Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தல்

(கி.இலக்குவன்)

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் நவம்பர் 6 ந்தேதி நடை பெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய குடியரசுத்தலைவரான பாரக் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக குடியரசுக்கட்சியைச்சேர்ந்த மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர லிபர்ட்டேரியன் கட்சியைச் சேர்ந்த காரி ஜான்சனும், கிரீன் கட்சியைச் சேர்ந்த ஜில் ஸ்டெயினும் களத்தில் இருக்கின் றனர்.

ஆனால் நடைமுறையில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக்கட்சிக்கும் இடையேதான் உண்மையான போட்டி. அமெ ரிக்காவின் இந்த இரு கட்சி ஆட்சிமுறையைத்தான் நமது நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்று பாஜக போன்ற கட்சி கள் வலியுறுத்துகின்றன. பெயரளவில் இவை இரண்டு கட்சிகளாக செயல்பட் டாலும் ஒரே கட்சியின் இரண்டு வலது சாரிப் பிரிவுகளாகத்தான் இவற்றைக் கருதவேண்டியுள்ளது. தங்கள் நாடு தான் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று அமெ ரிக்கா பீற்றிக்கொண்டாலும் தேர்தல் முறைகேடுகள் பலவும் கடந்த காலங் களில் அரங்கேறியுள்ளதை உலகம் கண் டது. தங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று கருதப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள் பட்டியலிலிருந்தே நீக்கப் பட்ட வரலாறும் உண்டு. பலநூறு லட்சம் கோடி டாலர் பணவசதி இல்லாத எவரும் அமெரிக்கத்தேர்தலில் போட்டியிட முடியாது. இது நேரடித்தேர்தல் என்று கூறப்பட்டாலும் புஷ்ஷைவிட கூடுத லாக அமெரிக்க மக்களின் வாக்குகளைப் பெற்ற அல்கோர், மாநிலப்பிரதிநிதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும்பான்மை பெறவில்லை என்ற கார ணத்தால் தோற்றுப்போனதாக அறிவிக் கப்பட்ட விந்தையான நிகழ்வுகளும் நடந் தேறியுள்ளன. கணிசமான எண்ணிக் கையிலான மக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை. 1996ம் ஆண்டு தேர்தலில் 49 சதம் மக்கள் மட்டுமே வாக்களித்தனர். 2008ம் ஆண்டு தேர் தலில் 56 சதம் மக்களே வாக்களித்துள் ளனர். கல்வியறிவு பெற்ற மக்கள் பெரும் பான்மையினராக இருக்கும் ஒரு நாட்டில் இந்த அளவுக்கு மக்கள் தேர்தலை புறக் கணித்துள்ளது அமெரிக்க ஜனநாயகத் தின் மீது அவர்கள் எந்த அளவுக்கு நம் பிக்கை இழந்துள்ளனர் என்பதையே காட்டுகிறது.

பொருளாதாரக் கொள்கையைப் பொறுத்தவரை இந்த இரண்டுகட்சி களுக்கிடையே பெரிய வேறுபாடு எதுவு மில்லை. தொழில் நிறுவன சாம்ராஜ்யம் மற்றும் முதலாளிகளை ஆதரிப்பதில் இரண்டுகட்சிகளும் ஒருவரை ஒருவர் மிஞ்ச முயல்வதைத்தான் அவர்களின் தேர்தல் பிரச்சார உரைகள் வெளிப் படுத்துகின்றன.

1980/2006 ம் ஆண்டுகாலத்தில் மக் கள்தொகையில் ஒரு விழுக்காட்டினராக உள்ள பணக்காரர்களின் வருமானம் மும் மடங்காகப் பெருகியுள்ளது. அதாவது ஆண்டு ஒன்றுக்கு லட்சம் கோடி டாலர் (ரூபாய்க்கணக்கில் 55லட்சம்கோடி)என்ற அளவில் அதிகரித்துள்ளது. தொழில் நிறு வனங்களின் லாபம் கடந்த பத்தாண்டு களில் இருமடங்காகியுள்ளது,. குடியரசுக் கட்சியைச் சார்ந்தவரும் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவரும் மாறிமாறி ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், பெரும் செல்வந்தர்கள் இத்தகைய அசுரத்தனமான வளர்ச் சியைப் பெற்றுள்ளனர் என்பதை கவனத் தில் கொள்ளவெண்டும்,

தொழில் நிறுவனங்கள் தங்கள் வரு மானத்தில் 9 சதம் அளவுக்கு மத்திய அர சுக்கும் 2 சதம் அளவுக்கு மாநில அரசுக் கும் வரியாக செலுத்தி வருகின்றன.

அதே நேரத்தில் வருமான அடிப்படையில் அடிமட்டத்தில் உள்ள 20 சதவீதத்தினர் மத்திய-மாநில அரசுகளுக்கு தங்கள் வரு மானத்தில் 17.4 சதம் வரியாக செலுத்தி வருகின்றனர். ஆனால் தொழில் நிறு வனங்கள் செலுத்திவரும் வரி மிக அதிக மாக இருப்பதாகவும் அது குறைக்கப் படும் எனவும் இரண்டு கட்சி வேட்பாளர் களுமே தங்கள் பிரச்சாரக்கூட்டங்களில் பேசிவருகின்றனர். அதே நேரத்தில் குறை வான வருமானம் உள்ளவர்களுக்கு ஏற் கெனவே அளிக்கப்பட்டு வரும் வரிச் சலுகைகள் வெட்டப்படும் என்று அறி வித்து வருகின்றனர். இதன் காரணமாக 2013 ஜனவரி மாத்த்திலிருந்து கீழ்மட்டத் தில் உள்ள 16 கோடி அமெரிக்கர்களின் வரிச்சுமை கடுமையாக அதிகரிக்கப்பட உள்ளது. தங்கள் நாட்டுப்பணிகளை இந் தியா, சீனா உள்ளிட்ட வேறு நாடுகளுக் குக் குத்தகைக்கு விடக்கூடாது. அவ் வாறு செய்யும் நிறுவனங்களுக்கு அபராத வரி விதிக்கப்படும் என்று ஒபாமா அறி வித்துள்ளார். அமெரிக்காவில் வேலையற் றோர் 8 சதமாக உள்ள நிலையைக் காரணம்காட்டியே இதனைச் செய்து வருகிறார். சுதந்திர வர்த்தகம் தடையற்ற பொருளாதார உறவுகள் பற்றியெல்லாம் பேசிவரும் அதே வேளையில் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமுதாயசெல்வத்தை பணக் காரர்களின் கரங்களில் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தொழில்களில் முதலீடு செய்வார்கள். நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசிவதைப்போல இந்த வரு மானத்தின் சில துளிகள் ஏழைகளையும் சென்றடையுமாம். பணக்காரர்களை மேலும் பணக் காரர்களாக்கும் தங்கள் கொள்கைகளை இரண்டு கட்சிகளுமே இவ்வாறுதான் நியாயப்படுத்துகின்றன,

ஒபாமாவின் ஜனநாயகக்கட்சி ஒரு வலதுசாரிக்கட்சி என்றால் மிட் ரோம்னி யின் குடியரசுக்கட்சி மேலும் தீவிரமான ஒரு வலது சாரிக்கட்சியாக இருந்து வரு கிறது.

தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக அவர் ஒரு மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் அதில் பங்கேற்க விரும்பு வோர் பிளேட்டுக்கு 50000 டாலர் (ரூ.27,50,000) அளிக்கவேண்டும் அந்த விருந்தில் உரையாற்றிய மிட்ரோம்னி,

47 சதம் அமெரிக்கர்கள் அரசாங்கத்தை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். தங்களின் உணவு, மருத்துவ வசதி, வீட்டு வசதி போன்றவற்றிற்கு அரசாங்கத்திட மிருந்து எதிர்பார்க்கின்றனர் என்று ஏள னம் செய்யும் தொனியில் பேசியுள்ளார். கிறிஸ்தவ திருச்சபைகளின் ஆதரவைப் பெறுவதற்காக குடும்பக்கட்டுப்பாட் டுக்காக கருக்கலைப்பு செய்வதை அனு மதிக்கமுடியாது என்று பேசி வருகிறார்.

எண்ணெய் வளநாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரு வதற்காக பிற நாடுகளிள் உள்நாட்டு விவ காரங்களில் தலையிடுவதிலும் போரில் ஈடுபடுவதிலும் ஆட்சிமாற்றத்திற்காக சூழ்ச்சி வேலைகளில் ஈடுபடுவதிலும் இரண்டு கட்சிகளுக்கிடையே எத்தகைய வேறு பாடும் இல்லை. இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக பழி சுமத்தி குடியரசுக்கட்சியைச்சேர்ந்த புஷ் ஷின் ஆட்சி சதாம் உசேனைப் படு கொலை செய்து இராக்கில் ஆட்சிமாற் றத்தை ஏற்படுத்தியது. ஒபாமாவின் ஆட்சி நேட்டோ படையினருடன் இணைந்து லிபிய அதிபர் கர்னல் கடா பியை கொலை செய்து ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.

ஈரான் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை ஒபாமா அரசு மேலும் தீவிரப் படுத்தியது. ஆப்கானிஸ்தானத்தின் மீது அமெரிக்கக் குறுக்கீட்டை புஷ் துவக்கி வைத்தார். ஒபாமா மேலும் படைகளை அனுப்பி தாக்குதலைத் தீவிரப்படுத்தி னார். இப்போது சிரியாவில் ஆட்சிமாற் றத்தை ஏற்படுத்துவதற்காக கலகப்படை யினருக்கு ஒபாமாவின் ஆட்சி துணை போகிறது.

எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றாலும் மிட் ரோம்னி வெற்றிபெற்றாலும் சாதாரண அமெரிக்க மக்கள் எத்தகைய பயனையும் அடையப் போவதில்லை. அதே நேரத்தில் அமெ ரிக்க கோடீசுவரர்கள் மேலும் மேலும் கொழுப்பது நிற்கப்போவதில்லை. உலக அளவில் ஏகாதிபத்திய குறுக்கீடுகள் சற்றும் குறையப்போவதில்லை. இந்தியா போன்ற நாடுகளின் சில்லரை வர்த்தகத் தில் தங்கு தடையற்ற அந்நிய முதலீடு, காப்பீட்டுத்துறையில் மேலும் அதிக அந்நிய முதலீட்டுக்கான நிர்ப்ந்தங்கள் ஆகியவை அதிகரிக்கக்கூடுமே அன்றி, சற்றும் குறைவதற்கு வாய்ப்பில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com