Contact us at: sooddram@gmail.com

 

நண்பனையே கொல்லத் தூண்டிய கடன் சுமை

பிறரின் கடனுக்காக தன் உயிரையிழந்த சின்னத்துரை இந்தீஸ்வரன் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கொழும்பு கொட்டாஞ் சேனையில் வசிக்குமிவர். பிறர் வங்கியில் அடகு வைத்த தங்கநகைகள் குறித்த தினம் கலாவதியாகி ஏலத்திற்கு செல்லும் முன் அதனை மீட்டு கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள கடைகளுக்கு விற்கும் தொழிலை பல வருடகாலமாக செய்து வந்தார். நகைக்கடை உரிமையாளர்கள் இவர் மீது நம்பிக்கை வைத்ததற்கு காரணம் இவரது நேர்மையான சுபாவமாகும். இவரதுபெயரை சொன்னால் செட்டியார் தெருவில் எவரும் அறிந்து கொள்ளுமளவுக்கு தன் பெயரையும் நம்பிக்கைகையும் பதிவு செய்திருந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை செட்டியார் தெருவுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றவர் மறு நாளாகியும் வீடு திரும்பாததால் அவரின் மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார்.

“தங்க ஆபரணங்கள் வாங்க வேண்டியுள்ளது. நான் யூசுப்புடன் செல்கிறேன்” என்று தன் கணவர் கூறியதாக மனைவி பொலிஸாரிடம் கூறினார். முறைப்பாட்டையடுத்து இந்தீஸ்வரனின் நண்பனான யூசுப் பொலிஸ்நிலையம் வரவேண்டியிருந்தது.” இந்தீஸ்வரன் என்னுடன் வரவில்லை, எனக்கு இதுபற்றி எதுவும் தெரியாதுசேர்” என யூசுப் பொலிஸாரிடம் கூற அவர் விடுவிக்கப்பட்டார். நம்பிக்கையிழந்த திருமதி இந்தீஸ்வரன் கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார். மேற்படி பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விஜயரத்ன இதுபற்றி பொறுப்பதிகாரி பிரியன்த திக்ஓவிடவிடம் தெரிவிக்க நீதிமன்றத்தின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் விசாரணை செய்ய உபபொலிஸ் பரிசோதகர் ஜயந்த, செட்டியார் தெருவுக்கு அனுப்பப்பட்டார். இந்தீஸ்வரனுக்கு பணம் கொடுத்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்” விசாரணை செய்யப்பட்டபோது, இந்தீஸ்வரன் யூசுப்பின் மகனுடன் சென்றதாகவும், தங்க ஆபரணங்கள் வாங்கவேண்டுமென்றதும் தான் முப்பத்துமூன்று இலட்சம் ரூபா கொடுத்ததாகவும், மாலையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு” எங்கிருக்கிaர்கள் எனக் கேட்டபோது எல்லாம் சரி புறப்படத் தயாராகிக் கொண்டிருக்கின்றேன்” என்றார்.

ஆனால், இந்தீஸ்வரன், யாருடனிருக்கிறார் எனக் கூறவில்லை” என்றார் ரமேஷ். சந்தேகம் கொண்ட பொலிஸார் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்புகொண்டு இந்தீஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா எனக்கேட்டபோது இல்லை என பதில் கிடைத்தது. இருப்பினும், அவரிடம் வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு இருந்ததாக தெரியவந்தது. இது பற்றி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜயரத்ன மனம்பேரியிடம் தெரிவித்தபோது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களைப் பரிசீலிக்குமாறும், ஆலோசனை கிடைக்கப்பெற்றதும் மூன்று பிரிவுகளின் பொறுப்பதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்தின் அனுமதியையடுத்து இந்தீஸ்வரன், யூசுப்பின் மகன் ஆகியோரது கையடக்கத்தொலைபேசி இலக்கங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

இந்தீஸ்ரனின் தொலைபேசி இலக்கத்தின் மூலம் காலையில் செட்டியார் தெரு, பகல் இரண்டு மணிக்கு கொடிகாவத்தை, மூன்று மணிக்கு வெள்ளவத்தை, ஐந்து மணிக்கு கொடிகாவத்தை, ஆறு மணியளவில் கொடிகா வத்தையிலிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து யூசுபின் மகனது தொலைபேசி இலக்கங்கள் பரிசீலனை செய்யப்பட்டன. பகல் வேலையில் கொடிக்காவத்தை, மாலை ஆறரைமணியளவில் பியகமை, எட்டரை மணிக்கு வரகாபொலை, கேகாலை, இரவு பத்து மணிக்கு புசல்லாவை ஆகிய பிரதேசங் கங்களில் இருந்தே சிலருடன் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது.

இந்தீஸ்வரன் காணாமல் போனமையுடன் யூசுப்பின் மகனுக்கு தொடர்பிருக்கலாமென அனுமானித்த பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன, யூசுபின் மகன் அஸ்மியை பொலிஸ் நிலையம் வரச்செய்து விசாரித்தான். கடந்த முப்பதாம் திகதி எங்கிருந்தீர் என விசாரணையின்போது அவரிடம் கேட்கப்பட்டபோது தான் வீட்டிலிருந்ததாகவும் மனைவியிடம் கேட்டுப்பார்க்கலாமெனவும் கூறினார். எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள கையடக்க தொலைபேசி தொடர்பான தகவல்கள் உண்மைக்கு மாறானதா என பொறுப்பதிகாரி கேட்க இவையனைத்தும் பொய்யானவை என்றார் அஸ்மி. “எங்களை ஏமாற்றி விடலாமென எண்ணாதே கையடக்க தொலைபேசி தகவல்கள் மூலம் நாம் பல புலி இயக்க பயங்கரவாதிகளை கைது செய்துள்ளோம்” என்று புறக்கோட்டைபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஸ்மியை கடுமையாக எச்சரித்தார். இச்சமயம் அஸ்மியின் மனைவியும், தந்தையும் பொலிஸ் நிலையம் வந்திருந்தனர். அஸ்மியுடன் மனைவி பேச அனுமதிக்கப்படவில்லை. இவர் வேறொரு அறையில் விசாரிக்கப்பட்டார்.

முப்பதாம் திகதி உங்கள் கணவர் எங்கிருந்தார். “நான் அவருடன் அன்று தொடர்பு கொண்டபோது வியாபாரமொன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு மணிநேரத்தில் வீடு திரும்புவதாகவும் கூறினார். ஆனால் அவர் மறுநாள் அதிகாலையிலேயே வீடு திரும்பினார்” என மனைவி பொலிஸாரிடம் கூறினார்.

மீண்டும் அஸ்மி விசாரிக்கப்பட்டார். நீ வீட்டிலிருந்ததாகக் கூறியது பொய் நீ வீட்டிலிருந்தால் உன் கையடக்க தொலைபேசி எவ்வாறு அவ்விடத்திக்கு சென்றது” என்றதும் கையடக்க தொலைபேசியை வஜிர கேட்டார். நான் கொடுத்தேன் என்றார் அஸ்மி. இவர் கூறும் வஜிரவை அழைத்துவருமாறு பொலிஸார் பணிக்கப்பட்டனர். அச்சமயம் தான்கூறும் உண்மைக்கு மாறான தகவல்களினால் மேலும் பிரச்சினை ஏற்படலாமென எண்ணிய அஸ்மி, சார், நான் உண்மையைக் கூறுகிறேன்.

அச்சமயம் நான் பெரும் கடன் சுமையுடன் இருந்தேன். நண்பனிடம் நான் பெற்ற பத்து இலட்சம் ரூபா கடனை கேட்டு அவன் தொந்தரவு செய்தான். நாளை எனக்கு பணம் கிடைக்கும் உன் கடனை தவறாது நாளை தருகிறேன் என்றேன். இந்தீஸ்வரனிடம் பல இலட்சங்களிருப்பதை அறிந்தேன் இவ்வாறு கூறியுள்ளார். எப்படியாவது இப்பணத்தொகையைக் கைப்பற்ற வேண்டுமென அஸ்மி திட்டமிட்டார்.

நண்பரொருவரிடம் தங்க ஆபரணங்களுள்ளன அதனை வாங்க பணத்தை எடுத்து வருமாறு அஸ்மி, இந்தீஸ்வரினிடம் கூற இந்தீஸ்வரன் தன்னிடமுள்ள முப்பத்து மூன்று இலட்சம் ரூபாவுடன் அஸ்மியை காணச் சென்றார். தன் மோட்டார்வாகனத்தின் முன் ஆசனத்தில் இந்தீஸ்வரனை ஏற்றிக்கொண்ட அஸ்மி, முதலில் கொடிகாவத்தைக்கு சென்றார். இங்குள்ள பாழடைந்த ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி, இவ்விடத்துக்கு அந்நபர் வருவார் அவரிடம் நகைகளை வாங்கிக்கொள்ளலாமென்றார் அஸ்மி. நண்பனை நம்பிய இந்தீஸ்வரனும் காத்திருந்தார்.

இரண்டு மணி நேரம் காத்திருந்தார். அதோ வருகின்றான் நீ பின் ஆசனத்துக்கு போ என்றதும் இந்தீஸ்வரன் பின் ஆசனத்தில் அமர அஸ்மியும் அவ்விடத்துக்கு சென்ற திடீரென தன் காட்சட்டைபையிலிருந்து கயிறை எடுத்து இந்தீஸ்வரனின் கழுத்தைச்சுற்றி அழுத்தவே இந்தீஸ்வரன் என்ன செய்கின்றாய் என்று கூக்குரலிட்டார். ஒன்றுமில்லை சும்மா விளையாட்டகாகச் செய்தேன் என்றார் அஸ்மி, புதுமையான விளையாட்டாகவுள்ளது என்றார் இந்தீஸ்வரன். இச்சமயமாவது இந்தீஸவரன் அவதானமாயிருந்திருந்தால் தன் உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். இரண்டாம் முறை அஸ்மி கயிறை இந்தீஸ்வரனின் கழுத்திலிட்டு ஒரேடியாக இறுக்கி நெரித்தார்.

இந்தீஸ்வரன் மூச்சுத் திணறி இறந்தார். இவரை பின் ஆசனத்தில் அமரவைத்து சீட்பெல்டினை அணியச் செய்தார். நித்திரையிலிருப்பது போல் இந்தீஸ்வரன் காணப்பட்டார். இவரது கை விரல்களிலிருந்த மூன்று தங்க மோதிரங்களையும், முப்பது மூன்று இலட்சம் ரூபாவையும் அபகரித்துக்கொண்ட அஸ்மி, தான் கடனாகப் பெற்ற பணத்துக்குரியவரை கொடிகாவத்தை சந்திக்கு வருமாறும் கடன் பணத்தை உடனடியாக தரமுடியுமென்றதும், குறிப்பிட்ட அவ்விடத்துக்கு அந்நபர் வந்தார். வியாபாரத்தின் மூலம் இப்பணத்தொகை கிடைத்தது.

இதில் முப்பது மூன்று இலட்சம் ரூபாவும் மூன்று தங்க மோதிரங்களுமுள்ளன, கடன் தொகையான பத்து இலட்சத்தை நீ எடுத்துகொண்டு மீதித்தொகையையும் மோதிரங்களையும் உன் வசம் எடுத்துச்செல் தேவைப்பட்டபோது வந்து பெற்றுக்கொள்கிறேன் என்றதும் அந்நபரும் அதனை எடுத்துச்சென்றார்” அஸ்மியின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்ததால் சந்தேகம் கொள்ளவில்லை.

இந்தீஸ்வரனின் சடலத்தை அகற்றுவது அடுத்த வேலையாக இருந்தது. சடலத்துடன் சென்ற வாகனம் கேகாலை எரிபொருள் விற்பனை நிலையத்தில் நிறுத்தப்பட்டது. வாகனத்திலிருந்து இறங்கிய அஸ்மி எரிபொருள் நிரப்பிய பின் பணத்தைக் கொடுத்தார். இவை அனைத்தும் எரிபொருள் நிரப்பும் நிலையத்திலுள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பரிசோதகர் கூறினார்.

வாகனம் மீண்டும் பயணத்தைத் தொடரும்போது கையடக்க தொலைபேசி அலறியது. “நீ. எங்கிருக்கிறாய், உன்னை பலர் தேடுகிறார்கள் நீ இந்தீஸ்வரனுடன் சென்றதாக கூறுகிறார்கள் என்றார் தந்தை தொலைபேசியில். இந்தீஸ்வரன் என்னுடன் வரவில்லை நான் வியாபாரம் நிமித்தம் இங்கு வந்துள்ளேன் சீக்கிரம் அங்கு வருவேன்” என்றார் அஸ்மி தன்தந்தையிடம். வாகனம் புசல்லாவையூடாக நானுஓயாவை வந்தடைந்தது. இருள் சூழ்ந்திருந்த சமயம் பாழடைந்த பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டது. வாகனத்திலிருந்து இறங்கி அவ்விடத்தைப் பார்த்தபோது பெரிய நதியொன்று அங்கு தென்பட்டது.

இந்தீஸ்வரனின் சடலத்தை தூக்கிச்சென்று மலைப்பகுதியில் இருந்து கீழே வீசிவிட்டு மீண்டும் கொழும்பை நோக்கி திரும்பினார். அப்போது அவரது மனைவி தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது அதிகாலை நான்கு மணியளவிருக்கும். “நீங்கள் எங்கிருக்கிaர்கள் ஏன் தாமதம் என்று கேட்டார் மனைவி வியாபாரம் ஒன்றுக்காக வந்தேன் வேலைமுடிந்து விட்டது இன்னும் ஒரு மணித்தியாலத்தில் அங்கு வந்துவிடுவேன் என்று கூறிய அஸ்மி வீட்டை அடைந்ததும் நித்திரைக்குச்சென்றார்.

மறுநாள் இந்தீஸ்வரனின் வீட்டுக்கு செல்ல அஸ்மியை தந்தை அழைத்தார். இந்தீஸ்வரன் தேடப்படுவதால் அங்கு தந்தையுடன் சென்ற அஸ்மியிடம் இந்தீஸ்வரனின் மனைவி தன் கணவனைப் பற்றி விசாரித்தார். ஏதோ வியாபாரம் சம்பந்தமாக என்னையும் சந்திப்பதாகக் கூறினார். ஆனால் அவர் வரவில்லை என்னவென்று தெரியவில்லை என சுதாகரித்துக்கொண்டார் அஸ்மி.

இந்நிலையில் வீதியோரம் தொழில் செய்யுமொருவர் நதியின் கீழ்பகுதியில் ஒருவர் விழுந்துகிடப்பதைக் கண்டு நானுஓய பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தார். மலைப்பகுதியிலிருந்து சடலம் வீசப்பட்டாலும் மரக்கிளையொன்றில் சிக்கியிருந்தது. பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டது. அடையாளம் காணப்படும்வரை நுவரெலிய சவச்சாலையில் வைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில்தான் இந்தீஸ்வரனின் மனைவி கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களில் முறைபாடுசெய்திருந்தார்.

“நீ நானு ஒயா செல்லும் வரை பொலிஸார் உன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யவில்லையா என இங்கு பொலிஸார் கேட்டபோது இல்லை சேர். நான் வாகனத்தை வேகமாக செலுத்தவில்லை மெதுவாகவே சென்றதால் சந்தேகம் ஏற்படவில்லைபோலும்”என்றார் அஸ்மி.

அஸ்மியின் வாக்கு மூலத்தையடுத்து பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட இந்தீஸ்வரனின் மனைவியிடம் நடந்த சம்பவத்தை பொலிஸார் கூறினர். நண்பனாக இருந்தவன் தன் கணவனை கொன்று ஒன்றும் தெரியாதவன் போல் வீட்டுக்கு வந்துதன்னிடம் நடித்ததை அவரால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. பிள்ளைகளும் சகோதரர்களும் அழுது புலம்பினர். சடலத்தை அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் செய்தனர்.

அஸ்மி முப்பத்து மூன்று இலட்சம் ரூபா மற்றும் மூன்று தங்க மோதிரங்களையும் ஒப்படைத்த நபரும் கைது செய்யப்பட்டார். பணத்தின் ஒரு தொகுதி செலவழிக்கப்பட்டிருந்தது. வாகனத்துக்கு தவணையடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய தொகை கட்டப்பட்டிருந்தது. அஸ்மியின் மனைவி அடகு வைத்திருந்த சில பொருட்கள் மீட்கப்பட்டிருந்ததன. பணம் இருபது இலட்சமாகவிலிருந்தது உயிராகப் பழகிய நண்பனை ஏன் இவ்வாறு செய்தாய் என பொலிஸார் கேட்டபோது. கடன் கொடுத்தவர் என்னைத் துரத்தினார். வாகனத்துக்கான பணம் பெருமளவு செலுத்தவேண்டியிருந்தது இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க நண்பனை கொல்லவேண்டியிருந்தது. என்ன பயன் பணம் இல்லாமல் போனது நண்பனையும் இழந்தேன் என்றார் அஸ்மி. குற்றம் செய்தவர் எப்போதும் தப்பித்திருக்க முடியாது. ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்குவார் என பொலிஸ் பரிசோதகர் டி.பீ. விஜேரத்ன கூறினார்.

நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் ரஷ்மி சிங்ஹப் புலி உத்தரவிட்டார்.

கொழும்பு குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளர் ரி.எல்.ஆர். ரணவீர, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த மனம்பேரி ஆகியோரின் மேற்பார்வையில் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியன்த திக்ஓவிடவின் பணிப்பின்பேரில், குற்றவிசாரணை பிரிவில் பொறுப்பதிகாரி எ.ஜி.டி.பி. விஜேரத்ன, உபபொலிஸ் பரிசோதகர்கள் கருணாதிலக, ஜயந்த, சார்ஜன்ட்களான, உபுல், சத்திரத்ன, கான்ஸ்டபிள்களான சுரங்க , பிரியங்கர, சாமர, தம்மிக, அசோக ஆகியோர் விசாணைகளுக்குதவினர்.

எம்.எப். ஜெய்னுலாப்தீன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com