Contact us at: sooddram@gmail.com

 

உலகில் உயிர்வாழ்க்கை நிலைக்க மரங்களே கவசம்

நாடெங்கும் பதினொரு இலட்சம் மரக்கன்றுகள் இன்று நடப்படுகின்றன. இலங்கை எங்கும் பதினொரு நிமிட நேரத்துக்குள் பதினொரு இலட்சம் மரங்களை நடுவதே இத்திட்டமாகும். இன்று காலை 10.07 மணி தொடக்கம் 10.18 மணி வரையான பதினொரு மணி நேரத்திற்குள் பதினொரு இலட்சம் மரங்களும் நடப்படுகின்றன. இன்றைய தினத்தில் தேசிய மரநடுகை வைபவமாக இத்திட்டம் நிறைவேற்றப் படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் எதிர்வரும் பதினெட்டாம் திகதியாகும். அதேசமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக் காலம் எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி ஆரம்பமாகிறது. இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவிப் பிரமாணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அன்றைய தினம் மேற் கொள்ளவிருக்கிறார். இவற்றை முன்னிட்டே பதினொரு இலட்சம் மரங்களை நாடெங்கும் நடும் திட்டம் இன்று மேற்கொள்ளப்படுகிறது. ஜனாதிபதியின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது பதவிக் காலத்துக்கான பதவியேற்பு ஆகியவற்றை முன்னிட்டு நாட்டுக்கு மிகவும் பயன்தருகின்ற மரநடுகை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே சிறப்பான தாகும்.

பூமியில் இயற்கைச் சமநிலை பாதிப்புறாமல் பேணப்படுவதற்கும் உயிர்வாழ்க்கை நிலைத்திருப்பதற்கும் தாவரங்களின் பங்களிப்பே இன்றியமையாத தென்பதை உணர்ந்தோருக்கு மரநடுகையின் முக்கியத்துவம் நன்கு புரியம். எனவே இன்றைய தினத்தில் எளிமையானதொரு வைபவமாக மரநடுகைத் திட்டம் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது சூழலியல் ஆவலர்களுக்கு மகிழ்ச்சி தருவதாகும். புவியின் இயற்கைச் சமநிலையானது வேகமாக மோசமடைந்து சென்று கொண்டிருப்பதை யாவரும் அறிவர். விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவினாலான கைத்தொழில் புரட்சியினால் பூமியின் நீர், நிலம், வளிமண்டலம் ஆகிய சூழல்கள் வேகமாக மாசடைந்து கொண்டு வருவது மட்டுமன்றி மரங்களும் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

பூமிக்கு மனிதன் இழைக்கும் தீங்குகளில் காடழிப்பு பிரதானமானது. மரங்களினால் உண்டாகும் பயன்களை விரிவாக ஆராய்வோமானால் தாவரங்களின் அவசியம் நன்கு புரியும். மனிதன் மற்றும் ஏனைய விலங்குகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவுகளை வழங்குவதால் தாவரங்களைஉற்பத்தியாக்கிகள்என்கிறோம். தாவரங்கள் இன்றேல் இவ்வுலகில் தாவர உண்ணிகளும் இல்லை; விலங்குண் ணிகளும் இல்லை. அத்தனை ஜீவராசிகளின் உயிர்வாழ்க் கையும் தாவரங்களை நம்பித்தான் இருக்கிறது.

அதேசமயம் உலகின் அத்தனை ஜீவராசிகளும் தமது சுவாசத்தின் போது வெளிவிடுகின்ற அசுத்த வாயுவான காபனீரொட்சைட்டை தாவரங்கள் உள்ளெடுத்து உண வைத் தயாரித்துக் கொள்கின்றன. வளிமண்டலத்தைத் தூய்மைப்படுத்துகின்ற அதேசமயம் ஜீவராசிகளுக்குத் தேவையான உணவையும் மரங்கள் தயாரித்துத் தரு கின்றன.

பூமியில் உயிர்ச்சூழல் நிலைத்திருக்க இயற்கை அளித்திருக்கும் விந்தையான கொடை இதுவாகும். இவற்றுக்கெல்லாம் மேலாக புவி வெப்பமடையாமல் பேணும் நற்காரியத்தையும் தாவரங்களே ஆற்றுகின்றன. இவை மாத்திரமன்றி தாவரங்கள் ஆற்றுகின்ற பணிகள் எண்ணிலடங்காத¨ வயாகும்.

இத்தனை பயன்களை ஆற்றுகின்ற மரங்களை அழிப்பதென்பது மனிதன் தனது குலத்தையே அழித்துக் கொள்வதற்கு ஒப்பானதாகும். இவ்வாறு நோக்குகையில் நாடெங்கும் மரங்களை நடுவதென்பது எத்தனை அவசியமானதென்பது அனைவருக்கும் புரிந்துவிடும். காடழிப்பில் இலங்கை விதிவிலக்கானதல்ல... காடழிப்பதைத் தடுத்து நிறுத்தி பயன்தரும் மரங்களை நட வேண்டிய தேவையில் நாம் உள்ளோம். எனவே இன்றைய மரநடுகை வேலைத் திட்டமானதுதேசத்துக்கே நிழல்தருவதாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com