Contact us at: sooddram@gmail.com

 

மினுமினுத்துக் கொண்டிருந்த கம்பிகளை கதறக் கதற ஏற்றினர்''

குருநாகல் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்பலங்க தல்கொட பிடியவைச் சேர்ந்த 38 வயதுடைய மீனாட்சி லெட்சுமி தமக்கெனச் சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்காக குவைத் நாடு சென்று தம் கை, கால்களில் கம்பிகளால் குத்தப்பட்டு சித்திர வதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பி தற்பொழுது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், மற்றும் கொகரெல்ல பொலிஸார் ஆகியோரிடம் இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்தபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.

நான் பாடசாலை செல்லவில்லை. தென்னந் தோட்டப் பகுதியில் தனியார் தோட்டச் சொந்தக்காரர்களின் வீடுகளில் வசித்து வந்தேன். தோட்டத்தில் இருந்து கொண்டு கூலித் தொழில் புரியும் ரங்கசாமி என்பவரை மணம் முடித்தேன்.

தற்பொழுது வசந்தகுமார் என்ற வயதுடைய மகனும், 6 வயதுடைய மதுசானி நிரஞ்சலா என்ற பெண் பிள்ளையும் உள்ளார்கள். கூலி வேலை செய்து கொண்டு வாழ்க் கையை ஓட்டிச் செல்ல முடியாததன் காரணமாகவும் ஒரு சொந்த வீடொன்றைக் கட்டிக் கொள்வதன் காரணமாகவும் வெளிநாடு செல்லத் தீர்மானித்தேன்.

இந்த வகையில் தம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரின் ஊடாக வெளிநாடு செல்வதற்கு குருநாகல் நகரிலுள்ள பிரபலமான வெளிநாட்டு முகவர் நிலையத்தில் என்னுடைய கடவுச் சீட்டு ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது தான் வெளிநாடு செல்லும் பட்சத்தில் 20,000 ரூபா இலவசமாகத் தருவதாக சொன் னார்கள். என்னுடைய கடவுச் சீட்டின் இலக்கம் என்.3687565 ஆகும்.

இப் புத்தகத்தின் மூலம் இதற்கு முன் ஒரு தடவை சவூதி அரேபியா சென்றேன். எனக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மூன்று வாரங்களில் நாடு திரும் பினேன். இந்தக் கடவுச் சீட்டைப் புதுப்பித்து குருநாகல் புவக்கஸ் சந்தியிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பயிற்சி நிலையத்தில் பயிற்சியையும் முடித்துவிட்டு பின் மே மாதம் வெளிநாடு செல்வதற்குரிய சகல ஆவணங்களிலும் கையொப்ப மிட்டு விட்டு 50 குவைத் தினார் சம்பளத்திற்கு சென்றேன். அப்போது எம் பிரதேசத்தைச் சேர்ந்த முகவரின் மூலமாக 15,000 ரூபா கிடைக்கப் பெற்றது.

அங்கு ஒரு மாத காலம் எந்த விதமான பாகுபாடுமின்றி என்னை நன்கு கவனித்தார்கள். அந்தக் குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் உள்ளார்கள். மூத்த சிறுவனின் வயது 9 ஆகும். நான் வீட்டில் சமைப்பதில்லை. பிள்ளை களைப் பராமரித்தல் மற்றும் வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல் மாத்திரம் தான் என்னுடைய வேலை. வீட்டுத் தலைவன் அங்கு பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகின்றார். வீட்டுப் பெண் ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றாள்.

இரண்டு மாதங்கள் கழிந்து சம்பளம் பற்றிக் கேட்டேன். அடுத்த மூன்றாம் மாதம் தருவதாகச் சொன்னார்கள். மூன்றாவது மாதம் கேட்டேன். பணத்தை வைப்பிலிட கணக்குப் புத்தக இலக்கத்தை வாங்கிக் கொண்டார்கள். அதே நேரம் போகப் போக எனக்குச் சம்பளம் சரியாக வழங்கப்படுவதி ல்லை. சில சமயங்களில் நான் தனியாக இருந்து அழுவேன்.

கடந்த ஓகஸ்ட் மாதம் அங்குள்ள நேரப்படி இரவு எட்டு மணி அளவில் நான் மேல் மாடிக்குச் செல்லும் படியில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தேன். அங்கு திடீரென கணவனும், மனைவியும் வந்தார்கள். கணவன் என் முகத்தில் துணி ஒன்றைப் போட்டு மறைத்து கீழே என்னை வீழ்த்தினார்.

மனைவியின் கையில் மினு மினுத்துக் கொண்டிருந்த சிறு கம்பிகளை நான் கதறக் கதற என் உடலில் ஏற்றினார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவர்களின் சிறு குழந்தை கீழே விழுந்தவுடன் என்னை விட்டுச் சென்றுவிட்டார்கள். என் கைகளிலிருந்தும் கால்களிலிரு ந்தும் இரத்தம் வந்து கொண்டிருந்தது.

அங்கே இருந்தவர்களிடம் இவ் விடயத்தைப் போய் சொன்னேன். அவர்கள் இவர்களை கடும்வார்த்தைக ளால் பேசினர். வீட்டுக்காரரின் தாயுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் என்னை என் நாட்டுக்கு அனுப்புமாறு கோரினர். அதன்படி இலங்கை நாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்துடன் தொடர்புடைய குவைத் வேலை வாய்ப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டேன்.

அங்கு எனக்கு எந்த விதமான சிகிச்சையோ உதவியோ வழங்கப்படவில்லை. அவர்கள் இலங்கையிலுள்ள என் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தியும் தரவில்லை. அங்கு மூன்று மாதம் கழிந்த பின் கடந்த 7 ஆம் திகதி மீண்டும் காலை 5 மணிக்கு நாடு திரும்பினேன்.

இது குறித்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கியவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பிரிவில் முறைப்பாடு செய்வதற்கு உடல் நிலை சீராக இல்லாததால் உடனே வீடு வந்து சேர்ந்தேன். என் பிரச்சினை அறிந்த எம் பிரதேச கிராம உத்தியோகத்தர் வீடு தேடி வந்து இது பற்றி பேசினார். பின் கொகரெல்ல பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கச் சென்றிருந்தேன்.

என்னை அனுப்ப துணையிருந்த எம் பிரதேசத்தைச் சேர்ந்த உப முகவர் அங்கு பொலிஸ் நிலையத்திற்கு வேறொரு தேவைக்காக வந்திருந்தார். அவர் இவ் விடயம் தொடர்பாக வெளிப்படுத்தினால் இந் நாட்டிலிருந்து வேலை வாய்ப்புக்காக செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவடைந்து விடும் எனவும் குறித்த முகவர் நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படும் என என்னை அச்சுறுத்தினார். அதையும் நான் முறைப்பாட்டில் தெரிவித்தேன்.

இதன் பின் கடந்த 9 ஆம் திகதி குருநாகல் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார். இவ் விடயம் பற்றி குருநாகல் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி எம். ரீ. எஸ். ராஜமந்திர கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் பெண்மணி தொடர்பாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள எக்ஸ்ரே கதிர் இயக்க ஆய்வை மேற் கொண்டபோது அவரது கைகளில் சிறிய கம்பிகள் காணப்பட்டன. அதன் பின் சத்திர சிகிச்சையின் போது இடது கையில் 8 சிறிய கம்பிகளும், இடது காலில் ஒரு கம்பியும் எடுக்கப்பட்டன எனவும் அவர் தற்பொழுது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com