Contact us at: sooddram@gmail.com

 

மோடி அரசை விமர்சித்த சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை; கண்டனம், போராட்டம்!

மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் (Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற மாணவர் அமைப்பு, அம்பேத்கர், பெரியார் மற்றும் தலித் சிந்தனைகளை பரப்பி வந்த நிலையில், இந்த அமைப்பினர், அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது, மாட்டிறைச்சிக்கு தடை, இந்துத்துவ அமைப்புகளின் முரணான தலித் எதிர்ப்பு நடவடிக்கை என பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிட்டு வந்தனர்.

இதுகுறித்து மனிதவள மேம்பாட்டு ஆணையத்திற்கு சிலர் இதுகுறித்து புகார் அனுப்பியதாகவும், இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைத்ததன் பேரில் மேற்கூறிய மாணவர் அமைப்புக்கு சென்னை ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மாணவர்கள், எழுத்தாளர்கள், இடதுசாரி அமைப்புகள் கொந்தளிப்பு

இந்நிலையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேப்போன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறுகையில், " புகார் அனுப்பியவர் யார் என்பதை தெரிவிக்காமல், அனாமதேய ( Anonymous) புகார் வந்ததாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. 18 வயதுடைய மாணவர்கள் வாக்களிக்க உரிமை உள்ளபோது ஐஐடி-யில் பயிலும் மாணவர்களுக்கு, தான் ஓட்டுப்போட்டு ஆட்சியில் அமைத்த கட்சியை விமர்சிக்க உரிமை இல்லையா?" என தெரிவித்தார்.

எதேச்சதிகாரத்தின் உச்சம்: மனுஷ்ய புத்திரன்

அதேப்போன்று பிரபல கவிஞர் மனுஷ்ய புத்திரன், தனது ஃபேஸ்புக் தளத்தில், "ஐஐடி சென்னையில் செயல்பட்டுவந்த ‘ அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்’ தடை செய்யபட்டுள்ளது. அம்பேத்கரின் சமகால பொருத்தப்பாடு குறித்து விரிவுரையாளர் ஆர். விவேகானந்த கோபால் எழுதிய பிரசுரத்தில், மோடி ஆட்சிக் காலத்தின் மொழிக்கொள்கை, பசுவதைத் தடை, கர்வாப்ஸி போன்ற விஷயங்கள் குறித்த விமர்சனங்கள் இடம் பெற்றிருந்ததாகவும், இது மோடியைப் பற்றிய வெறுப்பூட்டும் பேச்சைப் பரப்புவதாகவும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அடையாளம் தெரியாத நபர்களால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்தப் படிப்பு வட்டம் தடைசெய்யபட்டுள்ளது. கல்வி அமைப்புகளுக்குள் அரசு தன் கொள்கைகளை திணிக்கலாம், ஆனால் அரசின் செயல்பாடுகள் பற்றி எந்த விவாதமும் கல்வி அமைப்புகளுக்குள் நிகழக்கூடாது என்பது எதேச்சதிகாரத்தின் உச்சம்.

பலகலைக் கழக வளாகங்களில் வகுப்புவாத அமைப்புகளின் கண்காணிப்புக் குழுக்கள் நாடு முழுக்க செயல்படுகின்றன என்று தோன்றுகிறது. அவர்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து அதன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகளும் உருவாக்கபட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். கல்லூரி-பல்கலைக் கழக வளாகங்களில் மாற்றுக் கருத்துக்கள், ஜனநாயக பூர்வ விவாதங்கள் நுழைந்துவிடாமல் தடுக்கும் கருத்தியல் பயங்கரவாதம் இது" எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் போராட்டம்

இந்நிலையில் இந்த தடையை கண்டித்தும், சென்னை மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசைக் கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஐஐடி விளக்கம்

இந்நிலையில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஐஐடி நிர்வாகம், அனுமதியின்றி ஐஐடியின் பெயரை மாணவர்கள் அமைப்பு பயன்படுத்தக்கூடாது என்றும், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்ட கூட்டத்தின்போது விதிமுறை மீறப்பட்டதாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், அதே சமயம் மாணவர்களின் கருத்துரிமையை தடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் விளக்கம்

இந்நிலையில் இந்த தடை குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,"சென்னை ஐஐடியில் குறிப்பிட்ட மாணவர் அமைப்பு சில விதிகளை பின்பற்றவில்லை. விதிமுறையை பின்பற்றாவிட்டால் அங்கீகாரம் ரத்தாகும் என மாணவர் அமைப்புக்கு தெரியும்" என்று கூறியுள்ளார்.


அம்பேத்கர், பெரியார் பெயர் கூடாது என்கிறது ஐஐடி நிர்வாகம்: அ. மார்க்ஸ்

இதுகுறித்து மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரசிரியர் அ. மார்க்ஸ் இதுகுறித்து தனது பேஸ்புக் தளத்தில், "அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்" (Ambedkar Periyar Students Circle) அமைப்பை derecognise செய்து, அதாவது இயங்கக் கூடாது என இன்று முடக்கியிருப்பதன் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் உள்ளன.

ஐ.ஐ.டி காம்பசில் சமத்துவ மற்றும் முற்போக்குச் சிந்தனைகளுடன் 'அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்' மற்றும் 'சிந்தா பார்' முதலான அமைப்புகள் இயங்குகின்றன. கோபால் மேனனின் ஆவணப்படம் ஒன்றை சிந்தாபார் அமைப்பு திரையிட்டு விவாதங்களை நடத்தியதை அறிவேன். அதேபோல அ.பெ மாணவர் வட்டம் அம்பேத்கர் பிறந்த நாள் விழா முதலிய நிகழ்சிகளை நடத்திவந்தது.

இது குறித்து அங்குள்ள இந்துத்துவச் சார்பான மாணவர் அமைப்புகள் மட்டுமின்றி வெளியிலுள்ள இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சில மாதங்களுக்கு முன் ஐஐடி நிர்வாகம் அம்பேத்கர், பெரியார் பெயர்களை நீக்கி வேறு ஏதாவது Neutral (!) பெயர்களில் இயங்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இப்போது "SC, ST மாணவர்களைத் திரட்டி மோடிக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் "மேற்கொள்ளப்படுவதாக மொட்டைக் கடிதம் எழுதப்பட்டு இன்று நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

ஆக இதற்குப் பின் இந்துத்துவ அமைப்புகள் உள்ளதை நாம் கவனத்தில் கொள்ல வேண்டும். குறிப்பாக தலித் இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள் இதைக் கண்டித்துக் களத்தில் இறங்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com