Contact us at: sooddram@gmail.com

 

சனல் 4 இன் முகத்திரையை கிழிக்குமா லண்டன் சூட்டுக்குறி?

(பீமன்)

இலங்கையில் புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகள் தமது பணவசூலிப்பை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆயுதமாக போர்குற்றம், சர்வதேச விசாரணை எனும் கோஷங்களை கையிலெடுத்துள்ளனர். வன்னியிலே புலிகள் தனியானதொரு சட்டவிரோத நிர்வாகக் கட்டமைப்பை வைத்திருந்தபோது, அவர்கள் தமக்கெனத் தனியான தொலைக்காட்சி , வானொலி சேவைகளையும் வைத்திருந்தனர். புலம்பெயர் தேசத்திலே தமக்கு தேவையான நிதி மற்றும் வளங்களை பெற்றுக்கொள்வதற்கான மூளைச்சலவைச் பிரச்சாரங்கள் இவ்வூடகங்களுடாக முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையிலே புலிகளியக்கம் அழிக்கமுடியாதவொரு மாபெரும் மரபு படையணியை கொண்டுள்ளது என நம்பியிருந்ததாலோ, அன்றில் பிரபாகரனின் கட்டுப்பாட்டிலேயே யாவும் இருக்கவேண்டும் என்ற எழுதப்படா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாலோ, தலைமை செயலிழக்க நேரிட்டால் அதன் இரண்டாம் நகர்வு எங்கிருந்து செல்வது என்பதற்கான திட்டங்கள் எதுவும் இருந்திருக்காததால், புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டவுடன், புலம்பெயர் புலிகள் தமது பணவருவாயின் பெரும்பகுதியை, குறிப்பாக மக்களிடமிருந்து கிடைக்கும் கப்பப்பணத்தை இழக்கநேரிட்டது.

புலம்பெயர் தேசத்திலே புலிகளின் ஆதரவு ஊடகங்கள் என தம்மை எத்தனையோ ஊடகங்கள் காண்பித்துக்கொண்டாலும், வன்னியிலிருந்து இயங்கிய ஊடகங்களின் செய்திகளை நம்பிய அளவிற்கு புலித்தலைமையின் அழிவிற்கு பின்னர் புலம்பெயர் ஊடகங்களை நம்புவதற்கு மக்கள் தயாரக இல்லை. இதனை உணர்ந்து கொண்ட புலம்பெயர் புலிகளின் வலையமைப்பினர் தொடர்ந்தும் தமிழ் மக்களை தமது மாயையினுள் வைத்திருந்து அறவிடுதலை முன்னெடுப்பதற்கான ஒரே சாதனமாக சனல் 4 வெளியீடுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு சனல் 4 ஏமாற்றுகின்றதா? அன்றில் ஏமாறுகின்றதா? ஏன்பதே தொக்கி நிற்கின்ற கேள்விகளாகும்.

சனல் 4 வையும் பிரித்தானியா உட்பட்ட உலக நாடுகளையும் புலிகள் ஏமாற்றுகின்றார்களா? அன்றில் புலிகளுடன் இணைந்து சனல் 4 ஏமாற்றுகின்றதா என்பதை கடந்த 7ம் திகதி சனல் 4 வெளியிட்ட வீடியோ காட்சி நிரூபிக்கப்போகின்றது.

குறிப்பிட்ட வீடியோவில், இவ்வருடம் ஜுன் மாதத்தில் இலங்கையில் படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும், அவனின் முதுகில் கம்பி , வயர் , பொல்லுகள் போன்றவற்றால் தாக்கப்பட்டதாக முதுகில் தளும்புகளும் காண்பிக்கப்பட்டன.

ஆனால் இவ்விளைஞன் பிரித்தானியாவிலே சட்டவிரோதமாக இயங்குகின்ற குறிசுடும் இரகசிய சித்திரவதைக் கூடங்களில் குறி சுட்டுக்கொண்டவர் எனத் தெரியவருகின்றது. பிரித்தானியாவிலே அரசியல் தஞ்சம் கோருவோர் தாம் இலங்கையில் துன்புறுத்தப்பட்டோம் என வழங்குகின்ற பொய் தகவல்களை நிரூபிப்பதற்காக மேற்படி சட்டவிரோத நிலையங்களில் பணம்கொடுத்து உடம்பில் குறி சுட்டுக்கொள்கின்றனர்.

பிரித்தானியாவில் சவுத்தோல் எனுமிடத்தில் லேடிமார்கெட் வீதியில் முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டவரும் புலிகளியக்கத்தில் முல்லைபிரதேச தளபதியாகவிருந்தவருமான அப்பாச்சி என அழைக்கப்படும் நபர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடத்தில் இவ்வாறானதொரு சித்திரவதை மையம் இயங்கி வந்துள்ளது. குறிப்பிட்ட கட்டிடத்தை வங்கி ஒன்று சுவீகரித்துக்கொண்டதை அடுத்து குறிப்பிட்ட கூடம் தற்போது அங்கிருந்து பிறிதொரு இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்படும் மேற்படி குறிசூட்டுக்காக 100 - 500 பவுண்டுகள் அறிவிடப்படுகின்றது. ஒருபங்கு நைட்றிக் அமிலமும் முன்று பங்கு ஹைட்றோ குளொறிக் அமிலமும் கொண்ட தங்கம் உருக்குவதற்கு பயன்படும் அமிலக்கலவை மூலம் இக்குறி சூடு இடம்பெறுகின்றது.

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோருவோர் மத்தியில் மிகவும் பிரபல்யமாகவுள்ள குறிசுடுதலினை அங்குள்ள சொலிசிற்றர்கள் சிலரே நடாத்துகின்றனர். அரசியல் தஞ்சம் கோரலுக்கான கோவைத் தயாரிப்பு வேலைகள் யாவற்றையும் கொந்தராத்து அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் சொலிசிற்றர்கள் குறிசுடுதல், போலிக்குறியை அடிகாயத்தளும்பு என வைத்தியர் சான்றுதல்களை பெறுதல், மேலதிக போலி ஆவனங்கள் தயாரித்தல் போன்ற சகல விடயங்களுக்குமாக பெரும்தொகைப் பணத்தை அறவிடுகின்றனர். குறிகளை அடிகாயத் தளும்புகள் என குறிப்பிட்ட சில வைத்தியர்களே சிபார்சு செய்வதாகவும், இலங்கையர்களான இவ்வைத்தியர்கள் இதற்காக நோயாளிகளிடம் நேரடியாக பணம் பெறுவதில்லை எனவும் சொலிசிற்றர்களே இவர்களுக்கான லஞ்சப்பணத்தை இரகசியமாக வழங்குவதாகவும் அறியமுடிகின்றது.

சனல் 4 வில் தோன்றியுள்ள இவ்விளைஞனின் அரசியல் தஞ்சம் சம்பந்தமான வழக்கினை தனோஜா எனப்படுகின்ற சொலிசற்றர் ஒருவரே மேற்கொள்வதாகவும், தனோஜா புலிகளின் தலைமைச் செயலகம் எனப்படுகின்ற விநாயகம் தலைமையிலான அணியினை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது. குறிப்பிட்ட இளைஞனிடம் 'நீர் இவ்வாறு ஒரு தொலைக்காட்சியில் தோன்றினால் உமக்கு மீண்டும் இலங்கை செல்ல முடியாது என்ற அடிப்படையில் அரசியல் தஞ்சம் பெற்றுக்கொள்ள முடியும்' என தெரிவித்தே இளைஞனை தொலைக்காட்சியில் தோன்ற தனோஜா தூண்டியதாகவும் அற்கான இணைப்புக்களை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் அறியக் கிடைக்கின்றது.

குறிப்பிட்ட இளைஞன் பொல்லுகள், கம்பிகள், வயர்களால் தாக்கப்பட்ட காயங்களே இவை என தனது முதுகுப்புறத்தை காட்டுகின்றார்.



மேற்படி படத்தை பார்கின்ற எவராலும் இதன் உண்மைத் தன்மையை ஊகித்து கொள்ள முடியும். வயர், கம்பி, சைக்கிள்செயின், இரும்பு என்பவற்றால் தாக்கப்பட்ட காயங்களையும் அவற்றால் உருவாகிய தளும்புகளையும் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. இங்கு படத்தில் உள்ள இளைஞனின் முதுகில் ஒரே பிறசினால் பெயின்ட் அடித்தால் போல் உள்ளதை பார்க்க முடிகின்றது. அத்துடன் இளைஞனின் முள்ளந்தண்டு பள்ளத்திலும் துல்லியமாக கீறப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

இது போலியான குறிச்சூடு என லண்டனில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருமே தமக்குள் பேசிக்கொள்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட வெளியீடானது பிரித்தானியப் பிரைஜைகள் மத்தியில் இலங்கைக்கு மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசு மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு சம்;பந்தப்பட்ட அனைவரையும் நீதியின் முன் கொண்டு செல்லவேண்டும். குறிப்பிட்ட இளைஞர்களை சித்திரவதைகள் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற சிறந்த வைத்திய நிபுணர்களிடம் ஆஜர்படுத்தி இதன் உண்மைத் தன்மையை உலகிற்கு உணர்த்தவேண்டும்.

இதிலுள்ள உண்மைகளை கண்டறிவதற்கு சனல் 4 தொலைக்காட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கவேண்டும், அவ்வாறு அது ஒத்துழைப்பு வழங்க மறுக்குமாக இருந்தால் சனல் 4 மேற்படி தகவல்கள் பொய்யானவை என தெரிந்து கொண்டு, தீய நோக்குடன் ஒளிபரப்பியுள்ளது என்ற முடிவுக்கு இலகுவாக வரமுடியும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com