Contact us at: sooddram@gmail.com

 

விண்வெளிக் கனவுகளை நனவாக்கிய மங்கையர்

(மாலினி அரவிந்தன்)

விண்வெளியில் பறந்து, பூமியை வலம் வந்து கொண்டிருக்கும் நான்கு விண்வெளி வீராங்கனைகளும், பெண்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கிறார்கள்.

வண்ணச் சிறகடித்து வானத்தை தொட்டுவிட நினைக்கும் பட்டாம் பூச்சிகளாய் எண்ணச் சிறகடித்து, கனவுகளை நிஜமாக்கி இன்று எல்லோரும் வியக்கும் வண்ணம் அரிய சாதனை படைத்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள் என்றால் மிகையாகாது. நான்கு பெண்கள் ஒரே சமயத்தில் விண்வெளியில் பறந்து யாருமே எதிர்பார்க்காத சாதனை ஒன்றை நிலைநாட்டியிருக்கிறார்கள்.

இவர்களில் ஸ்ரெவ்னி வில்சன்  (Stephanie Wilson), டொரதி மெக்காவ் (Dorothy), நாக்கோ ஜமாசாக்கி (Naoko Yamazakii) ஆகிய மூன்று பெண்களும் விண்வெளிக் களத்தில் சென்ற திங்கட்கிழமை விண்வெளி நிலையம் நோக்கிச் சென்றவர்கள் ஏற்கனவே தேஸி கோட்வெல்ட் டைஸன் என்ற பெண் சென்ற கிழமை ரஷ்ய நிலையத்தில் இருந்து விண்வெளி நிலையத்திற்குச் சென்று அங்கே தங்கியிருக்கிறார்.

ஆக மொத்தம் நான்கு பெண்கள் இப்பொழுது விண்வெளியில் தங்கியிருக்கிறார்கள். அதிக பெண்கள் ஒரே நேரத்தில் விண்வெளியில் தங்கியிருந்த சாதனையாக இது கணிக்கப்படுகிறது.

மண்ணைவிட்டு விண்ணைத் தாண்டும் முயற்சியில் மனிதன் தனது கவனத்தைப் பல வருடங்களாகவே செலுத்திக் கொண்டிருந்தாலும் 1957 ல் தான் அந்த முயற்சியில் அவனால் வெற்றி பெற முடிந்தது. அன்றுதான் ஸ்புட்னிக் – 1 என்ற ரஷ்ய விண்கலம் முதன் முதலாக விண்வெளி நோக்கி ஏவப்பட்டது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் மாதம் ஸ்புட்னிக் – 2 என்ற விண்கலத்தில் லைக்கா என்ற நாயைப் பரீட்சார்தமாக அனுப்பிப் பார்த்தார்கள். போதிய முறையில் விண்கலம் வடிவமைக்கப்படாத படியால் விண்கலம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே லைக்கா இறந்து விட்டது. நான்கு வருட விடா முயற்சியைத் தொடர்ந்து விண்வெளிப் பயணத்தை முதன் முதலாகத் தொடக்கி வைத்தவர் யூரிகாகரின் என்ற ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விமான ஓட்டியாவார்.

இவர் விண்வெளி நோக்கிப் பயணமானதன் மூலம் 12.04.1961ல் விண்ணைத் தாண்டிச் சாதனை படைத்த முதல் மனிதரானார். அன்று மாபெரும் சாதனை படைத்த இவர் பின்னாளில் ரஷ்யாவில் நடந்த ஒரு விமான விபத்தில் பலியாகி இறந்து போனார். தற்சமயம் விண்வெளியில் பதின்மூன்று பேர் தங்கியிருக்கிறார்கள் இவர்களில் எட்டு அமெரிக்கர்கள் மூன்று ரஷ்யர்கள், இரண்டு ஜப்பானியர்கள் அடங்குவர். விண்வெளியில் தங்கியிருக்கும் பதின் மூன்று பேரில் நான்கு பேர் பெண்களாவர்.

தொடக்க காலத்தில் பெண்களை விண்வெளிப் பயணத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இந்த விண்வெளித் திட்டத்திற்குத் தகுந்தவர்கள், இராணுவப் பயிற்சி பெற்ற விமான ஓட்டிகளாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் காலப் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அதாவது 1960ம் ஆண்டுக்குப் பிறகுதான் பெண்களாலும் அவர்களது விடாமுயற்சியால் இத்திட்டத்தில் இணைந்து கொள்ள முடிந்தது. இன்று சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விண்வெளிப் பயணத் திட்டத்தில் மிகவும் ஆர்வத்தோடு இணைந்திருக்கிறார்கள்.

1963ம் ஆண்டு விண்வெளியைத் தொட்ட முதல் பெண்மணி என்ற பெருமை ரஷ்யாவைச் சேர்ந்த வெலன்ரீனா ரெரஸ்கோவா என்ற பெண்மணியையே சேரும். விண்வெளிப் பயணத் திட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய காலம் கனிந்து வந்ததால், 1978 ல் அமெரிக்காவில் ஆறு பெண்கள் நாசா விண்வெளித் திட்டத்தின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்டு விண்வெளிப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.

1983ல் விண்வெளி சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி என்ற பெயரை சாலி றைட் என்ற பெண்மனி பெற்றுக்கொண்டார். 1984ம் ஆண்டு யூலை மாதம் ஸ்வெட்லானா ஸவிற்ஸ்காயா என்ற ரஷ்யப் பெண்மணி விண்வெளியில் நடந்து காட்டினார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கர்கள் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடவில்லை என்பது போல அமெரிக்கப் பெண்மணி கத்தரீன் சுல்வான் விண்வெளியில் நடந்து காட்டினார்.

1992ல் முதலாவது ஆபிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மே ஜேமிசன் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். 1995ல் அமெரிக்கப் பெண்மணியான எலீன் கொலின்ஸ் விண்கல ஓட்டியாக விண்வெளிக்குச் சென்று வந்தார். இவரே மீண்டும் 1999ல் விண்வெளிப் பயணக் குழுவின் பொறுப்பை ஏற்றுத் தலைமை தாங்கிச்சென்று வந்தார்.

1996ல் நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த பெண்மணி என்ற பெயரை ஷனன் லூசிட் என்ற பெண்மணி பெற்றுக் கொண்டார். இவர் ஐந்து தடவைகள் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருந்தது மட்டுமல்ல, மிர் என்ற ரஷ்ய விண்வெளி நிலையத்திலும் தங்கி இருந்தார்.

இவர் ஏற்படுத்திய சாதனையை 2007ம் ஆண்டு சுனித்தா வில்லியம் என்ற பெண்மணி விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் தங்கியிருந்ததன் மூலம் முறியடித்து சாதனை படைத்தார். சுனித்தா வில்லியத்தின் தந்தை வழியினர் இந்தியாவில் உள்ள குஜராத்தைச் சேர்ந்தவர்கள், ரொபோட்டா பொன்டர் என்றவரே விண்வெளிப் பயணத்தில் சென்ற முதலாவது கனேடியப் பெண்மணியாவார்.

என்னதான் விண்வெளியில் சாதனைகள் படைக்கப் பெண்கள் போட்டி போட்டு முன்வந்தாலும் எப்பொழுதுமே சாதனைகள் படைக்க முற்படும் போது எதிர்பாராத தடங்கல்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில், விண்வெளியில் சாதனை படைக்க முற்பட்டவர்களில் சிலர் எதிபாராத விண்வெளி விபத்தில் மரணமடைந்தும் இருக்கிறார்கள்.

விண்வெளிக்குச் சென்ற பெண்மணிகளில் தம்முயிரைத் துறந்த பெண்மணிகளும் உண்டு. 1986ம்ஆண்டு சலெஞ்சர் விண்கல விபத்தில் இறந்த யூடித் ரெஸ்னிக் கிறிஸ்ரா மக்கல்பி, 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கல விபத்தில் இறந்த கல்பனா சாவெல், லோறல் கிளாக் ஆகிய பெண்களும் விண்வெளியில் சாதனை படைத்து மறைந்துபோன பெண்களின் பட்டியலில் அடங்குவர்.

எதிர்வரும் காலங்களில் இன்னும் அதிக பெண்கள் விண்வெளியில் தங்கி இருந்து பல்வேறு துறைகளிலும் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை அனேகமாக எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இந்த விண்வெளிப் பயணத் திட்டத்தில் இணைந்திருக் கிறார்கள்.

இவர்கள் எல்லாம் இன்னும் என்னென்ன சாதனைகளைச் செய்யக் காத்திருக்கிறார்களோ தெரியாது. ஆனால் சாதனைகள் படைப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com