Contact us at: sooddram@gmail.com

 

அபிவிருத்தியை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது முதலாவது தேர்தல் விஞ்ஞா பனமான மஹிந்த சிந்தனையில் தெரிவித்த பல விடயங்களில் முக்கியமான தொன்றான பயங்கரவாதத்தை இல்லாதொழித்து, நாட்டு மக்களை பயப்பீதியற்ற ஒரு அமைதியான சூழலில் வாழ வைக்கும் உறுதிமொழி அவரது ஆறுவருட கால ஆட்சியின் நான்காவது வருடத்திலேயே வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மாபெரும் வெற்றியின் காரணமாக முழு நாட்டு மக்களையும் பயமற்றதொரு வாழ்க் கையை சுதந்திரமாக நடத்த ஜனாதிபதி வழிவகுத்தார். இதன் காரணமாக தென்பகுதி மக்கள் நயினாதீவிலுள்ள நாகதீப விகாரைக்கும், வடக்கு, கிழக்கு மக்கள் கதிர் காமத்திற்கும் சுதந்திரமாகச் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொரு சுமுகமான, சுதந்திரமான நிலையை நாட்டு மக்கள் அனுபவிக்க சுமார் முப்பது வருடங்களாகக் காத்திருக்க வேண்டியேற்பட்டது துரதிஷ்டமானதே. அதனை நான்கு வருட காலத்தில் வெற்றிகொண்ட ஜனாதிபதியைப் பாராட்டாமலிருக்க முடியாது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் இன்று வடக்கு கிழக்கு மாகாணம் கொழு ம்பு மாநகரத்திற்கு இணையாக அபிவிருத்தி கண்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு தான் அளித்த இந்த உறுதிமொழியை மட்டுமல்லாது ஏனைய சகல விடயங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதன் மூலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழு நாட்டு மக்களதும் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் இலகு வாகப் பெற்றுக்கொண்டார். இதன் காரணமாக அவர் தனது இரண்டாவது பத விக் காலத்திற்கான தேர்தலில் வரலாறு காணாத வெற்றியும் கண்டார். கடந்த வாரம் அவர் தனது இரண்டாவது பதவிக் காலத்திற்கான சத்தியப் பிரமாணத்தைச் செய்து கொண்டதுடன் புதிய அமைச்சர்களையும் தெரிவு செய்தார்.

இந்த இரண்டாவது பதவிக் காலமே மஹிந்த சிந்தனையின் அடுத்த கட்டமான நாட்டின் அபிவிருத்தியை நோக்கிய முழு வீச்சுப் பயணமாக அமைந்துள்ளது. ஆசியாவின் அதிசய பூமியாக இலங்கையைக் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு சகல ரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் பலவும் ஜனாதிபதியின் இந்தத் திட் டத்திற்கு உதவிகள் வழங்க போட்டிபோட்டுக் கொண்டு முன்வந்துள்ளன. இதன் ஆர ம்பமே வீரவில விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், நுரைச்சோலை அணுமின் நிலையம் எனப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.

மஹிந்த சிந்தனையின் இரண்டாவது கட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி ஒருபுறமிருந்து வீறுநடைபோடும் அதேவேளை தமிழ்பேசும் மக்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சி னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுவும் ஜனாதிபதி அவர்களின் திடசங்கற்பமான திட்டமாகவும் உள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்ட பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது இனி நாட்டில் சிறுபான்மையினம் என்ற சொற்பேதம் இல்லை எனத் தெரிவித்து சகலரும் இலங்கையரே எனத் தெரிவித்ததன் மூலம் அவர் முழு நாட்டு தமிழ்பேசும் மக்களினதும் மனங்களை வெற்றிகொண்டுவிட்டார்.

இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் அரசியல் பேதங்களை மறந்து மக்களுக்காக வேண்டி நடுநிலையான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கும், தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படுவ தற்காக ஜனாதிபதியினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் சரி யான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விதண்டாவாத அரசியலோ அல் லது எதிரும் புதிருமான அரசியலோ தமிழ் மக்களுக்கு இனியும் தேவையில்லை. பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணலாம் என்பது ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக வுள்ளது.

இவ்வார ஆரம்பத்தில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அவர், நாட்டுக்கு உகந்த தூர நோக்குள்ள உன்னதத் தலைவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அரச ஊழியர்களுக் குச் சம்பள அதிகரிப்பு, ஆசிரியர்களுக்கு புதிய சம்பளத் திட்டம், 11, 500 பட்டதாரி களுக்கு நியமனம், வெளிநாட்டில் தொழில் புரிவோருக்கு ஓய்வூதியம், மருந்துப் பொருட்களுக்கான வரி நீக்கம், கணனி மென்பொருட்களுக்கான வற் வரி நீக்கம் என வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பட்டியலிடலாம். இதுவும் மஹிந்த சிந்தனை யின் இரண்டாம் கட்டமான அபிவிருத்திப் பணிகளுக்கு உந்து சக்தியை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது.

எனவே நாட்டின் அபிவிருத்தி, மக்கள் நலன், சகலருக்கும் சமத்துவம், தேசத்தின் பாது காப்பு, சர்வதேசத்துடன் நல்லுறவு என பரந்துபட்ட அக்கறையுடன் செயற்பட்டுவரும் ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி அவரது இரண்டாவது பதவிக் காலமும் வெற்றியுடன் வீறுநடை போட்டு அது மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது எனத் தொடர்ந்து செல்ல இன, மத, குல, கட்சி, அரசியல் பேதங்களை மறந்து செயற்பட அனைவரும் ஓரணியில் அணிவகுத்துச் செல்ல ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com