Contact us at: sooddram@gmail.com

 

மரணத்தை வென்ற மனிதநேயம்

தோழர் பத்மநாபா நினைவு மலரிலிருந்து...

பத்மநாபா பற்றி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள்...

தா. பாண்டியன், மாநில செயலாளர். இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி

இந்தியாவை நம்பிய அந்த நம்பிக்கைக்குரிய நண்பனை, இந்திய மண்ணிலேயே இந்திய எதிரிகள் கொன்றனர். அவர் சிந்திய இரத்தம் காலப்போக்கில் பலரது கண்களைத் திறக்கும். நட்புக்காக, நீதிக்காக, நிரபராதியாக நின்று உயிர்நீத்த தோழர் பத்மநாபாவின் நினைவு எங்கள் நெஞ்சில் என்றும் நின்று நிலைக்கும். மரணத்திற்குப் பின் வெற்றியைப் பெற இருக்கிறார் பத்மநாபா. இது நடந்தேறும். அவருக்கு அன்றைக்கு நான் மீண்டும் மலர் அஞ்சலி செய்வேன்.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

அவர் கொண்ட அரசியல் கொள்கைகளையும், அவர் நம்பிக்கை வைத்திருந்த ஆயுதப் புரட்சியிலும் எனது நிலை எதுவாகினும் தமிழினத்தின் உரிமைவாழ்வில் அவர்கொண்டிருந்த உறுதி என்னை பெரிதும் கவர்ந்தது.

ஜெயகாந்தன் - எழுத்தாளர்

இந்திய லட்சியங்களுக்கு எதிராகச் செயல்படுவோரைத் தெரிந்தும் இந்திய அனுமதிப்பது, அது ஏற்றுக்கொண்ட சத்தியசோதனையான ஜனநாயக நெறிமுறைகளின் விளைவே தவிர, அது இந்தியாவின் பலவீனமல்ல. ஈ.பி.ஆர்.எல்.எவ் என்றழைக்கப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பது இந்தியாவை நன்கு புரிந்துகொண்ட நல்லிளைஞர்கள் கொண்ட ஓர் முற்போக்கு ஜனநாயகப் பாசறை என்பது எனது அனுபவத்தால் நான் பெற்ற அறிவு.

எம்.வி. சுந்தரம், இந்திய விடுதலை இயக்கப் போராளி

மனிதர்களைக் கொலை செய்வதே அரசியல் தொழிலாகக் கொண்டுள்ள புலையர்கள், உன்னத இளைஞர் தோழர் பத்மநாபாவையும் விடுதலை இயக்கத் தோழர்கள் சிலரையும் கொலை செய்துவிட்டார்கள். இத்தகைய சிந்தனையோடு மனக்கவலையில் மூழ்கினேன்.

ஏ.நல்லசிவன், செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸ்சிட்)

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஜனநாயக வழியிலான தீர்வு காண அயராது பாடுபட்டு வந்த தோழர் பத்மநாபா, இளம் வயதிலேயே சக போராளிக் குழுவினாலேயே சுட்டுக் கொல்லப்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேச ஒற்றுமையைப் பாதுகாப்பது, குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற லட்சியத்துடன் இடதுசாரி இயக்கங்களுடன் ஒன்றிணைந்து போராடுவதே அதற்கு சரியான வழி என்ற தீர்க்கமான கண்ணோட்டத்துடன் தோழர் பத்மநாபா, தனது இயக்கத்தை வழிநடத்திச் சென்றார்.

வாழப்பாடி இராமமூர்த்தி, எம்.பி., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இந்தச் சோக வரலாறு அழியாத கறையை ஏற்படுத்தி விட்டதை எண்ணி எண்ணி தமிழன் தலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டது. துடைத்தெறிய முடியாத கறை தமிழ் மண்ணுக்கு ஏற்பட்டுவிட்டதை எண்ணி வேதனைப்படுகிறேன். பகைவனுக்கும் அருள் பாலிக்கும் தமிழ்ப்பண்பாடு இந்தச் சோகச் சம்பவத்தால் களங்கம் கண்டுவிட்டது.

ப.மாணிக்கம், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஈழத்தமிழர்கள் மத்தியில் பாடுபட்டு வந்த அரசியல் இயக்கங்களை போராளிகளின் அமைப்புகளை ஒன்றிணைப்பதில் ஓர் அணியில் கொண்டு வருவதற்கு அரும்பாடுபாட்டார். இதில் அவருக்கு பல சோதனைகள் ஏற்பட்டன. நம்பிக்கை இழக்காமல், சளைக்காமல் பாடுபட்டார். அவர் சுடப்படாமலிருந்தால் அவர் தொடர்ந்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டிருப்பார்

ஜனா கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய துணைத்தலைவர், பாரதீய ஜனதா கட்சி

அவரை நேரில் சந்தித்தது கிடையாது. அவரது வரலாற்றை அறிந்தது கிடையாது. ஆனால் அவரது மரணம் அவரை அறியாதவர்களுக்குக் கூட அவரை அறிமுகப்படுத்திவிட்டது. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவரது மக்களுக்காக அரும்பாடுபட்டுள்ளார். அவர் கையாண்ட முறைகளை ஏற்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் அவருடைய நோக்கத்திற்கும் தொண்டிற்கும் களங்கம் கற்பிக்க முடியாது.

டாக்டர் ஏ.கே. ஜெய்னுதீன், தலைவர் காங்கிரஸ் (ஜெ)

அவருடைய தன்னலமில்லாத உண்மையான மக்கள் பற்றும், ஈழத்தமிழ் மக்களது பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வு காண வேண்டும் என்ற ஒரே நோக்கமாக செயல் பட்ட விதமும், மக்கள் மனதில் இவர் ஒருவர்தான் இலங்கைத் தமிழ் மக்களின் இன்னலை அகற்றி, அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டின.

என்.டி. வானமாமலை (வழக்கறிஞர்) மாநில செயலாளர், இந்திய-சோவியத் கலாச்சார் கழகம்

அடக்க ஒடுக்கமான தோற்றம், எளிமையான நடையும், உடையும், தீர்க்காலோசனையைக் குறிக்கும் கூரியக் கண்கள், அர்த்தமற்ற பேச்சுக்கு இடங்கொடுக்காத மௌனம் - தோழர் பத்மநாபாவைப் பற்றி நினைத்தால் கண்முன் வரும் காட்சிகள் இது.

ஆர்.பி.எஸ். ஸ்டாலின், பி.ஏ., பி.எல்.,

தந்தை பெரியாருக்குப் பின் ஒரு தலைவராக நான் பார்த்தது தோழர் ரஞ்சன் என்கிற பத்மநாபா அவர்களைத்தான். மிகவும் எளிமையான அமைதியான சுபாவம் கொண்ட, அதிகம் பேசாத, ஆனால் ஆளுமை படைத்த அம்மாமனிதனின் இறப்பை இற்றைவரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

சோ. இராமசாமி, ஆசிரியர், துக்ளக்.

விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறவர்கள் பத்மநாபா ஆனாலும் சரி, அமிர்தலிங்கம் ஆனாலும் சரி, அப்பாவித் தமிழன் ஆனாலும் சரி, அவர்களெல்லாம் தமிழர்களே அல்ல. விடுதலைப் புலிகள் மட்டும் தான் அசல் தமிழர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் அப்போதைக்கப்போது தமிழர்கள். இப்படி ஒரு சூழ்நிலை தமிழக அரசின் ஆதரவோடு இங்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருமதி துல்ஜாராணி பாலதண்டாயுதம், சி.பி.ஐ. மாதர் அணி.

பத்மநாபா அவர்களின் உயிரை பறித்துவிட்டதால் அந்த பாசிஸ வெறியர்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொண்டு விடவில்லை. பாசம் மிக்க மனிதர், பண்பாடு மிக்க அவரையா கொன்றோம் என்று அந்த எதிராளியே எண்ணியிருப்பான். இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் எண்ணி வருந்துவான். அந்த அளவிற்கு குணம் படைத்தவர்.

டாக்டர். இரா. சனார்த்தனம், எம்.ஏ., பி.எச்.டி., தலைவர். உலகத் தமிழ் இளைஞர் பேரவை.

தோழர் பத்மநாபா, ஈழப் போர் வரலாற்றில் மறக்க முடியாத மாவீரன். தளரா தளபதிகளில் ஒருவர். உருவத்திற்கேற்ற உயரம், பளிச்சிடும் ஒளிக்கண்கள், அடையாளம் காட்டும் தாடி, செயலேமுதல் என்பதால் அளந்து பேசும் சொற்கள், பத்மநாபாவை நினைவுபடுத்தும்.

எல்.ஜி. கீதானந்தன், கோவை மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

குறுந்தாடியினூடே புன்னகை மிளிர, கூரிய கண்களில் வீரம் ஒளிவீச, தூயவனாய், புரட்சியின் தூதுவனாய் விளங்கிய செயலாளர் நாயகம் பத்மநாபா இன்று நம்மிடையே இல்லை. உயிர்த் துடிப்போடு விளங்கிய அந்தப் புரட்சிக் காளை, இன்று படமாய், பத்திரிகைச் செய்தியாய், கோடிக்கணக்கான உள்ளங்களின் குமுறலாய், கண்ணீராய் வடிந்து விட்டது. எனினும், அந்த மாவீரன் செங்குருதியால் எழுதிய ஈழ விடுதலைப் போரின் வரலாறு அழிந்துவிடக் கூடிய ஒன்றல்ல.

க.சுப்பு, கொள்கை பரப்புச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ்

நல்ல பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தவர் நமது தோழர் பத்மநாபா! தோழர் என்றும் நாபா என்றும் எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அடக்கத்தின் இருப்பிடம், பதவி மோகமும் பகட்டும் படாடோபமும் நிறைந்த உலகில் பத்மநாபா ஒரு விதிவிலக்காகத் திகழ்ந்தவர்.

வீ. ராஜமோகன், செயலாளர், இந்திய ஐக்கியப் பொதுவுடமைக் கட்சி, சென்னை மாவட்டக்குழு

வாழ்நாள் முழுவதும் லட்சியத்திற்காகவே வாழ்ந்து, வஞ்சகர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி, லட்சிய வீரனாக மறைந்த தோழர் பத்மநாபா அவர்கள் கொண்டிருந்த லட்சியம் ஈழத்தமிழ் மண்ணில் நிறைவேறும்.

நெல்லை ஜெபமணி, தலைவர், தமிழ்நாடு ஜனதா கட்சி

அவரைப் பார்த்ததும், ஒரு அப்பழுக்கற்ற சுதந்திரப் போராட்ட வீரனைப் பார்த்த மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. அவர் சுருக்கமாகத்தான் பேசினார். அடக்கமாகவும் பவ்யமாகவும் நடந்து கொண்டார். இதுவரையில் எனக்கு அவரைப் பற்றிப் பத்திரிகைகளில் படித்துதான் தெரியும் நேரில் பார்த்ததில்லை. எந்த இலங்கைத் தமிழ் மக்களுக்காக அவர் போராடினாரோ, அவர்களைத் தன் உயிரினும் மேலாக நேசிப்பது அவர் பேசிய பேச்சிலிருந்து தெரிந்தது.

ம.வெ.அருளாளன், விரிவுரையாளர், குருநானக் கல்லூரி, சென்னை.

தான் கொண்ட இலட்சிய கொள்கையில் பிளக்கமுடியாத அணுவைப் போல இயங்கினார். தோழர். அந்தோ! அவ்வணுவும் பிளக்கப்பட்டது. அவ்வணுப் பிளவும் கூட, அனைத்து ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களின் செயற்பாடுகள் என்ற அணுக்களை தொடர் சங்கிலியாகத் தூண்டி இயக்கும். அவ்வியக்கம் தோழர் காட்டிய உன்னத கொள்கையினை வழிப்படி செயலாற்றும்போது, ஆக்கபூர்வ அணுசக்தியாக ஈழ மக்களின் நலனை வென்றெடுக்கும்.

ச. செந்தில்நாதன், செயலாளர், முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

போராட்ட குணமும், பொறுமையும், நெஞ்சுறுதியும், இளகிய மனமும், ஈழத்தையும் இந்தியாவையும் இணையாக நேசித்த பான்மையும், தமிழ் பேசும் மக்களையும் மார்க்சியத்தையும் தன் இரு தோள்களில் சுமந்த தோழர் பத்மநாபாவின் நினைவுகள் என்றும் தென்றலாகவே இருக்கும்.

எம்.எல்.தாஸ், ஆசிரியர், குமுறும் எரிமலை.

ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் முதன் முதலாக சுமார் இருபதினாயிரம் மாணவர்கள் கொண்ட பேரணியையும் பத்மநாபா நடத்திக் காட்டினார். மாணவர் பேரணியில் கட்டுக்கடங்காத மாணவர்கள். சாலையில் வாகனப் போக்குவரத்தே ஸ்தம்பித்தது. பஸ்களின் மேலெல்லாம் மாணவர்கள் ஏறி வந்தனர்.

பி.கே. இராசகோபால், பி.ஏ.பி.எல்., தமிழ்நாடு கலை இலக்கிய மாமன்றம்.

அவரை நானறிந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் பல. அவை அவரை எனக்கு இனங்காட்டின. இயக்கம் நெருக்கடிக்கு உள்ளான ஒரு காலத்தில் ஒருநாள் அவரது அலுவலகத்தில் அவரோடு மதிய உணவு உண்டேன். அலுமினியத் தட்டுகளில் அளவு சாப்பாடு வந்தது. தோழர்கள் அனைவரும் பசியாறிவிட்டனரா என்று பார்த்தபின் தன் பங்கு ரேஷனை அவர் சாப்பிட்டுவிட்டுத் தன் சக தோழர்களைப் போலவே தனது சாப்பாட்டுத் தட்டை தானே கழுவி வைத்தார்.

ஏ.எம். பால்ராஜ், ஆசிரியர், வணிக ஒற்றுமை

ஆயுதமேதுமின்றி அமர்ந்திருந்தபோது, ஆயுதத்தால் சுட்டுப் பொசுக்கும் அசிங்கத்தை அந்த அருவெறுக்கத்தக்கவர்கள் அரங்கேற்றிவிட்டார்கள். வீரம் எனும் சொல்லுக்கே வீண்பழி சேர்த்துவிட்டார்கள்.

கே.எஸ். ராஜு, ஆசிரியர் , மக்கள் மறுவாழ்வு

சுட்டுக் கொல்லப்பட்ட பத்மநாபாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதவொன்று. முப்பத்தொன்பது வயது நிரம்பிய பத்மநாபா ஈழவிடுதலை இயக்க வரலாற்றில் ஒரு சகாப்தம் என்றே சொல்ல வேண்டும். இது கூழுக்கு கவிபாடும் வார்த்தைகளல்ல.

ஷ்யாம் ஆசிரியர். தராசு வார இதழ், தலைவர். தராசு மக்கள் மன்றம்

முதன் முதலில் அவரை நான் சந்தித்தபோது அவரது தீட்சண்யமிக்க கண்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றில் நான் அஞ்சாமையைக் கண்டேன். அதே நேரத்தில் அரவணைப்பையும் உணர்ந்தேன். சிரித்துச் சிரித்துப் பேசினாலும் அவரது சிந்தையில் ஒரு உறுதி மிளிர்ந்ததை என்னால் உணர முடிந்தது. 

கோ.சத்தியவாகீஸ்வரன், செயலாளர், ஓ.ப.சீ. நண்பர்கள் கழகம்

எனக்கு ஆயுதம்தான் தூக்கத் தெரியும், அதுதான் முடியும்ளூ அதுதான் ஓரே வழி, வேறு வழியே இல்லை என்று சொல்பவன் உண்மையான விடுதலை வீரனாக இருக்க முடியாது. வீரமும் வேண்டும். அதில் விவேகமும் வேண்டும். அவற்றைத் தருணமறிந்து பிரயோகிக்கும் தமைமையும் வேண்டும்.

ந. அரணமுறுவல்

எண்பதாம் ஆண்டுகளில் பல நெருக்கடிகளுக்கிடையிலேயே பொருளாதார வாய்ப்புக் குறைவுடனேயே இயக்கத்தை; தொடங்கி நடத்தினார். பல சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கும் பொறுமை அவரிடமிருந்தது. வேறு எந்த ஈழப் போராளிக்கும் இல்லாத பண்பு இது. இன்று ஈழப் போராட்டம் திசைமாறி எங்கோ போய்விட்டது. 

மு. அந்தாலன்

இந்த இளைய வயதில் இப்படியொரு மரணம் ஏற்படும் என்று யாரும் நினைக்கவில்லை. ஆனாலும் தோழர் பத்மநாபா அடிக்கடி சொல்வதுபோல் மரணத்தை எம் மன்ணிற்காக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற கூற்று மெய்யாகிவிட்டது.

கே.கமலாகர், மாவட்ட விவசாய சங்க செயலாளர் (சி.பி.ஐ), சித்தூர் மாவட்டம். ஆந்திர மாநிலம்.

நாம் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கவில்லை, மக்களுக்காகவே மண்ணை நேசிக்கிறோம் என்ற அந்த தலைவனின் உன்னத வார்த்தைகள் ஈழ மண்ணில் மட்டுமல்ல உலகம் முழுவதும் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும். தோழர் பத்மநாபா இலங்கை மக்களுக்கு மட்டுமோ இந்திய மக்களுக்கு அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்திற்கு மட்டுமோ சொந்தமானவரல்ல. அவர் மனித குலம் முழுமைக்கும் உரித்தான தலைவர்.

நன்றி : http://pathmanabha.blogspot.com

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com