Contact us at: sooddram@gmail.com

 

புத்தக அறிமுகம்

பர்மியப் போராளிகள், உலுக்கும் கேள்விகள்

ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த பொழுது வட கிழக்கு மாநிலங்களில் ஆயுதம் கடத்துவோருடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில மாதங்கள் இச்செய்தி பரபரப் பாக பேசப்பட்டது. அப்புறம் வழக்கம் போல் இதனை இந்திய சமூகம் மறந்துவிட்டது.

உண்மையில் அவர்கள் ஆயுதக்கடத்தல் காரர்கள் இல்லை. பர்மாவின் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடும் போரா ளிகள். அவர்களை நம்ப வைத்து வஞ்சித்த வர் இந்தியாவின் உயர் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கிரேவால் என்பதை எத்தனை பேர் அறிவர்? கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், பத்திரிகைகளில் வந்த செய்திகளும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய். ஆம். இந்த விவகாரம் நமக்கு உணர்த்துவது இதைத்தான். இன்னும் இந்தியச் சிறைகளில் வாடும் அந்த 36 பர் மியப் போராளிகள் கதையைத் துருவிப் பார்த்தால், திகி லூட்டும் திருப்பங்கள் நிறைந்த துப்பறியும் புனை கதை களை விஞ்சும் மர்ம முடிச்சுகள் நிரம்பக்கிடக்கின்றன.

வஞ்சகம் என்பதின் முழுப் பொருளாய் அந்த ராணுவ அதிகாரி இருந்தார் என்பது மட்டுமல்ல, இந்திய ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே பர்மிய ராணுவ ஆட்சிக்கு உளவு பார்த்தார், சேவகம் செய்தார் என்பதை படிக்கிறபோது அதிர்ச்சியும் பல ஆழமான கேள்விகளும் நம்முள் எழும்.

நந்திதா ஹச்சர் எழுதியவஞ்சக உளவாளிகள்என்ற நூல்பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய ராணுவம்என்கிற துணைத் தலைப்போடு நம்மிடம் நூலின் உள்ளடக்கத்தை பகிரங்கப்படுத்திவிடுகிறது. ஆயினும் ஒவ்வொரு பக்கமும் மர்மக் கதைபோல் நம்மை இழுத்துச் செல்கிறது.

இந்நூல் அந்த 36 பர்மியப் போராளிகள் விடு தலைக்கான போராட்டங்களை விவரிக்கிற முயற்சிதான். அதுதான் இந்நூலின் அடிப்படை நீரோட்டம். ஆயினும் பர்மாவின் வரலாறும் அங்கு ஜனநாயகத்துக்காக தொடரும் கிளர்ச்சிகளும் இந்நூல் நெடுக விரவிக் கிடக்கிறது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்ட தடுமாற்றமும், மாற்றமும் பர்மாவின் ஜன நாயகப் போராட்டங்களை சிக்கலாக்கிவிட்டதையும் அத் தோடு பிணைந்த பல்வேறு அரசியல் சிக்கல்கள் முடிச்சு களையும் இந்நூல் பேசுகிறது.

ஆக பர்மா போராளிகள் சிறைப்பட்ட கதை - பர்ம ஜன நாயகப் போராட்ட கதை - இந்திய வெளியுறவு கொள்கை குழப்பக்கதை என மூன்றும் கலந்ததே இந்நூல் எனில் மிகை அல்ல.

அண்டை நாட்டில் சர்வாதிகாரம் கோலோச்சுகிற போது நம் நாட்டில் ஜனநாயகம் இருக்க முடியுமா? ஜன நாயகத்தை மீட்க பர்மிய மக்கள் நடத்தி வரும் போராட் டத்துக்கு ஆதரவு அளிப்பது நம் தார்மீகக் கடமை என்று தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்என்று கேப்டன் லட்சுமி முன்னுரையில் கூறியிருப்பது பொருள்மிக்கது. இவர் இடதுசாரி கட்சிகள் சார்பில் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். ஆனால் வெற்றி பெற்ற அப்துல் கலாம், பர்மா இராணுவ ஆட்சி யோடு கைகுலுக்கினார் என்பதும் சம்பந்தம் இல்லாத செய்தி கள் அல்லவே.

பர்மாவில் ஏன் இன்னும் ராணுவ ஆட்சி நீடிக்கிறது? பர்மாவில் தொடரும் அரசியல் கிளர்ச்சிகள் மிருகத் தனமாக நசுக்கப்படும்போதும் உலக நாடுகள் மவுனம் காப்பது ஏன்? ஆங் சான் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பது ஏன்? விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்த இந்திய அரசு தற் போது ராணுவ சர்வாதிகாரியுடன் கூடிக் குலவுவது ஏன்? வங்க தேச விடு தலைக்கு ஆதரவுக்கரம் நீட்டிய இந்திய அரசு பர்மாவில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்? அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்படி ராணுவ ஆட்சியை ஆதரிக்கிறது? சீனா அங்கு சர்வாதிகார ஆட்சிக்கு துணை போவது ஏன்? அப்பப்பா புற்றீசல்போல் புறப் படும் கேள்விகள் பலவற்றுக்கு இந் நூல் விடை தேட முயன்று இருக்கிறது. அது இந்நூலின் மையப் பொருளல்ல, எனினும் இணைத்து பேசியிருப்பது தவிர்க்க இயலாத தேவையின் கட்டாயமே!

பர்மாவின் பெயர் மியான்மர் எனவும், ரங்கூன் நகர் யாங்கோன் எனவும் மாற்றப்பட்டது கூட ஒரு உள்நோக்கம் கொண்டது. பர்மா எனும் தேசம் உருவாக காத்தூலே என்ற தேசம் பலியிடப்பட்டதி லிருந்தே சோகம் தொடங்குகிறது. பர்மாவின் வரலாறு பல்வேறு இனக்குழுக்களின் சுயஅடையாளத்தை அழித்து உருவானதா? அல்லது ஐக் கியத்தில் உருவானதா? இதை புரிந்துகொள்ள இந்நூல் உதவும்.

ரங்கூனிலோ, தில்லியிலோ, வாஷிங்டனிலோ உட் கார்ந்து கொண்டு வரலாற்றைப் படிப்பது வேறு; கோஹிமா, ஹர்லேம் அல்லது மனேர்ப்ளா போன்ற ஊர்களில் இருந்துகொண்டு வரலாற்றைப் புரிந்து கொள்வது வேறு. நான் கரோனியர்களுக்காகவும், ஆரக்கானியர்களுக் காகவும் வாதாடுகிறேன். ஆகவே அவர்கள் எவ்வாறு அனுபவித்தார்களோ அவ்வாறே அரசியலையும் வர லாற்றையும் நான் புரிந்து கொண்டாக வேண்டும்என நூலாசிரியர் உறுதியாகக் கூறுகிறார். இவர் விடுதலைக் காக குரல் கொடுக்கும் இந்த 36 பேரும் ஆரக்கானியர்களும் கரேனியர்களும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

பர்மாவுக்கும் நமது வடகிழக்கு மாநிலங்களுக்கும் உள்ள தொடர்பு எல்லை வழி பூகோளத் தொடர்பு மட்டுமா? அல்லது அதற்கும் மேலா?

நூலாசிரியர் தன் அனுபவத்தை கீழ்க்கண்டவாறு ஓரிடத்தில் பதிவு செய்கிறார், “வடகிழக்கு மாநிலங்க ளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றவர்களோடு ஒரே விடுதியில் இருந்தாலும் வெவ்வேறு உலகங்களில்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதை நான் பார்த்தேன்”.

இது மிகவும் நுட்பமான பதிவு. இந்தியாவின் மாநிலங்களாக தொடர்ந்தாலும் வடகிழக்கு மாநில மக்களா யினும் காஷ்மீர் மக்களாயினும் நம்மோடு வாழாமல் அவர்களுக்கான ஓர் உலகில் வாழ்வது ஏன்? யாரோ தூண்டிவிடுவதால் மட்டும்தானா? அப்படி நாம் நம் பினால் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்றே பொருள். தேசிய இனப்பிரச்சனைகள் பர்மா வாயினும், இந்தியாவாயினும் புதிய வடிவம் கொள்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

எண்ணை வளமும் வர்த்தக நலனும் ஒரு நாட்டின் வெளிநாட்டுக்கொள்கையில் ஆதிக்கம் செலுத்தும் போது மக்களின் சுயவிருப்பங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுவதுதானே நிகழும். இதன் கோரப்பலியே 36 பர்மாக் கைதிகள் சிறைபட்டதும்; அவர்களின் தலை வர்கள் இந்திய தீவொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டதும்; ஒரு ராணுவ அதிகாரியால் மோசமாக வஞ்சிக்கப்பட்ட தும்; அந்த அதிகாரி தப்பிச் சென்று தண்டனையின்றி சுகபோகத்தில் திளைப்பதும். இந்நூலில் நன்கு பதிவாகியுள்ளது.

ஜனநாயகத்துக்காக பர்மாவில் நடக்கும்போரில் துறவிகள் பங்கேற்றது ஆச்சரியமான விஷயம். ஆனால் நிலைமை அவ்வளவு முற்றிபோயுள்ளது. அங்கே ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதங்கள் மட்டுமல்ல. ஜட்டிகளும் ஆயுதமானது வேடிக்கையானது. மக்களின் உணர்வை வெளிப்படுத் தும் அளவுகோலாகும்.

பெண்களின் உள்ளாடைகளை வைத்திருக்கும் ஆண்கள் தங்கள் வலிமையை இழந்துவிடுவார்கள் என் பது பர்மாவின் பழமையான மூடநம்பிக்கை. ராணுவ சர்வாதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தங்கள் உள்ளாடைகளை ராணுவ சர்வாதிகாரிகளுக்கு தபாலில் அனுப்பும்அமைதிக்கான ஜட்டிகள்இயக்கம் நூலில் இடம் பெற்றுள்ள கொசுறுச் செய்தி. எனினும் கொதி நிலையை காட்டும் செய்தி.

பர்மாவின் நண்பனாக காட்சி அளித்த `அங்கிள்என அழைக்கப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏன் திடீ ரென மாறினார்? தேசபக்தி மிக்கவர் எனக் கருதப்படு கிற விஷ்ணுபகத் தளபதி பொறுப்பிலிருந்து ஏன் நீக்கப் பட்டார்? நேர்மையான தளபதி என பெயரெடுத்த விஷ்ணு பகத் மோசமான ஊழல் ராணுவ அதிகாரி என்ற கூறப் பட்ட விவகாரத்தில் வாய் மூடி இருந்தது ஏன்? அடே யப்பா..... தோண்டத் தோண்ட கேள்விகள். ‘மனித உரிமைபற்றிய பேச்சு கானல் நீர் தானோ?

வெறும் துரோகம், வஞ்சகம், ஏமாற்று, அவமானம், இவைகளின் வரலாறாக மட்டுமல்ல; தோள்கொடுக்க முன்வரும் இடதுசாரிகள், துணை நிற்கும் மனித நேயர்கள் பற்றிய செய்திகளும் நாமறிய வேண்டிய முக்கிய அம்சங்களே.

தாவர உணவுக்காரரான அந்த ஹரியானா விவசாயிக்கு தன் வீட்டில் குடியிருக்கும் மாட்டுக்கறி உண்ணும் ஆப்கானியரோடு எந்தச் சிக்கலும் இல்லை. அந்த இஸ்லாமியர் பர்மாவிலிருந்து வந்த பன்றிக்கறி சாப்பிடுபவரை அன்புடன் வரவேற்கிறார் (உணவளிக் கிறார்). அதை கவனித்த நான் சமூகப் பணியாளர்க ளிடம்இதையெல்லாம் அரசாங்கத்துக்குச் சொல்லி விட வேண்டாம். அவர்களுக்குத் தெரியவந்தால் அந்த விவசாயியின் வீட்டுக்குள்ளேயே ஒரு மதக்கலவரத் தைத் தூண்ட ஏற்பாடு செய்துவிடுவார்கள்! என்றேன்:!” இவ் வாறு நூலாசிரியர். ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சின்ன சம்பவம் பல பெரிய செய்திகளை கூறவில்லையா?

இந்த நூலைப் படிக்கிறபோது பல ஐயங்கள் எழும். இந்திய ராணுவக் கொள்கையும், வெளிநாட்டுக் கொள் கையும் ஆபத்தான திசையில் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இது நமது இயல்புக்கு முரணா னது. புதிய உலகச் சூழலில் தாராளமயத்தின் விளைவு இது.

பர்மா - இந்திய மக்கள் உறவு தொப்புள்கொடி உறவு போன்றது. ஆனால் இந்தியா துரோகம் செய்கிறது. அப்படியெனில் இங்கே தெற்கே இலங்கைத் தமிழர் நம் தொப்புள்கொடி உறவுக்கு இந்திய அரசும் இந்திய ராணுவமும் நியாயம் வழங்கி இருக்கும் என்று நம்ப முடியுமா? என்னுள் நெடுநாள் ஆழமாக பதிந்த சந்தேகம் இந்நூல் மூலம் மேலும் வலுப்பட்டது.

ஜான்பெர்கின்ஸ் எழுதியஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்என்ற நூலைப் போல இந்த நூலும் நடப்பு அரசியலை புரிந்து கொள்ள விழிகளைத் திறக்கும் சாவியாகும் என்பதில் ஐயமில்லை.

இது மொழிபெயர்ப்பு நூல் என்பதை அட்டையில் தமிழில் அ. குமரேசன் என்று போட்டுள்ளதால் மட்டு மே அறிய முடியும். நூலைப்படிக்கிற யாரும் மொழி பெயர்ப்பென்று கூற முடியாது. அப்படியொரு நீரோட்ட நடை. அ. குமரேசனுக்கு பாராட்டுகள்!

வஞ்சக உளவாளி

-பர்மா போராளிகளை ஏமாற்றிய

இந்திய ராணுவம், நந்திதா ஹச்சர்.

தமிழில்: அ. குமரேசன், கிழக்குப் பதிப்பகம்

33/15 எல்டாம்ஸ் சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018.

பக். 228, விலை ரூ. 170/-

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com