Contact us at: sooddram@gmail.com

 

புலிகளின் தளபதி பரிதி பாரிஸில் சுடப்பட்ட பின்னணி: எதையும் தாங்கும் இதயம் உள்ளதா?

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா செய்திகளை பார்த்து வியந்திருப்பார்கள். நேற்று (வியாழக்கிழமை) இரவு பாரிசில் நடைபெற்ற சம்பவம் இது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அலுவலகத்தைவிட்டு பரிதி வெளிவந்தபோது, இரவு ஆகியிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப் பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள். பரிதி வெளியே வந்ததும், ஸ்கூட்டரில் இருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டார்கள். அவர்களது முகங்களை மூடும் வகையிலான ஹெல்மெட் அது. ஸ்கூட்டரை ஸ்டாட் செய்து பரிதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்கள். துப்பாக்கியால் ஒரு தடவை சுட்டார்கள். அது பரிதியில் படவில்லை.
இதையடுத்து தனது உயிரைக் காப்பாற்ற வீதியில் ஓடத் தொடங்கினார் பரிதி. ஆனால், தப்பியோடும் அவரது முயற்சி பலிக்கவில்லை. ஓட ஓட மொத்தம் 4 தடவைகள் சுடப்பட்டு, கீழே விழுந்து, அந்த இடத்தில் உயிரை விட்டார், அல்லது, வீர மரணம் அடைந்தார். (விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்)
அவரைச் சுட்டவர்கள், ஸ்கூட்டரில் அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தனர்.
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம், நான்கு பிரிவுகளாக செயல்படுகிறது. இதில் இரு பிரிவுகள் பெரியவை, மற்றும் பலம் வாய்ந்தவை. அவற்றில் ஒன்று நார்வேயில் உள்ள நெடியவன் தலைமையிலான பிரிவு. கொல்லப்பட்ட தளபதி பரிதி, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்.
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் அணி. ஒருகாலத்தில் புலிகளின் ஊடகங்கள் என அறியப்பட்டவையும், இவர்களிடம்தான் உள்ளது. அதுதான், அவர்களது பலம்.
அந்த அணியின் அளவுக்கு தற்போது வளர்ந்துவிட்ட மற்றைய அணி, விநாயகம் தலைமையிலான அணி.
இதன் தலைவர் விநாயகம், புலிகளின் உளவுப் பிரிவில் தளபதியாக இருந்தவர். தற்போது, பிரான்சிலும், ஜெர்மனியிலும் மாறிமாறி இருந்து வருகிறார். இந்த அணிக்கு, களத்தில் யுத்தம் புரிந்துவிட்டு, தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் போராளிகளின் ஆதரவு உண்டு.
வெளிநாடுகளில் உள்ள கணிசமான புலி ஆதரவாளர்களும் தற்போது இவர்கள் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர். கீழேயுள்ள போட்டோக்கள், பரிதி சுடப்பட்டபின், அந்த இடத்தில் எடுக்கப்பட்டவை. பார்த்துவிட்டு
அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

விநாயகம் அணியின் பலம், களத்தில் யுத்தம் புரிந்தவர்கள், வெளிநாடுகளில் பண முறைகேடுகள் எதிலும் இதுவரை பெரிதாக சிக்காதவர்கள், பழைய செயல்பாட்டாளர்கள் (நெடியவன் அணி) செய்த பண முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்கள் என்ற பெயர். இந்த அணியின் பலவீனம், மீடியா பலம் கிடையாது.
விடுதலைப்புலி ஆதரவாளர்களை வாசகர்களாக கொண்டுள்ள பெரும்பாலான மீடியாக்கள் நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விநாயகம் குரூப்பின் நடவடிக்கைகள் மீடியாக்களில் துரோகச் செயல் என வெளியாகும்.
அத்துடன், தமிழக அரசியல்வாதிகளுக்கான மாதாந்த பண வழங்கல்களை கொடுப்பது, சொத்துக்களை வைத்திருக்கும் நெடியவன் குரூப் என்பதால், விநாயகம் குரூப்புக்கு அந்த பப்ளிசிட்டியும் இல்லை.
சமீபத்தில், இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்கள், நெடியவன் குரூப். அந்த எதிர்ப்புக்கு மீடியாக்களில் கிடைத்த அதீத முக்கியத்துவத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். அதுதான், நெடியவன் குரூப்பின் பலம். இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள்சுற்றி வளைத்து தூரத்து சொந்தமாகவிநாயகம் குரூப்.
இப்போது உங்களுக்கு பின்னணி புரிந்திருக்கும்.
இனி தளபதி பரிதியின் வீர மரணத்துக்கு வருவோம். பாரீஸில் உள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் (கடைகள், பில்டிங்குகள், வீடுகள், மற்றும் சில பண்ணைகள்) நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்ற அமைப்பின் கீழ் உள்ளது.
இந்த அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளர், தற்போது கொல்லப்பட்டுள்ள பரிதி.
விநாயகம் குரூப் எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது, ஈழ விடுதலை போராட்டத்துக்காக மக்கள் கொடுத்த பணம். அதை நெடியவன் குழு மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும் (விநாயகம் குரூப்) அதில் பங்கு உள்ளது என்பது.
இந்த பணம் பற்றி கேள்வி கேட்க இப்போது யாரும் உயிருடன் இல்லாத நிலையில், நெடியவன் குரூப் எதற்காக அதில் மற்றைய அணிக்கு பங்கு கொடுக்க வேண்டும்? எனவே அவர்கள் பங்கு தர மறுக்கிறார்கள். இதுதான்
, தகராறு.

கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒன்று, இந்த சொத்து பிரிக்கும் விவகாரம். மற்றையது, இம்மாத இறுதியில் வரப்போகும் மாவீரர் தினத்தை யார் நடத்துவது என்ற விவகாரம்.
பிரான்ஸில் உள்ள சொத்தில் கணிசமான பங்கை கேட்டது விநாயகம் அணி. அத்துடன், பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை தமக்கு கொடுக்கும்படியும், அந்த டீலின் மறுபகுதியாக, பிரிட்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வை நெடியவன் குரூப் நடத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு பாக்கேஜூடன் பேசியது விநாயகம் அணி.
லண்டன் மாவீரர் தின நிகழ்ச்சியில், பாரிஸைவிட லாபம் அதிகம் கிடைக்கும் என்பது ஒன்றும் ரகசியம் இல்லை.
நெடியவன் அணியின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தளபதி பரிதி, இந்த இரண்டையுமே மறுத்துவிட்டார். உங்களால் செய்ய முடிந்ததை, செய்து கொள்ளுங்கள்என்று சொன்னதாக கேள்வி. விநாயகம் குரூப்பும் புறப்பட்டு சென்றுவிட்டது. பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளை பரிதியே முன்னின்று செய்து கொண்டிருந்தார்.
சுருக்கமாக சொன்னால், விநாயகம் அணி, பொட்டம்மானின் ஆட்கள். யுத்தத்தின்போது களத்தில் நின்றவர்கள்.
நெடியவன் அணி, காஸ்ட்ரோவின் ஆட்கள்.  வெளிநாடுகளில் உள்ள ஓய்வு பெற்ற போராளிகள் மற்றும், வீடியோவில் யுத்தம் பார்த்த வெளிநாட்டுப் புலிகள்.  இவர்களிடம் சொத்து உண்டு.  அவர்களிடம் துடிதுடிப்பு உண்டு.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்த இரண்டாவது நாள் இரவு, பாரிஸில், இந்த அசம்பாவிதம் நடந்தது.
என்ன  அசம்பாவிதம்?
சிங்கள ஏகாதிபத்திய அரசின் எல்லை கடந்த உளவுத்துறையைச் சேர்ந்த கயவர்களும், அவர்களது கைக்கூலி அடிவருடி பாஸிஸ்ட்களும் பாரிஸ்வரை வந்து தாக்குதல் நடத்தியதில், களப்பலியாகி, வீரமரணமடைந்தார் தளபதி கர்னல் பரிதி என்று வைத்துக் கொள்வோமேயாருக்கும் மனவருத்தம் ஏற்படாமல்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com