Contact us at: sooddram@gmail.com

 

மாவீரர் தினம்

இராணுவ அழிப்பிற்குத் துணை போகும் புலம்பெயர் வியாபாரிகள்

(அஜித்)

இன்று (27/11/2011) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த போராளிகள் நினைவாக மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் மூன்றாவது தடவையாக இப்போது இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதே வேளை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராஜபக்ச குடும்ப பாசிச அரசு இராணுவ ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏற்கனவே கோரமான இராணுவ ஒடுக்குமுறைக்குள்ளும், இலங்கை உளவுத்துறையின் கண்காணிப்பினுள்ளும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது பெருந்தேசிய வாத ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலம் வரை கிறீஸ் பூதங்கள் என்ற புரளியைக் கட்டவிழ்த்துவிட்ட இலங்கை இராணுவ சர்வாதிகாரிகள், தமிழ்ப் பேசும் மக்கள் பிரதேசங்களை நிரந்தரமாக இராணுவமயப்படுத்த வழிகளை தேடிக்கொண்டிருந்தனர்.

இப்போது மாவீரர்தினம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினம் என்ற புரளிகளை உருவாக்கி, அது குறித்த பய உணர்வை உருவாக்கி இராணுவ ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் சுவரொட்டிகளை இராணுவமே சில இடங்களில் பதிந்துவிட்டு மாணவர்களை மிரட்டிவருவதாக பலர் சந்தேகிக்கின்றனர்.

இலங்கை அரசு புலிகளின் அல்லது அதன் ஆதரவாளர்களின் இருப்புக் குறித்த அச்சத்தை உருவாக்குவதனூடாக தமது இராணுவ நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கிறது.

இராணுவத்தை வடகிழக்கில் தொடர்ந்து நிலைகொள்ளச் செய்வதற்கான நியாயத்தை உருவாக்கிக்கொள்ளுதல் இதன் பிரதான காரணங்களில் ஒன்றாகும்.

தவிர, அண்மைக்காலங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து இயல்பான மக்கள் எழுச்சிகள் உருவாகி அரசிற்குப் பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தது. இவ்வாறான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் புலிகள் குறித்த பயத்தை முன்வைத்து போராட்டங்களில் முன்னணி வகித்தவர்களைக் கைது செய்வதற்கும், அழிப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக்கொள்கிறது. இது இரண்டாவது பிரதான காரணம்.

இதுவரையில் ராஜபக்ச குடும்ப அரசு உட்பட அனைத்துப் பேரினவாத அரசுகளும் புலிகளைச் சுட்டிக்காட்டியே சிங்கள மக்கள் மத்தியிலான மக்கள் எழுச்சிகளை மட்டுப்படுத்தி வந்திருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கிறோம் என்றவர்கள் இன்று புலிகள் அற்றுப்போன நிலையில் போராட்டங்களை எதிர்கொள்கின்றனர். சிங்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்புப் போராட்டங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. இவற்றை ஒடுக்குவதற்கு இந்த வருட ஆரம்பத்திலிருந்தே புலிகள் மீண்டுள்ளனர் என்று ராஜபக்ச அரசு கூற ஆரம்பித்திருந்தது. இந்தப் பிரச்சாரம் இனிமேல் தீவிரமடையும். இது மூன்றாவது முக்கிய காரணமாகும்.

தேசிய இனப்பிரச்சனை தீர்வு குறித்துப் பேச முற்பட்ட போதெல்லாம் புலிகளை அழித்துவிட்டு வருகிறோம் என்றவர்கள் புலிகள் அழிக்கபட்டு முன்று வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் அது குறித்துப் ஆரம்ப நிலை நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளவில்லை. புலிகள் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை நிறுவிக்கொண்டால், மீண்டும் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்பதே முன்னிலைக்கு வரும். தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு குறித்துப் பேசுவதைக் கூடப் பின்போடலாம். நான்காவது பிரதான காரணம் இது.

இலங்கை அரசின் போர்க்குற்றம், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரம், இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்ற அனைத்தும் இன்று உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவைத் தோற்றுவித்துள்ளது. புலிப் பூச்சாண்டி காட்டி அவற்றை அழிப்பதற்கான வழிமுறை ஐந்தவது காரணமாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக புலிகள் தமது நடவடிக்கைகள ஆரம்பித்துவிட்டார்கள் என்பதைக் முன்வைத்தே ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வருகின்ற முன்னணி சக்திகளையும், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து குரல்கொடுக்கும் ஜனநாயக சக்திகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு இலகுவாக மேற்கொள்ளும்.

புலிகளின் இருப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தி அழிவுகளை அரசியலை முன்னெடுப்பது ராஜபக்ச அரசைப் பொறுத்தவரை மிகவும் இலகுபடுத்தப்பட்ட வழிமுறை. கிறீஸ் பூதத்தை விட பல அதிகமான வழிகளை இது திறந்துவிடுகிறது.

குறிப்பாகப் புலம்பெயர் நாடுகளின் தேசிய வியாபாரிகளின் ஊடாகவே இலங்கையில் புலிகளின் மீட்சி குறித்த பிரச்சாரங்களை முன்னெடுத்து அங்கு போராட முனையும் முன்னணிசக்திகளை அழிக்க முடியும்.
மாவீரர் தினத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பிரபாகரனின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், கிழக்கில் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டதாகவும், இனிப்புப் பண்டங்கள் பரிமாறப்பட்டதாகவும் புலம் பெயர் ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் இதற்கு சிறந்த முன்னறிவிப்பு.

சமூகப்பற்றற்ற, மக்கள் குறித்து எந்தச் சிந்தனையுமற்ற இந்த ஊடகங்கள், அவற்றின் பின்னணியில் செயற்படும் அரசியல் வியாபாரிகள், புலம்பெயர் அரச ஆதரவாளர்கள் என்ற அனைவரும் இலங்கை அரசுடன் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதற்கான அபாய அறிவிப்பே இவை அனைத்தும்.

தேசியம், தேசியத்தலைவர், தாயகம் போன்றவற்றை வெற்று முழக்கங்களாகப் பயன்படுத்தும் அரசியல் குறித்த அடிப்படை கோட்பாடற்ற ஊடகங்கள், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாத வியாபாரிகள், இவர்களோடு கைகோர்த்துக் கொள்ளும் இலங்கை, இந்திய, சர்வதேச உளவு அமைப்புக்கள் என்பன அனைத்தும் அவலத்தில் வாழும் மக்கள் கூட்டத்தை முற்றாக அழிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்டு இயங்குகின்றன.

தேசியத் தலைவர் என ஆயிரம் தடவை முழக்கமிடும் இவர்கள் பிரபாகரன் மரணித்து மூன்று வருடங்களை அண்மிக்கும் நிலையிலும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தக்கூடத் திரணியற்ற வியாபாரிகள் கூட்டம். தமது சொந்த நலனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத தயங்கமாட்டார்கள்.

வியாபாரிகள், சந்தர்ப்ப வாதிகள், அழிவு சக்திகள் ஆகியோரின் பிடியிலிருந்து போராட்டத்தை விடுவிப்பதும் அதன் புரட்சிகரமான வழிமுறைகளைக் முன்வைப்பதும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் கடமை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com