Contact us at: sooddram@gmail.com

 

காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காக போராடும் பலஸ்தீனம்

பலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப் படும் காலனித்துவ நடவடிக்கை களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அஹிம்சை வழிப் போராட்டத்தின் நினைவு தினம் இன்றாகும். நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்த தினம் அமைந்துள்ளது. புதிய தாய் நாட்டை விடுவித்துக் கொள்வதற்காக ஆக்கிரமிப்புக்கு எதிராக, அந்த பூமியின் சொந்தக்காரர் கொண்டு செல்லும் நியாய மான போராட்டமானது இற்றைக்கு சுமார் ஆறு சகாப்தங்களாக பல மிக்க முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பலஸ்தீனப் பிரச்சினையில் எமக்கு தெளிவாக இரண்டு தரப்பினரை காணக் கூடியதாக உள்ளது. அந்த இரண்டு தரப்பினர்களாவன. ஒன்று ஆக்கிரமிப்பாளர் கள் மற்றையது பாதிக்கப்பட்ட மக்கள். எனவே ஆக்கிரமிப்புக்கு ஆளான மக்கள் சுதந்திரத்திற்காக கிளர்ந்தெழுவது சட்ட ரீதியானதும், நியாயமானதும் மற்றும் இயற்கையானதுமாகும்.

அந்த மக்கள் தமது பூமியை சுதந்திர மானதும், இறைமை கொண்டதுமான ஓர் அரசாக மாற்றிக் கொள்வதற்கு அவர்களு க்கு உள்ள உரிமை மற்றும் அதனுள் பூரண சுதந்திரத்துடன் நடமாடுவதற்குள்ள உரிமை என்பவற்றினை எவராலும் மறுக்க முடியாது. எனினும் இன்று அங்கு இடம்பெறுவது யாது? ஆக்கிரமிப்பாளர்கள் பலவந்தமாக கைப்பற்றியுள்ள தமது பூமியை விடுவித்துக் கொள்வதற்காகவும், தமது தாய் நாட்டை சுதந்திர தேசமொன் றாக மாற்றிக் கொள்வதற்காக பாதிக்கப் பட்ட மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட உலகில் ஒரு சில பலம்பொருந்திய நாடுகள் கூறிவருகின்றன.

சுதந்திரம், சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றிற்காகஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆரம்பத் தில்சனநாயகத்திற்கானஈராக் நடவடிக் கைக்காக சுமார் 40 பில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமென புஷ் நிருவாகம் கூறியிருந்த போதிலும், தற்போது அத்தொகையானது 172 பில்லியன் அமெ ரிக்க டொலரை விடவும் அதிகரித்துள்ளது.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரம்என்பவற் றிற்கான ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இவ்வாறு பாரியளவு நிதியினையும், பெறுமதிமிக்க மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களையும் காவுகொள்ளும் இந்நாடுகள், பலஸ்தீன மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமை கள் என்பன பற்றி மாற்றுக் கொள்கைகளை கடைபிடிக்கின்றமை துரதிஷ்டவசமானதும், கவலைக்குரியதுமாகும். யுனெஸ்கோ அமைப்பினால் பலஸ்தீனத்தை இறைமை கொண்ட ஒரு நாடாக ஏற்றுக் கொள்வதற்கு ஏனைய நாடுகள் மேலதிக வாக்குகளால் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்ளும் போது, தமது நாட்டின் விருப்பத்திற்கு மாறாக ஏனைய நாடுகள் மேற்கொண்ட இத்தீர்மானத்திற்கு பழிதீர்க்கும் வகையில் அமெரிக்காவினால் யுனெஸ்கோ அமைப் பிற்கு பெற்றுக் கொடுக்கப்படும் பங்களிப்புத் தொகையினை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தமதுதிறந்த சிறைச்சாலை யாகமாற்றியுள்ள பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்திற்கு பல நாட்களாக, உலக மக்களின் எதிர்ப்புக்களையும் பொருட்படுத் தாது தாக்குதலை மேற்கொண்டது. இத்தாக் குதல் மூலம் கொடூரமான முறையில் பலஸ்தீன குழந்தைகள், பெண்கள், முதியோர் கள் உள்ளிட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பாடசாலைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், வதிவிடங்கள் மற்றும் பிணியாளர் வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகளின் கோல்ட் ஸ்டோன் அறிக்கை இத்தாக்குதலை ஒரு சிறிய சம்பவமாக விளக்கி அறிக்கை வெளியிட் டுள்ளது. அதன் மூலம் இதன் சட்ட விரோதத் தன்மை மற்றும் கொடூரத் தன்மை என்பவற்றினை மறைத்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்ட கோல்ட் ஸ்டோன் என்பவர் ஒரு யூதர் என்பதனை இங்கு கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் நாடுகள் இது பற்றி வாய்மூடி கண்டும் காணாமல் செயற்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.

இன்று பலஸ்தீன மண்ணில் அதன் உரிமையாளர்கள் யூதர்கள் பயணிக்கும் பஸ் வண்டிகளில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. யூதர்கள் பயணம் செய்யும் வீதியில் பயணம் செய்வதும் தடையாகும். தென் ஆபிரிக்கா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் அங்கு காணப்பட்ட நிறுவாகக் கொள்கை இன்று பலஸ்தீனிற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றது.

இது பற்றி நெல்சன் மண்டேலா குறிப் பிடுகையில், “நாம் பலஸ்தீன பூமியில், தென்னாபிரிக்காவில் காணப்பட்டதை விடவும் மோசமான நிறவாதமாகும். பலஸ்தீன் மக்கள் சுதந்திரம் அடையும் வரையில் மன அமைதியாக சுவாசிக்க முடியாதுஎனக் கூறியுள்ளார்.

இன்று பலஸ்தீனிலே முன் ஒருபோதும் இல்லாதவாறு அஹிம்சை வழியிலான போராட்டங்கள் இடம் பெற ஆரம்பித்துள் ளன. 2011 நவம்பர் மாதம் 15 ஆம் திகதி யூதரல்லாதவர்களுக்கு செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ள பஸ் வண்டியில் ஏறி ஜெரூசலம் செல்வதற்கு முயற்சித்த பலஸ் தீன் வாலிபர் ஒருவர், இந்த நிறவாதமிக்க அநீதியான தடைக்கும் எதிராக குரல் எழுப்பிஒரே பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு இரண்டு வகையான சட்டங்கள் எவ்வாறு இருக்க முடியும்எனவும்எமது குழந்தைகள் கெளரமாகவும் மற்றும் சம உரிமையுடனும் வாழ்வதற்கான சுதந்திரமான சூழலொன்றை உருவாக்கு வதற்காகவே நாங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்என்று கூறினார்.

இந்த சம்பவத்தை இணையத்தளம் ஊடாக பார்த்த எனக்கு அன்று தென்னா பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆசிய நாடு களில் கறுப்பு இனத்தவர்கள் முகம் கொடுத்த நிலை எனக்கு ஞாபகத்தில் வந்தது.

மாற்றம்பற்றி குறிப்பிட்டும், வாக்குறுதி களை அளித்தும், அமெரிக்க சமூகத்திலும், வெளி சமூகத்திலும் அதிக எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில் ஜனாதிபதியான ஒபாமா, ஏகாதிபத்தியத்திற்கு பின்னரான யுகம் ஒன்றினை உருவாக்குவார் என்ற நம்பிக்கை வைத்த தலைவராகக் காணப்பட்டார். எனினும் இன்று அவர் இஸ்ரேல் ஆட்சி யினதும், அமெரிக்காவில் வகிக்கின்ற சியோனிசவாத தனவந்தர்கள் ஒரு சிலரதும் கைபொம்மையாகவும், கைதியாகவும் மாறி யுள்ளார் என்பதே மத்திய கிழக்கு மக்களின் கருத்தாகும். அன்று அவர் வெளிப்படையாக ஆற்றியகைரோ சொற்பொழிவின்மூலம் பலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு மக்களிடையே ஏற்படுத்திய நியாயமான நம்பிக்கைகளுக்கு எதிர்மாறான போக்கினை இன்று கடைப்பிடித்து வருகிறார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகில் இதுவரையில் ஏற்படாத பொது மக்களின் குரல்கள், வோல்ஸ்ட்ரீம் நடவடிக்கை போன்ற வீதிப் போராட்டங்களை நாம் இன்று காணக் கூடியதாக உள்ளது. அந்த சமூகங் களின் பாரம்பரிய பயணத்தை மாற்றிய மைக்குமாறு வலியுறுத்தும் பாரிய குரலாக எதிர்காலத்தில் இது தோற்றம் பெறுமென்ற எதிர்பார்ப்புக்கள் தற்போது அதிகரித்துள்ளன.

பலஸ்தீனம் உள்ளிட்ட மத்திய கிழக்கு மக்களின் கலாசாரம், சமய ரீதியான பெறு மதிகளுக்கு மதிப்பளித்து, பல்லித்தன்மைக்கு மதிப்பளிக்கக் கூடிய உண்மையான சன நாயக உலகொன்றிற்காக நெகிழ்வுத் தன்மை யுடன் செயற்படுவதற்கு பலம்பொருந்திய உலக நாடுகள் மாற்றமடைதல் வேண்டும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட துருக்கி மற்றும் டியுனிஷிய தலைவர்கள் அரசியல் கட்சிகளின் உபாயங்கள் மூலம் பதவி இறக்கம் செய்யப்பட்ட போதிலும், தற்போது மீண்டும் அந்த சமூகங்களின் பெரும்பான்மை யானவர்கள் அவர்களையே மீண்டும் வாக்களித்து தெரிவு செய்துள்ளனர்.

இன்று துருக்கி மற்றும் டியுனீஷியா என்பன மேற்குலக நாடுகளுக்கு கற்பிக்கும் பாடம் யாதெனில் மேற்குலக நாடுகள் உண்மையான ஜனநாயகத்துடன் வாழ்வத ற்கு தயாராக வேண்டும். மேலும் பெரும் பான்மை மக்களின் நம்பிக்கையின்றி உரு வாக்கிக் கொள்ளும் கையொம்மை யான தலைவர் களைக் கொண்ட நிருவாகங்களின் ஆயுள் குறைவானது என்பதனையும் மேற் குலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளின் ஆளடையா ளத்திற்கும் விருப்பு வெறுப்புகளுக்கும் மதிப்பளித்து, உண்மையான ஜனநாயகத்தை அந்த வலயத்தினுள் ஏற்படுத்துவதற்கு நெகிழ்ந்து கொடுப்பதன் மூலம் மத்திய கிழக்கில் சமாதானம் தோற்றுவிக்கப்படும். இன்று மத்திய கிழக்கிற்கு வீசுகின்ற சுதந்திரப் புயல்காற்றானது அதனையே உலகிற்கு எடுத்துக் கூறுகின்றது.

ஷியா - சுன்னி, ஹமாஸ் - பத்தாஹ் போன்ற பேதங்களை உருவாக்கி அதன் மூலம் பிரித்து ஆளுகின்ற ஏகாதிபத்திய போக்கிலிருந்து விடுபட்டு உண்மையான ஜனநாயகமொன்றை மத்திய கிழக்கு வலய த்தில் உருவாக்க வேண்டியது பலம்பொருந் திய உலக நாடுகளின் பொறுப்பாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com