Contact us at: sooddram@gmail.com

 

அதிகரித்துவரும் சிறைச்சாலை வன்முறைகள்...

சிறைக்கூடங்களே வன்முறைக் கூடங்களாவதா?

(ஷம்ஸ் பாஹிம )

தவறு செய்பவர்களை சீர்திருத்தி நல் வழிப்படுத்தும் இடங்களாகவே சிறைச்சாலைகள் கருதப்படுகின்றன. இதனால் கைதிகளுக்கு தொழிற் பயிற்சிகள் மட்டுமன்றி ஆன்மீக வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன. சிறை வாழ்க்கையில் பக்குவமடைந்து வெளியில் வந்தவர்களும் இருக்கிறார்கள். மிக மோசமானவர்ளாக மாறியவர்களும் இருக்கவே செய்கிறார்கள். செய்த தவறுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி செய்யாத தவறுக்காக தண்டிக்கப் பட்டவர்கள், அவசர கோபத்தினால் தவறிழைத்தவர்கள் போராட்டம் நடத்தி பிடிபட்டவர்கள் என சிறையில் பல்வேறு விதமான கைதிகள் இருக்கவே செய்கின்றனர்.

நமது நாட்டைப் பொறுத்தமட்டில் நாடு பூராவும் உள்ள 18 சிறைச்சாலைகளில் சுமார் 31 ஆயிரம் கைதிகள் தடுத்துவைக்கப் பட்டுள்ளனர். 17 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடவசதி உள்ள இடத்தில் இரு மடங்கு கைதிகள் காணப்படுகின்றனர்.

ஒவ்வொரு வருடத்திலும் முக்கிய தினத்திலும் ஆயிரக்கணக்கான கைதிகள் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படுகின்ற போதும் சிறைச்சாலைகள் தொடர்ந்தும் நிரம்பிவழிகின்றன.

இதற்கு தீர்வு காண்பதற்காக பல மாற்று வழிகளைத் தேடுவதில் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலைமையிலே கடந்த வாரம் முழு நாட்டையும் உலுக்கிய தாக்குதல் சம்பவம் வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறியது.

1983 கலவரத்தின் போது சிறைச்சாலைகளில் இருந்த தமிழ் கைதிகள் குரூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவமே நாட்டில் இடம்பெற்ற மோசமான கறைபடிந்த சம்பவமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. இது தவிர ஒரு சில சம்பவங்களே சிறைகளில் இடம்பெற்றுள்ளன.

சிறைச்சாலைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை தேடிப் பிடிப்பதற்காக கடந்த 7ஆம் திகதி நாடு பூராவும் உள்ள சிறைச்சாலைகளில் திடீர் தேடுதல் நடத்தப்பட்டது. இதன்போது வெலிக்கடை சிறையில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் குரூரமான முறையில் தாக்கப் பட்டனர். இந்த சம்பவம் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சிறைச்சாலைகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், போதைப் பொருட்கள் மற்றும் பொருட்கள் கண்டபிடிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரமான கைதிகள் உள்ளே இருந்து கொண்டு வெளியில் உள்ள தமது சகாக்களை இயக்கி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், ஆயுதக்கடத்தல், போதைப் பொருள் வியாபாரம் என்பவற்றில் ஈடுபட்டு வருவதும் கடந்த காலங்களில் அம்பலமாகியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் கூட இவ்வாறு சிறைக்குள் இருந்த பாதாள உலக தலைவர் ஒருவரின் வழிநடத்தலின் கீழ் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

இந்த சூழ்நிலையிலே கடந்த 7ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் திடீர் தேடுதல்கள் நடாத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெலிக்கடையைத் தவிர சகல சிறைச் சாலைகளிலும் தேடுதல் வெற்றியளித்ததாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த தேடுதல்களின் போது 56 கையடக்கத் தொலைபேசிகள், 55 சிம் அட்டைகள், 30 சார்ஜர்கள் 27 பட்டரிகள், மற்றும் போதைப் பொருட்கள் என்பன மீட்கப்பட்டன. ஓரிரு சிறைச்சாலைகளில் இருந்து எதுவுமே மீட் கப்படவில்லை. இந்தத் தேடுதல்களில் எது வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.

அப்படியானால் வெலிக்கடை சிறையில் மட்டும் ஏன் இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெற்றது? இதற்கு சரியான விடையை அறிவதில் ஒவ்வொருவரும் ஆர்வமாக உள்ள போதும் அது தொடர்பில் தொடர்ந்தும் மர்மம் நிலவி வருகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலை தேடுதல் தொடர்பில் பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் முரணான பதில்களையே வெளியிட்டுள்ளனர். இந்தத் தேடுதலுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் தரப்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என பொலிஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் முன்கூட்டி அறிவிக்காமல் இந்த தேடுதலை முன்னெடுத்ததாலே இவ்வாறு நிகழ்ந்ததாக சிறைச்சாலை தரப்பில் கூறப்படுகிறது.

உண்மையில் என்ன நடந்தது?

வெலிக்கடை சிறைச்சாலையில் திடீர் தேடுதல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினர் (சுமார் 150 பொலிஸார்) 6ஆம் திகதி மாலை பொரளை பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமானார்கள். மறுநாள் காலையில் வெலிக்கடை சிறையில் தேடுதல் நடத்துவதே இவர்களின் திட்டம்.

மேலதிகாரிகளின் பணிப்பின்படி காலை 7.00 மணிக்கு பொலிஸ் குழு சிறைச்சாலையை வந்தடைந்தது. பொலிஸார் தேடுதல் நடத்த வந்திருக்கும் விபரம் சிறை அதிகாரிகளினால் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர். த. சில்வாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவர் உடனடியாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்த தேடுதலை முன்னெடுக்க பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

இதன்படி சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பொலிஸார் தேடுதலை ஆரம்பித்தனர். கைதிகள் தப்பிச் செல்லலாம் என்பதால் வெலிக்கடை சிறையை அண்மித்த பகுதியில் சுமார் 300 பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். முதலில் பெண்கள் பிரிவில் தேடுதல் நடத்தப்பட்டது. 8.30 மணியளவில் ஆண்கள் பிரிவில் தேடுதல் ஆரம்பமானது.

வெலிக்கடை சிறையில் தண்டனை விதிக் கப்பட்ட 2,600 கைதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 2,400 பேர் மோசமான குற்றச்செயல்கள் தொடர்பில் தண்டிக் கப்பட்டவர்கள் அதிலும் 400 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாரிய குற்றவாளிகள். இத்தகைய கைதிகள் உள்ள சிறைச்சாலையில் நூற்றுக்கும் குறைவான பொலிஸார் நிராயுத பாணியாக தேடுதல் நடத்தினர். சிறைக்கூடங் களில் இருந்த கைதிகள் ஒவ்வொருவராக வெளியில் அழைக்கப்பட்டு சோதனை செய் யப்பட்டு வெளியில் நிறுத்தப்பட்டனர். பின்னர் சிறைக் கூடுகளுக்குள் தேடுதல் நடத்தப்பட்டது. வெளியில் நிறுத்தப்பட்ட கைதிகளுக்கு காவலாக சிறைச்சாலை அதிகாரிகள் நிறுத்தப் பட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் கடந்திருக்கும் திடீரென கைதிகள் பக்கத்தில் இருந்து சலசலப்புக் கேட்டது. காவலுக்கு இருந்த சிறை அதிகாரிகளை தாக்கிய நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைக்கூடுகளில் தேடுதல் நடத்தும் பொலஸாரை சுற்றிவளைத்து தாறுமாறாகத் தாக்க ஆரம்பித்தனர். எதிர்பாராத இந்தத் தீடீர் தாக்குதலினால் பொலிஸார் நிலைகுழைந்தனர். தப்பி ஓடவும் வழியில்லை. செங்கற்கள், தடிகள், இரும்புத்தடிகள், கற்கள் என கைதிகள் தரப்பிலிருந்து உக்கிரமான தாக்குதல் நடத்தப்பட்டது. தப்பி ஓட முயன்ற பொலிஸார் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டனர். சில பொலிஸாரின் சீருடைகள் கூட களையப்பட்டன. மேல்மாடியில் சோதனையிட்ட சில பொலிஸார் கீழே தள்ளப்பட்டனர்.

பொலிஸார் தாக்கப்படும் விபரம் சற்று நேரம் கடந்த பின்னரே சிறை அதிகாரிகளுக்கும் வெளியில் உள்ள பொலிஸாருக்கும் சென்றடைந்தது. உடனே மேலதிக பொலிஸார் விசேட அதிரடிப்படை, இராணுவம் என்பன வரவழைக்கப்பட்டு கடும் பிரயத்தனத்தின் பின் பொலிஸார் மீட்கப்பட்டனர். காயமடைந்த பொலிஸாரை மீட்க சில கைதிகளும் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 44 பொலிஸாரும் 4 சிறை அதிகாரிகளும் காயமடைந்தனர். இவர்களில் பலர் சிகிச்சை பெற்று வெளியேறிவிட்டனர்.

இந்த எதிர்பாராத சம்பவம் பல சந்தேகங்களை எழுப்பியது. பொலிஸார் தேடுதல் நடத்தப் போவதை கைதிகள் முன்கூட்டி அறிந்திருந்தனரா? அதனால் தான் அவர்கள் தாக்குதலுக்குத் தேவையான பொருட்களை திரட்டி வைத்திருந்தனரா? சிறை அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையா?

ஆனால் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்கிறார் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. யூ. குணசேகர, நூற்றுக்கணக்கான மிக மோசமான கைதிகளிடையே தேடுதல் நடத்த சிறு பொலிஸ் குழுவினால் முடியாது என்பதே அவரின் கணிப்பாகும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்றையும் அமைச்சர் நியமித்தார். ஜனாதிபதிக்கும் அவர் பூர்வாங்க விசாரணை அறிக்கையொன்றை கையளித்திருந்தார்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் சி. ஐ. டி. யினரும் தனியாக விசாரணை நடத்தினர்.

சம்பவ தினம் முன்னறித்தலின்றி லீவு பெற்ற சிறை அதிகாரிகள் குறித்தும் விசாரணை முடக்கிவிடப்பட்டதோடு அன்றைய தினம் கடமையில் இருந்த சிறை அதிகாரிகள், தாக்கப்பட்ட பொலிஸார் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இந்த விசாரணைகளின் போது தாக்குதலுடன் தொடர்புடைய கைதிகள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. இவர்களில் பலர் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது.

பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யார் எத்தகைய கருத்துக் கூறினாலும் நியாயப்படுத்தினாலும் இந்த மோசமான முன்னுதாரணத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது. குற்றம்புரிந்து தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளினால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிஸார் தாக்கப்படுவதென்பது இலகுவாக மறந்து விடக்கூடிய சம்பவமல்ல.

சிறைகள் உருவாகிய உண்மையான நோக்கம் நிறைவேற்றப்படுமானால் இத்தகைய சம்பவங்களைக் குறைக்க முடியும் என்பதே சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.

சிறைச்சாலைகளுக்கு தொலைபேசிகள், போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் வழிவகைகளை முழுமையாக தடுத்து நிறுத்துவது குறித்து சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக சகல சிறைகளிலும்ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்த உள்ளதாக அமைச்சர் டி. யு. குணசேகர கூறினார்.

இதுதவிர வெலிகடை உட்பட கொழும்பு சிறைகளில் உள்ள 4060 கைதிகளை கொழும்புக்கு வெளியில் புனர்வாழ்வு வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இனிமேல் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதற்காக கைதிகள் சரியான முறையில் சீர்திருத்தப்பட வேண்டும். என்று சிறைச்சாலைகள் யாவும் மூடப்படகிறதோ அன்றுதான் உண்டையான சுபீட்சம் நாட்டில் மலரும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com