Contact us at: sooddram@gmail.com

 

யாழில் திடீரென முளைக்கும் விடுதிகளால் என்றுமில்லாதவாறு கலாசார சீரழிவு!

(க. சிவராசா)

யாழ்ப்பாணத்தில் இன்று மூலைமுடுக்கிலெல்லாம் விடுதிகள் இயங்குகின்றன. தென்னிலங்கையிலிருந்து வருவோர் மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்து வருபவர்களும் இங்கு தங்குகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் பல விடுதிகளுக்கு உரிய அனுமதிப்பத்திரங்கள் கிடையாது. தாம் நினைத்த மாத்திரத்தில் அல்லது ஏதாவது அரசியல் பின்னணியை கொண்டு பயமின்றி இவர்கள் விடுதிகளை இஷ்டம்போல் நடத்திவருகின்றனர். பல இடங்களில் குறிப்பாக நகர்ப்பகுதியில் வீடுகள் பலவும் விடுதிகளாக இயங்குகின்றன.

உண்மையில் ஒரு விடுதியை நடத்துவதாயின் அதற்குப் பல சட்டதிட்டங்கள் உள்ளன. தங்க வருபவர்களின் பாதுகாப்பு, வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் அங்கு இருக்க வேண்டும். அவ்வாறான வசதிகள் உள்ளனவா என்பதை நேரில் சென்று பரிசீலணை செய்தே அதிகாரிகள் விடுதி நடத்துவதற்கான அனுமதியை வழங்குவார்கள். இதுவே நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ள வழமையான நடைமுறையாகும்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான விடுதிகளுக்கு இத்தகைய அனுமதிப்பத்திரமே கிடையாது. அதனால் அது முறையாக இயங்குகிறதா என்பதை பரிசோதனை செய்ய அதிகாரிகள் செல்வதில்லை.

அனுமதிப் பத்திரமில்லாது இயங்கும் விடுதிகளைக் கண்டுபிடித்து சீல் வைப்பதுடன் அதனைச் சட்டவிரோதமாக நடத்தியமைக்காக அதன் உரிமையாளரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பொலிஸார் இதனை முறையாகச் செய்கின்றனரா என்பது இப்போது யாழ்ப்பாணத்தில் கேள்விக் குறியாகவே உள்ளதாகத் தெரிகிறது.

காரணம் அண்மைக்காலமாக இந்த சட்டவிரோத விடுதிகள், மற்றும் அனுமதிபெற்று இயங்கும் விடுதிகளில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் இச்சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சில இணையத்தளங்கள் சில சம்பவங்களை மிகைப்படுத்திக் கூறினாலும் உள்ளூர் ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் யாழ்ப்பாணத்தில் இப்படியா? எனச் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

அண்மையில் ஒரு விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனச் சில இளம் பெண்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இளம் பெண்களில் பலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இச் செய்தியைப் பத்திரிகைகளில் வாசித்த பலருக்கும் அதிர்ச்சி. எப்படி இருந்த யாழ்ப்பாணத்தில் இப்படியா என ஒவ்வொருவர் மனதிலும் கேள்வி எழுந்தது.

யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும் ஏ-9 பாதை திறக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத் திற்கு எவரும் வந்துபோகும் நிலை ஏற்பட்டது. எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. இவ்வாறு வந்துசெல்லும் நபர்கள் தங்குவதற்குத் தங்குமிட தேவையேற்பட்டபோது பலரும் வருமானத்தை ஈட்டுவதற்காக சிறிய இடங்களைக் கூடத் திருத்தி தங்குமிட விடுதிகளாக்கினர்.

அவ்வாறு ஆரம்பித்து தங்குபவர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்க தங்குமிடத்திலேயே மதுபான வகைகள் அனுமதி பெறாமலேயே தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. அதன் பின்னர் தங்க வருபவர்களை மேலும் ஈர்ப்பதற்காக மதுவுடன் சேர்த்து மாதுக்களையும் ஒரு சில விடுதி உரிமையாளர்கள் விநியோகிக்கத் தொடங்கினர்.

அதன் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே அண்மையில் அந்த விடுதியில் கைதான இளம் பெண்கள் விவகாரமும் அமைந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸார் தமது கடமையில் இறுக்கமாக இருந்திருந்தால் இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சம்பம் நடந்த பின்னர் அதனைக் கண்டுபிடித்து விசாரணை நடத்துவது பெரிய கெட்டித்தனமாகக் கொள்ள முடியாது. நடக்கவிடாமல் தடுப்பதே உண்மையான கெட்டித்தனம்.

யாழ்ப்பாணத்தில் இதுபோன்ற கலாசார சீரழிவுச் சம்பவங்கள் இடம்பெறுகிறது என்பது ஊடகங்கள் வாயிலாக பலதடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டே வருகிறது. அதனால் பொலிஸார் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்திருக்க வேண்டும். இப்போதாவது விழிப்படைய வேண்டும். இனிமேல் இவ்வாறானதொரு சம்பவத்திற்கு இடமளிக்கக் கூடாது.

சிலர் யாழ்ப்பாணத்தில் கலாசார சீரழிவை வேண்டுமென்றே ஏற்படுத்தி உயர் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் மிக்க வடக்கின் தமிழர் பாரம்பரிய மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முனைகின்றனர். அதனால்தான் சில முகவரியற்ற இணையத்தளங்கள் இதுபோன்ற செய்திகளுக்கு கை, கால் வைத்து பிரசுரித்து வருகின்றது.

யாழ். விடுதி ஒன்றில் இறுதியாக நடந்த அச்சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம் பவத்திற்கு இடமளிக்கக் கூடாது. இவ் விடயத்தில் பொலிஸாரினது பங்களிப்பு மிக முக்கியமாக உள்ளது.

வடக்கில் இன்று என்றுமில்லாதவாறு கலாசாரம் சீரழிந்து வருகிறது என்று சொன்னால் அதனைப் பெரிதாக ஒருவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மண்பற்றுள்ள சிலர் அவ்வாறு எதிவுமில்லை, எல்லாம் இந்தப் பத்திரிகைகள் திரிபுபடுத்தும் பொய்யான செய்திகளே இத்தகையதொரு பிரசாரத்துக்குக் காரணம் என்று சொல்லுவர். அதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் உண்மைகள் மறைக்கவும் முடியாது.

உண்மையில் யாழ்ப்பாணத்திலே உருவான தமிழர் கலாசாரம் பண்பாடு, உபசரிப்பு, ஒற்றுமை எல்லாவற்றுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது ஒவ்வொருவர் மனங்களிலும் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகளே! அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிகவும் தரக்குறைவான நடத்தைகள் தொடர்பான செய்திகள் முழுத் தமிழ்ச் சமூகத்தையும் பாதிப்படையச் செய்துள்ளது.

சிறந்த கல்வியறிவும், கலாசார பண்பாடும் கொண்ட யாழ்ப்பாண சமூகத்திலிருந்து இவ்வாறான கலாசார சீர்குழைவுச் செய்திகள் வெளிவருவது ஒட்டுமொத்த அப்பிரதேச மக்கள் அனைவருக்கும் இழிவை ஏற்படுத்துகிறது. எனவே இதற்குக் காரணமான சக்திகளை அல்லது தனிநபர்களைக் கண்டு பிடித்து சட்டத்தின் முன்னாள் நிறுத்துவது அனைவரதும் தலையாய கடமையாக உள்ளது.

யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளாக இருப்போர் இவ்விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்லது. வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறுவதால் மக்களுக்குச் சேவை செய்வதாக நினைத்துத் திருப்திப் படக்கூடாது. இவ்வாறான குறைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும்.

இப்போது யாழ்ப்பாணத்தில் சகல பிரதேசங்களிலும் பொலிஸ் நிலையங்கள் இயங்குகின்றன. இராணுவ முகாம்களும், காப்பரண்களும் கூட ஆங்காங்கே உள்ளன. எனவே பொதுமக்கள் எவர் மீதாவது சந்தேகம் கொண்டால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கலாம். எமக்கு என்ன என்று அல்லது இதனால் வீண் பிரச்சினைக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று நினைக்கக் கூடாது. அவ்வாறு ஒவ்வொருவரும் நினைத்தால் நிலைமையை யார் சரி செய்வது?

அதே போன்று பொதுமக்கள் தெரிவிக்கும் முறைப்பாடுகளுக்கு பொலிஸாரும் பொறுப்புடன் செயலா ற்ற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்பட்டுள்ளதாகவும், மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதற்கு மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முனையக் கூடாது. பொலிஸார் சட்டத்தை இறுக்கமாக கடைபிடித்தாலே குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தாரைப் பார்த்து எமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஏனைய பிரதேச மக்கள் விரும்பியதுண்டு. ஆனால் இன்று அதே யாழ்ப்பாணத்தில் நடப்பவற்றைக் கேட்டால் பயமாக உள்ளது. கோயில், குளம், தீர்த்தம், என்று பண்பாட்டு விழுமியங்களுடன் மிளிர்ந்த யாழ்ப்பாணம் இப்போது பீச், ஹோட்டல், லொட்ஜ் என்று களியாட்ட பிரதேசமாகிவிட்டது.

இதில் யாரையும் சொல்லிக் குற்றமில்லை. எல்லாம் பெற்றுத் தருகிறோம் என்று வீர வசனம் பேசி ஆயுதங்களுடன் புறப்பட்டவர்கள் எமக்கு விட்டுச் சென்ற சொத்துத் தான் இவை. அவர்கள் எதையுமே பெற்றுத் தராவிட்டாலும் இந்தப் பெயரையாவது பெற்றுத் தராமல் விட்டிருக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com