Contact us at: sooddram@gmail.com

 

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

(க.ராஜ்குமார்)

அதிசயம் ஆனால் உண்மை! உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ளதைவிட, கருப்பு பணம் இந்திய நாட்டில்தான் அதிகம் உள்ளது. 2006-ம் ஆண்டு சுவிஸ் நாட்டு வங்கிகள் சங்கத்தின் (ளுக்ஷஹ) அறிக்கையின்படி இந்தியாதான் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.. அந்நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இருந்து 1,456 பில்லியன் டாலர் அதாவது 72,80,000 கோடி ரூபாய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசோ, கடந்த ஆகஸ்ட் மாதம் (2010) நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் குறித்த அரசு ரீதியான மதிப்பீடு ஏதும் அரசின்; கைவசம் இல்லை என பொறுப்பற்ற முறையில் தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில், அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கருப்பு பணத்தை மீட்போம் (!) என வாக்குறுதி தந்தது. காங்கிரஸமூம் தனது பங்கிற்கு கருப்புப் பணத்தை மீட்க உறுதி தர வேண்டியதாயிற்று.

சுவிஸ் வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள கருப்புப்பணத்தின் மதிப்பு இறுதியானது அல்ல. இதைவிட கூடுதலாகவே இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகளிலும் இந்திய பணம் கருப்புப்பணமாக முதலீடு செய்யப்பட் டுள்ளது. தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அருண்குமார்இந்திய கருப்புப் பொருளாதாரம்என்ற புத்தகத்தில் இந்தியதேசிய மொத்த உற்பத்தியில் (ழுனுஞ) 50 சத வீதம் கருப்புப்பணமாக மாறுகிறது என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் புள்ளியல் நிறுவனம் (ஊளுடீ) 2009-10 ஆண்டிற்கான இந்திய தேசிய மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.61,64,000 கோடி என மதிப்பீடு செய்துள் ளது. இதில் 40 சதவீதம் கருப்புப்பணம் என் பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. இந்த கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதை கணக்கு காட்ட முன் வருவார்கள் என்றால் 30 சதம் வருமானவரி கட்ட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசிற்கு ரூ.7,50,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இது 2009-10-ம் ஆண்டில் மத்திய அரசிற்கு கிடைத்துள்ள 6,41,000 ரூபாய் வரி வருமானத்தை விட கூடுத லானது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரி யர் அருண்குமார், இது தவிர மேலும் நியாய மான வரி வருமானத்திற்கான வழியினையும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.10,00,000 கோடி வரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க முடியும் என்கிறார் அருண்குமார். இது ஒரு புறம் இருக்க கருப்புப்பணத்தின் தாக்கம் குறித்து காண்போம்.

கருப்புப் பணத்தின் மதிப்பு

இந்திய நாட்டு அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் அந்நிய நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்துள்ள கோடான கோடி ரூபாய்களை கைப்பற்றினால் என்ன நடக்கும்? 1456 பில்லியன் டாலர் கருப்புப் பணம் (ரூ.72,80,000 கோடி) சுவிஸ் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பணத்தை இந்திய நாட்டில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 45 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 என பிரித்து கொடுக்கலாம். அல்லது இந்தியாவிற்கு தற்போது உள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களையும் ஒரே தவணையில் செலுத்தலாம். அப்படி செலுத்தினாலும், நம்மிடம் வெளிநாட்டு கடன் மதிப்புப் போல் 12 மடங்கு தொகை மீதம் இருக்கும். இந்த உபரி தொகையை நியாயமான முறையில் முதலீடு செய்தால், இதன் மூலம் கிடைக்கும் ஆண்டு வட்டி மத்திய அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆண்டு வருமானத்தை விட அதிகமாக கிடைக்கும். அப்படி கிடைத்தால் தற்போது நிதி நிலை அறிக்கையில் விதிக்கும் அனைத்து வரிகளையும் ரத்து செய்துவிடலாம். வரியே இல்லாத ஒரு பொருளின் விலையை எண்ணிப்பாருங்கள்!

இடதுசாரிகள் கருப்புப்பணத்தை குறித்தும் சுவிஸ் வங்கிகளில் உள்ள இரகசிய கணக்குகள் குறித்தும் தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்துவந்ததின் விளைவாக கருப்புப்பணம் குறித்த விழிப்புணர்வு ஓரளவு மக்களிடையே ஏற்பட்டது. அதன் விளைவாகவே சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய கருப்புப்பணம் குறித்த விபரங்கள் ஓரளவு வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு ரூ.72,80,000 கோடி என்றாலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ.108,00,000 கோடி இருக்கும் என்பதே இடதுசாரி பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடு ஆகும். இந்திய நாட்டு மக்களை சுரண்டி அந்நிய நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து இன்று முதலாளித்துவ கட்சிகள் பேச ஆரம்பித்துள்ளன. காரணம் உண்மையாகவே கருப்புப்பணத்தை கைப்பற்றுவதற்காக அல்ல, அவற்றை காப்பாற்றுவதற்காகவே அவைகள் உள்ளன என்பது சமீப காலத்திய நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.

கருப்புப் பணம் குறித்து பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், கருப்புப் பணத்தை மீட்க 20 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா உலகம் முழுவதும் 85 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு முறை குறித்து ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், 25 நாடுகளுடன் விரிவான முறையில் வரி திருத்தம் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை இந்நடவடிக்கைகளினால் கருப்புப்பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த ஆண்டு (2010) ஆகஸ்ட் மாதம் சுவிஸ் அரசும் இந்திய அரசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அது இரட்டை வரி விதிப்பு முறையை தவிர்ப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் நாட்டு வங்கிகளில் உள்ள கணக்குகளின் விபரத்தை பெற முடியும் என இந்திய அரசு கருதுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா சுவிஸ் நாட்டை மிரட்டி 4000 அமெரிக்கர்கள் வைத்துள்ள கணக்கின் விபரங்களை தர ஒப்புக்கொள்ள வைத்துவிட் டது. ஆனால் இந்தியாவால் இன்னும் கணக்கு வைத்து இருப்பவர்களின் பட்டியலை பெற முடியவில்லை. சுவிஸ் வங்கிகள் சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் ஜேம்ஸ் நாசன் என்ப வர் இது குறித்து குறிப்பிடுகையில், ‘எங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் களின் இரகசியம் காப்பாற்றப்படும் என்றும், நியாயமற்ற இரகசிய விசாரணைகள் உறுதி யாக தடை செய்யப்படும்என்றும் அறிவித் துள்ளார். வரி ஏய்ப்பர்களுக்கும் வரி ஏமாற்று பவர்களுக்கும் சுவிஸ் நாட்டு சட்டங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. ஆரம்பகாலத்தில் இத்தகையவர்கள் குறித்த விபரத்தினை வெளியிட சுவிஸ் நாட்டு அரசு மறுத்து வந்தா லும், இன்று ஒவ்வொரு நாடும் வரி ஏய்ப்பவர் கள் மற்றும் வரி ஏமாற்றுபவர்கள் குறித்த விப ரங்களை முறையாக கொடுத்தால் அவர் களின் கணக்கு விபரத்தை தர தயார் என அறிவித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவா திக்கப்பட்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் ஆக்கப்ப+ர்வமான பலன் ஏதும் இல்லை. காரணம் இன்று ஆட்சி அதி காரத்தில் உள்ளவர்களே கருப்புப் பணத்தின் உடைமையாளர்களாக உள்ளனர். எனவே இவர்களால் வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கைப்பற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. மாறாக அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சியிலே ஈடுபடு வார்கள். சமீபத்தில் வெளிப்பட்ட ஊழல் களான, காமன்வெல்த் நகரம் அமைப்பதில் முறைகேடு, தொலைத் தொடர்பு அலைவரி சைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நிவாரணப் பணிகளில் முறையீடு என இலட்சக் கணக்கான கோடி ரூபாய் முறைகேடுகள் அம்பலமாகியும் கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி யுள்ளதிலிருந்தே இந்த அரசு யாருடைய அரசு என அறியமுடியும்.

கருப்புப்பணத்தின் ஊற்றுக் கண்ணாக உள்ள லஞ்சம் என்பது இன்று சட்டப்பூர்வ மாகிவிட்டது. செல்வ செழிப்பான இந்தியா ஒரு காலத்தில் அந்நிய நாட்டினரால் சுரண் டப்பட்டது. இன்று இந்திய ஆட்சி யாளர் களால் சுரண்டப்பட்டு வருகிறது. இந்திய
நாட்டு மக்களில் சரி பாதி மக்கள் தினம் ஒரு வேளை உணவு மட்டும் உட் கொள்கின்றனர் என்ற நிலை ஆட்சியாளர் களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com