Contact us at: sooddram@gmail.com

 

சாதனையாளரான ஜனாதிபதி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

சாதனை வீரரும் மக்கள் தலைவருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஓரா ண்டு நிறைவு விழாவும் ஜனாதிபதி அவர்களின் பிறந்த தின மும் இன்று நாட்டு மக்களால் நன்றி உணர்வுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி அவர்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட போது அவரை இரண்டு பாரிய பிரச்சினைகள் எதிர்நோக் கியிருந்தன. ஒன்று சுனாமியினால் ஏற்பட்ட மனித மற்றும் கட்டிடங் களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அழிவு. இரண்டா வதாக எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம்.

சுனாமியினால் ஏற்பட்ட பேரழிவை ஓரிரு வருடங்களில் ஜனாதிபதி அவ ர்கள் தன்னுடைய ஆளுமைத்திறன் மூலம் வெளிநாடுகளில் இருந் தும், சர்வதேச அமைப்புகளில் இருந்தும் பெற்ற பொருளாதார, தொழி ல்நுட்ப உதவிகளைப் பயன்படுத்தி அழிவினால் சீர்குலைந்து போயி ருந்த நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த ஏழை மக்களின் கண்ணீரை துடைத்து, அவர்களுக்கு புதிய வீடுகளை நிர் மாணித்துக் கொடுத்தும், அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இருந்த சுனாமியினால் தரைமட்டமாகிய பாடசாலைக் கட்டிடங்கள், ஆஸ்பத் திரிகள், அரசாங்கத் திணைக்களங்கள் ஆகியவற்றை மீள் நிர்மாணம் செய்தும், சுனாமியினால் கணவன்மார்களையும், சம்பாதித்து கொடுக் கக்கூடிய இளம் பிள்ளைகளையும் இழந்து அல்லல்பட்டுக் கொண்டி ருந்த அபலைப் பெண்களுக்கும் வாழ்வாதாரங்களை மிகக் குறுகிய காலத்தில் பெற்றுக் கொடுத்தார்.

அடுத்த, எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தை சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த முயற்சிகளை எல்.ரி. ரி.ஈ. தலைவர்கள் அகங்காரப் போக்கில் உதறித்தள்ளிய காரணத்தி னால் வேறு வழியின்றி மாவில்லாறு வான் கதவுகளை எல்.ரி.ரி.ஈ. மூடி யதை அடுத்து ஜனாதிபதி அவர்கள் எல்.ரி.ரி.ஈ.யை அடக்குவதற்கான இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார்.

மிகக் குறுகிய காலத்தில் எல்.ரி.ரி.ஈ., அதாவது 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று போர் முனையில் அடக்கி, நாட்டு மக்களு க்கு பயங்கரவாதம் என்ற கொடிய அரக்கனிடம் இருந்து விடுத லையை பெற்றுக் கொடுத்தார்.

இவ்விரு சாதனைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்த ஜனாதிபதி அவர்கள், அதையடுத்து திவிநெகும திட்டத்தின் மூலம் 13லட்சத்து 56ஆயிரத்து 594 வீட்டுத் தோட்ட அலகுகள் மற்றும் 94ஆயிரத்து 11 கால்நடை அலகுகளை ஏற்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

கமநெகம திட்டத்தின் கீழ் இலங்கையின் நாலாபக்கங்களில் உள்ள 4 ஆயிரத்து 699 கிராமங்களில் சிறிய நீர்ப்பாசன திட்டங்களை பூர்த்தி செய்ததன் மூலம் 7லட்சத்து 14 ஆயிரத்து 438 விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 87ஆயிரத்து 960ஏக்கர் காணிகளுக்கு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அது போன்று 14ஆயிரத்து 341 வாழ்வாதார திட்டங்களின் கீழ் ஊக்கு விப்பை அளிப்பதன் மூலம் 2லட்சத்து 83ஆயிரத்து 876 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் கூடுதலான வருமானத் திற்கு பங்களிப்பை செய்தார்.

7 ஆயிரத்து 785 கிராமிய மின்சார திட்டங்களை செயற்படுத்தியதன் மூலம் 4லட்சத்து 467 வீடுகளுக்கு மின்சார இணைப்பைப் பெற்றுக் கொடுத்தார். வறியவர்களுக்கான தரமான வீடுகளை திரிய பியஸ திட் டத்தின் கீழ் 18ஆயிரத்து 950 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார்.

தரமான வீதி வசதிகளை செய்து கொடுத்து, 7 லட்சம் வீடுகள் பயனடை யக்கூடிய வகையில் கொங்கிaட் சாலைகள், சிறுபாலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் விவசாய சாலைகளைக் கொண்ட 61ஆயிரத்து 226 திட்டங்களை பூர்த்தி செய்தார்.

சமூக நீர் விநியோகத் திட்டங்களின் கீழ் ஒவ்வொன்றுக்கும் 5ஆயிரம் லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 2ஆயிரத்து 864 நீர் விநியோகத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டன. இதன் மூலம் 5லட்சத்து 4ஆயிர த்து 200 மக்களுக்கு தரமான குடிநீருக்கான அணுகு வழியையும் ஜனாதிபதி அவர்கள் செய்து கொடுத்தார்.

இவற்றை விட நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. துறைமுகங்கள் அபி விருத்தி செய்யப்பட்டன. சுகாதார வசதிகள் அதிகரிக்கப்பட்டு, கடந்த காலத்தில் மூடப்பட்டிருந்த ஆஸ்பத்திரிகள் மீண்டும் நல்ல வசதிக ளுடன் திறக்கப்பட்டன.

இவ்விதம் ஜனாதிபதி அவர்கள் தனது சிறந்த ஆளுமைத்திறனைப் பய ன்படுத்தி நாட்டு மக்களுக்கு பொருளாதாரத் துறையில் விடிவை ஏற் படுத்திக் கொடுப்பதில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சகல அரசியல் கட்சிகளும் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் இதற்கான எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் முடிவை தான் நன்கு பரிசீலனை க்கு எடுத்துக் கொண்ட பின்னர் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதிய ளித்துள்ளார்.

இவ்விதம் இந்நாட்டு மக்களுக்காக பல்வகையிலும் அதியுன்னதமான சேவையை செய்துவரும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் இரண் டாவது பதவிக்காலத்தின் ஓராண்டு நிறைவுக்காகவும் பிறந்த தினத்திற் காகவும் நாமும் நாட்டு மக்களுடன் இணைந்து இனிய நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறோம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com