Contact us at: sooddram@gmail.com

 

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமய கடமையாக நோக்கப்பட வேண்டியுள்ளது

1990 ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி இலங்கைத் தாய் நாட்டிற்கும் கறை படிந்த வரலாற்றைத் தோற்றுவித்த ஆண்டாகும். சுமார் 75000 முஸ்லிம்கள் ஆயுதமுனையில் குறிப்பிட்ட சில மணித்தியாலங் களுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இக்கோர நிகழ்வுக்கு விடுதலைப் புலிகள் காரணம் என்றாலும், அம்மக்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டிய பொறுப்பு தாரிகள், குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த அரசாங்கம் அதை வழங்கத் தவறிவிட்டது என்ற ஒரு கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பல்லின சமூகங்கள் வாழும் இந்நாட்டிலே பல நூறு வருடங்கள் சம அந்தஸ்துடனும் உரிமைகளுடனும் வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை உலக வரலாற்றில் எங்கும் இடம்பெற்றிருக்காத ஒரு பெரும் அநியாயமாகும்.

இது பலஸ்தீன பிரச்சினைக்கு சமனான அல்லது அதை விடவும் பாரதூரமான நிகழ்வாகும். இதனால் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட உரிமைகள் மீறப்பட்டது மாத்திரமன்றி அவர்களின் வாழ்க்கைத்தரமும் இதனால் படுமோசமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையிலும், அவர்களது மீள்குடியேற்றக்கனவு இன்னும் நனவாகாமல் இருந்து வருவது மிகவும் வேதனையளிக்கும் விடயமாகும்.

1990 ஆம் ஆண்டிலிருந்து பலமுறை முஸ்லிம்கள் வடக்கிலுள்ள தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொழுதிலும், பல்வேறுபட்ட காரணங்களால் அது முற்றாக கைகூடவில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகள் பற்றிய பயமே முஸ்லிம்கள் முழுமையாகக் குடியேறாமைக்கான பிரதான காரணமாகும்.

கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் பூரணமாக ஆயுதமுனையில் தோற்கடிக்கப்பட்டதன் பின் முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை சுமார் 10000 குடும்பங்கள் சுயவிருப்பின் அடிப்படையில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் குடும்பங்கள் சகிதம் அங்கு வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

வட பகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்விக் குறிக்குள்ளாக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமையும் மீள்குடியேற்ற நகர்வுகள் மிகவும் பின் தங்கியுள்ளதற்கான காரணம் எனலாம்.

கடந்த ஒரு ஆண்டு காலமாக மீள்குடியேற்றம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற பொழுதிலும், பெரும்பாலான குடும்பங்களின் வதிவிட, குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி வசதிகள் உள்ளிட்ட எத்தனையோ விடயங்கள் இன்னும் பூரணமாக செய்து கொடுக்கப்படவில்லை. இவ்வசதிகள் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படாமல் அவர்களைக் குடியேற்றுவதோ அல்லது குடும்பங்களுடன் அங்கு தொடர்ந்து வசித்து வருவதற்கு விடுவதோ அறவே முடியாத காரியமாகும்.

கடந்த 20 வருட காலப்பகுதிகளில் இவர்களின் குடியேற்றப் பகுதிகளிலிருந்து சகல வளங்களும் பல்வேறுபட்ட தரப்பினரால் அகற்றப்பட்டு, அப்பிரதேசங்கள் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் காணப்படுகின்றமை மற்றுமொரு காரணமாகும்.

சர்வதேச சமூகமும், நிதி வழங்குனர்களும் புதிதாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், 1990களில் இடம்பெயர்ந்தவர்களின் விடயத்தில் அக்கறையின்றி, நிதியுவதி வழங்க முன் வராதிருக்கின்றமை முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பாதிப்படையச் செய்துள்ளது. இதனைப்பற்றிய எதுவித விழிப்புணர்வையும் பெறாமல் இருப்பதும் கவலை தரும் விடயமாகவே காணப்படுகின்றது.

அண்மையில் இந்திய அரசு 50,000 வீடுகளை அமைத்துத் தருவதற்கு நிதியுதவி வழங்க முன்வந்திருக்கின்றமை, ஏன் இஸ்லாமிய நாடுகள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு நிதியுதவி வழங்க முன்வரக்கூடாது என்ற ஆதங்கத்தை சகல தரப்பினரிடத்திலும் ஏற்படுத்துகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஒரு சமயக்கடமையாக நோக்கப்பட வேண்டும். சகல தரப்பினரும் இதில் ஆர்வம் காட்டவேண்டும். முஸ்லிம் சமூகத்திலுள்ள செல்வந்தர்கள், இஸ்லாமிய நிறுவனங்கள், இஸ்லாமிய நாடுகள், நலன் விரும்பிகள், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஒரேயணியில் நின்று செயற்படும் போதுதான் ஒரு அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்கலாம்.

இல்லாவிட்டால் இந்த நாட்டின் பல பிரதேசங்களில் சிதறி வாழ்ந்து வரும் சுமார் 30,000 அகதிக் குடும்பங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவே தொடர்ந்தும் காணப்படும்.

ஹுனைஸ் பாரூக் பா.உ.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com