Contact us at: sooddram@gmail.com

 

கசாப் அவசரப்பட்டுவிட்டதா இந்தியா?

(விசு கருணாநிதி)

மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியபோது உயிருடன் பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டமை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தியாவை நேசிப்பவர்கள் எனப் பலரும் கசாப்புக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதைப்பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள். பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து மக்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரம் எஞ்சிய மரண தண்டனைக் கைதிகளையும் தூக்கிலிட வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருக்கிறார்கள். ஆனால், சில மனித உரிமை ஆர்வலர்களும், இன உணர்வாளர்களும் மரண தண்டனை வழங்கியது தவறு என்று தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலைப்போலவே இந்தியாவில் நவம்பர் 26 தாக்குதல் ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதியப்பட்டிருக்கிறது. இந்திய பேரரசின் பாதுகாப்பைக் கேள்விக்குறி யாக்கும் விதத்தில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக வந்த பத்துப் பயங்கரவாதிகள், மும்பை சத்திரபதி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் முதலான இடங்களை முற்றுகையிட்டுக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். தாஜ் ஹோட்டலை மூன்று நாட்களாகத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன் அதன் விருந்தினர்கள் உட்பட பலரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து மும்பை பொலிஸார் உயிரைப் பணயம் வைத்து அதிரடித் தாக்குதல் நடத்தி ஹோட்டலை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டனர். இதில் ஒன்பது பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அஜ்மல் கசாப் என்பவர் மட்டும் உயிருடன் கைதுசெய்யப்பட்டார். பயங்கரவாதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் 166 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

அஜ்மல் கசாப் தாக்குதல் நடத்துவது ஹோட்டல் கமராவில் துல்லியமாகப் பதிவாகியிருந்தமை பொலிஸாரின் விசாரணைகளுக்குக் கூடுதல் ஆதாரமாகிப்போனது. பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக வந்தமை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உறுதியாகின. முதலில் கசாப்பைத் தம் நாட்டுப் பிரஜை என ஏற்றுக்கொள்வதற்குப் பாகிஸ்தான் மறுத்தது. ஒரு வருடத்தின் பின்னர் தமது பிரஜைதான் என ஒப்புக்கொண்டது.

கசாப் மீது 11,000 பக்கங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எல்லாமாக 86 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நான்கு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மரண தண்டனையும் ஐந்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து 2010 மே 06ஆம் திகதி மும்பை தனி நீதிமன்ற நீதிபதி தஹ்லியானி தீர்ப்பளித்தார். இதனை மும்பை உயர் நீதிமன்றம் 2011 பெப்ரவரி 21ஆம் திகதி உறுதி செய்தது. இந்த ஆண்டு ஓகஸ்ட் 29ஆம் திகதி உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதிசெய்தது. இந்நிலையில் கசாப்பை தூக்கிலிட வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசு இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருந்தது.

கசாப்பிற்கு எதிரான வழக்கில் ஆஜராகுவதற்கு சட்டத்தரணிகள் எவரும் முன்வராத நிலையில் ராஜ் ராமச்சந்திரன், கெளரவ் அகர்வால் ஆகிய இரண்டு சட்டத்தரணிகள் மட்டும் முன்வந்திருந்தனர். இவர்களின் கட்டணமாக வழங்கப்பட்ட பதினான்கரை இலட்ச ரூபாய் பணத்தை, பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு இவர்களிருவரும் வழங்கினார்கள் என்பது விசேட அம்சம்.

தவிரவும், மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி கசாப்பின் பாதுகாப்பிற்கென மாதம் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் செலவிடப் பட்டதாகவும் சுமார் ஆயிரம் பொலிஸார் கடமையில் அமர்த்தப் பட்டிருந்ததாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சு வழங்கிய அதி உச்ச பாதுகாப்பு இதுவென்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை சுதந் திரத்திற்குப் பின்னர் இதுவரை சுமார் மூவாரயிரத்திற்கும் அதிகமானோர் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் கொலையாளிகள் தூக்கிலிடப்பட்ட சம் பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியி ருந்தது. அதன் பின்னர் தமிழகத்தின் பிரபல குற்றவாளியான ஓட்டோ சங்கர் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆந்திகதி துக்கிலிடப்பட்ட செய்தியும் ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்திருந்தது.

அதன் பின்னரும் முன்னரும் பலர் தூக்கி லிடப்பட்டுள்ளார்கள். 2004இல் கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட தனன்ஜி சட்டர்ஜி என்பவர் கொல்கத்தாவில் தூக்கிலிடப்பட்டார். இவ்வாண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பாட்டியாலா மத்திய சிறையில் பல்வந்த் சிங் ரஜோனா என்பவர் தூக்கிலிடப்படவிருந்தார். பஞ்சாப் முதலமைச்சர் பியந்த் சிங் கொலை வழக்கில் இவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் எதிரப்பு தெரிவித்ததால் துக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதை இந்திய மத்திய அரசு தடை செய்தது.

தற்போதைய நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களிலுமாக 309 தூக்குத் தண்டனைக் கைதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் பாராளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு முக்கியமானவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் அடங்குகின்றனர்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுவதைக் கட்டுப்படுத்தும் தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட கால கட்டத்தில் அஜ்மல் கசாப்பை அவசர அவரமாக ரகசியமாக இந்தியா தூக்கிலிட்டது ஏன் என்ற கேள்வி இன்று வலுவடைந்திருக்கிறது. 18 வயதி ற்குக் கீழ்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதி க்கக் கூடாது என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் யோசனை முன்வைக்கப்பட்டி ருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது 110 நாடுகள் ஆதரவாகவும் 39 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. இதில் எதிராக வாக்களித்துள்ள இந்தியா மரண தண்டனையைக் கைவிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இந்தியா உள் ளிட்ட 96 நாடுகளில் மரண தண்டனை அமுலில் இருந்து வருகின்றமையும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில்தான் கசாப் கடந்த புதன் கிழமை 21 ஆந்திகதி மும்பை சிறையில் இருந்து புனையில் உள்ள ஏர்வாடா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இறைவன் மீது ஆணையாக இனி இவ்வாறான தவற்றைச் செய்யப்போவதில்லை என்றும் தமக்கு இறுதி ஆசை எதுவும் இல்லையென்றும் கசாப் கூறியதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதே நேரம் கசாப் தூக்கிலிடப்படவில்லை என்றும் அவர் டெங்குக் காய்ச்சலால் இறந்துவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காய்ச்சலால் இறந்த ஒருவரை தூக்கிலிட்டதாக ஏன் அறிவிக்க வேண்டும். அதற்கான அவசியம் என்ன? போன்ற கேள்விகள், திடீரெனத் தூக்கிலிட்டதால் எழுந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. சர்வதேச ரீதியில் தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு வரலாம். ஐக்கிய நாடுகள் சபை வேறு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறது. மறுபுறம் கசப்பைத் தூக்கிலிட வேண்டாம் எனப் பாகிஸ்தான் கோருகிறது. இவை அனைத்தையும் நோக்காகக் கொண்டு கசாப் அவசரமாகத் தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என்றும் கருதுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் ஒரு தனிநபருக்கு அதுவும் ஒரு தீவிரவாதிக்கு இந்தளவு உச்ச பாதுகாப்பை வழங்கி பணத்தை வீண் விரயமாக்கிக்கொண்டிருக்க முடியுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.

எவ்வாறாயினும் கசாப் தூக்கிலிடப்பட்ட விடயம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் ஒரு தர்ம சங்கடமான நிலையை ஏற் படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

நாட்டை நேசிக்கும் அனைவரும் கசாப்பை தூக்கிலிட்டமையை வரவேற் றுள்ளனர். எதிர்க் கட்சிகளைப் பொறுத்தவரை இதுவரை வரவேற்றுள்ளதோடு பாராளு மன்றத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவையும் தூக்கிலிட வேண்டுமெனக் கோரியுள்ளன.

இளைஞர் காங்கிரஸ் கட்சியினர், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தூக்குத் தண்டனை கைதிகளையும் தூக்கிலிடுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்திலுள்ள தமிழ் உணர் வாளர்கள் இரண்டுங்கெட்டான் நிலையில் உள்ளனர். தேசப்பற்று உள்ளவர்கள் என்று பார்த்தால் அவர்கள் கசாப்புக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை வரவேற்க வேண்டும். மறுபுறத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக் குத் தண்டனை பெற்றுள்ளவர்களை மீட்டாக வேண்டும். அதனால் அவர் களால் தேசப்பற்றா? தமிழுணர்வா என் பதை தீர்மானிக்க முடியாதவர்களாக உள் ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். என்றாலும் தமிழர் விடுதலை இயக் கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் முத லானோர் கசாப்பிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்துள்ளனர்.

இவை இவ்வாறிருக்க, கசாப்பை தூக்கிலிட்டமைக்குப் பழிவாங்கப்போவ தாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் கொன்று அவர்களின் உடல்களை ஒப்படைக்கப்போவதில்லை என்றும் மிரட்டியுள்ளனர். இஃது இந்தி யாவுக்குப் புதிய தலையிடியைத் தோற் றுவித்துள்ளது எனலாம்.

இந்நிலையில், கசாப்பை தூக்கிலிட்டதன் மூலம் கிடைக்கும் அனுகூலத்தைவிட அவரை உயிருடன் வைத்திருப்பதன் மூலமே கூடுதல் அனுகூலத்தைப் பெற்றி ருக்கலாம் என்றே தோன்றுகிறது.

எது எவ்வாறாயினும் தலிபான்களின் மிரட்டலைச் சமாளிப்பதற்கான வல்ல மையைக் கொண்டுள்ள இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். எனினும் கசாப் விட யத்தில் இந்தியா அவசரப்பட்டுவிட்டதா என்பதே ஆய்வாளர்களின் கேள்வியாக உள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com