Contact us at: sooddram@gmail.com

 

கடல்சார் விவசாயமும் விரிவாக்க முயற்சிகளும்

(முனைவர் தி.ராஜ்பிரவீன்)

கடந்த சில ஆண்டுகளாக இரண் டாம் பசுமைப் புரட்சியின் தேவை, தன்மை மற்றும் பயன்பாடுகள் குறித்து பல தளங் களில் விவாதிக்கப்பட்டு வரு கிறது. குறிப்பாக உணவு தானியங்கள், வேளாண் விளைபொருட்களின் தொடர் விலை உயர்வு ஒரு தேசிய பிரச்சனை யாக உருமாறி வரும் நடைமுறைச் சூழ லில் உணவு தானிய உற்பத்திப் பெருக்கம் பற்றிய விவாதம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. முந்தைய பசுமைப் புரட்சியின் பயன்களை நீர்ப்பாசன வசதி கொண்ட விவசாயிகள் அறுவடை செய்துகொண் டனர். எனவே, இரண்டாம் பசுமைப் புரட்சி வளம் குன்றிய மானாவாரி நிலங் களில் புதிய வேளாண் தொழில் நுட்பங் கள் கொண்டு மேற்கொள்ளப்பட வேண் டும் என்று ஒருதரப்பு வேளாண் விஞ் ஞானிகள் கருதும் சூழலில், உண்மை நிலை மிகவும் மாறுபட்டதாக உள்ளது.

குறிப்பாக வளங்குன்றிய நிலங்களில் சிறு தானியப்பயிர்கள் உற்பத்தி, தீவனப் பயிர்கள் உற்பத்தி, தோட்டக்கலை மற்றும் மூலிகைப் பயிர்கள் அறிமுகம் எனப் பல வேளாண்மை சார்ந்த விரிவாக்கப் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் வளங்குன்றிய நிலங்களில் போதிய அளவு முதலீடுகள் இல்லாத நடை முறைச் சூழல் மற்றும் இயற்கையை, நம்பியே வேளாண் பணிகள் மேற்கொள் ளப்படுவதால் பெரிய அளவில் உற்பத்திப் பெருக்கம் மற்றும் பொருளாதாரப் பயன் களை சிறு மற்றும் குறு விவசாயிகள் பெற முடியவில்லை என்பதே நடைமுறை உண்மை. சில தனியார் வேளாண் நிறுவ னங்கள் மட்டும் மூலிகை மதிப்பு கூட் டல் (நசயெட ஏயடரந யனனவைiடிn) மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி, உள்நாட்டுச் சந்தை வாய்ப்புகளைத் தெரிந்து கொண்டு திறம்பட பயன்படுத்தி அதி களவு லாபம் ஈட்டுகின்றன. இத்தகைய நடைமுறைச் சூழலில் மானாவாரி நிலங் களை நம்பிய விவசாயக் குடும்பங்கள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க் கைச்சூழல் காரணமாக விவசாய நிலங் களை தரிசாகப் போட்டுவிட்டு பல புதிய தொழிற்சாலைகளில் கூலித்தொழிலா ளர்களாக, ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரியும் நடைமுறைச் சூழல் நிலவு கிறது. பல குடும்பங்களின் இளம் பெண் கள்சுமங்கலிதிட்டத்தில் தொழில் நகரங்களில் பணிபுரியும் அவல நிலையே மானாவாரி நிலங்களில் உள்ள கடு மையான வேளாண் சூழலுக்கு நேரடிச் சாட்சி. இத்தகைய சூழலில் இரண்டாம் பசுமைப்புரட்சிக்கு உரிய தேடல் தளங் களை ஆராய்ந்து பார்க்கும்போது கடல் சார் விவசாயம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

தமிழகம் மிக நீண்ட கடற்கரை கொண்ட மாநிலங்களில் ஒன்று. சுமார் 1013 கிலோமீட்டர் வரை கடற்கரையுடன் பதிமூன்று மாவட்டங்களைக் கொண் டது. தமிழகத்தில் 25 சதவீத மக்கள் கடல் சார்ந்த பொருளாதாரத்தை, வளங் களை நம்பியுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மற்றும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களை பங்காளி களாகக் கொண்ட கடல்சார் விவசாயத் தில் புதிய தொழில்நுட்ப அறிமுகங்கள் கிடையாது. மிகுதியான பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்கள் அனுபவ அறிவு வாயிலாகவும் இயற்கைச் சீற்றங் களைத் தாண்டி வளரும் தன்மைகொண்ட ரகங்களைத் தேர்வு செய்து வளர்த்தும் காலம் காலமாக விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வேளாண் சந்தைக்கு வரும் பெருவாரி யான காய்கறிகள், பூக்கள், தோட்டக் கலைப் பயிர்களை திறம்பட சாகுபடி செய்து வருகின்றனர். அவர்களது பொரு ளாதாரச் சூழல், வாழ்க்கைமுறை மற்றும் நிலப்பரப்பின் தன்மையும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த மிகப்பெரிய தடையாக உள்ளது.

குறிப்பாக கடலோர மாவட்டமான இராம நாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் போன்ற பகுதிகளில் காய், கனிகள், பூக் கள் சாகுபடி அதிகம். ஆனால் குறைந் தளவு நல்ல தண்ணீரே உள்ள சூழலில் பாரம்பரிய பாசனமுறைகளைக் கொண்டே நீர்ப்பாசனம் செய்யமுடியும். புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு மின் மோட்டார் அமைத்து சாகுபடிப் பணி களை மேற்கொள்ளும்போது நல்ல தண் ணீரும், உப்புத் தண்ணீரும் கலந்து சாகு படிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நடைமுறைச் சூழல் நிலவுகிறது. மறுபுறம் தற்போதைய புதிய உயர் விளைச்சல் நெல் ரகங்களை பயன்படுத்த முடியாமல் பாரம்பரிய நெல் ரகங்களான அரியன், நெருங்கன், சிவப்பு சித்திரைகார், வெள்ளை சித்திரைகார், சம்பா போன்ற வற்றை அதிகமாக விவசாயிகள் பயன் படுத்தி வருகின்றனர்.

பல இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படும் இப்பாரம்பரிய ரகங் கள் விவசாயிகளின் வாழ்வியல் தேவை களை சந்திப்பதுடன் அவர்களின் பொரு ளாதார நலன்களை பாதுகாக்கவும் உதவு கிறது. மறுபுறம் கடலோரத் தமிழகத்தை சுனாமி போன்ற இயற்கை பெரும் சீற்றங் கள் தாக்கி அழித்தபோது பெரும் அலை களை தாண்டியும் வளைந்துகொடுத்தும் தப்பியது பாரம்பரிய யாழ்ப்பாணம் தென்னை ரகங்களும் பாரம்பரிய ஊடு பயிராகிய செவ்வாழையும் தான். குட்டை ரக தென்னை மரங்கள் அதிக மகசூல் தரும் என்று கூறி கடலோர தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும் அவற்றால் இயற்கைச் சீற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே தற்போதைய நவீன வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியாத சூழலில் பாரம்பரிய வேளாண் தொழில்நுட்பங்களே கடல்சார் விவசாயிகளுக்கு அவர்களது வாழ்வுரி மைகளை, பொருளாதார நலன்களை பாதுகாக்க உதவுகிறது.

தற்போதைய புதிய வேளாண் ஆராய்ச் சிகள் யாவும் உற்பத்தி, உற்பத்தித் திறன் பெருக்கம் என்ற நோக்கில் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இயற்கைச் சீற்றங் களை தாண்டியும் சிறு மற்றும் குறு விவ சாயிகளின் தேவைகள், பயன்பாடுகளை, சந்தை தேவைகளை மையமாக கொண்டு மேற்கொள்ளப்படும் வேளாண் ஆராய்ச்சிகள், விரிவாக்க முயற்சிகள் மிகவும் குறைவு. குறிப்பாக குறைந்தளவு பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் திறன்கள் கொண்ட விவசாய சமுதாயத் தின் தேவைகளை மையமாக கொண்டு ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இயற்கைச் சீற்றங்கள், வெள்ளப் பாதிப்பு பகுதி விவ சாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஆழ் தண்ணீரில் வளர்ந்து, சிறிய படகுகள் கொண்டு அறுவடை செய்யப்படும் நீண்ட நெல் ரகங்கள் கேரள மாநிலத்தில் நீண்டகாலமாக வெற்றிகரமாக சாகுபடி செய்யப்படுகிறது. அத்தகைய நெல் ரகங்களை தேர்வு செய்து பயன்படுத்துவதன் வாயிலாக வெள்ளப் பாதிப்புகளினால் ஏற்படும் வேளாண் உற்பத்தி இழப்புகளை, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பொருளா தாரப் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும்.

அடுத்ததாக தற்போதைய கடலோரச் சாகுபடி பகுதியில் உள்ள இயற்கைத் தடுப்புகள் குறிப்பாக உயிர்த் தடுப்பு களுக்கு மாற்றாக செயற்கைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய செலவில் அமைக்கப்படும் கருங்கல் தூண்டில் வளைவுகள் குறுகிய கால பயன்களை மட்டும் பெற்றுத்தரும். மாறாக தற்போது கடலோர விவசாயிகள் பின் பற்றும் இயற்கைத் தடுப்புகளில் சிறிய அளவிலான தோட்டக்கலை மரப்பயிர் களான இலந்தை, சீதா பழ மரங்கள், கல் யாண முருங்கை பொருளாதாரப் பயன் களை பெற்றுத்தரும். நீண்டகால நலன் களுக்கும் உகந்தது.

தற்போது காய்கறி சாகுபடியில் கடல் சார் விவசாயிகள் பாரம்பரிய நாட்டு ரக காய்களை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். நாட்டு ரக கத்திரிக்கு மாற் றாக பூச்சி தாக்குதலை சமாளிக்கும் அண்ணாமலை கத்திரி நீண்டநாள் வாடாமல் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுச் சந்தைகளில் வர்த்தக வாய்ப்பு கள் கொண்டுள்ளகிளாடி யோலஸ் மலர்மற்றும் நூக்கல் சாகுபடி முறைகளை பரந்த அளவில் அறிமுகம் செய்வதன் வாயிலாக கடலோர தமிழகத் தில் ஒரு மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படச் செய்ய முடியும்.

இரண்டாம் பசுமைப் புரட்சிக்கானதளமாக கடல்சார் வேளாண் தொழில் நுட்பங்களை புதிய வேளாண் ஆராய்ச்சி கள் மற்றும் விரிவாக்க முயற்சிகள் வாயி லாக நாம் மேற்கொள்ளும் போது முந் தைய பசுமைப் புரட்சியின் பொருளா தாரப் பயன்களை பெறாத ஏழை, எளிய சிறு மற்றும் குறு விவசாயிகள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படச் செய்ய முடியும். தற்போதைய வேளாண் வல்லுனர்களின் சிந்தனை மாற்றம் மற்றும் கடலோரத் தமிழகத்தை வேகமாக விலைக்கு வாங்கி வரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிக ளின் நிலவேட்கையை அடங்கச் செய்யும் உறுதியான வாழ்வுரி மைப் போராட்டங்கள் ஆகியவையே இரண்டாம் பசு மைப் புரட்சியின் தளமாக கடல்சார் விவசாயத்தை உருவாக்கி நீடித்த தமிழக வளர்ச்சிக்கு, வேளாண் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும். இதற்கு வேண்டிய விரிவாக்கப் பணிகளை திறம்பட மேற்க்கொள்ள வேண்டியது அவசியம் என்பதில் சந் தேகம் இல்லை.

(கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com