவதாக சிங்கள மக்கள் மத்தியில் காண்பிப்பதற்கு மஹிந்த தரப்பு முற்படுகிறது. அதேசமயம் தமிழ் மக்களு க்குச் சாதகமான நிலைப்பாட்டையே மைத்திரி - ரணில் அரசு கடைப்பிடிப்பதாக தென்னிலங்கையில் எண்ணமொன்றை ஏற்படுத்த மஹிந்த தரப்பு முற்படுகிறது. அனைத்துக்கும் மேலாக சிங்கள மக்கள் மீது விசுவாசமும் அபிமானமும் கொண்டவர்கள் தாங்களேயென்ற நம்பிக்கையை ஏற்படு த்துவதே மஹிந்த தரப்பினரின் திட்டம். இதன் மூலம் சிங்கள மக்களை தங்களின் பின்னால் அணிதிரள வைக்க முடியு மென அவர்கள் நம்புகின்றனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத உணர்வை தெற்கில் விதைத்து தங்களது ஆதரவைப் பெருக்குவதையே மஹிந்த தரப்பினர் அரசியல் கொள்கையாக வரித்துக் கொண்டு ள்ளனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com