Contact us at: sooddram@gmail.com

 

தமிழ்மொழியின் பூர்வீக வரலாறு

இவற்றைப் போன்ற புதை பொருட்கள் சைபீரியாவில்எண் கோமிஎனும் இடத்திலும், காஷா ஜெரார் எனும் இடங்களிலும் பலஸ்தீனத்திலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதில் இருந்து நாம் ஒன்றை உணர முடிகின்றது. அதாவது, சுமேரிய எகிப்திய சிந்து வெளி போன்ற நாகரிகங்களின் பிந்திய தொடரே ஆதிச்ச நல்லூர் குடியேற்றம் என்பதாகும். எதுவித காரணம் கொண்டும் ஆதிச்ச நல்லூர் குடியேற்றம் முந்தியதாக இருக்க முடியாதல்லவா?

இக்கருத்து பிராங்போட், டாக்டர் ஹால், பேராசிரியர் சீனிவாச ஐயர் போன்றோரின் கருத்தானஇந்தியாவில் இருந்தே மத்திய கிழக்கிற்கு நாகரிகம் சென்றதுஎன்ற கருத்தினைச் செயலற்றுப் போகச் செய்து விடுகிறது. அதாவது ஆதிச்ச நல்லூரில் இருப்பின் உபயோகம் இருந்தது என்று கண்டுபிடித்ததன் பின் இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கிற்கு நாகரிகம் சென்றது என்ற கருத்துச் செயலற்றுப் போய்விட்டது எனலாம்.

மேலும் கோண்ட்வாணாக் கண்டம் பற்றிய செய்திகளோடு பின்வரும் செய்தியினையும் சேர்த்து நோக்க முடியும். அதாவது கோண்ட்வாணா எனும் கண்டத்திலே ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட இந்தியா, ஆசியா எல்லாமே ஒரு கண்டமாக இருந்ததாகப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சுமாத்ரா, போன்ற இன்றைய நாடுகளும் இந்தக் கோண்ட் வாணாக் கண்டத்துடனேயே இணைந்திருந்தன. இக்காலகட்டத்தில் ஆதமுடைய பிற்சந்ததியினராகிய சுமேரியர்களும், கோண்வாணா, கண்டத்தில் குடியேறி வாழ்ந்துள்ளார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. இவர்கள் பேசிய சுமேரிய மொழி (இன்றைய தமிழின் மூலமொழி) இக்கண்டமெங்கும் பரவி ஆட்சி செய்தது எனலாம். இதற்கு ஆதாரமாக இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற முடியும். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் ஆய்விலே ஜப்பான் மொழியில் 500 க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாகக் கூறியதோடு மேலும் இது பற்றி ஆராய்ந்தால் இன்னும் பல தமிழ் சொற்களின் தொகை கூடலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அப்துல் றஹீம் அவர்கள் எழுதியநபிமார்களின் வரலாறுநூலின் நூஃ நபியவர்களின் பிற்சந்ததியினர் பதினெட்டுப் பாஷைகள் பேசக் கூடியவர்களாக விருத்தியடைந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இப்பதினெட்டு மொழிகளுக்கும் மூல மொழி (தாய்) சுமேரிய மொழியே. அதாவது இப்பதினெட்டு மொழிகளும் செமித்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளே.

இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் சுமேரிய மொழி யூப்பிரட்டீஸ் ரைக்கிaஸ் நதிக்கரையில் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து பின் அங்கிருந்து நைல் நதிக்கரைக்கு வந்து நைல் நதிக்கரை நாகரிகத்தை தோற்றுவித்துப் பின் அங்கிருந்து சிந்து நதிக்கரைக்கு வந்து சிந்து நதிக்கரையில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகத்திற்கு உறுதுணையாக இருந்து அங்கிருந்து ஆதிச்ச நல்லூருக்கு வந்துள்ளது எனலாம்.

மேலும் இதற்கு ஆதாரமாக பின்வரும் விடயங்களையும் கூறமுடியும்.

சுமேரியர்கள் தலைவியை உம்மு, உம்மா என்றழைத்தனர்.

இந்திய தேச இந்துக்கள் பெண் தெய்வத்தை தலைவியைஉமா’ ‘அம்மாஎன்றழைத்தனர்.

மேலும் பலூஸிஸ்தானில் வாழும் பிராஹிலி மொழிக்கும் இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் பேசப்படும் தமிழ் மொழிக்கும் இடையே நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன.

ஆசிய மைனரைச் சேர்ந்தவர்களையும் அவர்களது கல்வெட்டுக்களையும்த்ரிம்ளை’(ஹிriசீசீlai) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இச்சொல்லின் ஒலி (திரம்பளம், தமிழம், தமிழ் என ஆகியுள்ளதாக ஊகிக்க முடியும்.

ஆசிய மைனரைச் சேர்ந்தவர்களும் மத்திய கிழக்கு வாசிகளும் ஒரே இனத்தவரே என்ற கருத்தும் உண்டு.

எனவே அன்றைய ஆசிய மைனர்களின் மொழி தமிழாக இருந்திருக்கலாம்.

மேலும் தென் இந்தியாவிற்கு வந்த மத்திய கிழக்கு வாசிகள் தமிழைஅறவம்என அழைத்ததாக திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலாசிரியர் கால்வெல்ட் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்அறவம்என்ற சொல் தமிழைக் குறிக்க ஏன் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி தன்னால் நிச்சயமாக எதுவும் கூற முடியாதுள்ளது என்றும்கோல்வெல்ட்குறிப்பிடுகின்றார்.

ஆயினும் டாக்டர் குண்டட் என்பவரின் கருத்தையும் தனது நூலில் கோல்ட் வெல்ட் குறிப்பிட மறக்கவில்லை.

அரபுத் தமிழ் நூல்களை - அரபு லிபியையும், தமிழ் ஒலியையும் கொண்ட நூல்களைஅறவிய்யாஎன்று அழைப்பதும் இங்கு கருத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

(ஆதாரம : அkஸ¤ம் தமிழும் - நஹ்யா)

அரபு என்ற சொல் அறபிய்யா, அறவன் என்று மருவியிருக்கலாம்.

மேலும் கி.மு. 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் எழுத்தெனக் கருதப்படும் சில பிராமிய்க் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் இருக்க காண்கின்றோம். ஆனால் அந்தத் தமிழ் இக்கால வேலையாட்கள் பேசும் இங்கிலீஸ் போல் பிராகிரதச் சொற்கள் நிரம்பிக் காணப்படுகின்றன.

இதனை வேற்று மொழியினர் பேசிய தமிழ் எனக் கொள்ளலாம் என தமிழ்க் கலைக் களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் சமண நூல்கள் ஆதி காலத்தில் பதினெட்டு வகையான எழுத்து வடிவங்கள் இருந்ததாகக் கூறுகின்றன. இஃது எமக்கு நூஃ நபியவர்களின் சந்ததியினர் பதினெட்டு பாசைகள் பேசக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற கருத்தினை ஞாபகமூட்டுகின்றன எனலாம்.

இதேவேளை இந்தப் பதினெட்டு எழுத்து வடிவங்களுள்பம்பிஎனப்படும் பிராமியும், தாமிலியும் அடங்கும் எனவும் அந்தச் சமண நூல்கள் கூறுகின்றன. இஃதேவேளை இந்தப் பிராமிய வரி வடிவம் இந்தியாவில் உள்ள எல்லா எழுத்துவரி வடிவங்களுக்கும்தாய்எனக் கொள்ள இடமிருக்கிறது எனச் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

தமிழுக்கும், பிராமிய வரி வடிவத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை பன்னீர்ச் செல்வம் போன்றோரின் சங்ககால கல்வெட்டு ஆய்வுகள் நிரூபிக்கின்றன. த.நா. சுப்ரமணியத்தின் கருத்துபடி பிராமிய வரி வடிவம் தமிழ் மொழியை எழுதுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் கூறுகின்றார்.

மேலும் சிந்து வெளி நாகரிகப் பகுதிகளான ஹரப்பா, மொகஞ்சதாரோ எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு அடுத்த வரி தொடராக வலமிருந்து இடமாகச் செல்லும் வழக்கமுடையதாக இருந்துள்ளது.

சுமேரியர்கள் உலகிலேயே முதல் முதல் எழுதக் கற்றுக் கொண்டவர்கள்.

இவர்கள் வலமிருந்து இடமாக எழுதினார்கள். வலமிருந்து இடமாக எழுதப்பட்ட சுமேரிய எழுத்துக்கள் சில வசதிகள் கருதி சிந்துவெளி நாகரிகத்தின் போது வலமிருந்து இடமாகவும் அதன் தொடர் அடுத்து வரியில் இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டது எனலாம். பின் இது சில வசதிகள் கருதி வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டது எனலாம். அதாவது தனித்தனியே பிரித்து எழுதப்பட்டது எனலாம். இன்றைய தமிழ் இடமிருந்து வலமாக எழுதப்படுவதற்கும் அரபு வலமிருந்து இடமாக எழுதப்படுவதற்கும் இவைகளே காரணங்கள் எனலாம். திரு. வி. கனகசபாபதிப்பிள்ளை, தமிழர்கள் சீன நாட்டில் இருந்து வந்தவர்கள் என்கின்றார்.

(ஆதாரம்: சீது முதல் சிந்துவரை - எம்.கே.ஈ. மெளலானா)

பண்டிதர் சவயரும் வேறு சிலரும் மொசப்பட்டோமியா, கலாடியா ஆகிய மேலை, ஆசிய நாடுகள் என்கிறார்கள்.

இதிலிருந்து நாம் ஒன்றை ஊகிக்கலாம். அதாவது தமிழைப் பேசினாலும் திராவிடர் வேறு, தமிழர்கள் வேறு என்பதாகும்.

இன்று தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் அதிகமானோர் மத்திய கிழக்கு வாசிகளின் வம்சாவளியினரே. இவர்களும் திராவிடர்களும் இனத்தால் வித்தியாசப்பட்டவர்களே.

ஆதித்திராவிடர்கள் இன்றும் திராவிடமொழிக்குடும்ப மொழிகளான தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளையே பேசுகின்றார்கள்.

திராவிட இயக்க தலைவர் இராமசாமிப் பெரியார் அவர்கள் ஆதித்திராவிடர், ஆதித்திராவிடர் என ஏன் அடிக்கடி பேச வேண்டும்.

மேலும் சிலப்பதிகார இளங்கோ அடிகள், காவிரிப்பூம்பட்டணத்தில் வாழ்ந்த மக்களை திராவிடர் என்றோ தமிழர் என்றோ அழையாமல் பதியெழு ஆரியப் பழங்குடியினர்எனக் கூறியுள்ளது நோக்கற்பாலது.

மேற் கூறியவற்றில் இருந்தும் தமிழர்கள் அல்லது தமிழ் பேசுபவர்கள் எல்லோரும் திராவிடர்கள் அல்ல எனக் கொள்ள முடியும்.

தட்டெழுத்துக்கள் எனக் கூறப்படும் பண்டைய தமிழ் எழுத்துக்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வடமொழி எழுத்துக்களின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டுத்தான் இன்றைய எழுத்துக்கள் தோன்றின என மொழியியலாளர்கள் கூறுகின்றார்கள்.

இதன்படி பார்த்தால் இன்றைய தமிழ் எழுத்துக்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளோடு ஆரம்பமாகிறது என கொள்ள முடியும். வடமொழி எழுத்துக்களின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்டுத்தான் இன்றைய தமிழ் எழுத்துக்கள் தோன்றின என மொழியியலாளர்கள் கூறுகின்றனர். வட்டெழுத்திற்கு முன்பிருந்த ஆப்பெழுத்து வழக்தொழிந்தது 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளாக கொள்ள முடியும்.

(ஆதாரம்: தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும் டாக்டர் கே.கே. பிள்ளை)

மேலும் இன்று நாம் பார்க்கும் யாழ்ப்பாணத்தவர்களில் அதிகமானோரின் மூதாதையர் மத்திய கிழக்கில் இருந்து வந்தவர்களே. மலை நாட்டில் தேயிலைத் தோட்டங்களில் வசிப்பவர்கள் திராவிடர்கள், தென்னிந்தியாவில் வசிப்பவர்களில் அதிகமானவர்கள் திராவிடர்களே.

மகாகவி பாரதி திராவிடர் அல்ல. இராமசாமி பெரியாரும் அப்படியே.

மேலும் ஹிந்துக்கள் சந்திரனின் தோற்றம் மறைவைக் கொண்டே மாதத்தைக் கணித்தனர். ஆரம்ப கால சுமேரிய மக்களும் இவ்வாறே கணித்தனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே இது பற்றிய குறிப்புகள் உண்டு.

மேற்கூறப்பட்ட பல ஆதாரங்களில் இருந்து தமிழர்கள் திராவிடர்கள் அல்ல என்றும் தமிழ் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல என்றும் ஊகிக்க முடியும். எனவே தமிழின் பூர்வீகம் சுமேரியன் என்றும், தமிழே உலகின் முதல் நாகரிக மொழி என்றும் இம் மொழியே உலகில் எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழி என்றும் சங்கத்தமிழ் என்பது கோடான கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைக் கொண்டது என்றும் இது நாம் நினைப்பது போன்று கி.மு. 3 ஆம் நூற்றாண்டுகளுக்கும் கி.பி. 3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட சங்கம் அல்ல என்றும் கொள்ள முடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com