Contact us at: sooddram@gmail.com

 

இது சரியா? நியாயமாகுமா?

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்காக மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈகைச் சுடர் ஏற்றித் தமது அஞ்சலிகளைச் செலுத்த இந்த வருடம் மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தது. முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல வடக்கில் மக்கள் தாம் வசிக்கும் பகுதிகளிலிருந்தவாறே யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். யுத்தத்ததில் இறந்த மக்களுக்காக அவர்களது உறவுகள் மட்டுமல்ல பொது அமைப்புக்கள் கூட பிரார்த்தனை செய்து அஞ்சலியைச் செலுத்த இந்த வருடம் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது.

2008ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான காலப்பகுதியிலிருந்து இத்தகைய அஞ்சலி நிகழ்வுகளுக்கு முன்னைய அரசாங்கம் தடை விதித்திருந்தது அனைவரும் அறிந்த விடயம். தமது வீட்டிலிருந்துகூட ஒரு விளக்கை ஏற்றி தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலை அன்று காணப்பட்டது. வடக்கில் மே மாதம் 18ம் திகதி ஆலயங்களில் மணியோசை எழுப்புவதற்கே படையினரால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வாரம் முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் பலவாறு துன்புறுத்தப்பட்டனர். மாணவர்கள் ஐந்து பேர் ஒன்றுகூடி கலந்துரையாட முடியாத அடக்குமுறை நிலை அன்று காணப்பட்டது.

ஆனால் இன்று அந்த நிலையை புதிய நல்லாட்சி அரசாங்கம் தகர்த்தெறிந்துள்ளது. யுத்தத்தில் இறந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த மக்களுக்கு சகல உரிமைகளும் உள்ளதென்பதை இந்தப் புதிய அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் காரணமாகவே இந்த வருடம் முதல் ஈகைச் சுடர் ஏற்றி வழிபாடுகளை நடத்தி தமது அஞ்ச லிகளைச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை ஏற்ப டுத்திக் கொடுத்தமைக்காக உண்மையில் தமிழ் மக்கள் புதிய அரசாங் கத்திற்கு தமது நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் புதிய அரசாங்கம் வழங்கிய இந்தச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதில் சிலர் ஈடுபட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதுவரை காலமும் இத்தகைய அஞ்சலி நிகழ்வினை நிகழ் த்த முடியாது படையினரைக் கொண்டு தம்மை அடக்கிப் பயமுறுத்தி வைத்திருந்த நிலைமையை மறந்து இச்சிலர் செயற்பட்டுள்ளனர். இதன் மூலம் இவர்கள் அரசாங்கத்தை சங்கடத்திற்குள்ளாக்கியிருந்ததை உணரக் கூடியதாக இருந்தது. சுதந்திரம் வழங்கிய அரசாங்கத்திற்கு எதி ராகச் சவால் விடுவது போன்று இச்சிலர் நடந்து கொண்டமை தவிர்க் கப்பட்டிருக்க வேண்டும்.

தங்க இடம் கொடுத்ததும் முழு மடத்தையும் பிடிப்பது போல இச்சிலர் நடந்து கொண்ட விதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். யுத் தத்தில் மறைந்த உறவுகளுக்காக விளக்கேற்றி பிரார்த்தனை செய்வதில் தவறில்லை என புதிய அரசு தெரிவித்ததை வைத்துக் கொண்டு யுத்தத் தில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்த சில அரசியல் தலைவர்களும், அவர்களுக்காக உரையாற்றிய சில அரசியல் தலை வர்களையும் பற்றி குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது. உண்மையில் இவர்கள் இதுவரை காலமும் இறந்த பொதுமக்களுக்குக்கூட அஞ்சலி செலுத்தியது கிடையாது. ஆனால் இப்போது சுதந்திரம் வழங்கப் பட்டமையால் அதனை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

விடுதலைப் புலிகளை தமிழ் மக்களில் சிலரும், தமது சுயநல அரசிலுக்காக சில தமிழ் அரசியல்வாதிகளும் தமது மீட்பாளர்களாகக் கருதி அவர்களுக்கு ஆதரவு வழங்கி வந்தபோதிலும் சகல அரசாங் கங்களுமே புலிகளை பயங்கரவாதிகளாகவே கருதி வந்துள்ளன. அப்படியிருந்தும் அவ்வப்போது அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வினைக் காண கடந்து வந்த சில அரசாங்கங்கள் முயற்சித்த போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இருதரப்பும் ஒருவரை யொருவர் குற்றஞ்சாட்டி சர்வதேசத்தையும், மக்களையும் ஏமாற்றி வந்தமையே வரலாறு.

இனி அவை குறித்துக் கதைப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. இன்று புலிகளும் இல்லை. இறுக்கமான கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அரசாங்கமும் இல்லை. அதனால் இன்றைய சுமுகமான நிலையை பயன்படுத்தித் தமிழ் மக்களின் பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பது என்பது தமிழ் அரசியல் தலைமைகள் முன் பாகவுள்ள பாரிய பொறுப்பாகும். இதனை அத்தலைமைகள் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத மனநிலையில் இருப்பது வேதனை தரும் விடயமாக உள்ளது. முன்னைய எவ்வகையிலும், எதற்கும் விட்டுக் கொடுக்காத அரசாங்கங்களுடன் நடந்து கொள்வது போன்றே செயற்பட்டு வருவது வேதனை தருகிறது.

உண்மையில் இந்தப் புதிய அரசாங்கம் பல விடயங்களில் தனது நெகிழ்வுப் போக்கினைத் தமிழர் தரப்பிற்கு வெளிக்காட்டி வருகிறது. தொடர்ச்சியான நல்லெண்ணச் செயற்பாடுகளினால் தமிழ் மக்களது மனங்களை அரசாங்கம் ஏற்கனவே வெற்றி கொண்டு விட்டது. இதனை தமிழ் அரசியல்வாதிகளில் சிலர் இன்னமும் புரிந்து கொள்ளாதிருப்பது கவலைக்குரிய விடயம். புதிய அரசு வழங்கும் சுதந்திரமான செயற் பாடுகளைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாது தாமும் குழம்பி மக்களையும் குழப்பி வருகிறது. இந்நிலை மாற வேண்டும். மக்களை சரியான பாதையில் வழிநடத்துபவர்காளக அரசியல்வாதிகள் மாற வேண்டும்.

அண்மையில் புங்குடுதீவு இடம்பெற்ற மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து வடக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை மையானது அங்கு தமிழ் அரசியல் தலைமைகளின் கட்டுப்பாட்டையும் மீறி நடந்து வருகிறது. அப்பாவிச் சிறுமிக்கு ஊரவர்கள் சிலரால் ஏற்படுத்தப்பட்டட வன்முறை குறித்து விசாரணைகள் நடத்தப்படு கின்றது. அதற்காக கொடூரமான வன்முறையை கைகளில் எடுத்து சட்டத்தை மதிக்காது செயற்பட மக்கள் எவருக்கும் இடமளிக்க முடியாது.

இதனை அம்மக்களுக்கு தமிழ் தலைமைகள் எடுத்துரைத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது தமது பொறுப்பு என உறுதியளிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் செய்ய சுதந்திரம் உள்ளது என்பதற்காக நீதிமன்றத்தையும், பொலிஸாரையும் தாக்க இடமளிக்க முடியாது. இத்தகைய சுதந்திரம் முன்னர் இருந்ததா? முன்னர் இடம் பெற்ற இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் இன்றுவரை வெளியே தெரியாது மறைக்கப்பட்டமை எத்தனை பேருக்குத் தெரியும்? எனவே பொதுமக்களும் சரி, தமிழ் அரசியல்வாதிகளும் சரி தாம் செய்வது நியாயமானதா சரியானதா எனச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com