Contact us at: sooddram@gmail.com

 

இதுவும் மேட்டுக்குடிதான்

எதிர்வரும் தை மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் இலக்கிய ஒன்றுகூடலுக்கு எதிராக பிற்போக்கு சக்திகள் ஒன்று கூடி நாசவேலைகள் செய்து வருகின்றனர். இந்த நாசவேலைகளுக்கு முன்னரங்கில் நிற்பவர்கள் இங்கிலாந்திலுள்ள பத்மநாப ஐயர் அவர்களும், கனடாவிலுள்ள விருதுகள் வழங்கும் சபையின் தலைவருமான செல்வம் என்பரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதற்காக இவர்கள் இந்த இலக்கிய ஒன்று கூடலை எதிர்க்கின்றார்கள்? தமிழ் மக்கள் சுதந்திரமாக…, மகிழ்ச்சியாக…, உயிர்அச்சுறுத்தல்கள் இலலாதவர்களாக…, நடமாடுகின்றார்கள் என்பதாக…,  ாட்டுவதற்கு ராஜபக்ச அரசு நடத்தும் ஒரு நாடகம் தான் இந்த இலக்கியச் சந்திப்பு. எனவே இதை நாம் கண்டித்தே ஆகவேண்டும் இதுதான் இவர்கள் கண்டுபிடித்த நியாயம். இவர்களது இந்த நியாயத்தையும், தமிழ்மக்கள் மீது இவர்கள் அக்கறை கொள்வதாகக் காட்டும் நாடகத்தையும் நாம் மிகத்தூர நின்று வேடிக்கை பார்க்கமுடியாது. இவர்களுக்கு மிக அருகில் சென்று இவர்களது காதை முறுக்கி சில கேள்விகள் கேட்டே ஆகவேண்டும். இது என்ன புலுடா என்று இவர்கள் தலையில இரண்டு குட்டுப்போடவும் மனம் தவிக்குது. இன்று நேற்றா இது நடக்குது. இந்த சமூக நாசகாரர்களின் சிந்தனைக்கு தமிழ்ச் சமூகம் சிக்கிச் சின்னாமின்னாகியதன் வரலாறு மிக நீண்டது பாருங்கோ.

முன்பொரு காலத்தில இந்திய மஞ்சள் பத்திரிகைகளும், துப்பறியும் நாவல்களும் என இலங்கையில் வந்து குவிந்தபோது அதை வாசித்து தமிழ்ச் சமூகம் சீரழிந்து கொண்டிருந்தது. இதைமாற்றி ,ுய படைப்புத்திறனையும் முற்போக்கு சிந்தனைக்கும் வழிகோலியவர் பேராசிரியர் கைலாசபதி. அதை சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஊக்கப்படுத்தியதோடு அதற்கான பரிசுத்தொகைகளும் வழங்கிவந்தது. அந்தக் கால கட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. அத்தோடு தமிழில் சினிமாத்துறையும் வளர்ச்சியடைந்து வந்தது. இதை அன்றைய தமிழ்த்தேசிய வாதிகளான மேட்டுக்குடி அரசியல் வாதிகள் எதிர்த்து வந்தனர். இது சிங்கள அரசு தமிழ் மக்களுக்குச் செய்யும் நாசவேலை. எமது தொப்புள் கொடி இந்திய  உறவுகளுக்கும், எங்களுக்கும் இடையே விரோதத்தை தூண்டும் சிங்களப் பேரினவாத சக்திகளின் சூழ்ச்சி எனக் கோசம் எழுப்பினார்கள்.

ஏன் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வருவதையும் தடுத்தவர்கள் தான் அந்தத் தமிழ்த் தேசிய மேட்டுக்குடியினர். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம் வந்தால் தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்துபோகும் என்பதுதான் அவர்களது வியாக்கியானம். தாம் மட்டும் கொழும்பிலிருந்தும், கடல்கடந்து சீமைக்கும் சென்று பல்கலைக்கழக அறிவைப்பெறலாம் அது கலாச்சார சீரழிவு அல்ல. பொருளாதார வழம் அற்றவர்களும், நீண்டகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களும் வசதியாக பல்கலைக்கழகம் செல்லும் சூழல் வந்தபோதுதான் பல்கலைக்கழகப் படிப்பு கலாச்சாரச் சீரழிவாக தோன்றியது. முன்னைய மேட்டுக்குடியினரின் இந்த லொஜிக்கைகைத் தான் அவர்களது விசுவாசிகளான பத்மநாப ஐயரும், விருதுவழங்கும் சபையின் தலைவருமான கனடா செல்வம் அவர்களும் பின்பற்றுகின்றார்கள். தமிழ் மக்கள் பிரச்சனை எதுவும் அற்றவர்களாக வாழ்கின்றாகள் என ராஜபக்ச அரசு சர்வதேசங்களுக்கு காட்டும் ஓரு நாடகம் தான் கொழும்பில் நடக்க இருக்கும் இலக்கியச் சந்திப்பிற்கான பின்னணி. எனவே நாம் அதைத் தடத்தே ஆகவேண்டும் என ஒற்றைக்கால் தவம் புரிகின்றனர்.

யுத்தம் முடிந்தபிற்பாடு கோவில் திருவிழாக்களுக்கு இலட்சக்கணக்கில் தமிழர்கள் சென்று வருகின்றார்கள், நல்லூர் திருவிழாவின்போது அதற்காகவே புகலிடத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கை சென்று வந்தார்கள். அதை சர்வதேசம் எப்படிப்பார்க்கும் அதுவும் ராஜபக்சவின் ஒரு நாடகம்தானே அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை. ஒவ்வொரு நாளும் நாயினாதீவிக்கு லட்சக்கணக்கில் மக்கள் சென்றுவருகின்றார்கள் இதுவும் ரரஜபக்சவின் சதிதானே இதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை? யுத்தம் முடிந்து இராணுவக் கெடுபிடிகள் குறைந்து, பதுங்கு குழி வாழ்க்கையும் அற்றுப்போன நிலையில் இன்று நாள் முழுக்க பெண்கள் ரிவிக்கு முன்னால் இருந்து சாக்கடைத் தமிழ்த் தொடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாகள். இதற்கெதிராக அல்லது இதற்கு மாற்றாக எதுவும் செய்வவேணுமே என்றெல்லாம் இவர்களுக்குத் தோன்றாது.

புகலிடத்தில் இலக்கியச் சந்திப்பு நடைபெற்ற காலங்களிலும் தமிழ்த் தேசிய வாதிகள் எதிர்த்தார்கள். புகலிடத்தில் புலிகளின் வல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் மாற்றுக் கருத்தியலுக்கான ஒரே ஒரு தளமாகச்  ெயல்பட்டதுஇலக்கியச் சந்திப்பு’. இவ்வாறான தளங்களின் ஊடாகவே பல்வேறு படைப்புகளையும், கருத்துக்களையும், சிரழிந்துபோகும் சமூகத்தை மடைக்கித்திருப்பி நல்வழியில் செலுத்துவதற்கான சக்திகளையும் நாம் இனம்காணமுடியும்.

எமது தமிழ் சமூகத்தில் வீரர்கள் இருக்கின்றார்கள், விண்ணர்கள் இருக்கின்றார்கள். ஆனால் தமிழ் சமூகத்திலிருந்து ஒரு சமூகவியலாளனை எம்மால் தேடமுடியாதிருக்கின்றது. நாம் தேடிக்கொண்டிருக்கின்றோம் ஒரு பெரியாரை, ஒரு அம்பேத்கரை.

கொழுப்பில் நடக்கும் இலக்கியச்சந்திப்பு போன்று இலங்கையிலுள்ள பல்வேறு இடங்களிலும் நாம் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தவேண்டும். குறிப்பாக சிங்கள மக்களுடனும், முஸ்லிம் மக்களுடனும் இணைந்து நாம் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும். முப்பது வருடங்களாக நாம் தொடந்து நடத்திய புறநானூற்று நாசத்தினால்  பலவகையில் நாம் பின்தங்கியிருக்கின்றோம். முஸ்லிம் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் பல வகையில் முன்னேறிவிட்டார்கள்.

அண்மையில் பேராசிரியர் ராஜன் கூல் அவர்கள் ஒரு விடயத்தை மிக அழுத்தமாகக் கூறினார். யாழ்ப்பல்கலைக் கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறிய தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் சிங்கள் இளைஞர்களுடன் போட்டிபோட முடியாது பலவீனமாக இருக்கின்றார்கள் என்று. காரணம் பட்டம் பெற்று வெளியேறும் தமிழ் இளைஞர்களின் ஆங்கில அறிவு சிங்கள இளைஞர்களுடைய தரத்திற்கு மிகக் குறைவாக இருப்பதாக. அத்தோடு யாழ்ப்பல்கலைக்கழகத்தில் பேணப்படும் கலாச்சாரமும் இளைஞர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது என்பதாகவும் திரு. ராஜன் கூல் அவர்கள் கூறியிருந்தார்.

எனவே நாம் பெறும் கல்விகளுக்கு அப்பால் இலக்கிய மகாநாடுகள் எமக்கு மிக அவசியமானது. தமிழ் சமூகத்தையும் அதன் பண்பாடு கலாச்சரம் போன்ற விடயங்கள் குறித்து விவாதிப்பதற்கும் இலக்கிய சந்திப்புகள் தொடர்ந்து நடக்கவேண்டும். இவ்வாறான சந்திப்புக்களும், திறந்த விவாதங்களுமே சமூகத்தை மாற்றும் வல்லமையுடையது. தமிழ் சமூகம் இதனூடாகவே ஒரு சிறந்த சமூகவியலாளனை தேர்ந்தெடுக்கமுடியும்.

இவ்வாறான நிலை தமிழ் சமூகத்தில் தோன்றிவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே கொழும்பில் நடக்க இருக்கும் இலக்கிய மநாட்டை இவர்கள் எதிர்த்துவருகின்றார்கள்.

எனவேஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம் கொழும்பில் நடத்தும் இலக்கிய சந்திப்பு ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுவதோடு. தொடர்ந்தும் இவ்வாறான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com