Contact us at: sooddram@gmail.com

 

கடற்கரை பாதுகாப்பு, மாற்று செயல்திட்டம்

(முனைவர் தி.ராஜ்பிரவின்)

இந்தியாவின் மிக நீண்ட கடற் கரையை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்று. குறிப்பாக 1013 கி.மீ. நீளத் துடன் சுமார் 25 சதவீதம் மக்கள் தொகை யை கொண்ட தமிழக மீனவக் கிராமங் களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும், மதச் சிறுபான் மையினர் மட்டுமே. கடல்செல்வங்களுடன் இயற்கை முறையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாரம் பரிய மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் தேவைகள், பொருளாதார நலன்கள் கடலை நம்பியே உள்ளது. மீன் சம்பந்தப் பட்ட தொழில்கள், மதிப்பு கூட்டும் தொழில்கள், கடலோரப்பகுதி வேளாண் மை கூட கடலின் தன்மை மற்றும் இயற்கை வளங்கள், கட்டமைப்புகளை சார்ந்தே உள்ளது.

குறைந்தளவு பொருளாதார வசதிகள், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத வாழ்க்கை முறை, மதம் மற்றும் சமுதாய கட்டமைப்புகள் கொண்ட, வாழ்வியல் தேவைகளை கொண்ட இப்பிரிவு மக்கள் இயற்கைச் சீற்றங்கள், அரசியல் நிகழ்வு கள், புதிய பொருளாதார கொள்கை என்று பல தரப்பட்ட தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். பெருமழை, கடல்கோள் (சுனாமி), கடல் உள்வாங்கும் அபாயகர மான நடைமுறைச்சூழல் போன்ற இயற்கை சவால்களை தாண்டி, இலங்கை அரசின் தொடர் துப்பாக்கி தாக்குதல் களை சமாளித்து வாழ்க்கை நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இத்தகைய நடைமுறை நிர்ப்பந்தங் களை தாண்டி புதிய பொருளாதார அபா யங்கள் அவர்களின் நிகழ்கால மற்றும் எதிர்கால வாழ்விற்கு, வாழ்வுரிமை களுக்கு பெரும் சவால்களாக உருமாறி விட்டது.

குறிப்பாக மேலைநாடுகள், பன் னாட்டு தொழில் நிறுவனங்களின் வர்த் தக நிர்ப்பந்தங்கள் காரணமாக கடலோர தமிழகத்தில் பெரிய அளவில் மாற்றங் களை செய்து, மரபு வழி பாரம்பரிய தொழில்களுக்கு மாற்றாக புதிய தொழில் கள், புதிய தொழில் கட்டமைப்புகள், போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பொழுதுபோக்கு வசதிகளை மேற்கொள்ளவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களை பாது காக்கும் போர்வையில் பல லட்சம் மீனவ மக்களை அப்புறப்படுத்தும் கொள்கை முடிவுகள், மாற்றங்கள், புதிய கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணைகளாக வெளிவர உள்ளது.

பாரம்பரிய

வேளாண் செல்வங்கள்

மனித நாகரீகம் தோன்றிய காலம் முதல் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பெரும் இயற்கைச் சீற்றங்களை சந்தித் தும், சமாளித்தும் தமிழக கடலோரப் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இயற்கை வளங்கள் இணைந்த வாழ்க் கை முறையில் தமது தேவைகள் பூர்த்தி செய்யப்படவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் சிறிய இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்கள் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் உள் ளது. குறிப்பாக தற்போது புவிவெப்பமய மாக்குதல் காரணமாக வானிலை மாற்றங் கள் காரணமாக அதிகளவு இயற்கைச் சீற்றங்கள் கடைகோடியில் உள்ள பொரு ளாதார மற்றும் சமுதாயக் கட்டமைப்பில் கடைசியில் உள்ள மனிதர்களின் வாழ் வுரிமைகளை, வாழ்க்கை முறையை பாதிக்கும் நடைமுறைச் சூழலில் அவர்களின் பாதுகாப்பிற்கு, மும்பை கடல்வழி தாக்குதல் போல் மீண்டும் நடவாமல் தடுக்கவும், மேலைநாட்டு கடல்சார் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை பெருக்கும் நோக்கில் செய்யப்பட்ட புதிய கடல்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் சுவர் எழுப்பி கடலோரப் பகுதிகளை பாது காக்க தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் வகையில் கருத்துத்தாக் கம், கொள்கை முடிவுகள் பல கடல் கட் டமைப்பு சார்ந்த அரசு மற்றும் வளர்ச்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவாகும் இத் திட்டத்தின்படி பல மீனவக் குடியிருப்பு கள், வசிப்பு இடங்கள் அப்புறப்படுத்தப் பட்டும் பல நூறு சிறுபான்மை பாரம்பரிய வழிபாட்டுத் தலங்கள் சிதைக்கப்பட்டும் நடைமுறைச் சூழல் நிலவுகிறது. மறுபுறம் பாதுகாப்பு அரணாக கட்டப்படும் தடுப் புச் சுவரால் கடலின் அலைகளை கட் டுப்படுத்த முடியாது என்பதே நடை முறை உண்மை. கடும் இயற்கைச் சீற்றங் களின் போது குமரி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் கொண்டு கட்டப்பட்ட பாலங்களே கடலில் மூழ்கின. இச்சூழ லில் பன்னெடுங்காலமாக நமது பாரம் பரிய இயற்கை அரண்கள் உள்ள இயற்கை வளங்களை கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படாமல் உள்ளன. இந்நிலையில் கடலின் சீற்றங் களை சமாளித்து, நீடித்த மனிதகுல வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பயன்படுத்தப்படும் இயற்கை பனைமர தடுப்புகள், தென்னை மர தடுப்புகள், இயற்கையாக அல்லாத செயற்கையாக உருவாக்கப்பட்ட மணல் மேடுகள் மற்றும் அவை சார்ந்த தடுப்பு மரங்கள் வளர்ப்பு போன்றவை கடல் தண்ணீர் ஊருக்கும், விளை நிலங்களுக் குள் புகுந்து பெரும் சேதம் ஏற்படுவதை தடுக்கும் தன்மை கொண்டது.

மேலும் இவ்வகை இயற்கை தடுப்பு களை சேதப்படுத்திவிட்டு, விளைநிலங் கள், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தாலும் அவை கடல்சீற்றம் முடிந்த வுடன் தானாகவே வெளியேறிவிடும். சிறு மற்றும் குறு விவசாயிகள், மீனவர்களே தங்களிடம் உள்ள விவசாய பொருட் களை மீண்டும் இயற்கை பாதுகாப்பு அரண்களை குறைந்த செலவில், உழைப் பில் உருவாக்கச் செய்தும், பயன்படுத்த வும் முடியும்.

இத்தகைய நடைமுறைச் சூழலுக்கு மாற்றாக சிமெண்ட் கொண்டும், பிற செயற்கை கட்டமைப்புப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் பாதுகாப்பு அரண்கள் உண்மையில் போதிய அள வில் பாதுகாப்பை வழங்க முடியாது; உறுதி செய்யவும் முடியாது. மாறாக தற்போது உள்ள பாரம்பரிய இயற்கை கட்டமைப்புகளை சமுதாய அளவில் உருவாக்கியும், பாதுகாத்தும் பயன்படுத்தி யும் நமது நீண்டகால தொழில் வளர்ச் சிக்கு வழிவகை செய்ய முடியும்.

தற்போதைய புதிய பாதுகாப்பு வளைய முயற்சிகள் சில கட்டுமான நிறு வனங்கள், தொழில்முறை ஒப்பந்தக்காரர் களுக்கு பயன்பெற்று தரவும் செலவு செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாயில் தேசப்பாதுகாப்பு மற்றும் மீனவ சமுதாய கடல்சார் பாதுகாப்பு என்ற போர்வையில் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்திய பெருநிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் தமிழகத்திலும் பிற கடல்சார் மாநிலங்களில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படவும், பல லட்சம் கடல்சார் மக்களின் வாழ்வுரிமைகள், வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதிகளாக உருமாறச் செய்து விடும்.

நீடித்த வளர்ச்சி, கடல்சார் பாதுகாப் பிற்கு பாரம்பரிய வேளாண் தொழில் நுட்பங்கள் பயன்பாடும், பாதுகாப்பும் உதவும் என்ற அளவில் தேசிய கடல்சார் மற்றும் வேளாண் கொள்கைகள் உரு வாக்கப்படுவதே கடைகோடி மக்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்க உதவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவும் செய்யும் என்பதில் சந் தேகம் இல்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com