Contact us at: sooddram@gmail.com

 

வயதான உயிரணுக்களை நீக்கினால் ஆயுள் நீளும்

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானேஇது போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை தீயிலிட்டு, அழித்து புதிய பொருட்களை வாங்குவதற்காகச் சொல்லும் பழமொழி.

இந்தப் பழமொழி நுகர் பொருட்களுக்கு மட்டுமல்லாது மனித உடலின் உயிரணுக் களுக்கும் பொருந்தும் என்கிறது அமெரிக் காவின் மேயோ கிளினிக் மருத்துவக் கல்லூரியின் சமீபத்திய ஆய்வு ஒன்று.

இது உண்மைதான் என்கிறார் ஆராய்ச்சி யாளர் டேரன் பேக்கர். வேகமாக வயதாகும் தன்மையுள்ள ஓர் எலியின் ஆயுட்காலத்தில் பலமுறை உடலின் முதிர்ந்த சேதமடைந்த உயிரணுக்களை நீக்கினால், அந்த எலி களுக்கு கண்புரை நோய், விரைவாக முதிர்ந்துவிடும் தோல் மற்றும் தசை இழப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர். வயதான உயிரணுக்களை நீக்கினால் உடல் ஆரோக்கியத்தில் எவ்வித மாற்றமிருக்கும் என்பதை விரைவாகத் தெரிந்துகொள்ள, இச்சோதனை முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட எலிகளுக்கு விரைவாக வயதாகும்படி மருந்துகள் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனித உடலின் இயல்பான வளர்ச்சியின் போது உடலின் உயிரணுக்களுக்கு வயதாக வயதாக அவற்றில் ஏற்படும் சில மாற்றங் களால் புற்றுநோய் கூட ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதால், அந்த உயிரணுக்களை நம் உடலானது செயழிக்கச் செய்துவிடும். இவ்வாறு செயலிழந்துபோகும் வயதான செல்களுக்கு இரண்டு விதமான முடிவுகள் உண்டு. ஒன்று இறந்து போவது, மற்றொன்று செயலிழந்த நிலையிலேயே பிற ஆரோக்கியமான உயிரணுக்களுடன் ஒட்டிக்கெண்டு காலம் கழிப்பது.

சரி இறந்துபோகாத இந்த வயதான உயிரணுக்கள் சும்மா இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அவை சும்மா இருப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சி னையே. இறக்காமல் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரணுக்கள், ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதைப் போல்தங்கள் பங்குக்கு தேவையில்லாத உடலின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியதவறான புரதங்களைஉற்பத்தி செய்கின்றனவாம். இந்த உயிரணுக்களிலிருந்து அனுப்பப்படும் இரசாயன சமிக்ஞைகள், சுற்றியிருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை மோச மாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்பு மூப்படைதலுடன் தொடர்புடைய பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒவ்வொரு திசுவும் முதிர்ச்சியடையும்போது வயதான உயிர ணுக்களின் எண்ணிக்கையும் கூடுகிறது. திசுக்களிலுள்ள இவற்றின் எண்ணிக்கை சுமார் 15 சதவீதம் இருக்கும் என்கிறார்கள். ஆனால் இது வெறும் 15 சதவீதம் தானே என்றும் அலட்சியப்படுத்த முடியாது. ஏனென்றால் இதனால் ஏற்படும் பின் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கக்கூடுமாம். உதாரணமாக, வயதான இந்த உயிரணுக்கள் ஒரு திசுவின் ஒட்டு மொத்தச் செயல்பாட்டையே தடைசெய்யும் திறனுள்ள தவறான மரபணுக்களை தூண்டி விட்டு விடும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஆய்வில் விரைவாக வயதாகி விடும் வகையில் எலிகள் வளர்க்கப் பட்டன. அவற்றுக்கு 10 மாதமாகும்போது கண்புரை நோய், சக்தியிழந்த தசைகள் மற்றும் கொழுப்பு படிவதில் குறைவு போன்ற நோய்கள் இருந்தது மட்டுமில்லாமல், அவை இருதய நோயால் இறந்துவிட்டன. ஆனால், சில எலிகளுக்கு மட்டும் மூன் றாவது வாரத்தில், வயதான உயிரணுக்கள்உயிரணு தற்கொலைசெய்துகொண்டு இறந்துபோகும் வண்ணம் ஒரு மருந்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. மேலும் இதே மருந்து சிகிச்சை மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சை அளிக்கப்படாத எலிகளு டன் ஒப்பிடுகையில், சிகிச்சைக்கு உட்படுத் தப்பட்ட எலிகளுக்கு உறுதியான தசைகள், குறைந்த எண்ணிக்கையில் கண்புரை நோய் மற்றும் சுருக்கம் குறைந்த தோல் (தோலில் கொழுப்பு படிதல் சரியாக இருப்பதால்) போன்ற மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

சோதனைக்குட்படுத்தப்பட்ட எலிகளில் மற்றொரு பிரிவுக்கு 5 மாதங்கள் வரை மருந்துச் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இந்த எலிகளுக்கு 5வது மாதத்தில் கண்புரை உள்ளிட்ட மூப்படைதலுடன் தெடர்புடைய நோய்கள் தசை இழப்பு மற்றும் கொழுப்புச் சத்தில் குறைவு ஆகிய குறைபாடுகள் ஏற்பட்ருடிந்தன. இந்த நிலையில் மீண்டும் மருந்துச் சிகிச்சையை தொடர்ந்தபோதும், ஏற்பட்ட குறைபாடுகளை நீக்க முடியவில்லை. ஆனால் குறைபாடுகள் மேலும் தொடராத வண்ணம் தடுக்க முடிந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வயதான உயிரணுக்க ளைத் தற்கொலைக்குத் தூண்டும் மருந்துச் சிகிச்சையால் மூப்படைதலுடன் தொடர்பு டைய மாற்றங்கள் நிறுத்தப்படவுமில்லை. ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. ஆனால் ஆரோக்கி யமான ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, நோய் நொடியில்லாமல் 50 வரு டம் வாழ்வதற்கும், நோய் நொடியுடன் 100 ஆண்டு காலம் வாழ்வதற்குமான வித்தியாசம் தான் ஆரோக் கியமான ஆயுட்காலத்துக்கும் ஆரோக்கிய மற்ற ஆயுட்காலத்துக்குமான வித்தியாசம். வயதான உயிரணுக்களை நீக்குவதால், மனித உடலில் இறப்பை உண்டாக்கும் வயதான உயிரணுக்களின் பாதிப்புக்கு அப்பாற்பட்ட பிற இரசாயன மாற்றங்கள் மற்றும் உடலியல் நிகழ்வுகளை தடுக்க முடியாது என்பதாலேயே, இச்சிகிச் சையால் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை மட்டுமே நீடிக்க முடியும் என்கிறது இந்த ஆய்வின் முடிவு. இதே வகையான ஆய்வை சாதாரண எலிகளைக் கொண்டும் செய்யத் தொடங்கியுள்ளனர். அதன் முடிவை அறிய சில ஆண்டு காலம் பிடிக்கும். காரணம், சாதாரண எலிகளின் ஆயுட்காலம் சுமார் 3 வருடங்கள். மேலும் இச்சோதனை எலி களின் மீது நடத்தப்பட்டது என்பதால், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மருந்துச் சிகிச்சையை மனிதர்களுக்கு மேற்கொள்ள வெகு காலம் பிடிக்கும். இந்தச் சிகிச்சையை மேற்கொள்ள ஒரு பிரத்தியேகமான மரபணுவை மனித சிசுக்களின் உடலினுள் வெற்றிகரமாகச் செலுத்தியாக வேண்டும் என்பதும் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

ஆனாலும், கவலையில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் பேக்கர். ஏனென்றால், மன மிருந்தால் மார்க்கமுண்டு! என்ன ஒன்றும் புரியவில்லையா? அதாவது, இச்சிகிச்சையை மனிதர்களுக்கு மேற்கொள்ள வெகுகாலம் பிடிக்கும் என்பதால், இந்த ஆய்வில் கண்ட றியப்பட்ட ஆய்வு முடிவுகள் மற்றும் புரிதல்களைக் கொண்டு வேறுவித மான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். வயதான உயிரணுக்களை தாக்கி அழிக்கும் வண்ணம் மனித உடலின் எதிர்ப்பு சக்தியை தூண்டும் ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com