Contact us at: sooddram@gmail.com

 

ஏழைப் பங்காளனான ஜனாதிபதி ஜூலை வேலைநிறுத்தக்காரர்களின் துயரைத் துடைத்தார்

1980ம் ஆண்டில் இந்நாட்டு அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நடத்திய சாத்வீக போராட்டத்தை அன்று அதிகாரபீடத்தில் வீற் றிருந்த முதலாளித்துவ கொள்கையை நிறைவேற்றி தொழிலாளர் வர்க் கத்தை அடக்கி, ஒடுக்கும் தீவிர கொள்கையை கடைப்பிடித்து வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம் கொடுங்கோண்மை ஆட்சியாளர்களைப் போன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சகல அரசாங்க ஊழியர்களையும் எவ்வித தயவுதாட்சண்யம் இன்றி வேலை நீக்கம் செய்தது.

அதையடுத்து, அரசாங்கத் திணைக்களங்களில் ஏற்பட்ட பல்லாயிரக்கணக் கான காலி இடங்களுக்கு பெரும்பாலும் படிப்பறிவற்ற, திறமையற்ற தங்களின் கையாட்களை நியமித்து, அரசாங்க சேவையின் தரத்தை குறைத்தது டன் நின்றுவிடாமல் அரசாங்க சேவையையே சீர்குலைத்து விட்டது.

இந்த வேலை நிறுத்தத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளானவர்கள் ரயில் திணைக்களத்தின் ஊழியர்களாகும். ரயில் திணைக்களத்தில் பணியாற் றிய என்ஜின் சாரதிகள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், கார்ட் மார்கள், சமிக்ஞை அனுப்பும் உத்தியோகத்தர்கள், பொறியியலாளர் கள், ரயில் பாதைகளை திருத்தியமைக்கும் அனுபவமும், திறமையும் மிக்க தொழிலாளர்கள் போன்றோர் ஒரு நொடிப்பொழுதில் பதவி நீக் கம் செய்யப்பட்டு, வீதியில் ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கத்தினால் தூக்கி எறியப்பட்டார்கள்.

உலகிலேயே அன்றும் இன்றும் ஆகக்கூடிய தூரத்தை உள்ளடக்கும் ரயில் சேவை இந்தியாவிலேயே இருக்கின்றது. இந்திய அரசாங்கம் கூட அன்று இலங்கை ரயில் சேவையைப் பார்த்து பிரமிக்கும் அள வுக்கு எமது நாட்டின் ரயில் சேவை சிறப்பாக அமைந்திருந்தது. இந் தியாவுக்கு அடுத்தபடியாக அன்று தெற்காசியப் பிராந்தியத்தில் இல ங்கை ரயில் சேவையே சிறப்புற்று விளங்கியது. அன்று 1962ம் ஆண் டில் மீறிகமைக்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிர்துறந்தனர். இதுவே இலங்கை ரயில் சேவை வரலாற்றில் இடம்பெற்ற அதிகமான விபத்து மரணமாகும்.

ஆயினும், ரயில் கடவைகளில் மற்ற வாகனங்களின் கவனக்குறைவினால் ஏற்படும் விபத்துக்கள் அன்றும், இன்றும் நடந்துகொண்டே இருக்கின் றன. 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தினால் தென்னிலங்கையில் பெரலிய என்னுமிடத்தில் காலை 9.00 மணியளவில் சுமார் 1000 பயணிகளுடன் கண்டி மாநகரை நோக்கி விரைந்து கொண்டிருந்த ஒரு ரயில் வண்டியை சுனாமிப் பேரலை தாக்கி அதிலிருந்தவர்களில் 90 சதவீதமானோர் மரணிப்பதற்கு ஏதுவாக அமைந்தது.

இந்தியாவில் பிரதம மந்திரி என்ற உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பதவியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது ரஷ் யாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மார டைப்பினால் மரணித்த லால் பகதூர் சாஸ்திரி என்ற நேர்மையான மனிதர் ஒரு தடவை ரயில்வே துறையின் அமைச்சராக இருந்த போது வட இந்தியாவில் ஏற்பட்ட விபத்தில் 250 பேர் மரணித்தார்கள். திரு. லால்பகதூர் சாஸ்திரி அந்த விபத்துக்கான சாத்வீக பொறுப்பை ரயி ல்வே அமைச்சர் என்ற முறையில் அதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்று அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து இந்தியாவில் மட்டு மல்ல உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றார்.

இதனால் தங்கள் சம்பளத்தையும், ஓய்வூதியம் பெறும் உரிமையையும் இழந்த பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் பெரும்பாலானோர் மன வேதனையினாலும், வறுமை நிலையை தாங்கிக் கொள்ள முடியாமை யினாலும் மாண்டு போனார்கள். எஞ்சியிருக்கும் மேலும் ஆயிரக் கணக்கான ஜூலை வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு பதவியில் இருந்த பல அர சாங்கங்களுக்கு தங்கள் அவல நிலையை எடுத்துரைத்து நிவாரணம் பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கைகள் விடுத்த போதிலும், அக் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கைப் போன்று உதாசீனம் செய்யப்பட்டன.

ஆயினும் தென்னிலங்கையின் மண் வாசனையுடன் தோன்றிய இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எந்நேரமும் ஏழைகளின் துயரைத் துடை க்கும் ஒரு ஏழைப் பங்காளனாகவே தனது அரசியல் வாழ்க்கையை மிகவும் நேர்மையாக மேற்கொண்டு வருகிறார். அவர் ஜூலை வேலைநிறுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 32 வருட காலம் அனுபவித்து வரும் துயரத்தை துடைப்பதற்காக கடந்த சில மாதங்க ளாக பகுப்பாய்வுகளைச் செய்தார்.

அந்த ஆய்விற்கு அமைய ஜூலை வேலை நிறுத்தத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இப்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதை தெரி ந்து கொண்டார். ஆயினும் முதுமை நிலையை எட்டிக்கொண்டிருக் கும் ஆயிரக்கணக்கான ஜூலை வேலை நிறுத்தக் காரர்கள் வறுமை யில் துவண்டு கொண்டிருப்பதை தெரிந்து கொண்டார். எனவே, இவர் களில் 65 வயது எல்லையைக் கடந்த அனைத்து ஜூலை வேலை நிறுத்தக் காரர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாவை செலுத்துவது என்று தீர்மானித்து, அதனை வியாழக்கிழமையன்று பாராளுமன்றத் தில் தான் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தில் அறிவித்து, இந்நாட் டில் துயரில் மூழ்கியுள்ள ஜூலை வேலை நிறுத்தக்காரர்களின் துயரை துடைத்து வைத்தார்.

அது போன்று தபால் திணைக்களத்திலும் ஜூலை வேலை நிறுத்தத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அத னால் தபால் சேவையின் தரம் வீழ்ச்சியடைந்தது. முன்னர் நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் எவ்விடத்தில் இருந்தும் அனுப்பப்படும் தபால் இரண்டு நாட்களில் சம்பந்தப்பட்ட முகவரியை சென்றடையும். ஆனால், இன்று ஒரு கடிதம் நாட்டின் இன்னொரு இடத்திற்கு சென்ற டைவதற்கு 4 முதல் 5 நாட்கள் எடுக்கின்றன.

இவ்விதம் தபால் திணைக்களம் திறமையற்ற ஒரு சேவையாக மாறுவத ற்கு 1980ம் ஆண்டு ஜூலை வேலை நிறுத்தத்தை முறியடித்த ஜே. ஆர். ஜயவர்தன அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். சுகாதாரத்துறையில் தாதிமார் சேவை தெய்வாதீனமாக ஜே. ஆர். ஜய வர்தனவின் அடக்குமுறையில் இருந்து பாதிப்படையாமல் தப்பித்துக் கொண்டது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com