Contact us at: sooddram@gmail.com

 

பாராளுமன்ற சம்பிரதாயங்களை எதிர்க்கட்சித் தலைவர் மறந்துவிட்டாரா?

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், மக்களின் நல்வாழ்வை யும் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இலங்கையை பொருளாதார ரீதியிலும், மற்றெல்லாத் துறைகளிலும் வளம்மிக்க நாடாக உருவாக் குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஒரு வலுவான அடித்தள மாக அமைந்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமாக நன்மையடைபவர்கள் சாதாரண பொதுமக்களும் நாட்டுக்காக தங்கள் உழைப்பை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்களுமாகும். இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக் கொடு க்கும் உல்லாசப் பிரயாணத்துறையை வளப்படுத்தி, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெற்றுக் கொடுப்பதற்கும், ஜனாதிபதி அவர்கள் உல்லாசப் பிரயாணத்துறைக்கு வரிச் சலுகைகளை யும் ஏனைய உற்சாகமூட்டும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியி ருப்பது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும்.

பொதுவாக வரவு செலவுத் திட்டத்தை நாட்டின் நிதியமைச்சர் சமர்ப்பிக்கும் போது அன்று பாராளுமன்றத்தில் கதாநாயகனாக அவர் விளங்குவார். பாரா ளுமன்றத்தில் அவர் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போது எதி ர்க்கட்சி அங்கத்தவர்கள் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, அவரது வரிவிதிப்பு முறைகளை எதிர்க்கட்சியினர் எதிர்த்தாலும் கூட அவரது உரைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் கெளரவமான முறையில் நடந்து கொள்வார்கள்.

ஒரு வரிவிதிப்பை பாராட்டி அரசாங்கக் கட்சியினர் கரகோஷம் செய்யும் போது எதிர்க்கட்சியினர் கரகோஷம் செய்யாமல் இருந்தாலும் அமைதி யாக இருப்பார்கள். இதுவே வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற சம்பிரதாய மாகும்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் நிதி அமைச்சர் பதவியை வகிக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திக் கொண் டிருந்த போது, எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சம்பிரதாயங்களை துச்ச மாக எறிந்துவிட்டு மிகவும் வேதனைக்குரிய முறையில் நடந்து கொண் டமை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு மாறான ஒரு செயல் என்று நாம் கண்டிக்க விரும்புகின்றோம்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரைகள் கடந்த காலத்தில் ஜனாதி பதி ஆர்.பிரேமதாஸவின் பதவிக்காலத்திலும் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்கவின் காலத்திலும் நடைபெற்ற சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கூப்பாடு போட்டு அமைதியை சீர்குலைத்த சம்பவங்கள் பல இடம்பெற்றன. இதனால் அன்றைய ஜனாதிபதிகள் பதற்றமடைந்து செய்வதறியாது வேதனையுடன் பாராளுமன்றத்தின் அமர்வில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்தத் தடவை ஜனாதிபதி அவர்கள் மக்களுக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போதும், இவ்வி தம் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும், பாராளுமன்ற சுதந்திரத்திற்கும் தீங்கிழைக்கக்கூடிய வகையில் சில எதிர்கட்சியினர் செயற்பட்டனர்.

ஜனாதிபதி அவர்கள் 1970ம் ஆண்டில் 24 வயது இளைஞராக பாராளுமன்றத் திற்கு பிரவேசித்து, தன்னுடைய திறமையினால் படிப்படியாக அமைச்சராக வும், எதிர்க்கட்சித் தலைவராகவும், பிரதம மந்திரியாகவும், ஜனாதிபதியாக வும் பல்வேறு பதவிகளை வகித்த அனுபவத், முதிர்ச்சிமிக்க அரசியல் வாதி என்பதை திங்களன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட உரையின் போது நடந்து கொண்டது உண்மையிலேயே நாட்டு மக்களாகிய அனை வரும் மகிழ்ச்சி பரவசமடைய வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

முன்னர் இருந்த ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு ஆர்பாட்டங் களை செய்து அந்த ஜனாதிபதிகளை பேசுவதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் குறுக்கீடுகள் செய்து கொண்டே இருப்பார்கள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவ்விதம் பதற்றமடையும் நிலை யில் நடந்து கொள்ளவில்லை. தனக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பவர்க ளைப் பார்த்து கோபப்படவும் இல்லை. சிரித்துக் கொண்டே எதிர்க்கட்சியி னருக்கு அவ்வப்போது சில கிண்டல்களை செய்து கொண்டு, தனது வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

ஜனாதிபதி அவர்களை தடுமாற்றமடையச் செய்து, ஆத்திரமடையச் செய்வத ற்கு எதிர்க்கட்சியினர் எடுத்த முயற்சிகள் குறித்து ஆத்திரமோ, கோபமோ அடையாமல், ஜனாதிபதி அவர்கள் மிகவும் அமைதியான முறையில் உரையை நிகழ்த்திக் கொண்டிருந்ததனால் தங்கள் முயற்சி வெற்றிபெறாது என்பதை உணர்ந்து கொண்டு எதிர்க்கட்சியை சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அமைதியாகி ஒவ்வொருவராக சபையை விட்டு வெளியேறினார்கள்.

பொதுவாக பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் ஒருவர் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்திய பின்னர், அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனை வருக்கும் ஒரு தேனீர் விருந்தை அளிப்பார். அந்த தேனீர் விருந்தின் போது, ஜனாதிபதி, பிரதம மந்திரி, சிரேஷ்ட அமைச்சர்கள், நிதி அமைச் சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட, எதிர்க்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து அரசியல் பேதங் களை மறந்து நண்பர்களாக அன்புடன் பரஸ்பரம் உறவாடியவாறு தேனீர் விருந்தில் கலந்து கொள்வார்கள்.

இது ஒரு பாராளுமன்ற சம்பிரதாயமாகும். இந்த பாராளுமன்ற சம்பிரதாயத்தை ஐக்கிய தேசிய கட்சி குழி தோண்டி புதைத்துவிட்டமை குறித்து நாம் வேத னைப்படுகின்றோம். இந்தத் தடவை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரோ இந்த தேனீர் விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

பாராளுமன்ற சுதந்திரத்தைப் பற்றி பேசும் சர்வதேச ஜனநாயக சங்கத்தின் ஆசிய பிராந்திய தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச அரங்கில் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தைப் பற்றி ஒரு ஜனநாயக வாதியைப் போன்று பேசினாலும் எங்கள் நாட்டின் பாராளுமன்றத்தில் ஜன நாயக சுதந்திரத்திற்கு மாறான முறையில் நடந்து கொள்வது உண்மையி லேயே பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர் களை வேதனையில் ஆழ்த்தும் என்பது திண்ணம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com