Contact us at: sooddram@gmail.com

 

கொள்கைத் தெளிவும் தொடர்ச்சியும் தமிழ்த் தலைமையிடம் இல்லாததால் அரசியல் தீர்வு சாத்தியமாகவில்லை

யுத்த முனையில் புலிகள் இயக்கம் அடைந்த தோல்வி தமிழ் மக்களின் அரசியலில் நம்பிக்கையூட்டும் திருப்புமுனையொன்றுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆயுதக் கலாசாரத்துக்குள் மக்கள் அகப்பட்டிருந்த நிலை முடிவுக்கு வந்தமை மாத்திரமன்றி தனிநாடு நடைமுறைச் சாத்தியமற்றது என்பது நிரூபணமாகியமையும் இத்திருப்புமுனைக்குக் காரணம். ஆனால் இந்தச் சூழ்நிலையை அரசியல்வாதிகள் சரியாகப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

அரசியல் தீர்வு தானாக வந்து கையில் விழுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ற நகர்வுகளின் மூலமாகவே அரசியல் தீர்வை அடைய முடியும். வெறுமனே கோரிக்கைகளை முன்வைப்பதன் மூலமும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலமும் அரசியல் தீர்வை அடைய முடியாது. கோரிக்கைகள் இறுதியானவை. அவற்றை அடைவதற்கான படிமுறைகளையே நகர்வுகள் என்பர். அத்தோடு தீர்வு முயற்சியில் தெளிவும் தொடர்ச்சியும் இருக்க வேண்டியது அவசியம். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகத் தமிழ்த் தலைவர்கள் மேற்கொண்ட முயற்சியில் தெளிவும் தொடர்ச்சியும் இல்லாதது தீர்வு தள்ளிப் போனதற்கான பிரதான காரணம்.

சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தைத் தலைவராகக் கொண்ட தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடனேயே ஆரம்பித்தது. ஆனால் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இனப் பிரச்சினைக்கான தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சி சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தது.

பல உலக நாடுகளில் சமஷ்டி நடைமுறையில் இருக்கின்றது. எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரியான சமஷ்டி முறை இல்லை. பிரதானமாக மூன்று வகையான சமஷ்டி ஆட்சி முறைகளைக் குறிப்பிடலாம். மாநிலங்களிலும் பார்க்க மத்தியில் கூடுதலான அதிகாரங்கள் உள்ள சமஷ்டி முறை கனடாவில் இருக்கின்றது. மத்தியிலும் பார்க்க மாநிலங்களுக்குக் கூடுதலான அதிகாரங்கள் உள்ள சமஷ்டி முறை அவுஸ்திரேலியாவில் இருக்கின்றது. சமஷ்டியும் ஒன்றையாட்சியும் இணைந்த கலப்பு முறை இந்தியாவில் இருக்கின்றது. இந்தியாவின் ஆட்சி முறையை சமஷ்டித் தன்மை கொண்ட ஒற்றையாட்சி என்று சிலர் கூறுவர். ஒற்றையாட்சித் தன்மை கொண்ட சமஷ்டி என்று வேறு சிலர் கூறுவர்.

சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த தமிழரசுக் கட்சி அது எவ்வாறான சமஷ்டி என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. மக்கள் தங்கள் மனோநிலைக்கு ஏற்றவாறு சமஷ்டியைப் பற்றிக் கற்பனை செய்துகொண்டனர். தமிழரசுக் கட்சியின் இக்கோரிக்கை ஒரு அரசியல் கோஷமாக இருந்ததேயொழிய விரிவான வேலைத் திட்டமாக முன்வைக்கப்படவில்லை.

எவ்வாறான சமஷ்டி என்பது பற்றிய தெளிவு இல்லாத போதிலும், முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தனித்தனியான அலகுகள் என்ற கோஷம் கவர்ச்சிகரமானதாக இருந்தது. மக்களைப் பெரிதும் கவர்ந்தது. முதலாவது குடியரசு அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான அரசியலமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றியபோது அன்றைய மானிப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் முஸ்லிம்களுக்குத் தனியலகு என்பதே தமிழரசுக் கட்சியின் கொள்கை எனக் கூறினார். ஆனால் அந்த நிலைப்பாடு தொடரவில்லை. சமஷ்டியையும் காலப் போக்கில் தமிழரசுக் கட்சி கைவிட்டது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கை ஒரு சமரச ஏற்பாடு என்று தான் கூற வேண்டும். தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட்டணியின் பிரதானகட்சிகள். தமிழ்க் காங்கிரஸ் கட்சி காலங்காலமாகச் சமஷ்டியை எதிர்த்து வந்ததால் அதைக் கூட்டணியின் கொள்கையாக ஏற்க முடியவில்லை. இந்த நிலையில்தனிநாடுகூட்டணியின் கோரிக்கையாகியது. தமிழர் விடுதலைக் கூட்டணி சமஷ்டியை அதன் கொள்கையாக ஏற்றிருந்தால் பிற்காலத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடிந்திருக்கலாம்.

தனிநாட்டுக் கோரிக்கையின் தவறை அக் கோரிக்கையை முன்வைத்தவர்களே விரைவில் உணரத் தொடங்கினர். ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம் மாவட்ட சபைகளை வழங்க முன்வந்த போது அதை ஏற்றுக் கொண்டதும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டதும் பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டப் பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றியதும் தனிநாட்டுக் கோரிக்கை தவறானது என்பதை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடுகள். எனினும், தமிழ்த் தலைவர்கள் புலிகளின் தலைமையை ஏற்றுச் செயற்படத் தொடங்கியதும் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் பின்னுக்குச் சென்று தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டார்கள். தமிழ் மக்கள் மோசமான இழப்புகளுக்கு முகங்கொடுக்கும் நிலை இதனால் ஏற்பட்டது.

இவ்வாறாக, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் தெளிவான திட்டமும் முன்வைக்கப்படவில்லை. தொடர்ச்சியும் இருக்கவில்லை. மேலே கூறியது போல, அரசியல் தீர்வு முயற்சியில் சிறிதளவும் முன்னேற்றம் ஏற்படாததற்கு இதுவே காரணம். நடைமுறைச் சாத்தியமான ஒரு இறுதித் தீர்வை இலக்காகக் கொண்டு அதை அடைவதற்கான நகர்வுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமே அரசியல் தீர்வை அடைய முடியும்.

தீர்வை நோக்கிய நகர்வாக மாகாண சபையை ஏற்பதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையாக இப்போது எழுந்திருக்கின்றது. தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்புலங்கள் எனக் கூறப்படும் மாகாணங்களுள் ஒரு மாகாணம் மாகாண சபையை ஏற்றுச் செயற்படுத்தும் போது மற்றைய மாகாணம் அதை ஏற்காது ஒதுங்கி நிற்பதில் அர்த்தமில்லை.

கடந்த வார தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகிய கட்டுரையில் (ஆர். கே. ராஜலிங்கம்) மாகாண சபையின் இரண்டு பிரதான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மாகாண சபைக்குரிய விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன்றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டம் இயற்றுவதற்கான ஏற்பாடு, தேசியக் கொள்கைக்கு உட்பட்டதெனப் பிரகடனப்படுத்துவதன் மூலம் மாகாண சபைக்குரிய எந்த விடயத்தையும் மத்திய அரசாங்க பட்டியலில் சேர்த்துக்கொள்ளக்கூடிய நிலை ஆகியவையே அவையிரண்டும்.

இக் குறைபாடுகள் மாகாண சபைச் சட்டத்தில் உள்ள போதிலும் இவை எப்போதும் நடைமுறைக்கு வருவனவல்ல. இவ்வளவு காலமும் மாகாண சபைகள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுவதற்கு இக் குறைபாடுகள் தடையாக இருக்கவில்லை என்பது முக்கியமான கவனத்துக்குரியது.

தமிழ்த் தலைவர்கள் அடிக்கடி இந்தியாவை உதாரணங் காட்டுவது வழக்கம். இந்தியாவின் மாநில அமைப்பைப் போன்ற தீர்வு வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள். இலங்கையின் மாகாண சபைச் சட்டத்தில் உள்ள மேற்படி குறைபாடுகள் இந்தியாவின் மாநில அமைப்பிலும் உள்ளன.

இந்திய அரசியலமைப்பின் 249வது சரத்தின் படி, மாநிலங்களவையில் (ராஜ்ய சபா) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஒரு பிரேரணையை நிறைவேற்றிய பின் மாநிலங்களுக்குரிய விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன்றம் சட்டமியற்றலாம். இது மாகாண சபைக்குரிய விடயங்கள் தொடர்பாக மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சட்டமியற்றுவதற்கு இலங்கைப் பாராளுமன்றத்துக்குள்ள அதிகாரத்தை ஒத்தது.

ஏதாவதொரு ஒப்பந்தத்தை அல்லது உடன்படிக்கையையோ ஏதேனுமொரு சர்வதேச மகாநாட்டில் அல்லது சர்வதேச அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தையோ நடைமுறைப் படுத்துவதற்காக மாநில விடயங்களில் சட்டமியற்றுவதற்கு இந்திய அரசியலமைப்பின் 253வது சரத்து மக்களவைக்கு (லோக் சபா) அதிகாரமளிக்கின்றது.

இந்திய அரசியலமைப்பில் இவ்வாறான சரத்துகள் உள்ள போதிலும் மாநில அரசுகள் அங்கு எவ்வித பிரச்சினையும் இல்லாது செயற்படுகின்றன.

குறைபாடுகள் இருப்பதாகக் கூறி மாகாண சபையை நிராகரிப்பது பிழையான செயல். மாகாண சபையை ஏற்பதன் மூலம் மக்கள் இப்போது கொண்டிருக்கும் எந்த உரிமையையும் இழக்கப் போவதில்லை. புதிதாகச் சில உரிமைகளைப் பெறப் போகின்றார்கள். ஆகவே மாகாண சபையை ஏற்பது மக்களுக்கு நன்மை பயக்கும் செயல்.

வேறொரு தீர்வு உடனடியாகச் சாத்தியமற்ற நிலையில் மக்களின் நலன் கருதி மாகாண சபையை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை. மாகாண சபையைத் தளமாகக் கொண்டு முழுமையான அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்பை மேற்கொள்ள முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com