Contact us at: sooddram@gmail.com

 

நோய்க்கு வித்திடும் மருந்துகள்!

(சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,)

“2008 நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த வழிமுறை கள், மேலும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்; அத்தகைய மீட்சி முழுமை பெறும் முன்னரே புதிய நெருக்கடியில் சிக்கி இரட்டைத் தாழ்வு மந்தத்தில் போய் முடியும் என நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நான் கணித்தது போலவே நடந்துவிட்டது என்பது குறித்து நான் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் கடன்களை அரசாங்கக் கடன்களாக மாற்றுகிற இந்த உத்திகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக் கான மக்கள் பலியாகியுள்ளனர். மீட்புத் திட் டம் என்ற பெயரில் எந்தக் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கொள்ளை கொள்ளையாய் அள்ளிக்கொடுக்கப்பட்டதோ, அந்தக் கம் பெனிகள் உருவாக்கிய நெருக்கடிதான் அர சுக் கடன்கள் பெருமளவு பெருகியதற்கு அடிப் படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்று அந்த நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை அழகாக ஜோடிக்கப்படுகிறது; அந்நிறுவனங்களின் மேலதிகாரிகள் கணிச மான போனஸ் பெறுகிறார்கள். ஆனால், மறுபுறத்தில் அரசாங்கங்கள், கடன்சுமை களைக் களைவது என்ற பெயரால் கடுமை யான சிக்கனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. இதனால், உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்நிலை சின்னாபின்னமாகியுள்ளது. நிலைமை இவ் வாறிருக்கையில், வால் ஸ்டிரீட்க்கு எதிரான இயக்கங்கள் தொடருவதில் ஆச்சரியப்படுவ தற்கு எதுவும் இல்லை.

கிரீஸ : இந்த நெருக்கடியின் பின்னணி யில் அரசியல் எதிர்விளைவுகளும் தோன்றி வருகின்றன. கிரேக்க பிரதமர் ஜார்ஜ் பாப் பென்ட்ரோ சென்ற வாரம் ராஜினாமா செய் துள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் கிரீஸ் தொடர்ந்து இருக்க வேண்டுமா, அதன் தொடர்ச்சியாக யூரோவிலிருந்து விலக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத் தறிய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அச்சுறுத்திய பின்னரே அவர் ராஜி னாமா செய்தார். வாக்கெடுப்பு நடைபெற்றிருந் தால் ஐரோப்பிய யூனியன் முழுமையும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும்; ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய பிற ஐரோப்பிய பொருளா தாரங்களை, ஏன், உலகப் பொருளாதாரத் தையும் கூட ஒரு பொருளாதார மந்தச் சுழற் சிக்குள் தள்ளியிருக்கும். கிரீஸ் நாட்டில் அர சியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வது, கொந்தளிப்பான உலக நிதிச் சந்தையை சாந்தப்படுத்துவது என்ற நோக்கில்தேச ஒற்றுமைஎன்ற பெயரில், அவசர கதியில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இம்முயற்சி, வளர்ந்து வரும் வேலையின்மை, சமூகத்துறைக்கான செல வினங்களில் வெட்டு, உழைக்கும் நேரம் அதி கரிப்பு, குறைந்த கூலி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள கிரேக்க மக்களிடம் எவ்வித பிரதிபலிப் பினையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை கண்டிராத எண்ணிக்கையில் தேசம் தழுவிய வேலை நிறுத்தங்களை கிரீஸ் நாடு சந்தித்து வருகிறது.

இத்தாலி : இத்தாலியின் அரசியலில் 17 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி இப்போது பதவி விலகியுள்ளார். இத்தாலியின் கடன், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது. அரசுப் பத் திரங்களின் வட்டி 7 சதவீதத்தை தொட்டு விட்டது. இத்தகைய வட்டி விகித அளவில் தான், முதலில் அயர்லாந்து, பின்னர் கிரீஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் மீட்புக்கான கோரிக்கை வைக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. இப்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாங்கம், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி யுள்ளது. முதலில் உடனடியாக 60 பில்லியன் யூரோக்களை சேமிக்கும் அளவிற்கு நட வடிக்கை தேவைப்படுகிறது. இவற்றில் ஊதிய முடக்கம், ஓய்வுபெறும் வயதை உயர்த் துவது, மதிப்புக்கூடுதல் வரி உயர்வு ஆகியன அடங்கும். இவை அனைத்தும் மக்கள் மீது மேலும் துயரங்களைக் குவிப்பவையேயாகும்.

ஸ்பெயின : ஸ்பெயின் நாட்டின் நிலை மையும் இதுவே. இவ்வருடம் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் என்பது பூஜ்யம். நம்ப முடியவில்லை. எனினும் அதுவே உண்மை. வேலையின்மை விகிதம் 22 சதவீதத்தைக் கடந்துள்ளது. பெருமள வுக்கு அதிகமான கடன் சுமை சேர்ந்துள்ளது.

அமெரிக்க : அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து நெருக்கடியின் பிடியிலேயே தொடர்கிறது. நெருக்கடியிலிருந்து மீள்வ தற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் திவால் களை அரசாங்கத்தின் திவாலாக மாற்றிய முந் தைய நடவடிக்கைகளே தற்போதைய நெருக்கடிக்கு வித்திட்டன. அதைப்போலவே, இன்றைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, தாங்க இயலாத பெரும் பெரும் சுமைகளை மக்கள் மீது சுமத்தும் தற்போதைய உத்தி மற்று மொரு ஆழமான நெருக்கடிக்கு வித்திட்டு வருகிறது. இதனால் உருவாகவிருக்கும் நெருக்கடி 1929ம் உலகினை உலுக்கிய பெரு வீழ்ச்சியின் உக்கிரத்தை விட, பல பரிமாணங் களில் மிக மோசமாக இருக்கும்.

இத்தகைய கடினமான சிக்கன நடவடிக் கைகள் பெருவாரியான உலக மக்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதோடு, பெருகி வரும் வேலையின்மையையும் அதிகரிக்கும். இதன் விளைவாக உற்பத்தியில் வீழ்ச்சியும் மொத்த கிராக்கியில் ஏற்படும் சரிவினால் வணிகமும் வர்த்தகமும் பெருமளவில் பாதிக் கப்பட்டு, உலகப் பொருளாதாரத்தில் அதிர் வலை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியா?

இந்த அதிர்வினால் இந்தியா பாதிப்படை யாது என்கிற நம்பிக்கை கானல் நீரே என்பது நிரூபணமாகி வருகிறது. அண்மையில், கேன்ஸ் நகரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் நமது பிரதமர், இந்தியப் பொருளா தாரம் குறித்து பெருமளவு நம்பிக்கை தெரிவித் திருக்கிறார். ஆனால், அனைத்துப் பொருளா தாரக் குறியீடுகளும் இந்தியப் பொருளாதாரம் மந்தமாகி வருவதை மட்டுமல்ல, அது ஏற் கெனவே மந்தத்தின் பிடியில் இருப்பதையே காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உற்பத்தி மிகவும் கீழ் நிலைக்கு இறங்கியுள் ளது. தொழில் உற்பத்திக் குறியீடு 6.1 சதவீதத் திலிருந்து தொடர்ந்து மூன்றாவது மாதமாகக் குறைந்து, செப்டம்பரில் 1.9 சதவீதமாக இறங் கியது. சென்ற ஆண்டில் 8.2சதவீதமாக இருந்த தொழில் வளர்ச்சி இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, வேலை வாய்ப்புக்களில் வீழ்ச்சியும் ஊதியத்தில் முடக்கமும் ஏற்பட்டு, உள்நாட்டு கிராக்கியின் வளர்ச்சியினை எதிர்மறை நிலைக்கு எடுத்துச் செல்லும் அபாயமும் உள்ளது.

இவற்றிற்கெல்லாம் மேலாக ஏற்றுமதி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 81.79சதவீதத் தை தொட்ட பின் தொடர்ந்து சரிவை சந்தித் துக் கொண்டு வருகிறது. தற்போது 10.8சதவீத மாகக் குறைந்துள்ளது. இறக்குமதி நிலை யற்று இருக்கிற போதிலும், வர்த்தகப் பற்றாக் குறை 92 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக் கிறது. நடப்பு நிதியாண்டில் இது 150 பில்லி யன் டாலர்களை எட்டிவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விவசாயத் திற்குப் பிறகு மிகப்பெரிய வேலை அளிக்கும் துறையாக உள்ள நெசவு மற்றும் ஆடை தயாரிக்கும் துறைகளில் உலக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால் வேலையின்மை பெருகி வருகிறது.

இவையனைத்தும் பெருவாரியான இந்திய மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகிறது. அத்தியாவசியப் பண் டங்களின் அதிவேக விலை உயர்வால் தற் போதுள்ள வாழ்வாதார நிலை தொடர்ந்து தாக் கப்பட்டு வருகிறது. பணவீக்கத்தினை கட் டுப்படுத்தி விடுவோம் என அரசு ஜம்பமாகக் கூறிவந்த போதிலும் உணவுப்பணவீக்கம் 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. காய்கறிகளின் விலை 26 சதவீதம், பருப்பு வகைகள் 14 சத வீதம், பழங்கள் 12 சதவீதம், முட்டை, மீன், இறைச்சி 13 சதவீதம், பால் 12 சதவீதம் என உச்சத்தில் நிற்கின்றன.

தேவை சமூக முதலீடுகளே!

இத்தகைய சூழலில், சர்வதேச நிதி மூல தனம் மேலும் பெருமளவு இந்தியாவிற்குள் வரும் வகையில் நிதித்துறையை தாராளமய மாக்க வேண்டும் என்ற இந்தியப் பெரு முதலாளிகளின் கோரிக்கை, இந்திய மக் களின் நலன்களை குழிதோண்டிப் புதைக் கும் முயற்சியே ஆகும். சாமானிய மக்களின் (ஆம் ஆத்மி) நலன்களை காக்க வேண்டு மென்றால் ஐ.மு.கூட்டணி -2 அரசு கார்ப்ப ரேட்களுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் அள்ளிக்கொடுக்கும் வரிச்சலுகைகளை தடுத்து நிறுத்த வேண்டும். (கடந்த இரு ஆண்டு பட்ஜெட்டுகளில் மட்டும் அவர் களுக்கு ரூ.5.2 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது). இதன் காரணமாக முதலீடுகளும் உயரவில்லை; அதன் பயனாக வளர்ச்சியும் ஏற்பட்டுவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களின் வாங்கும் சக்தி உயரவில்லையெனில், எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது. வரிகள் முழுமையாக வசூலிக்கப்பட்டு, சமூக - பொரு ளாதாரக் கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலமே வேலைவாய்ப்புக்களை உருவாக்க வும் உள்நாட்டு கிராக்கியைப் பெரிதாக்கவும் இயலும்.

தமிழில : ஜெ.விஜயா, மதுரை

நன்றி : ஹிந்துஸ்தான் டைம்ஸ் (15.11.2011)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com