Contact us at: sooddram@gmail.com

 

ஓய்வூதியச் சீர்திருத்தம் பிரான்ஸின் அரசியலில் திருப்புமுனையாகலாம்

பிரான்சில் 1968 மே மாதம் பெரிய வேலை நிறுத்தப் போராட்டமொன்று நடந்தது. பல தொழிற்சங்கங்கள் கூட்டாக நடத்திய போராட்டம் அது. தொழிலாளர்களுடன் மாணவர்களும் வீதியில் இறங்கினார்கள். இவ்வருடம் செப்ரெம்பர் மாதத்திலும் அது போலவே பெரிய போராட்டம் நடந்தது. எல்லா வகையான தொழில்களையும் புரிபவர்கள் நடத்திய போராட்டம். மாணவர்களும் அதில் கலந்துகொண்டனர். பிரான்சின் மொத்த சனத் தொகையில் 20 வீதத்தினர் சுலோக அட்டைகளுடன் வீதியில் இறங்கினார்கள்.

1968 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. அரசியல் கோரிக்கைகளையே முன்வைத்தார்கள். ஆனால் அன்றைய ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் பொருளாதார நடவடிக்கை மூலம் அப்போராட்டத்தைப் பலவீனப்படுத்தினார். தொழிலாளர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கினார். இதனால் தொழிலாளர் மத்தியில் பிளவு ஏற்பட்டுப் போராட்டம் பலவீனப்பட்டது.

இப்போது பொருளாதாரக் கோரிக்கையை முன்வைத்தே போராட்டம் நடைபெறுகின்றது. ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லையை அதிகரிக்க கூடாது என்பது போராட்டத்தின் பிரதான கோரிக்கை. ஜனாதிபதி நிகோலஸ் சார்கோஸி அரச பலத்தில் முழுக்க நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றார். போராட்டக்காரர் கொஞ்ச நாட்கள் கோஷம் போட்டுவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் எனக் கூறுகின்றார்.

ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லையை அதிகரிப்பதற்கு எதிராகவே போராட்டம், இப்போது 60 வயதில் ஓய்வூதியம் பெறவேண்டும். இதை உடனடியான 62 வயதாகவும் 2018 ஆம் ஆண்டு 68 வயதாகவும் அதிகரிப்பதென அரசாங்கம் முடிவு செய்தது. அதேநேரம், அரசாங்க சேவையைச் சேர்ந்த ஒருவர் முழுமையான ஓய்வூதியத்தைப் பெறக் குறைந்த பட்சம் 41 வருடம் 3 மாதம் சேவையாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு எதிராகவே தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். ஆசிரியர்கள், தாதியர், டாக்டர்கள், சாதாரண தொழிலாளர் என எல்லாத் தரங்களையும் சேர்ந்தவர்கள் பங்கு பற்றினார்கள். அரசாங்கம் போராட்டத்தைப் பொருட்படுத்தவில்லை. இச்சட்டம் பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் நிறைவேறியது. நவம்பர் 10ந் திகதி ஜனாதிபதி சார்கோஸி கையொப்பம் வைத்ததுடன் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.

வரவு செயலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகை அதிகரித்து வருவதைச் சரிக்கட்டுவதற்கான ஒரு ஏற்பாடாகவே ஓய்வூதிய வயதெல்லையைக் கூட்டியிருக்கின்றது அரசாங்கம். ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களுக்கான ஓய்வூதியத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் தொழிலாளரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அரசாங்கம் கூறுகின்றனது. பிரான்ஸில் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். சிறப்பான வைத்திய சேவைகள் மற்றும் பிறப்பு வீதம் குறைந்து வருதல் கார ணமாக இந்த நிலை உருவாகியிருக்கலாம். 2050 ஆம் ஆண்டளவில் பிரான்சின் சனத்தொகையில் அரைவாசிப் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் ஓய்வூதியத் திட்டம் 1945 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அப்போது ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத்தைச் சம்பாதித்துக் கொடுக்கும் தொழிலாளருக்கும் இடையிலான விகிதாசாரம் ஒரு ஓய்வூதியருக்கு நான்கு தொழிலாளர் என்றிருந்தது. இப்போது அந்த விகிதாசாரம் ஒரு ஓய்வூதியருக்க 1.5 தொழிலாளர் எனக் குறைந்துவிட்டது. ஓய்வூதியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது மாத்திரம் இதற்குக் காரணம் எனக் கூற முடியாது. இப்போது பல தொழிற்சாலைகளில் மனிதர்களின் பல வேலைகளை யந்திரங்கள் செய்வதால் தொழிலாளரின் எண்ணிக்கை குறைகின்றது.

ஓய்வூதியம் பெறுவதற்கான இப்போதைய வயதெல்லை தொடர்ந்து நடைமுறையில் இருக்குமானால் ஓய்வூதியக் கொடுப்பனவுக்காகப் பெருமளவு பணம் செலவிட நேரும் என்றும் வயதெல்லையை அதிகரித்தால் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும் என்றும் அரசாங்கம் கூறுகின்றது. வயதெல்லை. அதிகரிக்கப்படுவதை எதிர்ப்பவர்கள் இதன் மறுபக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லையைக் கூட்டினால் வேலைகளுக்கான வெற்றிடம் வெகுவாகக் குறையும். இதனால் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலை யற்றோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவும் அதிகரிக்கும். ஓய்வூதியக் கொடுப்பனவும் வேலையற்றோருக்கான கொடுப்பனவும் பிரான்சின் நலன்புரிக் கொடுப்பனவுகளில் பிரதானமானவை, ஒரு நலன்புரிக் கொடுப்பனவைக் கடடுப் படுத்துவதன் மூலம் மற்றைய நலன்புரிக் கொடுப்பனவு அதிகரிக்கின்றது என்றும் இது சரியான பொருளாதாரக் கொள்கையல்ல என்றும் கூறுகின்ற எதிர்பாளர்கள் வேலையற்றோரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தான் நலன்புரிக் கொடுப்பனவுகள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்கான வழி என்கின்றனர். ஓய்வூதியம் பெறுவதற்கான வயதெல்லையைக் கூட்டுவது தாங்கள் வேலை பெறும் வாய்ப்பைப் பாதிக்கும் எனக் கூறிக் கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

வேலையற்றோரின் எண்ணிக்கை பிரான்சில் வருஷத்துக்கு வருடம் அதிகரித்து வருகின்றது. றோமா மக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட முடிவுக்கும் இதற்கும் தொடர்பு உண்டு. றோமா மக்கள் ஐரோப்பிய யூனியன் பிரசைகள் என்பதால் வேலைவாய்ப்பு மற்றும் வேலையற் றோருக்கான கொடுப்பனவு போன்றவற்றில் பிரெஞ்சுப் பிரசைகளுக்குரிய சகல உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. இதனாலேயே வேறு காரணங்களைக் கூறி அவர்களை நாட்டிலிருந்து வெியேற்றுவதற்கு அரசாங்கம் முடிவு செய்தது.

சார்கோஸியின் செல்வாக்குக் கருத்துக்கணிப்பு 1958ஆம் ஆண்டு ஐந்தாவது குடியரசு அமைந்தபின் பதவி வகித்த மற்றைய எல்லா ஜனாதிபதிகளிலும் பார்க்க மிகவும் குறைவானதாகவே இப்போது உள்ளது. இதே நேரம், தாங்கள் பதவிக்கு வந்ததும் ஓய்வூதிய வயதெல்லையை அதிகரிக்கும் சட்டத்தை ரத்துச் செய்வதாக சோஷலிஸ்ட் கட்சியினர் கூறுகின்றனர். இந்த நிலையில் வீதிகளில் இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் 2012 மே மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகத் தெரிவிக்கும் செய்தியை சார்கோஸி புரிந்து கொள்வாரா?

(சங்கர சேயோன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com