Contact us at: sooddram@gmail.com

 

தெற்கை நோக்கிய அதிவேக நெடுஞ்சாலை...

அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்டு வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்புடன் குறுகிய நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை சென்றடையக் கூடிய நெடுஞ்சாலையொன்று முதன் முதலில் இலங்கையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப் படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவிருக்கும் இப்பெ ருஞ்சாலை கொட்டாவையிலிருந்து காலி மாவட்ட பின்னடுவ வரை 96 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டது. சுமார் 700 கோடி ரூபா செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்நெடுஞ்சாலைக்கு ஜப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எட்டு தொடு முனைகளைக் கொண்ட இந்நெடுஞ்சாலையில் விசேடமாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து பொலிசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத் தப்படவிருக்கின்றனர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள நவீன சிசிரிவி கமராக்கள், வாகனங்களின் ஓட்டத்தை கண்காணித்துக் கொண்டிருக்கும்.

குறைந்த பட்சம் 100 மைல் வேகத்தில் வாகனத்தை செலுத்தி செல்வதற்கான ஒழுங்கு முறைகள் விதிக்கப்பட்டுள்ள இந்நெடுஞ்சா லையில் விபத்துக்களை தவிர்ப்ப தற்காக தீவிரமான போக்குவரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மீறி செலுத்தும் வாகனங்கள் கமராவில் பதிவாகி பொலிசாரின் கவனத்திற்குள்ளாக்கப்படும்.

அவசர விபத்து சேவைகளுக்கு தீயணைக்கும் படை மற்றும் அம்புலன்ஸ் சேவை கிடைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நெடுஞ்சாலையை குறுக்கீடு செய்யக்கூடிய வகையில் பாதைகள் இல்லை. பாதசாரிகள் இல்லை. துவிச்சக்கர வண்டி பயன்படுத்தத் தடை, ஆட்டோவிற்கு இடமில்லை, மாட்டு வண்டிகள் இல்லை. ஆகவே எந்த இடையூறுமின்றி வாகனத்தை செலுத்தக்கூடிய வகையில் சீராக பாதை அமைந்திருக்கிறது. அதிவேக பாதையாக இருந்தாலும் சாரதிகள் தங்களைக் கட்டுப்ப டுத்திக் கொள்ள ஆங்காங்கே எச்சரிக்கை சமிக்ஞைகளும் உண்டு.

இந்நெடுஞ் சாலையில் நல்ல தேர்ச் சியுள்ள சாரதிகளே வாகனங்களை செலுத்த முடியும். அதற்காக இலங்கை போக்குவரத்து சபை நல்ல அனுபவமுள்ள சாரதிகளைத் தேர்ந்தெடுத்து பயிற்சிகளை வழங்கியுள்ளது. இவ்வழியே பயணிகள் சுகமாக பயணிக்கக் கூடிய வகையில் நவீன சொகுசு பஸ்களும் கொள்வளவு செய்யப்பட்டுள்ளன. இப்பாதை தனியார் பஸ் போக்குவரத்து சேவைக்கு பயன்படுத்திக் கொள்ள கணிசமான அளவு இடம்கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழியை பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர் நுழைவு கட்டணமொன்றை செலுத்த வேண்டும். இவ்வாறு எட்டு நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரம்ப நுழைவாயிலில் இலத்திர னியல் முறையில் அமைக்கப் பட்டுள்ள இயந்திரத்தில் நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பயணத்தின் இறுதியில் அமைகின்ற வாகன வாயிலில் பெற்ற நுழைவுச் சீட்டை ஒப்படை த்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். கட்டணங்கள் வாகனங்களின் தரத்திற்கேற்ப வேறுபட்டிருக்கும். நெடுஞ்சா லைக்குள் பிரவேசிக்கக் கூடிய வகையில் இடையில் எட்டு நுழைவு வழிகளும் அமைந்திருக்கின்றபடியால் இடையில் பிரவேசிக்கும் வாகனங்கள் உட்பட பிரயாண இறுதியில் அதன் அதன் பிரயாணத் தூரத்தைக் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு மணி நேரத்திற்குள் இந்த நெடுஞ்சாலையை கடந்து செல்வதற்கான வாய்ப்பு இருப்பது போல் இலங்கையில் வேறு எந்த இடத்திலும் இதுவரை அமையவில்லையென பெருந்தெருக்கான பொறியியலாளர் சந்திரசிறி தெரிவிக்கின்றார்.

கொட்டாவை ஆரம்ப நுழைவாயிலிருந்து அடுத்த மாற்று நுழைவாயில் அமைந்துள்ள கஹதுடுவ என்ற இடத்துக்கிடையிலுள்ள 7 1/2 கிலோமீற்றர் தூரத்தை நான்கே நிமிடத்தில் கடந்து சென்றார்கள் என்றால் அதன் வேகத்தையும் பாதையின் சீரான அமைப்பையும் நாம் யூகித்துக் கொள்ள முடியும்.

கார், ஜீப், வெகன், கெப்ஸ், 9 ஆசனங்களைக் கொண்ட வேன், சிறிய ரக டிரக் ஆகியவற்றுக்கு நெடுஞ்சாலையைக் கடப்பதற்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 400 ஆகும்.

9 ஆசனங்களுக்கு மேற்கொண்ட பயணிகள் வேன், 33 ஆசனங்களுக்கு உட்பட்ட பஸ் ஆகியவற்றுக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 700 ஆகும்.

33 ஆசனங்களுக்கு மேற்பட்ட பஸ், லொறி ஆகியவற்றுக்கு நுழை வுக் கட்டணம் ரூபாய் 1500 ஆகும்.

அதிகனரக வாகனங்கள் நெடுஞ் சாலையைக் கடப்பதென்றால் நுழைவுக் கட்டணமாக 2000 ரூபா அறவிடப்படும்.

பாதையை சீராக வைத்திருப்ப தற்கும் பராமரிப்பதற்குமாக நவீன ரக இயந்திரங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. தீ விபத்துக்களையும், வாகன விபத்துக்களையும் தவிர்ப்பதற்காக கண்காணிப்புக் குழுவொன்று 24 மணி நேரமும், இவ் நெடுஞ்சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் அத்தோடு பெருந்தெருக்கள் திணைக்களத்தைச் சேர்ந்த 500 ஊழியர்களும், பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 500 பேருமாக இதர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விபத்துக்கள் ஏதும் தற்செயலாக ஏற்படுமாயின் ஒரு நொடிக்குள் அவ்விடத்தில் விபத்துச் சேவையினர் விரைந்து அத்தியாவசிய நடவடிக்கையில் ஈடுபடக் கூடிய அவசர சிகிச்சை பிரிவையும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்கும் சாரதி தன்னுடைய வாகனம் இப்பாதைக்குச் செல்ல தகுதியானதா, என் மனநிலை திடமாக இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நுழைவாயிலும் கண்ணைக் கவரும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் வாகனத்தைச் செலுத்தும் போது பின்னால் அதி வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டு வரும் சாரதிக்கு உங்களின் செயற்பாட்டை சமிக்ஞை மூலம் தெரிவிப்பதற்கான வழிகாட்டி அறிவித்தல்களும் ஆங்காங்கே இருக்கின்றன.

உள்ளே பிரவேசிப்பதும் வெளியேறுவதும் மற்றும் வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துவதும் பின்னால் வரும் வாகனத்திற்கு வழி விடும் விதிமுறைகள் நிச்சயமாக கடைபிடிக்கப்பட வேண்டிய விதி இங்கே நூற்றுக்கு நூறு அத்தியாவசியமாகின்றது. மும்மொழிகளிலுமான அறிவித்தல்கள் விதிமுறைகளை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

வாகன நெரிசல்களுக்குள்ளும், ஜன சந்தடிக்குள்ளும் சிக்கித் தவித்த நீங்கள் அழகான வயல்வெளிகளையும், தெளிந்தோடும் ஆற்று நீரையும் ரசித்த வண்ணம் சுகமான ஒரு பிரயாணத்தை அனுபவிக்க வேண்டுமானால் தெற்கை நோக்கி கடுகதி நெடுஞ்சாலையில் பிரயாணத்தை மேற்கொண்டு பாருங்கள்.

அ.பரசுராமன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com