Contact us at: sooddram@gmail.com

 

உலகின் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள்
இலங்கையிலிருந்து தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் தெரிவு

அமெரிக்க றோயல் இஸ்லாமிய புள்ளி விபரக் கற்கை நிலையத்தில் இருந்து கலாநிதி ஜோசப் லம்பேட், கலாநிதி ஆரிப் அலி நேயிட் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 2010ம் ஆண்டு அதிக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் எனும் ஆய்வுத் தொகுதி நூலில் 136ம் பக்கம் இலங்கையைச் சேர்ந்த தேசபந்து ஜெசீமா இஸ்மாயிலின் தகவல் இடம்பெற்றுள்ளது. இத்தகவலின்படி இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்ணாக இவர் தெரிவாகியுள்ளார் என்பது இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற எல்லாப் பெண்களுக்குமே பெருமை சேர்க்கின்ற ஒரு விடயம் எனலாம். அது மட்டுமல்ல உலக முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் இது பெருமை தரும் ஒரு விடயமுமாகும். இந்த வகையில் தேசபந்து ஜெசீமா இஸ்மாயிலுக்கு நாம் இந்தப் பெருமையை - கெளரத்தைத் தேடித் தந்தமைக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

மத, அரசியல் ஈடுபாட்டோடு கூடிய சமூக சேவை என்ற அடிப்படையில் விபரங்கள் திரட்டப்பட்டு 500 பேர் தெரிவு செய்யப்படுகிறார்கள்.

இந்த வகையில் தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் இலங்கை முஸ்லிம் பெண்களின் ஆய்வு முன்னணியின் தலைவி என்ற அடிப்படையிலும் இந்த அமைப்பினூடாக அவர் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகள், கல்வி, கலை, கலாசாரம், தொழில் முன்னேற்றம் போன்ற விடயங்களில் ஆற்றிவரும் சேவைக்காகவும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் இலங்கை முஸ்லிம் பெண்களில் பல விடயங்களில் முன்னோடி என்பதை இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்கக் கூடாது.

இலங்கையில் முதலாவது தேபந்து ஜனாதிபதி விருது பெற்ற (1989ல்) முஸ்லிம் பெண் இவர். அத்தோடு 1991 - 1993 ஆண்டுகளில் லயன்ஸ் கழகத்தின் கல்வி விருது பெற்ற முதலாவது முஸ்லிம் பெண்ணும் இவர்தான். மேலும் 1992ம் ஆண்டு கல்விக்கான சோந்தா விருது பெற்றவர். Zonta women of achievment award for Education) தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி வகித்த முதல் முஸ்லிம் பெண் என அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனை கெளரவத்திற்கும் உரிய ஜெசீமா இஸ்மாயில் பிறந்தது தென் கிழக்கில் அழகான முதுபெரும் கிராமமான சாய்ந்தமருதூரில்.

இங்கு கல்முனை கார்மேல் கொண்வென்ட் பாடசாலையில் பாலர் கல்வியை கற்றுக் கொண்டு கொழும்பு வந்து இடைநிலைக் கல்வியை சென்பிறிஞ்ஜட் கொண்வென்ட்டிலும் பட்டப் படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் 1964 - 1966 வரை கனடா பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் நிறைவு செய்தார். கல்வியியல் டிப்ளோமா படிப்பினை அவுஸ்திரேலியாவிலும் கற்றுத் தேர்ந்தார். 1973 முதல் 1988 வரை கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்லூரியில் அதிபராக இருந்து முஸ்லிம் பெண் பெண்பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்பாடுபட்டார்.

இவரைப் போன்றே இவரது குடும்பமும் கல்வியிலும், சமூக சேவையிலும் அக்கறை காட்டியவர்கள் எனலாம்.

இவரது தகப்பனார் சஹீட் அகமத் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதிப் பணிப்பாளராகக் கடைமையாற்றி ஓய்வுபெற்றவர். இவரது கணவர் மஃரூப் இஸ்மாயில் வைத்திய கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தது மட்டுமல்லாமல் அவர். நோய் என்று தன்னிடம் வரும் எவரிடமும் என்றுமே ஒருசதம் கூட வாங்கியதில்லை.

அந்த அளவிற்கு வைத்தியத்தைச் சேவையாகச் செய்தவர் மஃரூப் இஸ்மாயில். தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் தான் பிறந்த மண்ணை உயிரிலும் மேலாக நேசிப்பவர்.

இந்த நேசிப்பின் அடித்தளமாக தென் கிழக்கு முஸ்லிம்களின் கலை கலாசாரங்களிலும், நாட்டார் இயலிலும் பெரிதும் அக்கறை காட்டிவருகின்றார். இதற்கு உதாரணமாக கல்விமான் எஸ். எச். எம். ஜெமீலினால் வெளியிடப்பட்ட கிராமத்து இதயம் எனும் நூலினையும், என்னால் ஆய்வு செய்து வெளியிடப்பட்டதென் கிழக்கு முஸ்லிம் தேசத்தாரின் நாட்டாரியல்எனும் நூலினையும் வெளியிட்டு வைப்பதில் பொருளாதார ரீதியாக மிகவும் அக்கறை செலுத்தினார் என்பதையும், இந்த நாட்டார் இயல் சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வாளர்களிடம் இருந்து பெற்றெடுத்து ஆங்கிலத்தில் அவற்றை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் மொழி பெயர்த்தெடுத்து எதிர்வரும் டிசம்பரில் நூலாக வெளியிட இரவு பகலாக அயராது உழைத்து வருகிறார் என்பதனையும் இங்கு குறிப்பிடல் பொருத்தமெனக் கருதுகின்றேன்.

எமது முன்னோரின் முதுசங்களான கலை, கலாசார நாட்டாரியல் விழுமியங்கள் உலகளாவிய ரீதியில் படிக்கப்பட வேண்டும். ஆங்கில மொழியில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பது அவரது நீண்ட கால விருப்பம்.

ஒருவருக்குக் கெளரவம் அளிக்கும் வகையில் அமெரிக்க றோயல் இஸ்லாமிய புள்ளி விபரக் கற்கை நிலையம் 2010ம் ஆண்டிற்கான உலகில் அதிக செல்வாக்கு செலுத்திய 500 பேரில் ஒருவராக எமது நாட்டைச் சேர்ந்த தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் அவர்களைத் தேர்ந்தெடுத்தது நியாயமான பொருத்தமான ஒரு தேர்வு எனக் கூறிக் கொள்வோம்.

மருதூர் ஏ. மஜீத்...

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com